Jump to content

அரோஹரா சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரோஹரா அரோஹரா எண்டு சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை

ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோயில்த் தேர் கட்டாயம் போக வேணும்

மனைவியும் பிள்ளைகளும் ஒரே நச்சரிப்பு. தாங்கேலாமல் சரி போவம் என்டாச்சுது.

பிள்ளைகளுக்குக் கோயிலில் ஈடுபாடு இல்லை . ஆனால் அங்கே வழங்கப்படும் அன்னதானம்

மற்றும் மோர் என்பன பிடிக்கும். எனக்கு இப்படியான சன நெரிசலில் அவதிப்பட விருப்பமில்லை.சிலவேளைகளில் பக்தி தானாக வரும்போது ஒரு திங்களோ செவ்வாயோ

சனக்கூட்டம் இல்லாத நாளாகப் பார்த்துச் செல்வது வழக்கம்.

விடிய வேளைக்கு நித்திரையால எழும்பினால் அம்மன் கோயிலுக்குப் போகலாம்

என முடிவெடுத்தாகி விட்டது. காலமை முழிச்சுப்பார்த்தால் ஒரே மழையும் குளிரும்.இந்த மழைக்குள்ள ஆர் கோயிலுக்குப் போறது எண்டு நான் புறு புறுக்க

கோயிலடியில மழை இருக்காது வாங்கோ போவம் எண்டு விட்டுக்காரர் முடிவெடுத்துவிட்டினம். இரண்டு குடையைக்கையில எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டாச்சுது.

காரை வேக வீதியில் ஏத்தினால் கெதியாகப் போகலாம்.ஊருக்குள்ளால போனால்

நேரம் அதிகம் எடுக்கும். மனைவியின் ஆலோசனைப்படி கோயில் இருக்கும் ஹம்

என்ற நகரத்திற்கு வேகமாக வந்து செர்ந்தாச்சுது.

கோயில் கிட்ட நெருங்க நெருங்க வாகன நெரிசலும் கூடிவிட்டது.

ஆமை வேகம்.ஒரு மாதிரித் தவண்டு உருண்டு வாகன நேரிசலுக்காலை தப்பி வந்துட்டோம் .

இனி வாகனம் நிப்பாட்ட கோயிலுக்கு கிட்டவாக ஒரு இடம் வேணும்.

ஐந்து வருடங்களின் முன்னர் கோயிலுக்கு மிக அண்மையாக வாகனங்களை நிப்பாட்ட அனுமதி இருந்தது. எங்கடை சனங்கள் பக்கத்தில் இருந்த தனியார் காணிகளிலும் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகளிலும்

கார்களை நிப்பாட்டி விட்டுக் கோயில் திருவிழா முடிய அந்த இடங்களை அசிங்கமாக்கி விடுவார்கள்.

உணவு எச்சங்களும் தண்ணீர்ப் போத்தல்களும் வாகனத் தரிப்பிடத்தை நிரப்பிவிடும்.

குழந்தைகளின் அவசரத்திற்கும் வாகனத் தரிப்பிடமே கழிப்பிடமானது.

மாம்பழப் பெட்டிகளும் மரக்கறி வாங்கிய பைகளும் காற்றில் பறக்கும் பட்டமாகின. உரிமையாளர்களின் கொந்தளிப்பால் கோயிலுக்கு அண்மையில் வாகனம் நிப்பாட்டுவதற்கு அனுமதிமறுக்கப்பட்டது.

கோயிலுக்கு மிக அண்மையில் இருக்கும் வீதிகள் எல்லாம் தேர்த் திருவிழா அன்று முடக்கப்பட்டு காவற்துறையினரின் கண்காணிப்பின் கீழ் வந்தது.

தற்சமயம் கோயிலின் இரண்டு மைல் சுற்றளவில் வாகனங்கள் நிறுத்துவது கடினம்.

ஒரு மாதிரி காவற்துறையின் கட்டளைப்படி ஒரு தரிப்பிடத்தில் வாகனத்தை

நிறுத்திவிட்டு கோயிலுக்கு நடந்தோம். மழை விட்டபாடாக இல்லை.குடை கொண்டு வந்ததால் தப்பினோம். ஆனாலும் குளிர் கைகள் விறைக்கும் அளவிற்கு இருந்தது. :)

ஊரிலை மார்கழித் திருவிழா எண்டால் மழை குளிர் எல்லாம் பார்ப்பதில்லை.

