Jump to content


Tamil Star News
Photo

என்ன தோன்றுகின்றது?


  • Please log in to reply
11 replies to this topic

#1 கரும்பு

கரும்பு

    உங்களில் ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,853 posts
  • Gender:Male

Posted 12 June 2012 - 01:22 AM

கீழுள்ள இந்தப்புகைப்படத்தை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதையாக தரமுடியுமா?

கவிதையாக வடிக்க முடியாதவர்கள் வசனங்களிலாயினும் கூறுங்கள்.

இப்புகைப்படம் பற்றிய எனது எண்ணங்களை கவிதையாக அல்லது வசன நடையில் இறுதியாக தருகின்றேன்.

நன்றி!

Posted Image
(மேலுள்ள புகைப்படத்துடன் சம்மந்தப்பட்ட செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்)

Edited by கரும்பு, 12 June 2012 - 01:54 AM.

  • ராசம்மா likes this

Advert

#2 சொப்னா

சொப்னா

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 249 posts
  • Gender:Female
  • Location:ஆரியகுளம்
  • Interests:அப்பிடியெண்டால் என்ன

Posted 13 June 2012 - 11:06 AM

கீழுள்ள இந்தப்புகைப்படத்தை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதையாக தரமுடியுமா?

கவிதையாக வடிக்க முடியாதவர்கள் வசனங்களிலாயினும் கூறுங்கள்.

இப்புகைப்படம் பற்றிய எனது எண்ணங்களை கவிதையாக அல்லது வசன நடையில் இறுதியாக தருகின்றேன்.

நன்றி!

Posted Image
(மேலுள்ள புகைப்படத்துடன் சம்மந்தப்பட்ட செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்)


கரிகால் சோழன் கடலோடிப் புகழ் சேர்த்தான் தமிழனுக்கு .
மிலேலினியத்துக் கரிகாலன்
இந்து சமுத்திரத்தில் " கடல் புறாக்களாய் " பரணி பாடினான் .
ஆனால் நீங்கள் ,
அடக்கியவர் தேசத்தில்
அடிமையாய் பரணி பாடினீர்கள்!!!!!!!
வேண்டாத விருந்தாளிக்கு
அங்கு என்ன வேலை ?
உங்கள் மண் சோகமே பாடினாலும் சொர்க்கமல்லவா ?
சோகத்தை துடைத்தெறிந்து
புதுப் பரணி பாடுங்கள்
கௌரவமாக .............

Edited by சொப்னா, 13 June 2012 - 11:07 AM.

  • கரும்பு likes this

நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .


#3 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,190 posts
  • Gender:Male

Posted 13 June 2012 - 11:43 AM

Posted Image

அணைக்க வேண்டிய கரங்களே,
அள்ளியெறிந்த பரிதாபம்!
தன்னை ஒறுத்துத் தவித்திருப்பாள்,
உன்னைப் பெற்றெடுத்த அன்னை!

உன் கனவுகளின் மூலதனத்தில்,
உயிர் வாழும் தங்கைகள் எத்தனையோ?

வாவென்று அழைத்து, அரவணைக்க,
வாசலுக்கு யாரும் வரவில்லை!
அந்த வாடிய முகங்கள் போதும்!
ஆயிரம் கதை சொல்லுகின்றன!
ஆனாலும் கலங்காதே, தோழனே!
ஏனெனில் நானும் உன்னைப்போல!

Edited by புங்கையூரன், 13 June 2012 - 11:58 AM.

  • கரும்பு and சுபேஸ் like this

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#4 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,688 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 13 June 2012 - 11:55 AM

சொந்த பூமி -அதை
தொடுவதற்கு அழுகின்றோம்
என் வீடு திரும்ப
எனக்கு நடுக்கம்
உயிரைக் கேட்டால் கொடுத்துவிடலாம்
ஒவ்வொரு நாளும் செத்து செத்து......
தப்பினோம் என நினைத்தோம் -இல்லை
விதானையார் வீட்டில் ஒளித்தோம்
ஐ.நாவாவது இரங்கும்
நப்பாசை இருந்தது
சீ அது செத்து நாளாச்சு..
இனி
பூனை துரத்தி விளையாடும்
எலி தான் நாங்கள்...........
  • கரும்பு likes this

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#5 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 16 June 2012 - 03:44 PM

கீழுள்ள இந்தப்புகைப்படத்தை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதையாக தரமுடியுமா?

கவிதையாக வடிக்க முடியாதவர்கள் வசனங்களிலாயினும் கூறுங்கள்.

