Jump to content


Tamil Star News
Photo

எதிர்காலம் சிதைந்த தேசத்தின் தெருவழியே......


  • Please log in to reply
29 replies to this topic

#21 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,780 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 20 August 2012 - 09:18 AM

நன்றிகள் அண்ணா...


உங்கள் நம்பிக்கைகளில் நான் குறுக்கிடவில்லை..இங்கு பதிவிட்ட உங்கள் நம்பிக்கைக்கும் இங்கு பதிவிட்ட என் இலக்கியத்திற்கும் தொடர்பில்லை...எனது பதிவுகள் அந்த நேர என் மனதின் உணர்வுகள்..அதை நான் எழுத்தில் பதிவு செய்துகொண்டு பயணிக்கிறேன்......எழுத்துலகம் இயங்கிக்கொண்டே இருக்கும்..ஒரு சமூகத்தின் சிந்தனையை தூண்டிவிடுவது எழுத்துலகம்....யாருடைய நம்பிக்கைக்காகவும் நின்றுவிடுவதில்லை..போர்க்களங்களில் செயல்களுடன் இலக்கியமும் பயணித்துக்கொண்டே இருந்தது...மகிழ்ச்சியான நேரங்களில் கொண்டாட்டங்களுடன் இலக்கியமும் வளர்ந்தது..புலம்பல்களுடனும் அதுவளரும்..எங்கும் எதிலும் எல்லாக்காலம்களிலும் இலக்கியம் மனிதனின் உணர்வுகளோடு கலந்திருக்கும்..தீபச்செல்வன் தொட்டு தற்போதைய ஈழத்துக்கவிஞர்கள் எல்லோரும் வலிகளைப் பதிவு செய்கிறார்கள்...





என் கவிதையின் கீழ் எழுதப்பட்டதால் இது என் நோக்கியது,என் கவிதையை நோக்கியது..இப்படி எழுதிவிட்டு செல்லும் நீங்கள் எதைச்செய்தீர்கள் என்று எழுதி விட்டா எழுதுகிறீர்கள்..? இல்லைதானே..அதேபோல்தான் எழுத்தாளனும் தான் செய்வதைவதை எல்லாம் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வலியையும் பதிவு செய்யவேண்டு என்ற அவசியம் இல்லை..எதைச் செய்து விட்டு இந்தக்கருத்து உங்களால் எழுதமுடிகிறதோ..அதே தற்துணிபு எனக்கும் இந்தக் கவிதை எழுத உண்டு...எழுத்தில் என் வலிகளை நான்பதிவு செய்கிறேன்..வெளியே என் தேசத்துக்காக நான் இயங்கிக்கொண்டே இருக்கிறன்...இவை இரண்டையும் போட்டு நான் குளப்பிக்கொள்வதில்லை...





இலக்கியம் படைப்பது தவறென்பதை மறைமுகமாக சொல்கிறீர்கள்.....மனித உணர்வோடு பின்னிப் பினைந்தது மொழி,இலக்கியம்...எம்போரும் எம்மொழியைக் காக்கவே எப்போதும்...அதை படைக்காதே என்று நீங்கள் கூறுவது விந்தையாக இருக்கு...

இன்றைய தேவைக்குள் இலக்கியம்படைப்பதை ஏன் கொண்டுவருகிறீர்கள்..?கவிதைகள் காலத்தின் கண்ணாடிகள்..அந்த நேர உணர்வுகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன்வழியில் பதிவு செய்து விட்டு சென்றுகொண்டிருப்பான்...இன்றைய தேவைக்காக இலக்கியம் படைக்கப் படுவதில்லை..இன்றையதேவையை சொல்ல இலக்கியம் படைக்கப் படலாம்....


தாயக மக்களின் தேவைகள் தொடர்பாக மேலும் மேலும் எதிர்பார்ப்பதாலேயே வரவேற்பதுடன் தேவையையும் வலியுறுத்துவது எனது வழி.
அது தங்களை கோபப்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை.
நீங்கள் சொல்வது போல் ஒரு இலக்கியவாதி அல்லது கவிஞன் அல்லது ஒரு படைப்பாளியையயும் ஒரு கருத்தக்களத்தில் அவருக்கு விமர்சனம் வைப்போரையும் ஒரே தட்டில் போடமுடியாது.
எப்படியோ
ஆமாம் போடுவது நல்ல விமர்சனம் ஆகாது. என்னைப்பொறுத்தவரை.
நன்றி தங்கள் நேரத்திற்கு.

Edited by விசுகு, 20 August 2012 - 09:19 AM.

  • துளசி likes this

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


Advert

#22 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,941 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 20 August 2012 - 09:16 PM

தாயக மக்களின் தேவைகள் தொடர்பாக மேலும் மேலும் எதிர்பார்ப்பதாலேயே வரவேற்பதுடன் தேவையையும் வலியுறுத்துவது எனது வழி.

நன்றி அண்ணா...மிகத்தேவையான விடயம்..எம்மக்களிற்கு இப்போது மிகவும் தேவையானது...தொடருங்கள்..

அது தங்களை கோபப்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை.

அண்ணை நான் கோபப்பட்டவில்லை..உண்மையில் கருத்தெழுதும்போது உங்களை நினைக்ககூடவில்லை..அங்கு எழுதியிருப்பவற்றுக்கே பதில் அளித்தேன்...