ஊரெல்லாம் வெள்ளம் பாய்ந்தோடினாலும் அந்த வெள்ளத்தில் நீந்தியே கோயிலடி

வரைக்கும் செல்லுவோம் :lol: .பின்னர் கோயில்க் கேணியில் ஒரு குளியல்.நனைந்த வேட்டிகளை

வடலியில் காயப்போட்டால் ஐந்து நிமிடத்தில் வேட்டி காய்ந்துவிடும். அது ஒரு கனாக்காலம். :rolleyes:

ஒரு மாதிரிக் கோயிலை அண்மித்ததும் ஒலிபெருக்கிச் சத்தம் காதைப் பிழந்தது.

" தயவு செய்து கோவிலுக்குள் ஒருவரும் தங்கி நிற்க வேண்டாம். உள்ளே இருப்பவர்கள் தயவு செய்து வெளியே வரவும்.

வெளியிலிருந்து ஒருவரும் உள்ளே செல்ல வேண்டாம்."

இப்படி ஐயரும் அறிவிப்பாளரும் மாறி மாறி அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன நடந்தது எண்டு எங்களுக்கு முதல்ல விளங்கவில்லை.

யாராவது குண்டுப் புரளியைக் கிளப்பி விட்டார்களோ என நான் விசாரிக்க

எதிரில் வந்தவர் சொன்னார்

" மழைக்குச்சனங்கள் எல்லாம் கோயிலுக்குள் ஒதுங்கி விட்டுதுகள்." :lol::D

விடுப்புப் பாக்க வந்தவர்களும் விரதம் இருந்து வந்தவர்களும்

காவடி எடுக்க வந்தவர்களும் கல்யாணப் பெண்ணைத் தேடி வந்தவர்களும்

கோயிலை விட்டு வெளி வராமல் அடம்பிடித்துக் கொண்டிருக்க மழையும் விடாமல்

தன் வேலையைச் செய்து கொண்டிருந்தது. இவ்வளவு சனத்தையும் தாண்டி அம்பாள்

எப்படி வெளியில் வந்து தேரில் ஏறி பக்த கோடிகளுக்குத் தரிசனம்

கொடுத்தாவோ தெரியவில்லை. :wub:

கோயிலுக்குள்ளபோற விசப்பரீட்சையில் பங்கெடுக்காமல் விறுக்கு விறுக்கெண்டு நேரடியாக

கடைப்பகுதிக்குள்ள போயாச்சு. வழமைபோல் எல்லாத் தொலைக்காட்சிக்காரரும்

உடுப்புக்கடைகளும் மரக்கறிக் கடைகளும் சாப்பாட்டுக்கடைகளும்

தொலைபேசி அட்டைகள் விற்பனை நிலையங்களும் என சுன்னாகச் சந்தை போலக்

காட்சியளித்தது. ஓயாது பெய்த மழைக்கும் அஞ்சாமல் பக்தகோடிகள் குடைகளின் கீழ் தஞ்சம் புகுந்து

கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இலவசத் தொலைக்காட்சியினர் வெறுமையாக இருந்தது கவலைக்குரிய விடயம்.

இன்னொரு தொலைக்காட்சியினர் கடை திறந்தும் காட்டுகள் வரவில்லையாம்.

நீயா நானா என அவர்களிடம் பக்த கோடிகள் நிறைந்திருந்தும் காட்டு வந்து சேராதது பரிதாபம்.

பகல் பதினோரு மணிவரை நான் அங்கு நின்றேன் அதுவரை கடை மட்டும் தான் திறந்து இருந்தது.

கல்லா வெறுமையாக இருந்தது.

அப்போது சற்றுத் தள்ளி ஒருவர் லேபாரா விளம்பரக் குடையின் கீழ் தன்னை மறைத்துக் கொண்டு

யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார். குனிந்து நிமிர்ந்து பார்த்து

அவரை நான் அடையாளம் கண்டு விட்டேன். இதுவரை அவரை நேரில் கண்டதில்லை.

யாழில் உள்ள படத்தின் மூலம் தான் அவரை அடையாள படுத்திக் கொண்டேன்.

அதே மெல்லிய தாடி அதே கிருதா அவர்தான்.முதன் நாள் இணையத் தளங்கள்

செய்திகளின் தலைப்புகளை இனவாதம் துண்டும் வகையில் இடக்கூடாது என வாதிட்டவர்.

நல்ல எழுத்தாளர். இப்படியொரு எழுத்தாளரை நேரில் காண வைத்த அம்மனுக்கு ஒரு வணக்கம்.

