Jump to content

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக மக்களவை மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானம்.


Recommended Posts

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக மக்களவை மாநாட்டில் புலம்பெயர் தமிழீழ மக்களின் அரசியல் வேணவாவை வலியுறுத்தும் முகமாக எட்டப்பட்ட தீர்மானம்.

யேர்மன் தலைநகர் பெர்லினில் 26 ஃ 27 .05 .2012 நாட்களில் நடைபெற்ற அனைத்துலக மக்களவையின் மாநாடு-

முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இதுவரைகாலமும் தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களுக்கும் அந்நிய ஆக்கிரமிப்பால் படுகொலைசெய்யப்பட்ட எமது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது.

நிகழ்வில் அனைத்து நாடுகளிலிருந்தும் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரையும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. அடுத்து ஒவ்வொரு மக்களவையின் தலைவர் அல்லது அதை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர் மாநாட்டில் கலந்துகொண்ட தமது நாடுவாரியான மக்களவை உறுப்பினர்களை அறிமுகம்செய்து வைத்தனர். தொடர்ந்துஇ அந்தத்த நாடுகள் ரீதியாக தாம் மேற்கொண்டுவரும் முக்கிய பணிகளையும் செயற்பாடுகளையும் சிறிய தொகுப்பாக வழங்கினார்கள் .

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளரும் தமிழ்நாட்டு கொம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளருமான சி.மகேந்திரன் அவர்கள் இந்திய மத்திய அரசின் ஈழம்சார்ந்த தற்போதைய நிலைப்பாடும் தமிழ்நாட்டு தலைவர்களின் உறவுகளின் நிலைப்பாடு செயற்பாடு சம்மந்தமாக உரையாற்றினார். முக்கியமாக அவரின் கருத்தில் ஈழத்தமிழர் தமது அரசியல் வேணவாவை வெளிக்காட்டும் முகமாக சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் பொதுமக்கள் கருத்துக்கணிப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தைக் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் தமிழகத் தலைவர்கள் அல்லது பிரமுகர்கள் தமது தனிநபர் மற்றும் கட்சி அரசியலைத் தாண்டி ஓர் ஐக்கிய தமிழக மக்கள் அமைப்பாக ஈழத்தமிழர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக சில வேலைத்திட்டங்களை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டார்.

திரு.மகேந்திரன் அவர்களின் நேரத்தைத் தொடர்ந்து சர்வதேச மனிதவுரிமை அமைப்பு பிரேமன் தலைவர் திரு.விராஜ் மென்டிஸ் அவர்கள் இனப்படுகொலை விடையமாக ஆழமாக எடுத்துரைத்தார். இனப்படுகொலை என்பது எப்படி சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஈழத்தமிழர்கள் மீது வல்லாதிக்க நாடுகளின் ஆதரவோடு சிங்கள அரசு மேற்கொண்ட ‘இனப்படுகொலையை எந்தவகையில்நீரூபிப்பது அல்லது இனப்படுகொலை என ஏற்றுக்கொள்ள வைப்பது பற்றியும் விளக்கியதோடு அதற்காக நாம் எடுக்க வேண்டிய வழிமுறைகள் சம்மந்தமாகவும் விரிவாக விளக்கிக்கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில் சிங்கள இராணுவம் இனப்படுகொலையை மேற்கொண்டபோதிலும் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்கள் முறியடிப்பே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு வழிவகுத்தது எனவும் அதற்கு எந்த வல்லரசு நாடுகள் பின்னணியில் இருந்தன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து அனைத்துலக மக்களவை முன்னெடுக்க வேண்டிய பல அரசியல் விடையங்கள் ஆழமாக கலந்துரையாடப்பட்டது .அத்துடன் ஆராயப்பட்ட விடயங்களின் பொருட்டு மற்றும் மக்களவையின் அடிப்படை உருவாக்கத்தையும் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானம் இவ் மாநாட்டில் எட்டப்பட்டுள்ளது .

சென்ற 26 ஃ27.05.2012 நாட்களில் யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக மக்களவை மாநாட்டில் புலம்பெயர் தமிழீழ மக்களின் அரசியல் வேணவாவை வலியுறுத்தும் முகமாக எட்டப்பட்ட தீர்மானம் இன்று முழுமையாக்கப் படுகின்றது .

ஜூன் 3 ம் நாள் 2012

1. சட்ட ஆட்சி மானிட உரிமைக்கான மதிப்பு சனநாயகம் நபர்களுக்கிடையேயான சமத்துவம் மக்கள் குமுகத்திற்கான தன்னாட்சி உரிமை ஆகிய நியமங்களிற்கமைவாகவும்

2. தமிழ் மக்களின் உயிர் வாழ்வதற்கான உரிமையையும் உடல் ரீதியான பாதுகாப்பையும் நிலைநிறுத்துவதற்கு உறுதிபூண்டும்

3. ஐரோப்பியக் காலணித்துவ ஆட்சி இலங்கைத் தீவில் காலூன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளிற்கு முன்பிருந்தே தமிழர்களுக்கும்இ சிங்களவர்களுக்கும் தனித்தனியான இராச்சியங்கள் இருந்தன என்பதைக்கருத்தில் கொண்டும்

