Jump to content


Tamil Star News
Photo

காலக்கெடு முடிவதற்குள் ஜெனிவாவிடம் அறிக்கையை கையளித்தது சிறிலங்கா


  • Please log in to reply
1 reply to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,316 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 24 July 2012 - 08:46 AM

Posted Image
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்துக்கான சிறிலங்காவின் அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி செயலகத்தினால் இந்த அறிக்கை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் தயாரிக்கப்பட்ட 10,700 சொற்கள் அடங்கிய இந்த அறிக்கை, சிறிலங்கா அதிபரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதில் இறுதி நேரத் திருத்தங்களை சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க செய்த பின்னர், சிறிலங்கா அதிபரால் ஒப்பமிடப்பட்டது.

இதையத்து மின்னஞ்சல் மூலம் ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவருக்கு அனுப்பட்ட அந்த அறிக்கை, அவர் மூலம் நேரடியாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வரும் நவம்பர் 1ம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் பூகோள கால மீளாய்வு கூட்டத்துக்கான இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலக்கெடுவின் இறுதிநாள் நேற்றாகும்.

இந்த அறிக்கையை தயாரித்து சமர்ப்பிப்பதில் கடைசிநேரம் வரை இழுபறி நிலை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinapp...?20120724106660
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 மல்லையூரான்

மல்லையூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,099 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 11:48 AM

இது ஐ.நா. பிரேரணைக்கான பதில். பிரேரணை ஸ்ர்வதேச ஆவணம். அதன் பதில் உலக ஊடகங்களுக்கு தெரியப்பட்டுத்த படவேண்டும்.

சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

 


 

 





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]