Jump to content


Tamil Star News
Photo

ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!


  • Please log in to reply
7 replies to this topic

#1 தமிழீழன்

தமிழீழன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 326 posts
  • Gender:Male
  • Location:புலம்
  • Interests:எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினாலும் எழுவோம்.

Posted 11 August 2012 - 08:58 AM

சென்னையில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 12.08.2012 அன்று டெசோ மாநாடு நடக்க உள்ளது. டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இதையடுத்து திமுக, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து விவாதித்தது. இந்த நிலையில் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,

http://www.nakkheera...ws.aspx?N=80620

Advert

#2 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,558 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 11 August 2012 - 09:02 AM

இப்போ... மத்திய அரசு ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதித்தன் மூலம், ஈழத்தை ஆதரிக்கின்றது என்ற முடிவுக்கு வரலாமா?

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#3 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 13,183 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 11 August 2012 - 09:30 AM

இப்போ... மத்திய அரசு ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதித்தன் மூலம், ஈழத்தை ஆதரிக்கின்றது என்ற முடிவுக்கு வரலாமா?


அதுதானே

அப்படியே ஈழத்தை ஆதரிக்கின்றோம் என்று சொல்லி பாவங்களைகக்கழுவக்கூடாதா???

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#4 யாழ்அன்பு

யாழ்அன்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,333 posts
  • Gender:Male
  • Location:Switzerland
  • Interests:Music

Posted 11 August 2012 - 11:34 AM

தொடரும் காமெடி கலாட்டா. இது கருணாநிதிக்கு கிடைத்த முதல் வெற்றி. கருணாநிதிக்கு மத்திய அரசு பணிந்தது. அடுத்த ஆண்டு நடக்கும் மாநாட்டில் தமிழீழம் என்ற சொல்லை பயன்படுத்த கருணாநிதி மதிய அரசிடம் அனுமதி வாங்குவார். முதல் வெற்றி முற்றிலும் வெற்றி .

#5 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,896 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 11 August 2012 - 12:36 PM

:D :D :D

தீமையிலும் ஒரு நன்மை.. :D
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#6 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,126 posts
  • Gender:Male

Posted 11 August 2012 - 04:15 PM

டெசோ மகாநாடு நடக்கும் அன்றைய தினம் மட்டுமா அல்லது

எப்போதும் ஈழம் என்ற சொல்லைப் பாவிக்கலாமா?

அல்லது மகாநாடு முடிந்ததும் ஈழத்திற்கு மீண்டும் தடையா?

யாராவது விளக்கமாகச் சொல்லுங்கள்

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#7 Volcano

Volcano

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,048 posts
  • Gender:Male
  • Location:Canada

Posted 11 August 2012 - 06:23 PM


இதையடுத்து திமுக, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து விவாதித்தது. இந்த நிலையில் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,

http://www.nakkheera...ws.aspx?N=80620


இதைத்தான் சொல்லுவது எறும்பூர கற்குழியும் என்று.. :icon_idea:

#8 மல்லையூரான்

மல்லையூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,524 posts
  • Gender:Male

Posted 12 August 2012 - 02:19 AM

கருணாநிதியும் காங்கிரசும் இதை பாவித்து ஜெயலலிதாவுக்கு கொடுக்கதக்க இடைஞ்சல் எல்லாம் குடுக்கத்தான் முயன்றார்கள். ஜெயலலிதா இலகுவில் அசையப்போவது போல் தெரியவில்லை. இப்போது ஒருவர் அடிப்பது போலவும் மற்றவர் அழுவது போலவும் மாறி மாறி நடித்து நடித்து கூட்டத்தை நடத்தி வைக்க வேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறாகள்.

ஆனால் இவர்கள் கூட்டம் வைத்து என்ன நடக்க போகிறது. கருணாநிதி ஊர் நாயாக இருந்தால், காங்கிரஸ் கொஞ்சம் இறுக்கி கடிக்க கூடிய அல்சேசன் நாயாக இருக்கலாம். ஆனல் இலங்கை சந்திரன் மத்திரி இவர்கள் கிட்ட அணுகமுடியாத தூரத்தில், பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. இவர்களில் எத்தனை நாய்கள் சேர்ந்த்து கூட்டம் போட்டு எப்படி பலத்து குரைத்தாலும் அது தூர இருக்கிற சந்திரனை அணுகாது.

Edited by மல்லையூரான், 12 August 2012 - 02:20 AM.

சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

 


 

 





Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]