நன்றிகள் அண்ணா...
உங்கள் நம்பிக்கைகளில் நான் குறுக்கிடவில்லை..இங்கு பதிவிட்ட உங்கள் நம்பிக்கைக்கும் இங்கு பதிவிட்ட என் இலக்கியத்திற்கும் தொடர்பில்லை...எனது பதிவுகள் அந்த நேர என் மனதின் உணர்வுகள்..அதை நான் எழுத்தில் பதிவு செய்துகொண்டு பயணிக்கிறேன்......எழுத்துலகம் இயங்கிக்கொண்டே இருக்கும்..ஒரு சமூகத்தின் சிந்தனையை தூண்டிவிடுவது எழுத்துலகம்....யாருடைய நம்பிக்கைக்காகவும் நின்றுவிடுவதில்லை..போர்க்களங்களில் செயல்களுடன் இலக்கியமும் பயணித்துக்கொண்டே இருந்தது...மகிழ்ச்சியான நேரங்களில் கொண்டாட்டங்களுடன் இலக்கியமும் வளர்ந்தது..புலம்பல்களுடனும் அதுவளரும்..எங்கும் எதிலும் எல்லாக்காலம்களிலும் இலக்கியம் மனிதனின் உணர்வுகளோடு கலந்திருக்கும்..தீபச்செல்வன் தொட்டு தற்போதைய ஈழத்துக்கவிஞர்கள் எல்லோரும் வலிகளைப் பதிவு செய்கிறார்கள்...
என் கவிதையின் கீழ் எழுதப்பட்டதால் இது என் நோக்கியது,என் கவிதையை நோக்கியது..இப்படி எழுதிவிட்டு செல்லும் நீங்கள் எதைச்செய்தீர்கள் என்று எழுதி விட்டா எழுதுகிறீர்கள்..? இல்லைதானே..அதேபோல்தான் எழுத்தாளனும் தான் செய்வதைவதை எல்லாம் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வலியையும் பதிவு செய்யவேண்டு என்ற அவசியம் இல்லை..எதைச் செய்து விட்டு இந்தக்கருத்து உங்களால் எழுதமுடிகிறதோ..அதே தற்துணிபு எனக்கும் இந்தக் கவிதை எழுத உண்டு...எழுத்தில் என் வலிகளை நான்பதிவு செய்கிறேன்..வெளியே என் தேசத்துக்காக நான் இயங்கிக்கொண்டே இருக்கிறன்...இவை இரண்டையும் போட்டு நான் குளப்பிக்கொள்வதில்லை...
இலக்கியம் படைப்பது தவறென்பதை மறைமுகமாக சொல்கிறீர்கள்.....மனித உணர்வோடு பின்னிப் பினைந்தது மொழி,இலக்கியம்...எம்போரும் எம்மொழியைக் காக்கவே எப்போதும்...அதை படைக்காதே என்று நீங்கள் கூறுவது விந்தையாக இருக்கு...
இன்றைய தேவைக்குள் இலக்கியம்படைப்பதை ஏன் கொண்டுவருகிறீர்கள்..?கவிதைகள் காலத்தின் கண்ணாடிகள்..அந்த நேர உணர்வுகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன்வழியில் பதிவு செய்து விட்டு சென்றுகொண்டிருப்பான்...இன்றைய தேவைக்காக இலக்கியம் படைக்கப் படுவதில்லை..இன்றையதேவையை சொல்ல இலக்கியம் படைக்கப் படலாம்....
தாயக மக்களின் தேவைகள் தொடர்பாக மேலும் மேலும் எதிர்பார்ப்பதாலேயே வரவேற்பதுடன் தேவையையும் வலியுறுத்துவது எனது வழி.
அது தங்களை கோபப்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை.
நீங்கள் சொல்வது போல் ஒரு இலக்கியவாதி அல்லது கவிஞன் அல்லது ஒரு படைப்பாளியையயும் ஒரு கருத்தக்களத்தில் அவருக்கு விமர்சனம் வைப்போரையும் ஒரே தட்டில் போடமுடியாது.
எப்படியோ
ஆமாம் போடுவது நல்ல விமர்சனம் ஆகாது. என்னைப்பொறுத்தவரை.
நன்றி தங்கள் நேரத்திற்கு.
Edited by விசுகு, 20 August 2012 - 09:19 AM.















