Jump to content


Tamil Star News
Photo

தங்க மோதிரம், நிதி உதவிகள்.. ஒரு அரசியல் தலைவருக்கு நிகரான ஆரவாரத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!


  • Please log in to reply
No replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,311 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 22 June 2012 - 09:55 AM

சென்னை: நடிகர் விஜய் இன்று தன் பிறந்த நாளை பல்வேறு நற்பணிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடினார்.

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்களை அணிவித்து, அங்கிருந்து தாய்மார்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.


Posted Image

விஜய் பிறந்த நாள் படங்கள்


குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிவிட்டு, பல்வேறு ஆதரவற்ற, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி இல்ல குழந்தைகளுக்கு அவர் உணவு, உடைகள் மற்றும் உதவிகளை வழங்கினார்.

லிட்டில் பிளவர், மெர்ஸி ஹோம், ஸ்பாஸ்டிக் சொஸைட்டி ஹோம், பொன்னேரி அன்புக் கரங்கள், ஆதம்பாக்கம் ஜெரோகம் இல்லம் போன்ற ஆதரவற்ற இல்லங்களுக்கு விஜய் தன் கையால் உணவு வழங்கினார்.

தனது வித்யா சாரிடபிள் ட்ரஸ்ட் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகங்களை இன்று வழங்கினார் விஜய்.

இவைதவிர, மாநிலம் முழுவதிலும் உள்ள விஜய் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தத்தமது பகுதிகளில் விரிவாக பிறந்த நாள் விழா நற்பணிகளைச் செய்தனர்.

விஜய் தங்கமோதிரம் வழங்கியது போலவே, அவரது ரசிகர்களும் தங்கள் பகுதி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் விஜய்யை விட அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரன் ரொம்ப பிஸி. சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் இன்று நடக்கும் அத்தனை விஜய் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவர்தான் தலைமை விருந்தினர். எல்லா இடங்களிலும் அப்படியொரு கூட்டம்... ரசிகர்களும் பணத்தை தண்ணீரார செலவழிப்பதைப் பார்க்க முடிந்தது!

பரவாயில்லை... பக்கா ப்ளானோடதான் நடக்குது... அம்மா வெகுண்டெழாத வரைக்கும் ஆபத்தில்ல!

http://tamil.oneindi...der-156243.html
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]