எனக்கு அவரைக் கண்டதும் ஏதாவது கதைக்கலாம் எனத் தோன்றியது . நாலு தடவை அவரைச் சுற்றிச் சுற்றி

அடுத்த அடுத்த கடைகளைக் கவனிப்பது போல உலா வந்தேன். அவரோ இன்னும் ஆரம்பத்தில் கதைத்தவருடன்

கதைத்துக் கொண்டிருந்தார். சரி ஏன் குழப்புவான் சில வேளை அது அவர் இல்லாமல் வேறு யாரோ கூட அவரமாதிரி இருக்கலாம் என நினைத்துக் கொண்டு அப்பால் நகர்ந்தேன்.

வந்தனாங்கள் கொஞ்ச மரக்கறியையாவது வாங்குவம் எண்டு மனுசி கடைக்குள்ளை போனவ

திரும்பி வந்தவுடன் வாகனத் தரிப்பிடத்தை நோக்கி நடந்தோம். எதிரே அப்போதும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

ஊரில் வயலில் வேலை செய்யும் பெண்களைப் போலவே இங்கும் மழையில் புடைவை நனைந்துவிடாமல் முழங்கால் வரை தூக்கியபடி பெண்கள் நடந்து வந்தது மீண்டும் ஊரை நினைவிற்குக் கொண்டு வந்தது. அதிகமானவர்கள் எங்களைப் போலவே அதிக துரத்தில் வாகனத்தை நிறுத்தியவர்கள்.ஆலயம் எப்போது கண்ணில் படும் என அவர்கள் நினைத்தது என் மனதில் பட்டது. ஒரு இருபது முப்பது நிமிடங்கள் நடந்ததும் வாகனத் தரிப்பிடம் வந்தது.

அப்போது சற்று வயதானவர் எங்களுக்குப் பின்னால் வந்த ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டார்

" தம்பி கோயிலுக்கு இன்னும் கன தூரம் நடக்க வேண்டுமா?"

அதற்கு மற்றவர் சொன்னார்

"" அரோஹரா அரோஹரா எண்டு சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை""

"" அலுத்துச் சலித்து நடந்தால் அரை மணித்தியால நடை"" :lol: :lol: :lol:

அதற்கு வயதானவர் புன்னகையுடன் ஆளை விட்டால் காணும் என அந்தப் பக்கம் சென்று விட்டார்.

நாங்களும் மழையைத் திட்டிக் கொண்டு வீட்டுப்பக்கம் வாகனத்தைச் செலுத்தினோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் கட்டுரையை, வாசித்ததன் மூலம்.... ஹம் அம்மன் கோவில் தேருக்கு நேரே... போன உணர்வு ஏற்பட்டது. :rolleyes::D

Link to comment
Share on other sites

வர்ணனைக்கு நன்றிகள் வாத்தியார்.. :D அடிக்கடி இப்பிடி எழுதுங்கோ.. :wub:

அதுபோக, ஆட்டுத்தாடிக்காரர் பக்க பகுத்தறிவுவாதியாச்சே??!! :unsure: கோயிலுக்கு எதுக்கு வந்தவர்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! நீங்கள் சங்கிலிகள் அறுபட்டவிசயத்தை சொல்ல மறந்து போனியள் :D

வர்ணனைக்கு நன்றிகள் வாத்தியார்.. :D அடிக்கடி இப்பிடி எழுதுங்கோ.. :wub:

அதுபோக, ஆட்டுத்தாடிக்காரர் பக்க பகுத்தறிவுவாதியாச்சே??!! :unsure: கோயிலுக்கு எதுக்கு வந்தவர்? :rolleyes:

13ம் திகதி புதன்கிழமை வரைக்கும் அடக்கி வாசிப்பம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது வாத்தியார்!

தும்பு முட்டாசும், சோனகர் விக்கிற காப்பும் தான், இல்லைப் போல!

மற்றும்படிக்கு, நம்ம சனம் அந்த மாதிரியே இருக்கினம் போல கிடக்கு!

குளிர் என்ட படியால, புலிப்பல்லும், ஓம் போட்ட சங்கிலியளும், வெளியே தலை காட்டேல்லைப் போல கிடக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுபோக, ஆட்டுத்தாடிக்காரர் பக்க பகுத்தறிவுவாதியாச்சே??!! :unsure: கோயிலுக்கு எதுக்கு வந்தவர்? :rolleyes:

"ஊருக்குத் தான்... உபதேசம், உனக்கில்லையடி கண்ணே...." என்ற பழமொழியை நீங்க கேட்டதில்லையா இசை. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா....அம்மனுக்கு அரோகரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவரணம் அற்புதம். வாத்தியார் ஏதாவது வானொலிக்கு நேரஞ்சல் செய்திருக்கலாம்..

