தமிழ் சிறைக்கைதிகளுடைய விவகாரம் குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணைகளைத்துரிதப் படுத்துவதற்காக அவற்றை நான்கு விசேட மேல் நீதி மன்றங்கள் மேற்கொள்ளு மெனவும் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய,பசுபிக், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க கிளைகளுக்குப் பொறுப்பான ஹன்னி மெகாலியைச் சந்தித்தபோதே அவர் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு வந்துள்ள இந்தக்குழுவினர் நேற்று முன்தினம் மாலை நீதிய மைச்சரை அவரது கொள்ளுப் பிட்டி இல்லத்தில் சந்தித்தனர். இதன்போதே இறுதி யுத்தம் இடம்பெற்ற போது புரியப்பட்டதாகக் கூறப் படும் மனித உரிமை மீறல்கள், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், புதிதாக இயற்றப்படும் குற்றவியல், குடியியல் சட்டங்கள், பாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் விவகாரம் போன்றவை குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் ஹன்னி மெகாலி அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.
முக்கியத்துவத்தின் அடிப்படையில் விதந்துரைகள் ஒவ்வொன்றாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக ஹக்கீம் பதிலளித்தார். சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டம் மற்றும் வழக்குகளின் போது செய்மதியூடாகவும் காணொலி மூலமான தொடர்பாடல் ஊடாகவும் பெறப்படும் சாட்சியங்களின் முக்கியத்துவம், நம்பகத்தன்மை குறித்து தீர்மானிப்பது பற்றியும் மனித உரிமைக்குழுவினருக்கு ஹக்கீம் விளக்கமளித்தார்.
http://onlineuthayan.com/News_More.php?id=742471449022139427















