முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்
#1
Posted 10 June 2012 - 11:44 AM
குறிப்பிட்ட இனம் ஒரு தொடர்ச்சியான பாரம்பரியமான நிலப் பரப்பையும் கொண்டிருந்தால், அது ஒரு தேசிய இனம் என்கின்ற அங்கீகாரத்தை பெறுவதற்கான தகமைகளை கொண்டிருக்கும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழியை பேசாது, பல மொழிகளைப் பேசுகின்ற தேசியங்களும் உலகில் இருக்கின்றன. இவர்களை ஒரே விதமான பிரச்சனையும், ஒன்றாய் கூடியதன் பயனாய் உருவாகும் தனித்துவம் மிக்க பண்பாடும் ஓரே தேசியமாக மிளிரச் செய்யும். உ-ம்: அமெரிக்க தேசியம்.

#2
Posted 10 June 2012 - 11:53 AM
அரேபிய மொழியைப் பேசுவதோடு, தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்டிருந்தும், ஒரு அரேபிய தேசியம் உருவாக முடியவில்லை. இருபதிற்கும் மேற்பட்ட தேசியங்களாக அந்த இனம் திகழ்கின்றது.
ஜேர்மனியில் வாழ்கின்ற ஜேர்மன் மொழிபேசுபவனே தன்னை ஒரு ஜேர்மனியன் என்று அறிமுகம் செய்கின்றான். அவன் சுவிஸில் வாழ்ந்தாலோ, அல்லது அவுஸ்ரியாவில் வாழ்ந்தாலோ தன்னை தனித்துவமான தேசியமாகவே உணர்கின்றான்.
வரலாறும், பிரச்சனைகளும், பண்பாடுகளும் ஒரு மக்கள் கூட்டத்தை அதே மொழியைப் பேசுகின்ற மக்கள் கூட்டத்தில் இருந்து தனித்துவமாக பிரித்துக் காட்டுகின்றன.
#3
Posted 10 June 2012 - 12:04 PM
அதை விட மிக முக்கியாமாக தமது நிலப்பரப்பின் அயலில் வாழ்கின்ற தமிழர்கள் பற்றிய அச்சத்தையும் கொண்டிருக்கின்றனர். தமிழர்களும் முஸ்லீம்கள் பற்றிய தவறான எண்ணங்களையும், அச்சங்களையும் அத்தோடு அவர்கள் தமக்கு கீழ் வாழ வேண்டும் என்கின்ற மேலாதிக்க மனப்பாங்கையும் கொண்டிருக்கின்றனர்.
இது தமிழீழத்தில் முஸ்லீம்கள் தனியான அலகைப் பெற்று தம்மைத் தாமே நிர்வாகிப்பதற்கான தகமைகளை தானாகவே வழங்கி விடுகின்றது.
ஐக்கிய இலங்கையில் கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைய முடியாது ஒரு நிலையையும் ஏற்படுத்தி விட்டது.
#4
Posted 10 June 2012 - 12:06 PM
#5
Posted 10 June 2012 - 12:16 PM
அடுத்ததாக, வெள்ளாளர்கள் ஒரு தேசிய இனம்.. அவர்களும் ஒரு நிலப்பரப்பில், மொழி அலகைக்கொண்டு பூர்வீகமாக வாழ்ந்து வருகிறார்கள்..
- I.V.Sasi likes this
#6
Posted 10 June 2012 - 12:23 PM
ஆயினும் இலங்கைத் தேசியத்திலோ, அல்லது தமிழீழத் தேசியத்திலோ வாழக்கூடிய ஒரு தனித்துவம் மிக்க சமூகமான முஸ்லீம்களால் தமது கிராமங்களை நிர்வாகிக்கின்ற ஒரு அலகினை பெறுவதற்கான தேவை அவர்களுக்கு இருப்பதாக அவர்கள் கருதினால், அதை அடக்கப்படும் இனத்தை சேர்ந்த ஒருவனான என்னால் புரிந்து கொள்ளவும், ஆதரிக்கவும் முடியும்.
- Manivasahan likes this
#7
Posted 10 June 2012 - 12:30 PM
தனித்துவமான பண்பாடும், தொடர்ச்சியான பாரம்பரிய நிலப்பரப்பு இருப்பதனாலோ அந்த மக்கள் கூட்டம் ஒரு தேசியமாக உருவெடுக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
அந்த மக்கள் கூட்டம் தற்போது உள்ளடக்கப்பட்டிருக்கும் தேசியத்தில் பாதுகாப்பாக உணர்கின்றதா என்பது இங்கே முக்கியம்.
இலங்கைத் தேசியத்தில் தமிழினம் பாதுகாப்பாக உணரவில்லை. அது தனித் தேசியமாக உருவாவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ் தேசியத்தில் உள்ள தனித்துவம் மிக்க சமூகமான முஸ்லீம்கள் அங்கே தம்மை பாதுகாப்பாக உணரவில்லை. அவர்கள் அதற்காக தனி அலகு போன்ற ஏற்பாடுகளை கோருகின்றார்கள்.