நீங்கள் சொல்வது போல் ஒரு இலக்கியவாதி அல்லது கவிஞன் அல்லது ஒரு படைப்பாளியையயும் ஒரு கருத்தக்களத்தில் அவருக்கு விமர்சனம் வைப்போரையும் ஒரே தட்டில் போடமுடியாது.

நான் அப்படி நினைக்கவில்லை..ஏன் இந்த ஏற்றதாழ்வுகள்..? முதலில் நான் ஒரு வாசகன்..அதன் பின்புதான் எழுதுபவன்..ஒரு மிகச்சிறநத வாசகனாலேயே மிகச்சிறந்த படைப்புக்களை தரமுடியும்...நல்ல ஒருவாசகனே எழுத்தாளனைவிட சிறந்தவன்.


ஆமாம் போடுவது நல்ல விமர்சனம் ஆகாது. என்னைப்பொறுத்தவரை.
நன்றி தங்கள் நேரத்திற்கு.


நிச்சயமாக..தொடர்ந்து விமர்சியுங்கள்...உங்கள் கருத்துக்களை யாழில் எப்போதும் எழுதுங்கள்...ஆனால் முன்னர் நான் எழுதியது அந்த இடத்தில் உங்கள் கருத்துக்களுக்கு எனதுவிளக்கமே...ஒருபோதும் நான் உங்களை விமர்சிக்காதீர்கள் என்றுகூரவில்லை..தவறாக புரிந்துவிட்டீர்கள்...
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#23 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,941 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 23 August 2012 - 06:59 PM

அடடா இப்பொழுது தான் பார்த்தேன் அசத்திட்டாய் நண்பா


நன்றிகள்டா...
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#24 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,212 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:எதுவும் இல்லை

Posted 23 August 2012 - 07:12 PM

வாழ்த்துக்கள் சுபேஸ்

#25 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 23 August 2012 - 07:35 PM

இப்ப என்ன பிரச்சனை சுபேஸ்.

ஒண்டு தண்ட இனவிடுதலைக்கு மொக்குத்தனமா சண்டை பிடிக்கப் போன கூட்டம்.
மற்றது அதுகள அழிக்கத் திரிந்த கூட்டம்.
இடையில ஒன்டுமில்லாம எந்த சந்தர்ப்பத்தைப் பாவித்து புலம் பெயர்ந்து வயிறு வளர்க்கும் கூட்டம்.

'நாய்ப் பாவக்காய் விளயாடக்கையும் தனக்கு ரெண்டு பாவக்கா' எண்டு விளையாட வேணும்' .

#26 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,941 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 31 August 2012 - 01:08 PM

வாழ்த்துக்கள் சுபேஸ்

நன்றிகள் நந்தன் அண்ணா வாசிப்பிற்கும்,கருத்திற்கும்...

இப்ப என்ன பிரச்சனை சுபேஸ்.

ஒண்டு தண்ட இனவிடுதலைக்கு மொக்குத்தனமா சண்டை பிடிக்கப் போன கூட்டம்.
மற்றது அதுகள அழிக்கத் திரிந்த கூட்டம்.
இடையில ஒன்டுமில்லாம எந்த சந்தர்ப்பத்தைப் பாவித்து புலம் பெயர்ந்து வயிறு வளர்க்கும் கூட்டம்.

'நாய்ப் பாவக்காய் விளயாடக்கையும் தனக்கு ரெண்டு பாவக்கா' எண்டு விளையாட வேணும்' .


:) :( நன்றிகள் தப்பிலி அண்ணா வாசிப்பிற்கும்,கருத்திற்கும்...
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#27 தமிழினி

தமிழினி

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 904 posts
  • Gender:Female

Posted 31 August 2012 - 01:13 PM

நல்லதொரு கவிதை சுபேஸ். வாழ்த்துக்கள்...!
வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை!

#28 கிருபன்

கிருபன்

    வலைப்போக்கன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,927 posts
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்

Posted 04 September 2012 - 03:12 PM

அவலங்களையும் வலிகளையும் சுமக்கும் தேசத்தின் நிலையை கண்ணுக்கு முன்கொண்டு வந்தது கவிதை. நிலைமைகளைச் சரிசெய்யமுடியாத இயலாமையால் வரும் கோபம் தெரிகின்றது.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.


#29 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,941 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 04 September 2012 - 03:28 PM

நல்லதொரு கவிதை சுபேஸ். வாழ்த்துக்கள்...!


நன்றிகள் தமிழினி அக்கா வாசிப்பிற்கும் கருத்திற்கும்.....நீங்களும் யாழில் ஆக்கங்களைப் படைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

அவலங்களையும் வலிகளையும் சுமக்கும் தேசத்தின் நிலையை கண்ணுக்கு முன்கொண்டு வந்தது கவிதை. நிலைமைகளைச் சரிசெய்யமுடியாத இயலாமையால் வரும் கோபம் தெரிகின்றது.


கிருபன் அண்ணா நன்றிகள் வாசிப்பிற்கும் கருத்திற்கும்...
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#30 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,559 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 05 September 2012 - 10:31 PM

கவிதைகளுக்கு வாழ்த்துகள்.....

Edited by துளசி, 12 September 2012 - 04:36 PM.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]