10.06.1998 அன்று வன்னியில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லை . யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம்.
அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஒரு குடும்பத்தில் கைக்குழந்தையொன்றைத் தவிர மிகுதி ஐவரும் கொல்லப்பட்டதாக ஞாபகம். அதற்கு ஒரு கிழமைக்கு முன்புதான் கிளிநொச்சியிலிருந்து பெருமெடுப்பில் திருவையாறு வழியாக முன்னேறிய படையினரை முறியடித்தனர் புலிகள். அதில் சிங்கள அரசின் சிறப்புப் படைப்பிரிவொன்று நிர்மூலமாக்கப்பட்டது. மொத்தமாக நூற்றுக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
இப்படுகொலை நடத்தப்பட்ட நாளுக்கு சரியாக ஒருவருடம் முன்பு ‘ஜெயசிக்குறு’ என்ற பேரில் நடவடிக்கை தொடங்கி வன்னியை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் மீது புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நடத்தி படைத்தரப்புக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
அன்றைய சுதந்திரபுரப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு எம் அஞ்சலிகள்.
http://thaaitamil.co...்திரபுரப்-படுக/
இன்று சுதந்திரபுரப் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவுநாள்.
Started by
chinnavan
, Jun 10 2012 05:23 PM
4 replies to this topic
#1
Posted 10 June 2012 - 05:23 PM
ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!
http://dinaithal.com

#2
Posted 11 June 2012 - 12:24 PM
கண்ணீர் அஞ்சலிகள்.
எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின் தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.
"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "
#3
Posted 18 June 2012 - 02:17 PM
இத்தாக்குதலின்போது விடுதலைப் புலிகளின் வழங்கற்பிரிவுப் பொறுப்பாளரும் முன்னாள் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் அம்மா (அன்பு) அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இவருக்கு எமது வீரவணக்கம்
இவருக்கு எமது வீரவணக்கம்


----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்
#4
Posted 18 June 2012 - 03:01 PM
கொலைகள், படுகொலைகள், இனப்படுகொலைகள், மதக்கலவரங்கள் மூலம் சிறுபான்மை மக்களை அழித்துக்கொண்டு வருகின்றது ஜனநயாக சிங்கள தேசம்.
இந்தப்படுகொலையில் கொல்லப்பட்ட அனைத்து மக்களினதும் ஆத்மா சாந்தியடையுட்டும்.
இந்தப்படுகொலையில் கொல்லப்பட்ட அனைத்து மக்களினதும் ஆத்மா சாந்தியடையுட்டும்.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#5
Posted 18 June 2012 - 03:38 PM
ஸ்ரீலங்கா அரசபயங்கரவாதிகளின் விமானங்கள் நடத்திய நாசகாரத்தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து மக்களினதும் ஆத்மா சாந்தியடையுட்டும் .
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!!
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














