Jump to content


Tamil Star News
Photo

நல்லூர் பிரதேசசபைத் தலைவர் வசந்தகுமார் இராணுவப் புலனாய்வு - துணை இராணுவக் குழுவினரால் தாக்கப்பட்டார்


  • Please log in to reply
1 reply to this topic

#1 Ramanan005

Ramanan005

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 366 posts
  • Gender:Male

Posted 14 October 2012 - 12:47 PM











Posted Image


நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார் இராணுவப் புலனாய்வு மற்றும் துணை இராணுவக் குழு உறுப்பினர்களால் தாக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச்' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கொக்குவில் பொற்பதிக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த எஸ் வசந்தகுமாரை வழிமறித்த இனம்தெரியாதநபர்கள் அவர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அவர் காணம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியை பலாத்காரமாக ஆக்கிரமித்துள்ள படையினர் அங்கே படைமுகாமை அமைப்பதற்கு எதிராக நாளை வழக்குத் தாக்கல் செய்வதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு இருந்த நிலையிலேயே நல்லூர் பிரதேச சபைத் தலைவர எஸ் வசந்தகுமார் இன்று தாக்கப்பட்டுள்ளார்.


இது குறித்து தனது சட்டத்தரணியுடன் கலந்தாலோசித்த பின் காவல் நிலையத்திலும் முறைப்பாடொன்றை தெரிவிக்கச் சென்று திரும்பி செல்லும் வேளையிலேயே தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் படையினரின் பலாத்கார காணிப் பறிப்பிற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டங்களையும் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே படைப் புலனாய்வுப் பிரிவினரும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


thx

குளோபல் தமிழ்ச்' செய்தி


Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 15 October 2012 - 07:08 PM

Posted Image

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

நல்லூர் பிரதேச சபைக்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது, பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தவிசாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டனத்தினையும் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச சபை எதிர்கட்சி தலைவரும் அமைப்பாளருமான ரவீந்திரதாசன் தெரிவிக்கையில்,

'பிரச்சினைகளை பேசித் தீர்மானிக்க வேண்டியதுதான் குறிக்கோள். ஜனநாயக நாட்டில் வன்முறை ஆயுதக் கலாச்சாரத்தினால் ஜனநாயகத்தினை யாராலும் முறியடிக்க முடியாது.

ஜனநாயக நாட்டில் இவ்வாறான சம்பவம் நடைபெறுவதும், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தாக்கப்பட்டதும் ஏனைய உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில முயற்சி அபிவிருத்தி அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். நாங்கள் தழிம் பேசும் சமூகங்கள். இவ்வாறான சம்வங்களை வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் தமது கண்டனத்தினையும் தெரிவிக்கின்றோம்' என்றார்.
Posted Image
Posted Image


http://tamilmirror.l...5-05-20-24.html

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]