ஆட்டுத்தாடிக்காரர் கறுப்புச் சட்டை போட்டுவரவில்லையா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் உங்கள் எழுத்தைப் பார்க்கும் போது ஊர்க் கோயிலுக்கு போக வேண்டும் என ஆசையாக இருக்குது :) ...சபேசன் மனைவி,மாமியாருக்காக கோயிலுக்கு வந்திருப்பார் இதை எல்லாம் நாங்கள் பெரிசாய் எடுக்கக் கூடாது :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் தம்பி

அருமையான எழுத்து

எனக்கும் இதுகள் சரிவராது

இதுவரை இந்தக்கோயிலுக்கும் போனதில்லை.

ஏன் வருடமாவருடம் இங்கு லா சப்பல் பிள்ளையார் உலாவருவார் .

ஒரு தரம் கூட போய்ப்பார்த்தில்லை.

வாத்தியார் தம்பி

நேரம் கிடைக்கும்போது இடைக்கிடை இப்படி எதையாவது கிறுக்கலாம் தானே......

தொடரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி அண்ணா

உங்களை என் எழுத்தின் மூலம் ஹம் அம்மன் கோயிலுக்குக் கூட்டிச் சென்றிருந்தால்

அது எனக்கு மகிழ்ச்சியே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணனைக்கு நன்றிகள் வாத்தியார்.. :D அடிக்கடி இப்பிடி எழுதுங்கோ.. :wub:

அதுபோக, ஆட்டுத்தாடிக்காரர் பக்க பகுத்தறிவுவாதியாச்சே??!! :unsure: கோயிலுக்கு எதுக்கு வந்தவர்? :rolleyes:

இசை உங்கள் உற்சாகத்திற்கு எனது நன்றிகள்.நேரம் உலகத்தின் மிகப்பெரிய சக்தி.அதை மீறி யாராலும் எதையும் செய்ய முடியாது.பகுத்தறிவாளனுக்கும் கோயில் குளத்தடியில் தான் ஞானம் பிறக்கும் :D

Link to comment
Share on other sites

வாத்தியாரின் விபரிப்பு நன்றாக இருக்கிறது. இடம் மாறினாலும் சனம் மாறவில்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர்.

சின்ன வயதில் கண்ணகி அம்மன் கோயில் போய் வந்த மாதிரி ஒரு உணர்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி அண்ணா

உங்களை என் எழுத்தின் மூலம் ஹம் அம்மன் கோயிலுக்குக் கூட்டிச் சென்றிருந்தால்

அது எனக்கு மகிழ்ச்சியே :D

ஹம் நகரம், எனது சிறிய தாய் மாதிரி வாத்தியார்.

நான் அந்த, நகரத்துக்கு வந்த போது... 27 தமிழ் ஆட்கள் மட்டும் இருந்தார்கள்.

இப்போது... ஒவ்வொரு வருடமும், அந்த ஊரைப் பார்க்க வேண்டும் ஆசை... இருந்தாலும்,

அம்மாளாச்சியின், அனுக்கிரஹம் கிடைக்குதில்லையே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! நீங்கள் சங்கிலிகள் அறுபட்டவிசயத்தை சொல்ல மறந்து போனியள் :D

13ம் திகதி புதன்கிழமை வரைக்கும் அடக்கி வாசிப்பம். :D

சங்கிலி அறுபடாத எங்கள் கோயில்த் திருவிழாக்கள் அங்கே அண்ணா இருக்கின்றது.நான் அதுவரையும் அங்கே நிற்கவில்லை. அம்மன் தேரில் ஏறமுதலே நான் வெளிக்கிட்டாச்சு.கு சா அண்ணை 13 ம் திகதிவரை ஏன் ? என்ன விசயம்? :D

நன்றாக இருக்கின்றது வாத்தியார்!

தும்பு முட்டாசும், சோனகர் விக்கிற காப்பும் தான், இல்லைப் போல!

மற்றும்படிக்கு, நம்ம சனம் அந்த மாதிரியே இருக்கினம் போல கிடக்கு!

குளிர் என்ட படியால, புலிப்பல்லும், ஓம் போட்ட சங்கிலியளும், வெளியே தலை காட்டேல்லைப் போல கிடக்கு!

குளிர் இல்லாவிட்டால் தெரிந்திருக்கும் தங்கம் ஏன் இந்த விலை விக்குது என்று :D

.

வர்ணனை அபாரம் வாத்தியார். :D

ஈசனுக்கு நன்றிகள்

அரோகரா....அம்மனுக்கு அரோகரா

புத்தனுக்கு எனது சரணங்கள்

விவரணம் அற்புதம். வாத்தியார் ஏதாவது வானொலிக்கு நேரஞ்சல் செய்திருக்கலாம்..