4. தமிழ்த் தேசத்திற்கும்இ முழுமையாகச் சிங்களவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சிறீலங்கா அரசாங்கத்திற்குமிடையே சரித்திர ரீதியாக முறையே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளும் தீர்மானங்களும் தொடர்ந்தும் சிங்கள தேசத்தால் முறிக்கப்பட்டதையும் தன்னிச்சையாக முற்றுமுழுதாக வறிதாக்கப்பட்ட பட்டறிவினாலும்

5. 1976ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழீழ தேசமக்கள் தங்கள் பிரதிநிதிகளுக்கு சுதந்திரமும்இ இறையாண்மையும் உள்ள சமய சார்பற்ற நாடொன்றினை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தில் அமைப்பதற்கான ஆணையைக் கொடுத்தனர் என்பதைக் கவனத்தில் கொண்டும்

6. தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் மூலம் அவர்களின் மேற்குறிப்பிட்ட அரசியல் பெருவிருப்பினைப் பெறுவதற்கு நடாத்திய அமைதிவழிப் போராட்டங்கள்இ சிங்கள தேசத்தின் கடும் போக்கினாலும் சிறீலங்கா அரசாங்கங்களின் நேர்மையின்மையினாலும்

தமிழ் மக்களுக்கான அரசியல் வெளி மறுக்கப்பட்டமையினாலும் பயனற்றதாக்கப்பட்டதையும் மனதில் கொண்டும்

7. நான்கு தசாப்தங்களாக அமைதிவழியிலும் யாப்பு ரீதியிலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் முன்னேற்றமின்மையினாலும்இ அவ்வழிகளினால் முரண்பாட்டினைத் தீர்க்க முடியாமையினாலும்இ தற்பாதுகாப்பை வேண்டியும் தமிழ்த் தேசத்தின் தன்னாட்சி உரிமையை நிலைநிறுத்துவதற்காகவும் தமிழ்த்தேசம் ஆயுதவழிப் போராட்டத்தினை நோக்கி உந்தப்பட்டதைக் கருத்திற் கொண்டும்

8. தமிழ்த் தேசத்தின் அரசியல் ஆயுதவழிப் போராட்டத்தினால் உருவாக்கப்பட்ட நடைமுறைத் தமிழீழ அரசு தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்கான ஒரு அரசியல் வெளியினை ஏற்படுத்தியமையையும் மனதிற்கொண்டும்.

9. நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் 2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைதி உடன்படிக்கையின் ஓர் உறுப்பாக தமிழர் தரப்பில் முன்மொழியப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைப் பிரேரணைகளை சிறீலங்கா அரசு உதாசீனம் செய்தமையினைக் கருத்திற் கொண்டும்

10. சிங்கள தேசம் ஒருதலைப் பட்சமாகவும் முடிவாகவும் அமைதி உடன்படிக்கையை சனவரி 2008ல் வறிதாக்கி தொடர்ந்தும் கொடூரமான இனவழிப்புப் போரைத் தமிழர் தேசத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டதனைக் கருத்திற் கொண்டும்

11. தமிழர் தாயகத்தில் அரசியல் பெருவிருப்பை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளி தமிழீழ தேசத்தில் தற்போது இல்லையென்பதை மனதிற் கொண்டும்

12. இலங்கையில் வாழும் தமிழர்களால் அவர்களது அரசியல் பெருவிருப்பை வெளிப்படுத்த முடியாமையினாலும் தங்கள் பூர்வீக நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட புலம்பெயர் தமிழீழ மக்கள் அவர்களிற்காகக் குரல் கொடுப்பதற்கு வரலாற்று அடிப்படையில் கடப்பாட்டினைக் கொண்டிருப்பதினாலும்.

13. 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நோர்வே கனடா செருமனி சுவிஸ் இத்தாலி ஐக்கிய இராச்சியம் டென்மார்க் அவுஸ்ரேலியா பிரான்சு மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களினால் மீளுறுதி செய்யப்பட்டதையும் கடந்த காலங்களில் தமிழீழ தேசம் செய்த ஈகங்களையும் மனதிற் கொண்டும்.

14. தமிழீழ தேசம் தொடர்ந்தும் ஒரு காலனிதுவ இராணுவ ஆட்சியின் கீழ் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு தமிழ்மக்கள் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்வதினைக் கருத்திற் கொண்டும்.

15. சிறீலங்கா அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பு தமிழ் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் தமிழர் தேசத்தில் நசுக்கி அவர்களைப் பன்முறையும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து வேரோடு அகற்றியமையையும் கருத்திற் கொண்டும்.

16. அனைத்துலகப் போர்விதிகளையும் மானிடநேயச் சட்ட நியமங்களையும் மதிக்காது மே 2009 இல் சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது நடாத்திய இனவழிப்புப் போரில்இ கடைசி சில நாட்களில் மட்டும் 75 000 ற்கும் மேற்பட்ட பொதுமக்களைப் படுகொலை செய்தும் மேலும் 70 000 தமிழ்மக்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையிலும் அதற்கும் மேலாக 300 000 க்கும் மேற்பட்ட தமிழ்மக்களை வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமையையும் மனதில் கொண்டும்.

17. மே 2009ல் போர் முடிவுற்றமையின் பின்னர் சிறீலங்கா அரசாங்கம் தமிழர் தாயகத்தைத் தொடர்ந்தும் சிங்கள மயப்படுத்துவதையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட தமிழ் மக்களை அங்கு மீள்குடியமர்வதைத் தடுப்பதையும் கருத்திற் கொண்டும்.

