நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் அடுத்த ஆண்டும் தொடரும் - அரசாங்கம்.
10 செப்டம்பர் 2012
நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதி வரையில் தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட 94 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
எஞ்சிய நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு சில காலம் தேவைப்படும் என தேசிய நிலக்கண்ணி வெடி அகழ்வு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மொன்டி ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றுவது தொடர்பில் காலக் கெடுகள் எதுவும் விதிக்கப்படாத போதிலும், விரைவில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் பூர்த்தியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டளவில் முழுமையாக நிலக்கண்ணி வெடிகளை அகற்றிவிட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டமும், யுனிசெப் அமைப்பும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு பாரியளவில் உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.globaltam...IN/article.aspx
நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் அடுத்த ஆண்டும் தொடரும் - அரசாங்கம்.
Started by
கறுப்பி
, Sep 10 2012 09:31 PM
No replies to this topic
#1
Posted 10 September 2012 - 09:31 PM
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














