Jump to content


Tamil Star News
Photo

தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் - தென் ஆபிரிக்கா.


  • Please log in to reply
No replies to this topic

#1 கறுப்பி

கறுப்பி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 26,459 posts
  • Gender:Not Telling
  • Location:London

Posted 12 September 2012 - 05:17 AM

தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் - தென் ஆபிரிக்கா.

12 செப்டம்பர் 2012


தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென தென் ஆபிரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு தென் ஆபிரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டு சர்வதேச விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணைகள் உள்நாட்டு ரீதியில் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தென் ஆபிரிக்காவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் நம்பகத்தன்மையுடையதாக அமைய வேண்டியது மிகவும் அவசியமானது என தென் ஆபிரிக்காவின் சர்வதேச விவகார பிரதி அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் இப்ராஹிம் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் நிலையானதும், காத்திரமானதுமான சமாதானத்தை எட்ட முடியும் என தென் ஆபிரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கூட்டாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை நோக்கி நகர முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.globaltam...IN/article.aspx
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

Advert



Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]