18. தமிழர் தாயகத்திலே வாழ்விடங்கள் பாடசாலைகள் மருத்துவமனைகள் வழிபாட்டிடங்கள் போரினால் சிதைக்கப்பட்டிருக்கும் அதேவேளை சிறீலங்கா அரசாங்கம் சிங்கள ஆக்கிரமிப்புச் சின்னங்களை தமிழர் தாயகத்தில் அமைத்து வருவதன் மூலம் தமிழீழ தேசத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் செயற்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளதைக் கருத்திற்கொண்டும்.

19. நில ஆக்கிரமிப்புப் போரின் பின்னர் தொடர்ந்தும் இனவழிப்பு நோக்கோடு தமிழ்ப்பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கி இனக்கலப்பு செய்வதோடு தமிழரின் கலாச்சாரத்தையும் பண்பாட்டினையும் திட்டமிட்டு அழிப்பதனூடாகவும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதன் மூலம் தமிழ்மக்களின் பூர்வீக நிலப்பரப்பு துண்டாடப்படுவதையும் கருத்திற்கொண்டும்.

நாங்கள் பின்வருமாறு தீர்மானிக்கிறோம்:

1.சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடாத்தப்படும் இனவழிப்புஇ போர்க்குற்றம்இ மானிடத்திற்கெதிரான குற்றங்கள் தடையின்றி நடப்பதினால் அனைத்துலக குமுகாயம் சிறீலங்கா அரசையும் அதன் படையையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

2.மேற்கூறிய தொடரும் இனவழிப்பு செயல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்.

3.சுதந்திரமும் இறையாண்மையும் உள்ள தமிழீழத் தனியரசை ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம். மற்றும் அழிவில் இருந்து பாதுகாப்பதற்காக உலகத்தால் வழங்கப்படவேண்டிய இறைமையின் அடிப்படையில் தாயகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியிலும் பொதுவாக்கெடுப்பு எடுப்பதற்கான நடவெடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் .

ஒப்பம் :

