ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . எமது வாழ்வில் பாதியை புலத்தில் துலைத்து நிற்கின்ற நாங்கள் , எமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து தாயகத்து வான்வெளிகளில் சுதந்திரமாகப் பறந்த பல குருவிகளது பெயர்கள் பலதை எமது ஞாபகத்தில் தொலைத்து நிற்கின்றோம் . போனவருடம் நான் தாயகம் சென்ற பொழுது எனது அண்ணையின் உதவியுடன் ஒரு சில குருவிகளை அடையாளம் காணமுடிந்தது . ஆயினும் பல குருவிகளைக் காண முடியவில்லை என அறிந்து வேதனையடைந்தேன் . மேலும் இந்தக் குருவிகளுக்கு சங்க இலக்கியங்களில் சுத்தமான தூய தமிழ் பெயர்கள் இருந்ததையும் அண்ணை தந்த புத்தகம் மூலம் அறிந்து கொண்டேன் .எனது சிற்றறிவின் தேடல்களை உங்களுக்குத் தருகின்றேன் . இந்தக் குருவிகள் பல ஊர்களில் பலவகையான பெயர்களில் அழைக்கப்படுகின்றன .
போட்டி விபரம்:
நான் ஒரு குருவியின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்தக் குருவிக்கன தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட குருவிப் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே மறந்த குருவிகள் என் கையில் , பறந்த பெயர்கள் உங்கள் கையில் ..............
நேசமுடன் கோமகன்
**********************************************************************************
01 செம்பூழ் ( செம்பகம் , செம்போத்து )

Edited by கோமகன், 03 June 2012 - 05:26 PM.















