
இந்திய – சிறிலங்கா கடல் எல்லையில், தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கு அருகே 7வது மணல் திட்டில் சிறிலங்கா கடற்படை புதிய முகாம் ஒன்றை நிறுவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் உள்ள கடற்பகுதியில் 13 மணல்திட்டு உள்ளன.
பகல் முழுவதும் கடல்நீர் வற்றி மணல்திட்டுகளாக இருக்கும் இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் கடல்நீர் சூழ்ந்து காணப்படும்.
இந்தியாவின் கடல்எல்லை பகுதி 6-வது மணல்திட்டுடன் முடிவடைகிறது. 7வது மணல்திட்டு தொடக்கம் சிறிலங்காவுக்குச் சொந்தமானது.
இந்தநிலையில் தனுஸ்கோடிக்கு அருகே உள்ள சிறிலங்கா கடல் எல்லை ஆரம்பிக்கும் 7-வது மணல் திட்டிலேயே சிறிலங்கா கடற்படையினர் புதிய முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.
இங்கு 24 மணி நேரமும் சிறிலங்கா கடற்படையினர் நிலை கொண்டுள்ளதாக தமிழ்நாட்டு மீனவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிறிலங்கா கடற்படையினர் அமைத்துள்ள இந்த புதிய முகாம் குறித்து தமிழ்நாட்டு மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
http://eelampresse.com/?p=3429















