
கல்முனை பிரதேசத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமான முறையில் பசுக்களை அறுத்த குற்றச்சாட்டில் 6 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக கல்முனை காவல்துறையினர் தெரிவித்தனர். சில பசுக்களை தாம் மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து கல்முனை பிரதேசத்தில் இன்று மேற்கொண்ட முற்றுகையொன்றின்போது, மேற்படி 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெட்டப்பட்ட நிலையில் மூன்று மாடுகளை கண்டறிந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
http://www.pathivu.c...ticle_full.aspx
பி.கு: கக்கீம் தான் காட்டிக்கொடுத்திருப்பாரா?
Edited by மல்லையூரான், 31 July 2012 - 08:32 PM.