கனடியத்தமிழர் தேசிய அவை

நோர்வே ஈழத்தமிழர் மக்கள் அவை

டென்மார்க் ஈழத்தமிழர் பேரவை

தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு

இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை

ஹோல்லாந்து ஈழத்தமிழர் பேரவை

சுவிஸ் ஈழத்தமிழரவை

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

தமிழர் பண்பாட்டு கழகம் – பெல்ஜியம்

http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படிமப்புரவு (Image Credit): சாத்திரி அவர்களின் "அவலங்கள்" என்ற வலைப்பூவிலிருந்து.    
    • Published By: RAJEEBAN   18 MAY, 2024 | 05:45 PM ஆயுதமோதலின் இறுதிநாட்களில் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற படுகொலைகளிற்கு நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கம் டெபனயர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிதருணங்களில்  கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களையும் இடம்பெற்ற பரந்துபட்ட மனித உரிமை மீறல்களையும் நாங்கள் இன்று நினைவுகூருகின்றோம் என என டிஜிட்டல் கலாச்சாரம் ஊடகம் விளையாட்டு நிழல் அமைச்சர் தங்கம் டெபனெயர் தெரிவித்துள்ளார். இன்று எனது சிந்தனைகள் தாங்கள் எதிர்கொண்ட அநீதிகள் காரணமாக தொடர்ந்தும் வேதனையுடன் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் அவர்களின் அன்புக்குரியவர்கள் குறித்து காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் என்பது எப்படி  இழந்தவர்களை நினைகூரும் நாளோ அதேபோன்று குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் நாள் என டிஜிட்டல் கலாச்சாரம் ஊடகம் விளையாட்டு நிழல் அமைச்சர் தங்கம் டெபனெயர் தெரிவித்துள்ளார். மோதல் முடிவிற்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கு 15 வருடங்கள் கிடைத்தன எனினும் அர்த்தபூர்வமான விசாரணையை அது  முன்னெடுக்காமல் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் மக்களிற்கு நீதியை வழங்குவது குறித்த உத்தரவாதங்களை நிறைவேற்ற தவறிவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் தமிழ் மக்களிற்கு ஆதரவை வழங்கவேண்டும் இலங்கை அரசாங்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.  யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவது தொடர்பான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது ஆராய்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/183895
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மே 2024, 04:07 GMT முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் சுவை மட்டுமின்றி சத்துகளும் நிரம்பியுள்ளது. மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு அதிகம். எனவே மாம்பழத்தை உண்ணும்போது, அது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்றும் பலர் கருதுகின்றனர். உண்மையிலேயே மாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா இதுகுறித்து மருத்துவர்களிடம் பேசினோம்... பட மூலாதாரம்,GETTY IMAGES மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் மாம்பழத்தில் பேரூட்டச் சத்துகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் நிறைய உள்ளன. கார்போஹைட்ரேட், புரதங்கள், அமினோ அமிலங்கள், லிப்பிடுகள் மற்றும் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது. மேலும், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துகளும் உள்ளன. 100 கிராம் மாம்பழம் சாப்பிடுவதால் 60-90 கலோரி ஆற்றல் கிடைக்கும். இது தவிர, மாம்பழத்தில் 75-85 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மாம்பழத்தில் கொழுப்பு இல்லை. நூறு கிராம் மாம்பழத்தில் இருக்கும் சத்துக்களின் பட்டியல்: தண்ணீர்: 83 கிராம் கலோரி : 60 கலோரிகள் (ஆற்றல்) மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) : 14.98 கிராம் புரதம்: 0.82 கிராம் நார்ச்சத்து : 1.6 கிராம் சர்க்கரை: 13.66 கிராம் கால்சியம்: 11 மி.கி இரும்பு: 0.16 மி.கி வைட்டமின் சி: 36.4 மி.கி   மாம்பழம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆமதாபாத்தை சேர்ந்த நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் மனோஜ் விதாலானி பிபிசியிடம் பேசுகையில், ``சர்க்கரை நோய் இருந்தால் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்பது முற்றிலும் கட்டுக்கதை. மாம்பழத்தில் உள்ள சர்க்கரைகள் பிரக்டோஸ் (Fructose) அதாவது எளிய பழச் சர்க்கரை வடிவில் உள்ளன. பழங்களில் உள்ள இயற்கையான `பிரக்டோஸ்’ உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. இருப்பினும், அவற்றை அதிகளவில் சாப்பிடக் கூடாது," என்று அவர் விளக்கினார். மாம்பழத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் (antioxidant) உள்ளன. பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவும். நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மாம்பழங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில், சர்க்கரை உறிஞ்சப்படும் செயல்பாட்டை மெதுவாக்குகிறது. இது கார்போஹைட்ரேட் ஓட்டத்தைச் சீராக்கி, ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உடலுக்கு உதவுகிறது. ஒரு உணவுப் பொருள் ரத்த குளுக்கோஸ் அளவை, உடனடியாக எந்த அளவிற்கு உயர்த்துகிறது என்பதைக் குறிக்கும் அளவீட்டை `சர்க்கரை உயர்த்தல் குறியீடு’ (glycemic index) என்போம். மாம்பழங்களில் மிதமான (Moderate) கிளைசெமிக் குறியீடு உள்ளது. எனவே மாம்பழங்களை அளவோடு உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் மிகவும் மெதுவாக ஜீரணிக்கப்படும். இதன் விளைவாக, உடலில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காமல் படிப்படியாக அதிகரிக்கிறது.   `சர்க்கரை உயர்த்தல் குறியீடு’ (கிளைசெமிக் இன்டெக்ஸ்) என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவர் மனோஜின் கூற்றுப்படி, ``கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது ஒரு உணவுப் பொருள், உடலின் சர்க்கரை அளவில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவைக் குறிக்கிறது. தாக்கத்தின் அடிப்படையில் உணவுப் பொருட்களுக்கு எண்கள் ஒதுக்கப்படும். இந்தக் குறியீட்டில் 0 முதல் 100 வரையிலான அளவீட்டு எண்கள் உள்ளன. 0 என்றால் ஒரு உணவு உடலில் சர்க்கரை அளவை பாதிக்காது. 100 மதிப்பெண் என்றால் அந்த உணவு ரத்த சர்க்கரை அளவை அதிக அளவில் உயர்த்துகிறது என்று அர்த்தம். கிளைசெமிக் இன்டெக்ஸ் 55 அல்லது அதற்குக் குறைவான உணவுகளை உண்பது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் இந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. மாம்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவீடு 51. எனவே இந்தப் பழங்கள் சாப்பிடுவதற்குப் பாதுகாப்பானது. இது ரத்த சர்க்கரையை அதிகம் உயர்த்தாது. இருப்பினும், ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும், மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீடு நடுத்தர (Moderate) அளவில் உள்ளது. இந்தக் குறியீட்டின்படி, அன்னாசி, தர்பூசணி, உருளைக்கிழங்கு, ரொட்டி போன்ற உணவுகள் 70க்கு மேல் அளவீடு பெற்றுள்ளது. அதாவது அவற்றைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்கும்.   நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழம் சாப்பிடலாம்? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் 'மாம்பழம் - நீரிழிவு நோய்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். இந்த ஆய்வறிக்கைப்படி, ``நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவற்றை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளனர். மருத்துவர் மனோஜ் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்கின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களது அறிவுறுத்தலின்படி, ஒரே நேரத்தில் அதிக மாம்பழங்களைச் சாப்பிட வேண்டாம். மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஒரு நாளைக்கு ஒருவர் 100-150 கிராம் அளவு மாம்பழம் சாப்பிடலாம் அல்லது ஒரு நாளைக்கு மூன்று முறை 50 கிராம் மாம்பழம் சாப்பிடலாம். பொதுவாக ஒரு நபரின் ரத்த சர்க்கரை அளவு, உணவுக்குப் பிறகு உயர்கிறது. உணவு உட்கொண்ட பிறகு மாம்பழம் சாப்பிடுவது சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கும். எனவே உணவு சாப்பிட்ட உடனே மாம்பழம் சாப்பிட வேண்டாம். சிற்றுண்டிகள் சாப்பிடும் வேளையில், மாம்பழங்களை சிற்றுண்டியாக உண்ணலாம். மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீட்டை மேலும் குறைக்க நார்ச்சத்து நிறைந்த பிற உணவுகளுடன் மாம்பழங்களைச் சேர்த்துச் சாப்பிடுமாறு ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது மாம்பழத்தை, பீன்ஸ் மற்றும் தானியங்களுடன் சேர்த்து கலவையாக (salad) சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான வேகம் குறையும். மெதுவான செரிமானம் நமக்கு முழு உணவை உட்கொண்ட உணர்வை கொடுக்கும். மேலும், நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாது.   'பழச்சாறாகப் பருக வேண்டாம்' பட மூலாதாரம்,GETTY வழக்கமாக நாம் ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம்தான் சாப்பிடுவோம். ஆனால் பழச்சாறாக மாம்பழத்தை உட்கொள்ளும்போது, 2 அல்லது 3 பழங்கள் மற்றும் சர்க்கரையும் சேர்க்கப்படும். எனவே, ஜூஸ் வடிவில் உட்கொள்ளாமல், பழமாக துண்டுகளாக வெட்டி உண்ணுங்கள். பழத்துண்டுகளை சாப்பிடுவதால், அதிகமாகச் சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தைச் சாப்பிடும்போது கலோரி அளவு மற்றும் கிளைசெமிக் அளவை மனதில் கொள்ளுங்கள். இந்தியாவில் 1000 வகையான மாம்பழங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் மாம்பழம் மிக முக்கியமான பயிர் வகையாகப் பார்க்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியா 21.79 மில்லியன் மெட்ரிக் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் 1000 வகையான மாம்பழங்கள் விளைகின்றன. ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், பிகார், கர்நாடகா, குஜராத் மற்றும் தெலங்கானா ஆகியவை மாம்பழம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்கள் ஆகும். (குறிப்பு - இந்தக் கட்டுரை விழிப்புணர்வுக்காக மட்டுமே. சந்தேகம் இருந்தால் மருத்துவர்களை அணுகவும்.) https://www.bbc.com/tamil/articles/cy0l8nyek9no
    • மாட்டு இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று ஒரு குழு போராட்டம் நடத்துகின்றனர். பசு வதை செய்பவர்களை தலை கீழாக கட்டித் தொங்க விடுவோம் என்று அமித்ஷா அந்தப் பக்கம் முந்தாநாள் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கின்றார். வேள்வி அன்று கோயிலுக்கு போய் பார்த்தேன். சின்ன சின்ன கிடாய் ஆடுகளே ஒரு இலட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலே. இந்த நிலையில், கொத்துக் கடைக்காரர்களிடம் 'என்ன, கொத்தில இறைச்சியையே காணல்ல...' என்று முறைத்தால், அவர்களும் தான் என்ன செய்யிறது? அதிகமாக கண்ணில் படுவதை பிடித்து அடிக்கின்றார்கள் போல. ஒவ்வொரு ஒழுங்கையிலும் எவ்வளவு என்கிறீர்கள்.......கூட்டம் கூட்டமாக நிற்கின்றன........எங்களைப் பார்த்து முறைத்த படியே.
