Jump to content


Tamil Star News
Photo

பிரணாப் முகர்ஜிக்கு மகிந்த ராஜபக்சவிடம் இருந்தே முதல் வாழ்த்து – கொழும்பு வருமாறும் அழைப்பு


  • Please log in to reply
2 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,307 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 24 July 2012 - 08:44 AM

Posted Image
இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மலர்க்கொத்து அனுப்பி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றதாக நேற்றுமுன்தினம் மாலை அறிவிக்கப்பட்டது.

அவரது வெற்றி அறிவிக்கப்பட்டதும், உடனடியாகவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொலைபேசி மூலம் அழைத்து, பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், மலர்க்கொத்து ஒன்றையும் அவரது வசிப்பிடத்துக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அத்துடன் பிரணாப் முகர்ஜியை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய - சிறிலங்கா உறவுகளை ஊக்குவிப்பதில் பிரணாப் முகர்ஜி முக்கிய பங்களித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரணாப் முகர்ஜி நாளை இந்தியக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதும் முறைப்படியான வாழ்த்து சிறிலங்கா அதிபரிடம் இருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பிரணாப் முகர்ஜிக்கு வெளிநாட்டில் இருந்து கிடைத்த முதலாவது வாழ்த்து சிறிலங்கா அதிபருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் காலகட்டத்தில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக பிரணாப் முகர்ஜி பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinapp...?20120724106656
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,207 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 09:11 AM

மாபியாக் கூட்டங்களுக்க, எப்பவும் ஒரு 'அண்டர்ஸ்டாண்டிங்' இருக்கிறதில என்ன, புதுமை கிடக்கு? :D

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#3 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,928 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 09:16 AM

பக்கத்து நாடு என்றபடியால் தபால்காரன் வேளைக்குப் போயிட்டான் :icon_mrgreen:

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]