#8
Posted 10 June 2012 - 12:36 PM
தமிழர் போராட்டத்தில் அவர்கள் அரசியல்ரீதியில் சிங்களத்துடனேயே தம்மை இனங்காட்டிக் கொண்டனர்.. பிற்பாடு சிங்களுத்துடன் பேசி அவர்கள் தமக்கான தீர்வைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்..
- nunavilan likes this
#9
Posted 10 June 2012 - 12:46 PM
தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கம் அச்சத்தையும், தவறான எண்ணங்களையும் நீக்கி, நட்பும், சகோதரத்துவமும் மிக்க மக்களாக அவர்களை மாற்றுவதே சிறந்த மாற்றுவழியாக இருக்க முடியும். அதற்கான காலமும் சந்தர்ப்பமும் இன்னமும் இருக்கின்றதா என்பதே என்னுடைய அச்சம் மிகுந்த கேள்வியாகும்.
#10
Posted 10 June 2012 - 12:49 PM
#11
Posted 10 June 2012 - 12:54 PM
அவர்களுடைய பிரதிநிதிகளை அவர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்
#12
Posted 10 June 2012 - 12:58 PM
- nunavilan and தமிழ்சூரியன் like this
#13
Posted 10 June 2012 - 01:02 PM
தமிழீழம் உருவாகக்கூடிய நேரத்தில், முஸ்லீம்கள் தாம் பாரம்பரியமாகவும், பெரும்பான்மையாகவும் வாழ்கின்ற நிலப்பரபு;புக்கள் தொடர்ந்தும் சிறிலங்காவுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பினால், அது சிக்கல் மிகுந்ததாக இருந்தாலும் கூட, அதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டே ஆக வேண்டும். எமது முடிவை அவர்கள் மீது திணிக்கக் கூடாது.
தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கம் அச்சத்தையும், தவறான எண்ணங்களையும் நீக்கி, நட்பும், சகோதரத்துவமும் மிக்க மக்களாக அவர்களை மாற்றுவதே சிறந்த மாற்றுவழியாக இருக்க முடியும். அதற்கான காலமும் சந்தர்ப்பமும் இன்னமும் இருக்கின்றதா என்பதே என்னுடைய அச்சம் மிகுந்த கேள்வியாகும்.
தமிழீழம் அமைந்தால் அவர்கள் எங்களுடன் இருக்க முடியுமா என்பதற்கான விடை அவர்களிடம் இல்லை.. அது எங்களிடமே உண்டு..
போராட்டகாலத்தில் எங்கே அவர்களின் ஆதரவு இருந்தது என்பதைப் போறுத்ததே அவர்களது உரிமைக்கான அளவுகோலும் ஆகும்.. சிங்களத்துடன் இணைந்து நின்றவர்கள் தமிழீழம் அமையும் பட்சத்தில் எங்கே சேருவது என்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கமுடியாது..
அவர்கள் ஏற்கனவே தமது முடிவை எடுத்து சிங்களத்துடன் இணைந்து நிற்கிறார்கள்.. முள்ளிவாய்க்கால் அவலத்தை ஐநாவில் இல்லையென்று சாதித்தவர்கள் முஸ்லிம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்.. அவர்கள் தம் முடிவை எடுத்துவிட்டார்கள்.. உங்களுக்கு மட்டுமே குழப்பமாக இருக்கிறது..
- kanneer likes this
#14
Posted 10 June 2012 - 01:08 PM
தனி நாடு தமிழர்களுக்கு கிடைச்சிட்டுது இனி மேல் முஸ்லீம்களுக்காக போராடுவோம்
#15
Posted 10 June 2012 - 01:10 PM
தன்னுடைய மொழியைப் பேசுகின்ற ஒரு மக்கள் கூட்டத்தையும், அவர்கள் சார்ந்த நிலப்பரப்பையும், பொருளாதார வளத்தையும் இழப்பது தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் தோல்வி.
அந்த மக்களை வென்றெடுக்க முடியாமல் போனது எமது அரசியல் வங்குரோத்துத்தனம். முஸ்லீம்கள் பற்றிய விரோத எண்ணங்களை வளர்க்கின்ற அரசியலையும், ஊடகங்களையும் ஆதரிப்பதன் ஊடாக தமிழர்கள் தமது தோல்வியை தேடிக் கொள்கிறார்கள்.
தமிழர்கள் கடந்து நூறு ஆண்டுகளாக முஸ்லீம்கள் பற்றி இதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இன்றைக்கு இன்னும் மோசம் அடைந்திருக்கிறது. இது அவர்களுக்கு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவையை இன்னும் அதிகப்படுத்துகிறது.
#16
Posted 10 June 2012 - 01:21 PM
.
அதே போல கிறிஸ்தவர்களுக்கும் தனி அலகு வேண்டும். மன்னாரை கத்தோலிக்கர்களும், மற்றும் யாழ்ப்பாண / மட்டக்களப்பு நகரப் பகுதியை மெத்தடிஷ் சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் பிரித்துத் தர வேண்டும்.
சைவ சமய உறவுகளின் கோரிக்கைகளைப் பற்றி, அவர்கள்தான் கருத்துக் கூறவேண்டும்.