    • கட்டுரை தகவல் எழுதியவர், கோர்டன் கோரேரா பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனா மீது கவனம் செலுத்த வேண்டும் என்று மேற்குலகத்தைச் சேர்ந்த நாடுகள் நீண்ட காலமாகவே பேசி வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம், பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையக(GCHQ) உளவு முகமையின் தலைவர், “இது ஒரு சகாப்தத்தின் சவால்” என்று விவரித்துள்ளார். மேற்குலக நாடுகளில் சீனாவுக்கு ஆதரவாக உளவு பார்த்தல் மற்றும் ஹேக்கிங் செய்வதாக பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஹாங்காங் உளவு முகமைகளுக்கு உதவி வருவதாக பிரிட்டனில் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமையன்று சீன தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது பிரிட்டன் வெளியுறவுத்துறை. அதிகாரம் மற்றும் செல்வாக்கு விஷயத்தில் சீனா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையில் போட்டி நிலவி வரும் நிலையில், அது பொதுவெளிக்கு வந்துள்ளதற்கான அறிகுறியே இந்த கைதுகள். அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் சீனாவை பின்னுக்கு தள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. ஆனால், மூத்த அதிகாரிகள் மேற்கு நாடுகள் சீனாவின் சவாலை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், உளவுத்துறை சார்ந்து பின்தங்கிவிட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். இது மேற்கு நாடுகளில் சீன உளவு அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாகவும், இரு தரப்பிலும் தீவிரமான தவறுகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், இப்போது வரையிலும் அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த மேற்குநாடுகள் போராடின வருகின்றன. ஒரு புதிய சர்வதேச ஒழுங்கை உருவாக்க முயற்சித்துவரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உறுதியே மேற்கத்திய அதிகாரிகளை கவலை கொள்ள செய்துள்ளது. பிபிசியின் புதிய சீனா - மேற்கு நாடுகள் என்ற தொடருக்காக பிரிட்டனின் வெளிநாட்டு உளவு முகமையான எம்ஐ6 அமைப்பின் தலைவர் சர் ரிச்சர்ட் மூர் அளித்த அரிதான பேட்டி ஒன்றில், “ சீனா உலகின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் அமெரிக்காவின் இடத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறது” என்றார். என்னதான் சீனா குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், இப்போது வரையிலும் அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த மேற்கு நாடுகள் போராடி வருகின்றன. மேற்குலக நாடுகளின் கவனம் இதர பிரச்னைகளில் இருந்த வேளையில், உலகின் முக்கிய சக்தியாக சீனா உருவெடுத்தது என்று கூறுகிறார் எம்ஐ6 அமைப்பின் இரண்டாம் நிலை தலைவராக இருந்த நைகல் இன்க்ஸ்டர். இவர் 2006ஆம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து ஓய்வு பெற்றார். 2000களில் பெய்ஜிங் உலக அரங்கில் தன்னை உயர்த்துவதில் மும்முரமாக இருந்த வேளையில், மேற்கத்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் சிந்தனையும், உளவுத்துறைகளின் கவனமும், ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் இராணுவ தலையீடுகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா சைபர் உளவு மூலமாகவும், அல்லது நிறுவனங்களில் நேரடியாக ஆட்களை ஊடுருவ செய்வதன் மூலமாகவும் உளவு பார்ப்பதாக மேற்குலக உளவு அமைப்புகள் கூறுகின்றன. சமீபத்தில், மீண்டும் எழுச்சி பெற்றுள்ள ரஷ்யா மற்றும் இஸ்ரேல்-காஸா போர் உலகிற்கு கூடுதல் அவசர சவால்களாக தோன்றியுள்ளன என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், சீனா ஏற்படுத்தும் பாதுகாப்பு அபாயத்தை விட, அதன் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்தும் வாய்ப்பை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து அழுத்தம் உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் தங்கள் உளவுத்துறை தலைவர்கள் அடிக்கடி சீனாவை பற்றி குறிப்பிட வேண்டாம் என்று விரும்புகின்றனர். வணிக நிறுவனங்களும் கூட தங்கள் ரகசியங்கள் குறிவைக்கப்படுவதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. "பொருளாதாரம் மற்றும் வணிக நலன்களின் திசையில்தான் காற்று வீசும்" என்கிறார் நைகல் இன்க்ஸ்டர். ஏற்கனவே 2000 களில் தொழில்துறை சார்ந்த உளவுப்பணியில் சீன உளவுத்துறை ஈடுபட்டிருந்தது என்று கூறும் அவர், அப்போதும் மேற்கத்திய நிறுவனங்கள் அமைதியாகவே இருந்தன என்கிறார். "அதை எதிர்ப்பது அல்லது வெளிப்படுத்துவது சீனாவின் சந்தைகளில் தங்கள் நிலையை பாதிக்கும் என்ற அச்சத்தில் அவர்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்ப விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார். மேற்குலகின் பாணியில் இருந்து சீனா வேறு மாதிரியான பாணியில் உளவு பார்ப்பது மற்றொரு பெரிய சவாலாக உள்ளது. இது அதன் செயல்பாட்டை அடையாளம் காண்பதையும், எதிர்கொள்வதையும் கடினமாக்கியுள்ளது. முன்னாள் மேற்குலக உளவாளி ஒருவர், ஒருமுறை சீனா "தவறான வகையில்" உளவு பார்ப்பதாக சீனப் பிரதிநிதி ஒருவரிடம் கூறியதாகக் தெரிவித்தார். அதாவது, மேற்கத்திய நாடுகள் தங்கள் எதிரிகளைப் புரிந்துகொள்ள உதவும் வகையான உளவுத்தகவல்களை சேகரிப்பதில் கவனம் செலுத்த விரும்புகின்றன. ஆனால் சீன உளவாளிகளுக்கு அதில் வெவ்வேறு முன்னுரிமைகள் உள்ளன. எஃப்.