Jump to content


Tamil Star News
Photo

தமிழனும் "நோ இங்கிலீசும் "............


  • Please log in to reply
20 replies to this topic

#1 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,381 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 09 August 2012 - 11:57 AM

தமிழனும் நோ இங்கிலீசும் .....................

இலங்கையின் வடபகுதியின் விவசாயக் கிராமத்தில் இருந்து அண்மையில் கனடா நாட்டுக்கு குடும்ப ஒன்றிணைவின் மூலம் வந்திருந்தார்கள் திரு தமிழனும் திருமதி தமிழனும ... வந்து மூன்று மாதங்கள் தான் இருக்கும் . அவர்களது மகள் வழிப் பேரப்பிள்ளைகளுடன் பொழுது இனிமையாக் கழிந்தது. ஒரு நாள் மகள் தனது இரு குழந்தைகளையும் நீச்சல் வகுப்புக்கு அழைத்து சென்று இருந்தார். இவர்கள் காலாற நடக்க அந்த தொடர்மாடிக் கட்டிடத்தின் முன்றலில் உலாவிக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அறுபதின் இறுதி வயதுகளில் வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. திரு தமிழன் முன்னே செல்ல திருமதி பின்னே சென்று கொண்டு இருந்தார். ஒரு (சீயேன்னா )ரக வாகனத்தில் வெள்ளையின ...ரூமேனிய நட்டவராக் இருக்கவேண்டும் ...தொடர் மாடிக் கட்டிடத்தின் வாயிலில் வாகனத்தை நிறுத்தி ... ஓட்டுனர் (ஆண் ) ஒரு வரைபடத்தைக் காட்டி வழி கேட்டார். திரு தமிழன் ..." நோ இங்கிலீஸ் " என்று ... மறுத்து விடார். ...திருமதியிடம் சாரதியின் துணைவி .... இறங்கி எதோ ஒன்றை கையில் திணித்து கொண்டு இருந்தார். அது ஒரு தங்க நிற நாய்சங்கிலிபோன்ர ஒன்று .. திருமதி தமிழன் ...மறுத்து கொண்டு இருந்தார். .....முன்னே சென்ற தமிழன். பின்னேதிரும்பி மனிவியை காணாது மீண்டும் அவரிடம் வந்தார். சாரதி ..மீண்டும் அவரை அணுகி வரைபடத்தைக்காட்டி இவர் மனைவியை பார்க்காத வண்ணம் மறைத்துக் கொண்டார் . சாரதியின் மனிவி ..ஒரு சங்கிலியை திருமதி தமிழன் மேல் அணிவிப்பதுபோல தெரிந்தார்........சில நொடிகளில் ...இவர்கள் வாகனத்தில் ஏறி மறந்துவிடார்கள். திருமதி தமிழன் ..அந்த தங்க நிற சங்கிலியை உற்று பார்த்து கொண்டு இருந்தார். கணவன் வந்து இது எல்லாம் எதற்கு ..என்று அவரை கடிந்துகொண்டார். ...பின் உனது சங்கிலி இருக்கிறதா ..என பார் என்றார். கொலர் உள்ள சட்டை அணிந்து இருந்த திருமதி தமிழன் ....ஏங்கி விட்டார்............நெஞ்சுபட பட படத்தது ..திரு தமிழன்..ஆதரவாக அழைத்துக்கொண்டு வீட்டினுள் சென்று ...விடார்கள் . மூன்றரை பவுண் சிங்கபூர் சங்கிலி அபேஸ்...............மகன் ஆசையாக தாய்க்குவாங்கி வந்தது தன் முதற் சம்பளத்தில் .... . ..இருபது வருடங்களுக்கு முன். ........


மகளும் குழந்தைகளுடன் வீடுவந்து விட்டார் ....... . யாரைக் கேட்பது யாரிடம் முறையிடுவது ..எதுவித ஆபத்தும் இன்றி தாக்குதலும் இன்றி ...தாய் தந்தை தப்பியதே போதும் என பெருமூச்சு விட்டார் மகள்.

வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏனைய மகன்களும் சேதி அறிந்து .... அவதானமாய் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். .