இப்புகைப்படம் பற்றிய எனது எண்ணங்களை கவிதையாக அல்லது வசன நடையில் இறுதியாக தருகின்றேன்.

நன்றி!

Posted Image
(மேலுள்ள புகைப்படத்துடன் சம்மந்தப்பட்ட செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்)


எந்தையையும் தாயயையும் ,
முன்னொருகால் உறுஞ்சிய
அதே வெள்ளையின்
புதிய வம்சத்து எச்சில் துப்பலாய் !!!!!!!
என்னை
இங்கு சொல்லி கொள்ளமலே துப்பி விட்டார்கள் .
என்ன தான் நான் பல அவதாரங்கள் எடுத்தாலும் ,
என் நிலையை உணர்த்திய
வெள்ளைக்கு ஒருகோடி நன்றிகள் ..........
  • கரும்பு likes this

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#6 கிருபன்

கிருபன்

    வலைப்போக்கன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,905 posts
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்

Posted 16 June 2012 - 04:00 PM

என்ன தோன்றுகின்றது?



இலட்சங்கள் பலவற்றை வட்டிக்கும்
வட்டியின் குட்டிகளுக்கும்
குடியிருக்கும் ஒரே காணித்துண்டையும் ஈடுவைத்து
ஏஜென்சி, சப்-ஏஜென்சி என்று வாரியிறைத்து
சீமைக்கு வந்து சீந்துவாரின்றி
முன்னர் வந்து முதலாளியான தமிழர்களிடம்
இரண்டுக்கும் நாலுக்கும் தும்படித்து
அரை வயிறு கால் வயிற்றுடன் சேமித்த காசையும்
சொலிசிற்றர்களுக்கும் பாரிஸ்டர்களுக்கும் விட்டெறிந்தும்
எல்லா அப்பீல்களும் பிழைத்துப் போய்
ஒளிந்துவாழவும் முடியாமல் பிடிபட்டு
டிரென்சன் சென்ரர்களில் சோறும் கிடைக்காமல்
பிளேன் ஏறுமட்டும் கனவுடன் இருந்த
உங்களுடனும் உங்களது இரண்டு பவுண் பொதியுடனும்
பாயும் சிங்கங்களைக் தாங்கிய பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன்
பலவருடம் காணாத கோயில் திருவிழாவுக்கு
புலிப்பல்லுச் சங்கிலியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்து
ஒன்றாகப் பயணிக்காமல் பார்த்துக்கொண்ட
இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றுகின்றது.

Edited by கிருபன், 16 June 2012 - 04:00 PM.

  • குமாரசாமி, வல்வை சகாறா, கரும்பு and 3 others like this

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.


#7 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,190 posts
  • Gender:Male

Posted 17 June 2012 - 12:49 AM

உங்களுடனும் உங்களது இரண்டு பவுண் பொதியுடனும்
பாயும் சிங்கங்களைக் தாங்கிய பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன்
பலவருடம் காணாத கோயில் திருவிழாவுக்கு
புலிப்பல்லுச் சங்கிலியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்து
ஒன்றாகப் பயணிக்காமல் பார்த்துக்கொண்ட
இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றுகின்றது.


வார்த்தைகளின் வலிமை, வியக்க வைக்கின்றது, கிருபன்!
இருவருக்கும், எந்த வித வித்தியாசமும் இல்லை!
'காலம்' என்னும் அரக்கனைத் தவிர!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#8 கரும்பு

கரும்பு

    உங்களில் ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,853 posts
  • Gender:Male

Posted 18 June 2012 - 01:49 AM

இவ்விடயத்தை முதலில் அரசியல் அலசலில் போடலாமா என்று பார்த்தேன். பின்னர் இங்கு இணைத்தேன்.

இதுபற்றி நான் சுருக்கமாக கூறக்கூடியது:

நான் அறிந்தவரையில் 1980கள் தொடக்கம் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வு சூறையாடப்பட்டுள்ளது, நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன, சொந்த இடங்களை விட்டு பல இலட்சம் மக்கள் துரத்தப்பட்டுள்ளார்கள், கற்பனை செய்யமுடியாத அளவிற்கு மக்கள் உளவியல் பாதிப்புக்களிற்கு உள்ளாகினார்கள்.

ஆனால், இலங்கையில் போர் நிறைவடைந்துவிட்ட து, அங்கு ஒரு பிரச்சனையும் இல்லை எனக்கூறுவது - இந்த வாதத்தை சிறீ லங்கா அரசு வைக்கும்போது அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் போவது ஆபத்தானது.