பி.ஐ.-இன் எதிர்உளவு அதிகாரி ரோமன் ரோஜாவ்ஸ்கி கூறுகையில், "ஆட்சியின் நிலைத்தன்மையே அவர்களின் முதல் குறிக்கோள்" என்று விளக்கினார். அதற்கு பொருளாதார வளர்ச்சியை தருவது அவசியமாகும். எனவே சீனாவின் உளவாளிகள் மேற்கத்திய தொழில்நுட்பத்தைப் பெறுவதை ஒரு சிறந்த தேசிய பாதுகாப்புத் தேவையாகக் கருதுகின்றனர். பெய்ஜிங் உளவாளிகள் தாங்கள் சேகரித்த தகவல்களை சீன அரசு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாக மேற்கத்திய உளவாளிகள் கூறுகிறார்கள். ஆனால், மேற்குலக உளவுத்துறை முகமைகள் தங்கள் சொந்த உள்நாட்டு நிறுவனங்களுடன் அவற்றை பகிர்ந்து கொள்வதில்லை.   பட மூலாதாரம்,FBI படக்குறிப்பு,கடந்த அக்டோபரில் முதன்முதலாக கலிபோர்னியாவில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஃபைவ் ஐஸ் உளவுத்துறை-பகிர்வு கூட்டணியின் கூட்டம் வெளிப்படையாக நடந்தது. ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பின் (ASIO) தலைவரான மைக் பர்கெஸ், "எங்கள் 74 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை நாங்கள் இருந்ததை விட எங்களது நிறுவனம் தற்போது மிகவும் பிஸியாக உள்ளது" என்று என்னிடம் கூறினார். "நான் இதர நாடுகளை மிகவும் அரிதாகவே குறிப்பிட்டு அவர்கள் உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறேன். காரணம் உளவு என்று வரும்போது நாங்களும் அவர்களுக்கு அதையேதான் செய்கிறோம்” என்று கூறுகிறார் பர்கெஸ். "வணிக உளவு பார்ப்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம், அதனால்தான் சீனா இந்த விஷயத்தில் சிறப்பு கவனத்தை பெறுகிறது." மேற்கத்திய நட்பு நாடுகள் இந்த அச்சுறுத்தலைப் புரிந்துகொள்வதில் தாமதம் காட்டியுள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார். "இது நீண்ட காலமாக நடந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன், கூட்டாக நாங்கள் அதை தவறவிட்டு விட்டோம்," என்று அவர் ஒப்புக்கொள்கிறார். கடந்த அக்டோபரில் முதன்முதலாக கலிபோர்னியாவில் வெளிப்படையாக நடந்த அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஃபைவ் ஐஸ் என்று அழைக்கப்படும் உளவுத்துறை-பகிர்வு கூட்டணியின் பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்தில் நான் இருந்தேன். ஒரு அசாதாரண நிகழ்வாக, இந்த ஐந்து நாடுகளின் உளவுத்துறை தலைவர்களும் வெளிப்படையாக சீனா மேற்கொண்டு வரும் வணிக உளவு குறித்து எச்சரிக்கை விடுத்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த கூட்டம், சீனா குறித்த எச்சரிக்கைகளின் அளவை அதிகரிப்பதற்கான மிகவும் திட்டமிட்ட முயற்சியாகும். காரணம் இன்னமும் பல நிறுவனங்களும் அமைப்புகளும் இந்த எச்சரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்ற அச்சம் உள்ளது. இதற்காக சிலிக்கான் வேலி தேர்வு செய்யப்பட்டதும் கூட காரணத்துடன் முடிவு செய்யப்பட்டதே. டெக் நிறுவனங்கள் நிறைந்த அந்த பகுதியில் , சைபர் உளவு மூலமாகவும், நிறுவனங்களில் ஆட்களை ஊடுருவ செய்வதன் மூலமாகவும் தொழில்நுட்பத்தை திருடும் சீனாவின் செயல் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த செயல்களுக்கான சீனாவின் ஆதாரங்கள் வேறு அளவில் உள்ளன. ஒரு மேற்கத்திய உளவுத்துறை அதிகாரியின் தகவலின்படி, சீனாவில் உளவு மற்றும் பாதுகாப்புத் துறையின் கீழ் சுமார் 6,00,000 பேர் பணிபுரிவதாக மதிப்பிட்டுள்ளார். இது உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகம்.   மேற்கத்திய பாதுகாப்பு சேவைகள் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக விசாரிக்க முடியாது. பிரிட்டிஷ் உளவுத்துறை நிறுவனமான எம்ஐ6 கூற்றுப்படி, பிரிட்டனில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்டவர்கள், சீன உளவாளிகளால் லிங்க்டு-இன் போன்ற தொழில்முறை நெட்வொர்க்கிங் தளங்கள் வழியாக உறவுகளை வளர்ப்பதற்காக அணுகப்பட்டுள்ளனர். "அவர்கள் உண்மையில் வேறொரு நாட்டைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தின் எதிர்காலத்தையே அழிக்கக் கூடிய தகவல்களைக் அவர்களுக்கு பகிர்ந்துகொண்டிருப்பார்கள்" என்று எம்ஐ5 - இன் தலைவர் கென் மெக்கலம் கலிபோர்னியா கூட்டத்தில் என்னிடம் கூறினார். சீனா உள்நாட்டு கண்காணிப்பில் கவனம் செலுத்தும் அதே வேளையில், வெளிநாட்டில் அதன் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்தை மட்டுப்படுத்தவும் அதன் உளவாளிகளை பயன்படுத்துகிறது. சமீபத்தில், மேற்கத்திய அரசியலை குறிவைத்து இயங்கி வந்த சீன உளவாளிகள் பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவில் விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சீனாவின் "வெளிநாட்டு காவல் நிலையங்கள்" இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேற்கு நாடுகளில் உள்ள சீன அதிருப்தியாளர்களைப் கண்காணிப்பதற்காக, பெய்ஜிங்கின் உளவுத்துறை அதிகாரிகள் பொதுவாக உளவாளிகளை களத்தில் நேரடியாக பயன்படுத்துவதை விட, தனியார் புலனாய்வாளர்களை பணியமர்த்துவது அல்லது அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது போன்று தொலைதூரத்தில் இருந்தே செயல்படுகிறார்கள் என்று கூறுகின்றனர் பாதுகாப்பு அதிகாரிகள். உண்மையில், 2000களின் முற்பகுதியில் பிரிட்டன் அரசாங்க அமைப்புகளை இலக்காகக் கொண்ட முதல் இணைய நிகழ்வுகள் ரஷ்யாவிலிருந்து அல்ல, சீனாவிலிருந்து வந்தவை. அவை திபெத்திய மற்றும் உய்குர் குழுக்கள் போன்ற வெளிநாட்டு எதிர்ப்பாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டவை. அரசியல் தலையீடுகள் பற்றி கவலைப்படுவதில் தற்போது ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து, தேர்தல்களில் வேட்பாளர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்டறியத் தொடங்கியதாக ASIO அமைப்பு கூறுகிறது. "அவர்கள் இங்கு தங்கள் விருப்பங்களை புகுத்த முயற்சிக்கிறார்கள், அதை செய்வதற்கு திறன் படைத்தவர்களும் கூட. அவர்கள் அதை மறைமுகமான வழிகளில் செய்வதை நாங்கள் விரும்பவில்லை" என்று மைக் பர்கெஸ் பிபிசியிடம் கூறினார். இதை எதிர்கொள்ளும் வகையில், 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா புதிய சட்டங்களை இயற்றியது.   