நிகழ்வினை இராணுவ துணைக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவைப் பிரநிதித்துவப்படுத்தும் ஈபிடிபி நிர்வகிக்கும் யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா உரை நிகழ்த்தும் போது தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலப் பகுதி இருண்ட காலமாக விளங்கியதாகவும், தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்களை தவறாக வழிநடத்தியதாகவும் உரை நிகழத்தினார். அதன் பின்னர் பாடகர் உன்னி கிருஸ்ணனுக்கு நினைவுப் பரிசிலும் வழங்கியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இதேபோன்று இந்தியத் துணைத்தூதரகம், யாழ்.மாநகர சபை ஏற்பாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கொள்வார் என்று நிகழ்வு ஒன்றிற்கான அறிவிப்பினை யாழ்.மாநகர சபை அறிவித்திருந்த போதிலும் தமிழக மக்களின் உணர்வினை மதித்து ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்வினைப் புறக்கணித்திருந்தார்.
நல்லூர் ஆலய நிகழ்வினைக் காரணம் காட்டி இந்தியத் துணைத்தூதரகமும் ஈபிடிபியும் இணைந்து பாடகர் உண்ணிகிருஸ்ணனை யாழ்ப்பாணம் அழைத்து அவருக்கு அமைச்சர் டக்ளஸ் மூலம் நினைவுப்பரிசில்வழங்கியமை யாழ்.மக்கள் மத்தியில் கவலையைத் தோற்றுவித்திருக்கின்றது. தமிழீழ எழுச்சிப்பாடல்கள் பலவற்றிற்கு பின்னணிக்குரல் வழங்கிய உன்னி கிருஸ்ணன் திட்டமிட்டே ஈபிடிபி நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருப்பதாக யாழ்.மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
உன்னி கிருஸ்ணன் பாடிய தேசியவிடுதலைப் பாடல் ஒன்றிற்கான காணொலி வடிவத்தினை தமிழ்லீடர் மீள்பிரசுரம் செய்கிறது.
http://tamilleader.c...0-18-14-43.html
Edited by ஊர்பூராயம், 21 August 2012 - 06:01 AM.
