இவ்வாறான இளைஞர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவேண்டிய பொறுப்பு, அத்துடன் உளபலத்தை கொடுக்கவேண்டிய பொறுப்பு தமிழ்மக்களில் அக்கறைகொண்ட அனைவருக்கும் உள்ளது. நாடு கடத்தப்பட்டு சிறீ லங்காவுக்கு அனுப்பப்படும் இளைஞர்களின் நலன்களை கவனித்து அவர்களுக்கு ஆதரவளிக்க ஏதாவது அமைப்புக்கள், சங்கங்கள் முன்வரவேண்டும்.

நம்மவர்களே இவர்களை "பொருளாதார அகதிகள்" எனக்கூறுவதும், பல்வேறு வகைகளில் மட்டம் தட்டுவதும் வேதனை தருகின்றது. இந்த இளைஞர்களுக்கும் பொருத்தமான வாய்ப்புக்கள், வசதிகள் கிடைத்திருப்பின் இப்படி தலைகுனிவுடன் நிற்கவேண்டி வந்திராது. இவர்களும் உயர்கல்வியை, தொழிற்புலமையை சிறீ லங்காவில் பெற்று சட்டரீதியாக தகமை அடிப்படையில் வெளிநாடுகளுக்கு சென்றிருக்க முடியும். காலம், சூழ்நிலை ஒருவனின் வாழ்வை சூறையாடும்போது, குறிப்பாக திட்டமிட்ட வகையில் காலங்காலமாக சிறீ லங்கா அரசினால் பல்வேறு வகைகளில் தமிழ் மக்கள் நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் வாழ்வு சின்னாபின்னமாகும்போது அப்படியானவர்கள் இவ்வாறான நிலமையில் சிக்கும்போது அவர்களுக்கு ஆதரவுக்கரம் கொடுக்கவேண்டியது அக்கறைகொண்ட அனைவரினதும் கடமை.

இவ்விடயத்தை கூறுவதற்காகவே மேற்கண்ட விடயத்தை இங்கு பதிந்தேன்.

கவிதைகளை வழங்கிய சொப்பனா, புங்கையூரன், விசுகு, கோமகன், கிருபன் எல்லாருக்கும் நன்றி.

#9 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,170 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 18 June 2012 - 04:36 AM

அனுப்பப்பட்டவர்கள் புலிகள் என்ற கருத்துப்பட ஒருவர் கருத்து எழுதி இருந்தார்.யாரென்று அனேகருக்கு தெரியும்.ஒரு பேச்சுக்கு அனுப்பப்பட்டவர்கள் புலிகளாக இருக்கட்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தமிழர்கள் என்ற உணர்வு கூட ஏற்படவில்லை.!!

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#10 கரும்பு

கரும்பு

    உங்களில் ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,853 posts
  • Gender:Male

Posted 19 June 2012 - 04:47 AM

தேடிப்பார்த்தேன் நுணாவிலான் காணவில்லை. குறிப்பிட்ட செய்தி இணைப்பை தரமுடியுமா?

சிறீ லங்கா நாட்டை விட்டு ஓடுவதை இப்படியான நடவடிக்கைகள் தடுக்குமாயின் அதை தான் வரவேற்பதாய் இது சம்மந்தப்பட்ட செய்தியில் ஒருவர் எழுதினார். அவர் இந்தக்கருத்தை சிறீ லங்காவில் இல்லாமல் லண்டனில் நின்று கூறுவதுதே நகைப்பாக உள்ளது. தாம் பாதுகாப்பாக வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு சிறீ லங்காவைவிட்டு மற்றவர்கள் ஓடக்கூடாது என நினைப்பது எவ்வகையான நியாயம் என எனக்குத்தெரியவில்லை.
  • சுபேஸ் likes this

#11 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,923 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 24 June 2012 - 06:34 PM