படக்குறிப்பு,பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்டின் லீ ஜனவரி 2022 இல், பெய்ஜிங்கின் விருப்பங்களை முன்னெடுப்பதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்டின் லீ பல பிரிட்டிஷ் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதாகக் குற்றம் சாட்டி எம்ஐ5 ஒரு அசாதாரண எச்சரிக்கையை வெளியிட்டது. அவர் தற்போது எம்ஐ5க்கு எதிராக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் தான் பிரிட்டன் ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இது வெளிநாடுகளின் தலையீடு மற்றும் பிற செயல்பாடுகளைச் சமாளிக்க புதிய அதிகாரங்களை வழங்கியது. ஆனாலும் , இவை தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். சீனா மேற்குலகை உளவு பார்ப்பது போலவே, மேற்குலகமும் சீனாவை உளவு பார்க்கிறது. ஆனால் எம்ஐ6 மற்றும் சிஐஏ போன்ற மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளுக்கு சீனாவில் உளவுத்தகவலை சேகரிப்பது தனித்தன்மை வாய்ந்த சவாலாக உள்ளது. நாட்டிற்குள் கண்காணிப்பின் பரவலான தன்மை, டிஜிட்டல் கண்காணிப்பு உள்ளிட்டவை மனித நுண்ணறிவின் பாரம்பரிய மாதிரி - உளவாளிகளை நேருக்கு நேர் சந்திப்பதை - கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆக்குகிறது. சீனா ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சிஐஏ உளவாளிகளின் பெரிய வலையமைப்பு ஒன்றை துடைத்தெடுத்தது. மேலும் தகவல் தொடர்புகளை இடைமறித்து டிஜிட்டல் நுண்ணறிவை சேகரிக்கும் பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமைக்கு தொழில்நுட்ப ரீதியாக இது கடினமான இலக்காகும். ஏனெனில் சீனா மேற்கத்திய தொழில்நுட்பத்தை விட, அதன் சொந்த தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது. "சீனாவின் பொலிட்பீரோ எப்படி சிந்திக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று ஒரு மேற்கத்திய அதிகாரி ஒப்புக்கொண்டார். இது புரிதலுக்கு வழிவகுக்கும் மற்றும் இது கடுமையான அபாயங்களைக் கொண்டுள்ளது. பனிப்போரில், மாஸ்கோ எவ்வளவு பாதுகாப்பற்றதாக உணர்ந்தது என்பதை மேற்கு நாடுகள் புரிந்து கொள்ளத் தவறிய காலங்கள் இருந்தன. இதன் விளைவாக இரு தரப்பும் விரும்பாத ஒரு பேரழிவுப் போரை நெருங்கின. தைவான் மீதான கட்டுப்பாட்டை மீட்பதற்கான சீனாவின் விருப்பத்தின் மீது, இன்றும் இதேபோன்ற தவறான கணக்கீடுகளின் அபாயங்கள் உள்ளன. தென் சீனக் கடலிலும் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அதிக இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்பு சமீபத்திய மாதங்களில் சூட்டைக் குறைத்திருந்தாலும், நீண்ட காலப் பாதை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறது. "நாம் வாழும் மிகவும் ஆபத்தான, போட்டி நிறைந்த இந்த உலகில், எப்போதும் மோதலைப் பற்றி கவலைப்பட வேண்டும், அதைத் தவிர்ப்பதற்கான பாதையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று எம்ஐ6 இன் தலைவர் சர் ரிச்சர்ட் மூர் என்னிடம் கூறினார். "குறிப்பாக நீங்கள் எப்போதும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத அதிகாரம் கொண்டிருக்கும்போது, எனது சேவை அங்குதான் வருகிறது." எம்ஐ6-இன் பணியே, சாத்தியமான அபாயங்கள் வழியாக செல்ல தேவையான உளவுத்தகவல்களை வழங்குவது என்று அவர் கூறுகிறார். "வரையறையின்படி தவறான புரிதல்கள் எப்போதுமே ஆபத்தானவை - உங்களிடம் தகவல் தொடர்புக்கான வழிகள் திறந்திருப்பதும், நீங்கள் போட்டியிடும் நபர்களின் நோக்கங்களைப் பற்றிய நுண்ணறிவு இருப்பதும் எப்போதும் சிறந்தது" என்கிறார் அவர். இது தகவல் தொடர்புக்கான வழிகள் திறந்திருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எம்ஐ6 உளவு ஸ்தாபனம், சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. தற்போது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சில ராணுவத் தொடர்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன என்ற உண்மை பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அதிக இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்பு சமீபத்திய மாதங்களில் சூட்டைக் குறைத்திருந்தாலும், நீண்ட காலப் பாதை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறது. உளவு பார்ப்பது பற்றிய அனைத்து வெளிப்பாடுகளும் இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களிடையே அவநம்பிக்கையையும் அச்சத்தையும் தூண்டுகிறது. இது நெருக்கடி நிலையில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பயணிப்பதற்கான வழியைக் கண்டறிவது, இருதரப்பு உறவின் மோதல் போக்கிலிருந்து விலகுவதற்கு இன்றியமையாத ஒன்றாகும். https://www.bbc.com/tamil/articles/c03dllppx7wo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.