மூதூர் படுகொலை குறித்து கொழும்பு பதில்கூற வேண்டும்! ஐ.நா விசாரணையை வலியுறுத்தி மனு கையளிப்பு!!
#1
Posted 05 October 2012 - 10:34 PM
சிறிலங்கா அரசு இவ் யுத்தமீறல் குற்றச்சாட்டிலிருந்து தப்பி விடுவதைத் தடுக்கும்படி ஐ.நா உறுப்புரிமை நாடுகளை நாம் வேண்டுகிறோம். நியாயமான ஐ.நா விசாரணையை வலியுறுத்தி நாம் முன்னெடுத்துள்ள இந்த முறையீட்டு மனுவில் கையெழுத்திடுமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.
இவ்வாறு கடந்த 2006 ம் ஆண்டு மூதூரில் சிறிலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட 17 மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை குறித்து, பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட Action against Hunger (ACF) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த முறையீட்டை எதிர்வரும் அக்டோபர் 22 ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நாம் கையளிக்க உள்ளோம். எனவே அதற்கு முன் இவ்மனுவில் கையெழுத்திடுமாறு உலக மக்களை வேண்டுகிறோம் என Action against Hunger (ACF) அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் மனுவில் கையெழுத்திட இங்கே அழுத்தவும்
http://www.dailymoti...7Q0n8mUlUy3oCnj (காணொளி)
இது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ACF வெளியிட்டுள்ள மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2006 ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி, மூதூர் பகுதியில் வெடித்த யுத்தத்தில் பொதுமக்கள் பலரோடு, மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்பின் பணியாளர்களான 17 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்பணியாளர்கள் 17 பேரும் அவர்களது அலுவலகத்திலேயே, முழங்காலில் நிற்க வைத்து, தலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது மனிதாபிமான பணியாளர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான குற்றம் என்பதற்கும் அப்பால், ஒரு மோசமான போர்க்குற்றமாகவே கருதப்படக்கூடியது.
2006 ம் ஆண்டுக்குப் பின்னர், இப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட 3 விசாரணைகளும் எவ்வித பயனையும் ஏற்படுத்தவில்லை. நீதி விசாரணையில் போடப்பட்ட அரசியல் தடைகள், வெளிப்பாட்டுத்தன்மை இல்லாத நிலை போன்ற பல்வேறு அழுத்தங்கள் இந்த விசாரணைகள் பயனின்றிப் போனதற்கான காரணங்கள்.
எனவே, இப் போர்க்குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டுடன் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என நாம் கருதுகிறோம். பெருமளவில் மக்களை அணிதிரட்டுவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் இவ் யுத்த மீறலுக்குப் பதில்கூறவேண்டி நிலையை ஏற்படுத்த முடியும். இதற்கான சந்தர்ப்பம் இப்போது உருவாகியுள்ளது.
ஜெனிவாவில் எதிர்வரும் நவம்பர் 1 ம் திகதி கூடவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்காவின் மனிதவுரிமை நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளது. ஒரு இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டு, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், மூதூரில் எமது 17 பணியாளர்கள்மீதும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் குறித்த விசாரணையை வலியுறுத்துவதற்கான கடைசிச் சந்தர்ப்பம் இதுவாகும்.
சிறிலங்கா அரசு இவ் யுத்தமீறல் குற்றச்சாட்டிலிருந்து தப்பி விடுவதைத் தடுக்கும்படி ஐ.நா உறுப்புரிமை நாடுகளை நாம் வேண்டுகிறோம். நியாயமான ஐ.நா விசாரணையை வலியுறுத்தி நாம் முன்னெடுத்துள்ள இந்த முறையீட்டில் கையெழுத்திடுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். இந்த முறையீட்டை எதிர்வரும் அக்டோபர் 22 ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நாம் கையளிக்க உள்ளோம்.
மூதூர் மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை குறித்து, சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணையை உலக மக்களாகிய நாம் வலியுறுத்துகிறோம். சக மக்களுக்காக உழைத்த எமது 17 பணியாளர்களைப் படுகொலை செய்தவர்கள் ஒரு நீதியான விசாரணையிலிருந்து தப்பிவிடுவதை நாம் ஏற்க முடியாது.