முடிந்தவரை எம்மவர்கள் எல்லாரும் அங்கிருந்துவெளியேறி இங்குவந்து நல்லவாழ்க்கை பெறவேண்டும்..அதற்க்குப் பிறகு நாங்கள் எல்லாரும் சேர்ந்து நாடுமீட்க்க இங்கிருந்து ஒன்றாகப் போராடுவோம்...அண்மையில் ராஜபக்சவின் மகன் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற உதவிபுரிவதாக ஒரு செய்தி வாசித்தேன்..உண்மையில் மகிழ்ச்சியான செய்தி..அவர் அதை குறைந்த காசு வாங்கிக்கொண்டு செய்தார் என்ற்றால் இன்னும் பல ஏழைமக்கள் வர வாய்ப்பாகும்....எமது மக்கள் பலரிடம் காசு இருந்திருந்தால் எம்மைப்போல் அவர்களும் புலம்பெயர்ந்து வந்து அவர்கள் கஸ்ரப்பட்டாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு உறுதியான ஒரு எதிர்காலத்தை நம்மைப்போல் அமைத்துக்கொடுத்திருப்பார்கள்...அத்துடன் அவர்களும் எம்முடன் சேர்ந்து இங்குபோராட்டங்களில் கலந்துகொண்டிருப்பார்கள்...பின்னர் எமக்கென ஒரு நாடமைந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஊருக்குப்போகலாம்...அதுவரையும் அவர்களை அங்கிருந்து வெளியேறாதை அஙகியே இரு என்று சொல்ல நாங்கள் யார்..? நாம் பெற்ற இன்பம் அவர்களும் பெறவேண்டும்...பாதுகாப்பை,வசதியான் வாழ்க்கையை,கொலிடேயை,காரை,பிளைட்டை நம்மைப்போல் அவர்களின் குழந்தைகளும் அனுபவிக்கவேண்டும்..நான் மட்டும் வெளிநாட்டுக்கு ஆக்களை எடுக்கும் முகவராக இருந்திருப்பின் அத்தனை பேரையும் இலவசமாக எடுத்திருப்பன்.....
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#12 Volcano

Volcano

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 905 posts
  • Gender:Male
  • Location:Canada

Posted 24 June 2012 - 06:44 PM

முடிந்தவரை எம்மவர்கள் எல்லாரும் அங்கிருந்துவெளியேறி இங்குவந்து நல்லவாழ்க்கை பெறவேண்டும்..அதற்க்குப் பிறகு நாங்கள் எல்லாரும் சேர்ந்து நாடுமீட்க்க இங்கிருந்து ஒன்றாகப் போராடுவோம்...அண்மையில் ராஜபக்சவின் மகன் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற உதவிபுரிவதாக ஒரு செய்தி வாசித்தேன்..உண்மையில் மகிழ்ச்சியான செய்தி..அவர் அதை குறைந்த காசு வாங்கிக்கொண்டு செய்தார் என்ற்றால் இன்னும் பல ஏழைமக்கள் வர வாய்ப்பாகும்....எமது மக்கள் பலரிடம் காசு இருந்திருந்தால் எம்மைப்போல் அவர்களும் புலம்பெயர்ந்து வந்து அவர்கள் கஸ்ரப்பட்டாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு உறுதியான ஒரு எதிர்காலத்தை நம்மைப்போல் அமைத்துக்கொடுத்திருப்பார்கள்...அத்துடன் அவர்களும் எம்முடன் சேர்ந்து இங்குபோராட்டங்களில் கலந்துகொண்டிருப்பார்கள்...பின்னர் எமக்கென ஒரு நாடமைந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஊருக்குப்போகலாம்...அதுவரையும் அவர்களை அங்கிருந்து வெளியேறாதை அஙகியே இரு என்று சொல்ல நாங்கள் யார்..? நாம் பெற்ற இன்பம் அவர்களும் பெறவேண்டும்...பாதுகாப்பை,வசதியான் வாழ்க்கையை,கொலிடேயை,காரை,பிளைட்டை நம்மைப்போல் அவர்களின் குழந்தைகளும் அனுபவிக்கவேண்டும்..நான் மட்டும் வெளிநாட்டுக்கு ஆக்களை எடுக்கும் முகவராக இருந்திருப்பின் அத்தனை பேரையும் இலவசமாக எடுத்திருப்பன்.....



தம்பி/அண்ணை சபேசு!
இதைத்தானே இன்னுமொரு பதிவில்ல இப்ப போட்டனான். மகிந்ததாவின் புத்தா முல்லைத்தீவை வைத்துக்கொண்டு அங்கே இருக்கும் ஆக்களை அவுஸ்திரேலியாக்கு அனுப்பினால் அதும் 2 லட்சத்துக்கு, சிவனே எண்டு, எல்லா சனமும் வந்து சேர்ந்து போடுங்கள். அதுகளுக்கு ஒரு வாழ்வு வந்தாய் இருக்கும்.
எங்கடை ஆக்கள் இப்ப ஒரு மார்க்கமாய் தான் இருக்கினம். எங்களுக்குத்தான் ஒரு மண்ணும் விளங்குது இல்லை.




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]