கடந்த யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து சென்ற முஸ்ஸிம் மக்கள் மீண்டும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 43 குடும்பங்கள் உள்ள மரைக்கார் நகர் கிராமத்தில் கடற்படையினர் இருந்த நிலையில் அவர்களை வெளியேற்றிய நிலையில் குறித்த மக்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை (3-09-2012) இரவு 8 மணியளவில் கடற்படையினர் குறித்த மக்களுடன் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் அந்த மக்களின் தற்காலிக குடிசைகளுக்கு தீ வைத்து கொழுத்தியுள்ளதோடு பல வீடுகளை உடைத்து கொண்டு சென்றுள்ளனர். தீயில் சுமார் 20 வீடுகள் வரை எரிந்து சம்பலாகியுள்ளது.
தற்போது குறித்த கிராமத்தில் இருந்து மக்களை வெளியே செல்ல கடற்படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என அணைவரும் வீதியில் தஞ்சமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


http://thaaitamil.com/?p=31106
















