ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் அரச தலைவர்கள், பிரமுகர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அவர்கள் செல்லும் வீதியின் ஒருமருங்கில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்துள்ளது. அஸ்பன் வே (Aspen Way) எனும் வீதியில் Billingsgate மீன் அங்காடிக்கு முன்பாக மாலை 5 மணிக்கு ஆரம்பித்த ஆர்பாட்டத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
ஒலிம்பிக் ஆரம்பநிகழ்ச்சியில் இனப்படுகொலையளி மகிந்த இராஜபக்ச கலந்து கொள்ளவிருப்பதனை அவரது பேச்சாளர் பந்துல ஜயசேகர உறுதிப்படுத்தியதாக லண்டனிலிருந்து வெளியாகும் The Independent நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து அங்கு பெரும் திரளாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் தமிழ் மக்கள் ஒன்று கூடி உள்ளனர்.

http://thaaitamil.co...அடித்து-விரட்ட/