
வீட்டிற்கு வரும் விருந்தினரை அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படி நினைத்தால் அதற்கு வீட்டில் இருக்கும் மைதாவை வைத்து ஒரு சுவையான, இனிப்பான அல்வாவை செய்து அசத்துங்கள். அந்த சுவையான மைதா அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1/2 கிலோ
சர்க்கரை - 1 கிலோ
கேசரி பவுடர் - 1/4 டீஸ்பூன்
உருக்கிய நெய் - 1/2 கப்
ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 8
திராட்சை - 8
செய்முறை:
முதலில் மைதா மாவை கெட்டியாக பிசையாமல், இளக்கமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பிசைந்த மாவானது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அந்த மாவை கரைத்துக் கொண்டு, மேலே இருக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
மறுபடியும் அந்த மாவில் 2 லிட்டர் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கழித்து, பின் கரைத்து மேலே வரும் நீரை அதே பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
மீண்டும் அந்த மாவில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கழித்து, பின் கரைத்து மேலே வரும் நீரை அதே பாத்திரத்தில் மறுபடியும் ஊற்றிக் கொள்ளவும். இப்போது 1 1/2 லிட்டர் மைதாப் பால் கிடைத்திருக்கும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சர்க்கரை போட்டு நன்கு கொதிக்க விடவும். சர்க்கரை நீரானது கொதித்து நுரைநுரையாக வரும் போது, தீயைக் குறைத்து அதில் மைதாப் பாலை ஊற்றி நன்கு கிளர வேண்டும்.
இவ்வாறு ஒரு 5 நிமிடம் கிளரியதும், பின் அதில் கேசரி பவுடர், நெய் சேர்த்து கெட்டியாக கிளரவும். அல்வா பதம் வந்ததும், அத்துடன் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளரி இறக்கவும்.
இப்போது சுவையான மைதா அல்வா ரெடி!!!
http://tamil.boldsky...lwa-001456.html

