மூதூர் படுகொலை இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இது தொடர்பான தடயங்களை மறைப்பதையும் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதையுமே சிறிலங்கா அரசாங்கம் செய்து வந்துள்ளது. சிறிலங்கா அரசின் இந்த போக்கிற்கு முடிவு கட்டவேண்டியது ஐ.நா வின் பொறுப்பு என நாம் கருதுகிறோம்.
மூதூரில் படுகொலையான எமது தோழர்கள் நினைவாக, இப் படுகொலைகள் மீது உலகின் கவனத்தைத் திருப்ப அனைவரும் முன்வரவேண்டும். படுகொலையாளர்கள் நீதியான ஒரு விசாரணையிலிருந்து தப்புவதை ஏற்க முடியாது என்பதே சர்வதேச சமூகம் இதுதொடர்பில் முன்வைக்கும் செய்தியாக இருக்கவேண்டும்.
இவ்வாறு பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட Action against Hunger (ACF) வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

#2
Posted 05 October 2012 - 11:36 PM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 05 October 2012 - 11:57 PM
Action Contre La faim frappe fort. Pour sa nouvelle campagne virale, l’ONG a choisi de rappeler aux internautes le massacre des 17 de ses employés il y a 6 ans au Sri Lanka. À travers une séquence sanglante, l’organisation réclame une enquête internationale de l’ONU pour faire la lumière sur les conditions de l’assassinat resté impuni.
La vidéo-pétition”Justice for Muttur” est l’oeuvre de TBWA Paris. C’est l’acteur Samuel Le Bihan qui a prêté sa voix à cette version française. Pour plus d’infos sur le combat de ACF, rendez-vous sur la page Facebook de l’organisation.
http://www.minutebuz...contre-la-faim/
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#4
Posted 06 October 2012 - 03:45 AM
#5
Posted 06 October 2012 - 04:37 AM
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#6
Posted 06 October 2012 - 05:36 AM
#7
Posted 06 October 2012 - 06:25 AM
#8
Posted 06 October 2012 - 09:47 AM
படுகொலை செய்யப்பட்ட “எக்சன் எகெய்ன்ஸ்ட் அங்கர்“ (Action Against Hunger )அமைப்பைச் சேர்ந்த பதினேழு தொண்டர்கள் தொடர்பில் உள்ளுரில் நடத்தப்பட்ட விசாரணையானது சுயாதீனத்தன்மையைக் கொண்டதாகக் காணப்படவில்லை. இந்த விசாரணைகளில் கூட அரசியல் தலையீடுகளும் தடங்கல்களும் காணப்பட்டன.
அதேவேளை, இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் மீது சிறிலங்கா அரசு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் சரியான முறையில் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் இவ்விவகாரம் குறித்து மனித உரிமைப் பேரவையிலும் கேள்வி எழுப்பப்படும்.
மேலும், இந்தப் படுகொலைகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென சிறிலங்கா அரசைக் கோரும் வகையில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மகஜர் ஒன்றும் தயாரித்து வருகிறோம். இந்த மகஜரின் பிரதி ஒன்றினை நவம்பர் மாத மனித உரிமைப் பேரவை அமர்வில் சமாப்பிக்கவுள்ளோம் என்றும் ஏசீஎப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
http://thaaitamil.com/?p=34431
ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!
http://dinaithal.com
#9
Posted 06 October 2012 - 10:15 AM
#10
Posted 06 October 2012 - 11:40 AM
நீதி சொல்ல நாதியற்ற மனிதர்களாக உலகம்..!
மாற்றுவோம் இந்நிலையை... !!!
- தமிழரசு and துளசி like this
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#11
Posted 06 October 2012 - 11:55 AM
சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.
#12
Posted 06 October 2012 - 12:03 PM
#13
Posted 06 October 2012 - 12:25 PM
2068
நன்றி சிறி
திண்ணையில் தந்ததற்கு
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#14
Posted 06 October 2012 - 01:46 PM
On the 4th August 2006, in the midst of civil war, many civilians, including 17 aid workers of Action against Hunger (ACF), were killed in the town of Muttur, in Sri Lanka. Tragically, our 17 colleagues were executed in our office, brought to their knees and shot a bullet in the head. This massacre is not only the most dramatic crime ever committed against humanitarians; it also qualifies as one of the most serious act: a war crime.