- இசைக்கலைஞன் likes this
#17
Posted 10 June 2012 - 01:24 PM
எனக்கு குழப்பம் இல்லை. அவர்கள் யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இங்கும் நீங்களோ நானோ உத்தரவு போட முடியாது.
தவறு.. அவர்கள் தம் நிலப்பரப்பை சிங்களத்துடன் இணைத்தோ, தனிநாடாகவோ கொண்டு இயங்கவேண்டியதுதான்.. இதைச் சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது.. உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்..
அரசியல் ரீதியாக சிங்களத்தின்பக்கம் அவர்கள் நிற்பதை ஒத்துக்கொள்கிறீர்களா இல்லையா? பிறகெப்படி எங்களுடன் இருக்க முடியும்?
தன்னுடைய மொழியைப் பேசுகின்ற ஒரு மக்கள் கூட்டத்தையும், அவர்கள் சார்ந்த நிலப்பரப்பையும், பொருளாதார வளத்தையும் இழப்பது தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் தோல்வி.
அதுசரி.. எங்கள் மொழியைப் பேசிக்கொண்டு சிங்களத்துடன் இணைந்து செயற்படுவது எந்த வகையில் சேர்த்தி..? இதற்கென ஒரு சிறப்புச்சொல் உண்டு.. ஆனால் அது தற்போது தடைசெய்யப்பட்ட சொற்றொடர் ஆகும்..
அந்த மக்களை வென்றெடுக்க முடியாமல் போனது எமது அரசியல் வங்குரோத்துத்தனம். முஸ்லீம்கள் பற்றிய விரோத எண்ணங்களை வளர்க்கின்ற அரசியலையும், ஊடகங்களையும் ஆதரிப்பதன் ஊடாக தமிழர்கள் தமது தோல்வியை தேடிக் கொள்கிறார்கள்.
அவர்களின் அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளாதது வேதனை.. பலமுள்ளவர் பக்கம் என் அரசியல் என்பது அவர்களது அரசியல்.. நீங்கள் என்னதான் அரவணைத்தாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை.
தமிழர்கள் கடந்து நூறு ஆண்டுகளாக முஸ்லீம்கள் பற்றி இதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இன்றைக்கு இன்னும் மோசம் அடைந்திருக்கிறது. இது அவர்களுக்கு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவையை இன்னும் அதிகப்படுத்துகிறது.
தமிழர்களுக்கு எந்தக்காலத்தில் பலம் இருந்திருக்கிறது எதையாவது செய்வதற்கு? பலமென்பது ஆயுத பலமல்ல.. அரச பரிபாலனம்.. சிங்களவன் வைத்திருக்கிறான். அதனால் அங்கே ஒட்டிக்கொண்டுள்ளார்கள்.
நாளை தமிழர்களுக்கு ஒரு தேசம் விடியுமாயின், இவர்களது அரசியலும் மாறும் என்பதை விளங்கிக் கொண்டுள்ளேன்.. ஆனால் அந்த மாற்றத்தை வரவேற்பது நல்லதல்ல..
இன்று அவர்கள் மாறிக் காண்பிக்கட்டும்.. எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.
- kanneer likes this
#18
Posted 10 June 2012 - 02:10 PM
நாம் யார்?
எமக்கு ஏதாவது பிரச்சினைகள் உண்டா?
அதற்கு தீர்வு என்ன?
அதற்கு பின்னர்தான்
பக்கத்து அப்துல்லாவுக்கு என்ன பிரச்சினை?
அவன் எனக்கு ஏன் வணக்கம் சொல்வதில்லை?
அது பற்றி ஏன் அவர் என்னுடன் பேசாமல் இருக்கிறார்?
அவர் என்னுடன் பேசவேண்டுமென்றால் எதை எதை நான் அவருக்கு விட்டுக்கொடுக்கணும்?
அடிபட்டாலும் குத்துப்பட்டாலும் அடுத்தவீட்டு வீரசிங்கவுடன் எப்படி சிரித்து சிரித்து பழகி மகிழ்கிறார்?
என்பதெல்லாம்??????
வந்திட்டினம்
ஏதோ நாங்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வது போல்???
தலைவர் எத்தனை முறை கூப்பிட்டார்?
எத்தனை வி;டுக்கொடுப்புக்களைச்செய்தார்?
எத்தனை ஒப்பந்தங்களைளப்போட்டார்???????????
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#19
Posted 10 June 2012 - 02:43 PM
#20
Posted 10 June 2012 - 02:46 PM
அவர்களுக்கு என சரியான தலைமை இல்லை.அவர்களுக்கு என்ன தேவை என்று சொல்ல கூட அவர்களுக்கு சரியான தலைமை இல்லை.அவர்களுக்கான தனி அலகோ,மாகாண சுயாட்சியோ எதுவோ சிங்களவர்களுடன் தான் என்பது நடைமுறை சாத்தியமானது.
அவர்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்பதற்காக தமிழகளுடன் இணைய வேண்டுமென்பதில்லை.














