Jump to content


Tamil Star News
Photo

மகிந்தவை அழைக்கும் சுஷ்மாவின் வீட்டை முற்றுகையிட இந்து மக்கள் கட்சி முடிவு!


  • Please log in to reply
3 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,313 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 04 September 2012 - 08:51 PM

Posted Image
சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவை தனது தொகுதிக்கு அழைத்து புத்தவிகாரைக்கு அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ள இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவியும் பாரதிய ஜனதா கட்சி தலைவியுமான சுஷ்மா சுவராஜின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
எதிர்வரும் 21ஆம் திகதி சிறிலங்கா அதிபர் ராஜபக்ச இந்திய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் அழைப்பின் பேரில் அவரது சொந்தத் தொகுதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் நடைபெறும் புத்த மத விழாவிற்கு பங்கேற்க வருகை தருகிறார். இது நாடு முழுவதும் உள்ள இந்துக்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சுமார் இரண்டு லட்சம் இந்துக்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜ பக்ஷே இன்றளவும் இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு எவ்வித சம உரிமையும் வழங்கவில்லை. புத்த மதத்தின் பேரில் இலங்கைத் தமிழ் இந்துக்களின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை இடித்து தள்ளி பல கோயில்களை புத்தமத விகாரங்களாக மாற்றி வருகின்றார். சமீபத்தில் கூட இலங்கை இந்துத் தமிழர்கள் தங்கள் கோயில்களில் இந்துமத அடிப்படை சடங்குகளான காதணி விழா, ஆடு கோழி பழியிடுதல் உள்ளிட்ட இந்து சமய பூஜைகளை நடத்த தடை விதித்துள்ளார்.

சீனாவிற்கு இராணுவ தளம் அமைக்க இடம் கொடுத்து இலங்கை மண்ணில் இந்தியாவிற்கு எதிரான சதிச் செயல்களை ஊக்கு வித்து வருகிறார். இலங்கை கடற்படை அன்றாடம் இந்தியத்தமிழ் மீனவர்களை தாக்குவதும் படுகொலை செய்வதும் தொடர்கிறது. போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்துத் தமிழர்கள் இன்றும் முள்வேலி முகாம்களிலேயே உள்ளனர். இந்துத் தமிழர்களின் பூர்வீக நிலங்களான வயல்வெளிகள் குடியிருப்புக்கள் ஆகியவை இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மூலம் பௌத்த மயமாக்கப்படுகின்றன.

பாரதிய ஜனதா கட்சி கடைபிடித்து வரும் இந்துத்துவ கொள்கைகளுக்கு விரோதமாகவும் வாஜ்பாய் அவர்கள் கடைபிடித்த வெளியுறவுக் கொள்கைகளுக்கு மாறாகவும் சுஷ்மா சுவராஜ் செயல்படுகிறார். காங்கிரசின் இந்த விரோத வெளியுறவுக் கொள்கைகளை சுஷ்மா சுவராஜ் கடைபிடிக்கத் துவங்கியுள்ளார். காங்கிரஸ் மற்றும் இராஜ பக்ஷேவின் இராஜ தந்திர நடவடிக்கைகளுக்கு சுஷ்மாசுவராஜ் பலியாகி உள்ளார்.

தமிழக பா.ஜ.க-வின் கருத்துக்களை உதாசீனப்படுத்தி உள்ளார். இலங்கை கடற்படையில் படுகொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு கடந்த வருடத்தில் நேரடியாக வந்து நிதி உதவி செய்த சுஷ்மா சுவராஜ் இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டு உள்ளது தமிழக இந்துக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுஷ்மா சுவராஜின் இந்து தமிழர் விரோத கொள்கைகளை கண்டித்தும் சுஷ்மா சுவராஜ் வீடு முற்றுகை போராட்டத்தை டெல்லியில் உள்ள இந்து அமைப்புக்களுடன் இணைந்து எதிர்வரும் வாரத்தில் நடத்திட தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சி டெல்லி மாநிலக்கிளை தலைவர் வழக்கறிஞர் சங்கர் முன்னின்று நடத்துகிறார். தமிழகத்திலிருந்து இ.ம.க தொண்டர்களும் முக்கிய நிர்வாகிகளும் தோழமை அமைப்புக்களின் நிர்வாகிகளும் சுஷ்மா வீடு முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்துசமய உணர்வாளர்கள் அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுகிறோம்.

அர்ஜூன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).

http://www.eeladhesa...chten&Itemid=50
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 யாழ்அன்பு

யாழ்அன்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,171 posts
  • Gender:Male
  • Location:Switzerland
  • Interests:Music

Posted 04 September 2012 - 10:43 PM

சபாஸ் சரியான போட்டி இந்து மக்கள் கட்சி வாழ்க

#3 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,665 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 04 September 2012 - 11:00 PM

சகலரும் அரசியல் செய்வதற்கு அரியபொக்கிஷம் தமிழீழகோமணத்தமிழன்.

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#4 மல்லையூரான்

மல்லையூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,092 posts
  • Gender:Male

Posted 04 September 2012 - 11:15 PM

அட சீனாக்காறன் ரொம்ப ரொம்ப பணக்கரன்தான். மலையாளிகள், ரொபேட் வாதராவின் மாமி சோனியா மட்டுமல்ல சுஸ்மாவையும் வாங்கியிருக்கிறார்கள். எதற்கும் அமெரிக்கா வரையும் காசு எறிகிறவர்கள் ஆயிற்ரே

சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

 


 

 





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]