Jump to content


Tamil Star News
Photo

வெந்தயக் குழம்பு


  • Please log in to reply
8 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,292 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 26 July 2012 - 12:03 PM

Posted Image

தேவையான பொருட்கள் :
புளி-ஒரு எலுமிச்சையளவு
காய்ந்தமிளகா-நான்கு
தனியா-இரண்டு தேக்கரண்டி
சீரகம்-ஒரு தேக்கரண்டி
வெந்தயம்-ஒன்றைத் தேக்கரண்டி
மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி
சாம்பார் பொடி-ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி
வெங்காயம்- ஒன்று
முழு பூண்டு-ஒன்று
தக்காளி-ஒன்று
கடுகு உளுந்து -ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி
உப்பு-தேவைகேற்ப

செய்முறை :

புளியை இரண்டு கோப்பை நீரில் ஊறவைத்து உப்பைச் சேர்த்து கரைக்கவும்,
பின்பு மிளகாய் தனியா சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடித்து புளித்த்ண்ணீரில் போட்டு கலந்து வைக்கவும்
வெங்காயம் பூண்டை தோல் உரித்து வைக்கவும்
கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளூத்தம்பருப்பு வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு பொரிந்ததும்
வெங்காயம் பூண்டு நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சத்தூள் போட்டு வதக்கவும்
பின்பு புளிக் கரைசலை ஊற்றி மிளகாய்த்தூள் மற்றும் சாம்பார் பொடியைப் போட்டு கொதிக்க விடவும்
குழம்பு கொதித்து எண்ணெய் மேலே மிதந்ததும் கறிவேப்பிலையை போட்டு இறக்கி விடவும்.


குறிப்பு :
எத்தனை நபர்கள் : 6
சமைக்க எடுத்துகொள்ளும் நேரம் : 00 hrs 30 mins
வழங்கியர் : Mrs.manohari
http://www.manoharim...emid=13&lang=en
  • அலைஅரசி likes this
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,292 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 26 July 2012 - 12:12 PM

இப்போதுள்ள வெப்பமான காலநிலைக்கு குளிர்மை சேர்க்கும் வெந்தயம் வாரம் இரண்டு மூன்று நாட்கள் சமைத்து சாப்பிட்டுபாருங்கள் உங்களுக்கே புரியும் அதன் பயன்கள். :D :)
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#3 eelapirean

eelapirean

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,003 posts
  • Gender:Male
  • Location:தமிழீழம்

Posted 28 July 2012 - 03:36 PM

வெந்தயக் குழம்பு எனக்கு மிகவும் பிடித்த கறி.குழல் புட்டும் வெந்தயக் குழம்பும் என்றால் சொல்லி வேலையில்லை.

அத்துடன் வெந்தயம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மருந்து என்று தான் சொல்லலாம்.

வீட்டில் யாருக்காவது வயிற்றோட்டம் அல்லது வயிற்றுக்குள் ஒரு மாதிரி இருக்குதென்றால் ஒரு சிறங்கை வெந்தயம் அள்ளிப் போட்டால்ச் சரி.

நன்றி தமிழரசு.

இருப்பாய் தமிழா நெருப்பாய்

இருந்தது போதும் செருப்பாய்


#4 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,055 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 28 July 2012 - 04:48 PM

15 வயதிற்கு முதல் எனது தாயார் அடிக்கடி வெந்தயக்குழம்பு [இறாலுடன்] சமைத்து சுவையாக சுகாதாரமாக தருவார் ............ஆனால் இன்றுவரை அப்படி ஒரு உணவை நான் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.............என் மனைவி உட்பட அந்த வெந்தயக்குழம்பு
முடியாத ஒரு காரியமாகிப்போய்விட்டது............உங்கள் அம்மாக்கள் யாராவது அப்படி சமைத்தால் தயவுசெய்து எனக்கும் எப்படி என்று சொல்லுங்கள் உறவுகளே .........
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

#5 ஜீவா

ஜீவா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,131 posts
  • Gender:Not Telling

Posted 29 July 2012 - 12:53 PM

15 வயதிற்கு முதல் எனது தாயார் அடிக்கடி வெந்தயக்குழம்பு [இறாலுடன்] சமைத்து சுவையாக சுகாதாரமாக தருவார் ............ஆனால் இன்றுவரை அப்படி ஒரு உணவை நான் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.............என் மனைவி உட்பட அந்த வெந்தயக்குழம்பு
முடியாத ஒரு காரியமாகிப்போய்விட்டது............உங்கள் அம்மாக்கள் யாராவது அப்படி சமைத்தால் தயவுசெய்து எனக்கும் எப்படி என்று சொல்லுங்கள் உறவுகளே .........