..ஏனோ இந்த சம்பவத்தை கேட்ட் எனக்கு நம்மவர்கள் கடைகளுக்கு

( walmart ... )வண்டியில் குழந்தைகளை தள்ளிக் கொண்டு ..கொலர் அற்ற சட்டையுடன் பதினாறு பவுண் வெளியே தெரிய அணிந்து வரும் தாலிக் கொடிகளை நினைத்து ...ஆபத்தை விலைக்கு வாங்கும் நம் இளம்பெண்களை நினைத்து ...மனதுக்குள் சஞ்சலப்பட்டது ....


வேற்று இன மக்களுக்கும் தமிழனின் தாலிக் க்கொடி பெறுமதி தங்கத்தின் விலை ..நன்றாகவே தெரிகிறது. பெண்களே ..இடமறிந்து நடந்து கொள்ளுங்கள் . வில்லங்கங்க்களை விலைக்குவாங்காதீர். ஏனையவர்களுக்கு ஒருபாடமாக இருக்கட்டும். உலகை புரிந்து கொள்ளுங்கள். தனியே செல்லும்போது (நகை )கழுத்து கவனம். ..............


.உண்மைச் சம்பவம். சமுதாய விழிப்புணர்வுக்காக ....

  • குமாரசாமி, putthan, Thumpalayan and 1 other like this

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.


Advert

#2 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,753 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 09 August 2012 - 12:07 PM

நன்றி பாட்டி
தங்கள் சமுதாய விழிப்புணர்வும்
நேரத்திற்கும்.........

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#3 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 09 August 2012 - 01:27 PM

நெருப்பை தொட்டுப்பார்த்து, 'ஆம் இது சுடும்' என சொல்லுவதே ஒரு தனி அழகு.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#4 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,937 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 09 August 2012 - 10:27 PM

நன்றி அக்கா பகிர்விற்கு...
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#5 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,665 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 09 August 2012 - 10:35 PM

அமசடக்காய் ஒரு விசயத்தை சொன்ன நிலாமதிக்கு நன்றி. :)

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#6 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,219 posts
  • Gender:Male

Posted 10 August 2012 - 12:45 AM

நல்லதோர், காலத்திற்குத் தேவையான அறிவுரை, நிலாமதியக்கா!
அந்தஸ்து, கழுத்தில் தான் தொங்குகின்றது, என்று எமது சனம் நினைக்கும் வரைக்கும்,
இப்படியான சம்பவங்களை, நடப்பதைத் தவிர்க்க முடியாது!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#7 அலைமகள்

அலைமகள்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,834 posts
  • Gender:Female
  • Location:North America

Posted 10 August 2012 - 01:01 AM

என்ன நிலாமதியக்கா இப்படி சொல்லுகின்றீர்கள். எவ்வளவு கஸ்டப்பட்டு எங்கட சனம் welfare எடுத்து, வருமானவரிகாறனைப் பேக்காட்டி, அது மட்டுமே ஏதோ பென்ஷனாம் ( இங்கே உழைத்த மாதிரி) எடுத்துச் சேமித்து வாங்கினதை காட்டாட்டி நிம்மதியாய் நித்திரை கொள்ளுமே?

"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"

 

 


#8 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 10 August 2012 - 01:13 AM

கனடாவுக்கு வந்த புதிசில் யாராவது 'ஜகோவா விர்னஸ்' காரர் கலைத்தால் 'நோ இங்க்லீஸ்' என்று சொல்லியதுண்டு.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#9 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,637 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 10 August 2012 - 11:05 AM

இந்தச் சம்பவம் அடிக்கடி ஸ்காபுறோ பகுதியில் நடக்கிறதுபோலும்.. :rolleyes:

உலகில் எதுவுமோ காரணமில்லாமல் ஓசியில்/மலிவில் கிடைக்காது.. கிடைத்தால் வில்லங்கம் வரப்போகிறது என்று அர்த்தம்.. "You get what you pay for!" :icon_idea:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#10 putthan

putthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,957 posts
  • Gender:Male
  • Location:sydney
  • Interests:poltics,religion,gardening

Posted 10 August 2012 - 11:25 AM

மீண்டும் ஒர் உண்மை சம்பவத்தை எழுதிய நிலாவுக்கு நன்றிகள்
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன்"


http://putthan.blogspot.com/

#11 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 10 August 2012 - 05:46 PM

( walmart ... )வண்டியில் குழந்தைகளை தள்ளிக் கொண்டு ..கொலர் அற்ற சட்டையுடன் பதினாறு பவுண் வெளியே தெரிய அணிந்து வரும் தாலிக் கொடிகளை நினைத்து ...ஆபத்தை விலைக்கு வாங்கும் நம் இளம்பெண்களை நினைத்து ...மனதுக்குள் சஞ்சலப்பட்டது ....