None of the three national investigations launched in Sri Lanka since 2006 came to an answer. The investigations were plagued with obstruction, interference of politics in the judiciary, lack of transparency and independence, and procedural irregularities. It is now time to ask for justice by opening an international and independent UN investigation. We must act now! Only a massive citizen mobilization can force the Sri Lankan authorities to be accountable for the horrors of the conflict. We have this opportunity today!
The Human Rights Council of the United Nations will examine the human rights records of Sri Lanka on the 1st of November, in Geneva. In this time of national reconciliation in Sri Lanka, following 26 years of civil war and 100,000 dead, it is our last chance for this war crime not to be forgotten totally. We call upon the members of the United Nations to put an end to impunity. For an UN independent investigation to be finally opened, sign this petition and share with your loved ones. Demand justice!
Our petition will be handed over to the President of the Human Rights Council of the United Nations on 22nd of October.
More info: www.justiceformuttur.org
You'll find the Campaign video clip on this link
http://www.dailymoti...7Q0n8mUlUy3oCnj
http://www.avaaz.org...re_les_barreaux
Edited by eelapirean, 06 October 2012 - 01:46 PM.
இருப்பாய் தமிழா நெருப்பாய்
இருந்தது போதும் செருப்பாய்
#15
Posted 06 October 2012 - 02:52 PM
Edited by துளசி, 06 October 2012 - 02:53 PM.
- akootha likes this
#16
Posted 06 October 2012 - 07:03 PM
#17
Posted 07 October 2012 - 01:20 AM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#18
Posted 07 October 2012 - 02:29 AM
ஆரம்பத்தில் பிளேக்கும் இலங்கையிடம் கேட்டு பார்த்து அலுத்து போயிருக்கும். விசாரணை.
இந்திய நீதிபதி பகவதி கண்காணிக்க முயன்று கைவிட்ட விசாரரணை. இனி இதில் அரசு தலையிடாமல் சரவ்தேச விசாரணை ஆரம்பமாக காலம் வந்துவிட்டது.
ACF இன்னமும் முன்னல் போய் செய்ய நிறைய இருக்கு.
சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.
#19
Posted 07 October 2012 - 02:34 AM
நல்ல விடயம் .கையெழுத்து வைக்க பஞ்சி என்றால் ஒரு சீல் செய்து வைத்திருக்கவும் கேட்கும் போது குத்தி விடலாம் .இவர்கள் இதைதான் காலம் புரா செய்ய போகின்றார்கள் .நன்றி மல்லை அண்ணா, நேற்றே கையொப்பமிட்டு விட்டேன். திண்ணையில் தந்திருந்தமைக்கு நன்றி. ஒரு லட்சம் கையொப்பத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். மின்னஞ்சல், முகநூல், twitter இல் அனைவரும் share பண்ணுங்கள்....
#20
Posted 07 October 2012 - 02:47 AM
நல்ல விடயம் .கையெழுத்து வைக்க பஞ்சி என்றால் ஒரு சீல் செய்து வைத்திருக்கவும் கேட்கும் போது குத்தி விடலாம் .இவர்கள் இதைதான் காலம் புரா செய்ய போகின்றார்கள் .
அரிசுன்: இன்று இதில் கையொப்பம் இட உங்களுக்கு கையில் வலிக்கிறதாயின், அவசரமில்லை. நாளை போட்டுவிடுங்கள். ACF நேராக ஐ.நா.வுடன் எடுத்து கொள்ள இருக்கிறது. அந்த நேரம் ஐ.நா இலங்கையை கவனத்தில் எடுக்கிறதா அல்லது ACF கவனத்தில் எடுக்கிறதா என்று பார்த்துவிடுங்களேன்.
Edited by மல்லையூரான், 07 October 2012 - 03:09 AM.
சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.