உண்மை தான் அண்ணா.
அம்மா மண் சட்டியிலை எப்பவும் வெந்தயக்குழம்பு வைப்பா சொல்லி வேலையில்லை, அதுவும் அடுத்தநாள் நல்லா சுடவச்சு தருவா எண்ணை படர்ந்து சட்டியிலை ஓரமா கொஞம் கறுத்துப்போய் இருக்கும். ரோஸ் பாணோடை சாப்பிட அந்தமாதிரி இருக்கும்.
ஜந்து வருசத்துக்கு மேலையாச்சு நான் வெந்தயக்குழம்பு சாப்பிட்டு.. :(

(வெந்தயக்குழம்புக்கு பின்னாடியே ஒரு கதை இருக்குப்பா.. :rolleyes: :lol: :lol: :icon_idea: )
  • தமிழ்சூரியன் likes this
பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

#6 அலைமகள்

அலைமகள்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,825 posts
  • Gender:Female
  • Location:North America

Posted 29 July 2012 - 10:02 PM

வெந்தயக் குழம்புக்குக் கத்தரிக்காயைப் பொரித்துப் போட்டாலும் ரேஸ்டாய் இருக்கும்!

"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"

 

 


#7 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,635 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 29 July 2012 - 11:02 PM

கிழமைக்கு ஒருநாள் எண்டாலும் என்ரை வீட்டை வெந்தயக்குழம்பு கட்டாயம் இருக்கும்....அதை விட வேறை கறியள்ளையும் வெந்தயம் கடிபடும்.உண்மையிலேயே வெந்தயம் உடம்புக்கு நல்ல சாமான்.வெந்தயத்தை ஊற வைச்சு தலைக்கு அரைப்பு ஆகவைச்சு முழுகினால் உடம்புக்கு இன்னும் குளுர்ச்சி.....நன்றி தமிழரசு

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#8 உடையார்

உடையார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,244 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 30 July 2012 - 01:54 AM

Posted Image

தேவையான பொருட்கள் :
புளி-ஒரு எலுமிச்சையளவு
காய்ந்தமிளகா-நான்கு
தனியா-இரண்டு தேக்கரண்டி
சீரகம்-ஒரு தேக்கரண்
டி
வெந்தயம்-ஒன்றைத் தேக்கரண்டி

மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி
சாம்பார் பொடி-ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி
வெங்காயம்- ஒன்று
முழு பூண்டு-ஒன்று
தக்காளி-ஒன்று
கடுகு உளுந்து -ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி
உப்பு-தேவைகேற்ப

செய்முறை :

புளியை இரண்டு கோப்பை நீரில் ஊறவைத்து உப்பைச் சேர்த்து கரைக்கவும்,
பின்பு மிளகாய் தனியா சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடித்து புளித்த்ண்ணீரில் போட்டு கலந்து வைக்கவும்
வெங்காயம் பூண்டை தோல் உரித்து வைக்கவும்
கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளூத்தம்பருப்பு வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு பொரிந்ததும்
வெங்காயம் பூண்டு நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சத்தூள் போட்டு வதக்கவும்
பின்பு புளிக் கரைசலை ஊற்றி மிளகாய்த்தூள் மற்றும் சாம்பார் பொடியைப் போட்டு கொதிக்க விடவும்
குழம்பு கொதித்து எண்ணெய் மேலே மிதந்ததும் கறிவேப்பிலையை போட்டு இறக்கி விடவும்.


குறிப்பு :
எத்தனை நபர்கள் : 6
சமைக்க எடுத்துகொள்ளும் நேரம் : 00 hrs 30 mins
வழங்கியர் : Mrs.manohari
http://www.manoharim...emid=13&lang=en


இது வெந்தயக் குழம்பா?
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#9 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,055 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 04 August 2012 - 09:13 PM

15 வயதிற்கு முதல் எனது தாயார் அடிக்கடி வெந்தயக்குழம்பு [இறாலுடன்] சமைத்து சுவையாக சுகாதாரமாக தருவார் ............ஆனால் இன்றுவரை அப்படி ஒரு உணவை நான் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.............என் மனைவி உட்பட அந்த வெந்தயக்குழம்பு
முடியாத ஒரு காரியமாகிப்போய்விட்டது............உங்கள் அம்மாக்கள் யாராவது அப்படி சமைத்தால் தயவுசெய்து எனக்கும் எப்படி என்று சொல்லுங்கள் உறவுகளே .........






நான் எழுதிய திரியை நானே குவாட் செய்கிறேன் என்று நீங்கள் யோசிக்கக்கூடும் ...
ஆம் இன்று பல வருடங்களிற்கு பிறகு அதே பாணியில் வெந்தயக்குழம்பு[இறாலுடன்]
சாப்பிட்ட திருப்தி.................உண்மை நான் இந்த யாழில் என்ன செய்கிறேன் என்பதை என் துணைவியாரும் பார்ப்பதுண்டு............அதை நானும் விரும்புபவன்..........அந்த வகையில் இந்த வெந்தயக்குழம்பு சமாச்சாரம் அவளிற்கு பெரிய மன உளைச்சலை கொடுத்ததேன்பதுதான் உண்மை ..............ஆம் எப்படியோ யார் யாரிடம் எல்லாம் சமையல் குறிப்புகளை பகிர்ந்துகொண்டு இன்று என் அந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டார் ................வயிறு நிறைந்து ,மனம் குளிர்ந்து இதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.......................எப்படி செய்தார் என்பதையும் உங்களுடன் இன்னொரு முறை பகிர்ந்து கொள்கிறேன்.............. :)
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]