வேற்று இன மக்களுக்கும் தமிழனின் தாலிக் க்கொடி பெறுமதி தங்கத்தின் விலை ..நன்றாகவே தெரிகிறது. பெண்களே ..இடமறிந்து நடந்து கொள்ளுங்கள் . வில்லங்கங்க்களை விலைக்குவாங்காதீர்.


என்னத்தைச்சொல்ல............. எங்கடையள் திருந்துங்கள் எண்டு நினைக்கிறியளே ?? எருமை மாட்டில மழை பெஞ்சமாதிரித்தான் எங்கடை ஆக்களுக்கு அறிவுரையளும் . ஒரு நல்ல புலத்து அனுபவக் கதையை சொல்லியிருக்கிறியள் . மிக்க நன்றிகள் நிலாமதி அக்கா .

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#12 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,381 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 10 August 2012 - 06:38 PM

......

Edited by நிலாமதி, 10 August 2012 - 06:40 PM.

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.


#13 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,381 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 10 August 2012 - 06:38 PM

கதைக்கு கருத்து சொன்ன உறவுகள் விசு அகோதா அலைமகள் கோமகன் புத்தன் இசை ...புங்கையூரன் குமார் அண்ணா யாவருக்கும் என் நன்றிகள்.

Edited by நிலாமதி, 10 August 2012 - 06:39 PM.

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.


#14 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,753 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 10 August 2012 - 06:39 PM

என்னாச்சு பாட்டி???
இரண்டு தரம்
அதுவும்கண்ணுக்கு தெரியாதபடி???? :lol: :D :D

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#15 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,946 posts
  • Gender:Male

Posted 10 August 2012 - 06:43 PM

பதிவிற்கு நன்றி அக்கா

எது நடந்தாலும் பரவாயில்லை
நாங்கள் எங்கள் கழுத்து நிறைய தங்கம் இல்லாமல்
வெளியே செல்ல மாட்டோம் :D

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#16 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,753 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 10 August 2012 - 06:46 PM

பதிவிற்கு நன்றி அக்கா

எது நடந்தாலும் பரவாயில்லை
நாங்கள் எங்கள் கழுத்து நிறைய தங்கம் இல்லாமல்
வெளியே செல்ல மாட்டோம் :D


கழுத்து நிறைய மட்டும் என்று எழுதி எம்மை இளிவு படுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றேன் :lol: :D :D

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#17 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 10 August 2012 - 07:11 PM

கழுத்து நிறைய மட்டும் என்று எழுதி எம்மை இளிவு படுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றேன் :lol: :D :D


உள்ளதைத்தானே சொல்லுறார்............. வாறமாதம் பிள்ளையார் கோயில் தேர் வருகிது பாக்கத்தானே போறியள் கூத்துகளை :D :D :lol: :icon_idea: .

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#18 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,215 posts
  • Location:Australia

Posted 10 August 2012 - 09:30 PM

கழுத்துக்கு நிறைய எண்டா அப்போ மிச்சம்? கை கால விட்டுடார்னு விசு அண்ணா சொல்ல வந்தார்

நல்ல பதிவு நன்றி அக்கோய்
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#19 சுவைப்பிரியன்

சுவைப்பிரியன்

    ரசிகன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,670 posts
  • Gender:Male
  • Location:swiss
  • Interests:reeding and music

Posted 11 August 2012 - 07:32 PM

உநத நகை நட்டால எங்கடை சனம் இழந்ததுக்கு அளவு கணக்கே இல்லை.
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.

#20 Volcano

Volcano

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 905 posts
  • Gender:Male
  • Location:Canada

Posted 11 August 2012 - 07:40 PM

நல்ல கதை.
நாங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஆனால் அதற்கும் "நோ இங்கிலீஷ்" க்கும் என்ன தொடர்பு? இங்கிலீஷ் தெரிந்தாக்கள் போடலாமோ? அல்லவிடட்டால் நோ இங்கிலீஷ் ஆக்கள் மட்டுமோ களவு கொடுக்கினம்?




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]