ஆட்டுத்தாடிக்காரர் கறுப்புச் சட்டை போட்டுவரவில்லையா!

உங்கள் கருத்திற்கு நன்றிகள் கிருபன் அண்ணா கருப்பு வெள்ளை கலக்கல்

வாத்தியார் உங்கள் எழுத்தைப் பார்க்கும் போது ஊர்க் கோயிலுக்கு போக வேண்டும் என ஆசையாக இருக்குது :) ...சபேசன் மனைவி,மாமியாருக்காக கோயிலுக்கு வந்திருப்பார் இதை எல்லாம் நாங்கள் பெரிசாய் எடுக்கக் கூடாது :lol::icon_idea:

அதையெல்லாம் பெரிசாக எடுக்கவில்லை கள உறவுகளை நேரில் காண்பதில் மகிழ்ச்சியே.நானாக அறிமுகம் செய்யவில்லை அது என் தவறாக இருக்கலாம் :)அவருக்கு என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் தம்பி

அருமையான எழுத்து

எனக்கும் இதுகள் சரிவராது

இதுவரை இந்தக்கோயிலுக்கும் போனதில்லை.

ஏன் வருடமாவருடம் இங்கு லா சப்பல் பிள்ளையார் உலாவருவார் .

ஒரு தரம் கூட போய்ப்பார்த்தில்லை.

வாத்தியார் தம்பி

நேரம் கிடைக்கும்போது இடைக்கிடை இப்படி எதையாவது கிறுக்கலாம் தானே......

தொடரட்டும்

பிள்ளையார் கோயில் மட்டுமா ?

அம்மன் கோயிலும் உண்டல்லவா?

உங்கள் கருத்திற்கும் உற்சாகத்திற்கும் நன்றி அண்ணா :D

Link to comment
Share on other sites

வர்ணனை அமர்க்களம் வாத்தியார். பின்னூட்டங்களும் அட்டகாசம் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் விபரிப்பு நன்றாக இருக்கிறது. இடம் மாறினாலும் சனம் மாறவில்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர்.

சின்ன வயதில் கண்ணகி அம்மன் கோயில் போய் வந்த மாதிரி ஒரு உணர்வு.

எங்கள் மக்கள் ஒருபோதும் மாறமாட்டார்கள்.ஒரு கணம் மாற நினைத்தாலே.....நாம் எல்லோரும் ஈழத்தில்...நன்றி தப்பிலி உங்கள் கருத்திற்கு :D

Link to comment
Share on other sites

வாத்தியார்,

என்னுடன் வந்து பேசியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு உங்களைத் தெரியாது. அடுத்த முறை எங்காவது சந்தித்தால் அறிமுகப்படுத்திப் பேசுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,

என்னுடன் வந்து பேசியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு உங்களைத் தெரியாது. அடுத்த முறை எங்காவது சந்தித்தால் அறிமுகப்படுத்திப் பேசுங்கள்.

நான் உங்களைக் கண்ட நேரத்தில் நீங்கள்இன்னொருவருடன் நீண்ட நேரமாகக் கதைத்துக் கொண்டிருந்தீர்கள்.அடுத்தது நான் அங்கு அதிக நேரம் நிற்கவில்லை.வேலை காரணமாக 11 மணிக்கே வீடு திரும்பிவிட்டேன்.கட்டாயம் அடுத்தமுறை எங்காவது சந்தித்தால் உங்களுடன் அறிமுகம் செய்துகொள்கின்றேன் சபேசன் :D

இன்று தான் வாசித்தன் வர்ணனை நன்றாக இருக்கு வாத்தியார்..

உங்கள் கருத்திற்கு நன்றி அபராஜிதன் :D

ஹம் நகரம், எனது சிறிய தாய் மாதிரி வாத்தியார்.

நான் அந்த, நகரத்துக்கு வந்த போது... 27 தமிழ் ஆட்கள் மட்டும் இருந்தார்கள்.

இப்போது... ஒவ்வொரு வருடமும், அந்த ஊரைப் பார்க்க வேண்டும் ஆசை... இருந்தாலும்,

அம்மாளாச்சியின், அனுக்கிரஹம் கிடைக்குதில்லையே....

27 பேர் இருக்கும்போது நீங்கள் அங்கு இருந்தால் அம்மன் கோயில் ஆரம்பித்த காலத்தில் அங்கு இல்லையா? :D

Link to comment
Share on other sites

வாத்தியாரின் இந்தக் கட்டுரையை வாசித்த பின் அவர் மேல் மிக மோசமாக கோபம் வருகின்றது. கெட்ட வார்த்தைகள் கூடாது என்பதால் பேச முடியவில்லை அவரை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.