Jump to content

சென்றுவருகிறது கவிதை!


Recommended Posts

Lonely__1261769749_6783.jpg

என் வாழ்க்கைப் பயணங்களில் சுமந்த பொதியாய்,

என் வலிகளும் கூடவே வந்தன!

எனக்கிந்த சாபம் எதுவரையென...

எனக்குத் தெரியவில்லை இதுவரை!

நம்பிக்கைகளை சாகடித்தபடியே...

துரோகங்கள் என் பாதையை மாற்றியமைக்கிறது!

வலிகளும், மாறும் வழிகளும் எதுவானாலும்... என் பாதம்

நேர்வழி மட்டுமே தொடரும்!

இன்னும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் நானிருப்பேன்,

தன்னம்பிக்கை எனக்கிருக்கு!

சிறகெரிந்த வாசத்தில் மூச்சுத்திணறிய பீனிக்ஸ் பறவை,

விழ விழ எழுவதுபோல்... நானும் எழுவேன்!

வரைகின்ற வட்டம் போல... சுற்றிவரும் புள்ளிகளில்,

இரு முகங்கள் சந்தித்துக்கொள்ளும்!

பயணங்களின் காரணங்கள் ஒரு வட்டத்துக்குள்,

முழுநிலவாய் சிரிக்கும்போது...

நேற்று வந்த முழுநிலவுதான் என் ஞாபகத்தில் வரும்!

மீண்டுமொரு பயணம் எனை அழைக்கிறது - இதுதன்னும்,

வலிகளிலிருந்து எனை மீளவைக்குமா???

பழைய ஞாபகங்கள் எனைக் கடத்திச் செல்லும்போது...

எனை மீட்டுக் கொண்டுவருமா???

பயணங்களின் முடிவுகள் இனிதாகி,

சந்திப்புக்கள் தொடரும் வரை...

சென்றுவருகிறது கவிதை!

Link to comment
Share on other sites

மீண்டுமொரு பயணம் எனை அழைக்கிறது - இதுதன்னும்,

வலிகளிலிருந்து எனை மீளவைக்குமா???

பழைய ஞாபகங்கள் எனைக் கடத்திச் செல்லும்போது...

எனை மீட்டுக் கொண்டுவருமா???

ஏன் ???????????????????

Link to comment
Share on other sites

என் வாழ்க்கைப் பயணங்களில் சுமந்த பொதியாய்,

என் வலிகளும் கூடவே வந்தன!

எனக்கிந்த சாபம் எதுவரையென...

எனக்குத் தெரியவில்லை இதுவரை!

நம்பிக்கைகளை சாகடித்தபடியே...

துரோகங்கள் என் பாதையை மாற்றியமைக்கிறது!

வலிகளும், மாறும் வழிகளும் எதுவானாலும்... என் பாதம்

நேர்வழி மட்டுமே தொடரும்!

இன்னும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் நானிருப்பேன்,

தன்னம்பிக்கை எனக்கிருக்கு!

சிறகெரிந்த வாசத்தில் மூச்சுத்திணறிய பீனிக்ஸ் பறவை,

விழ விழ எழுவதுபோல்... நானும் எழுவேன்!

வரைகின்ற வட்டம் போல... சுற்றிவரும் புள்ளிகளில்,

இரு முகங்கள் சந்தித்துக்கொள்ளும்!

பயணங்களின் காரணங்கள் ஒரு வட்டத்துக்குள்,

முழுநிலவாய் சிரிக்கும்போது...

நேற்று வந்த முழுநிலவுதான் என் ஞாபகத்தில் வரும்!

மீண்டுமொரு பயணம் எனை அழைக்கிறது - இதுதன்னும்,

வலிகளிலிருந்து எனை மீளவைக்குமா???

பழைய ஞாபகங்கள் எனைக் கடத்திச் செல்லும்போது...

எனை மீட்டுக் கொண்டுவருமா???

பயணங்களின் முடிவுகள் இனிதாகி,

சந்திப்புக்கள் தொடரும் வரை...

சென்றுவருகிறது கவிதை!

வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி கவிதை!!!!

God bless you!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போகுமளவிற்கு என்ன நடந்தது கவிதை?...தொடங்கின கதையையும் முடிக்கவில்லை :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் பிரியாவிடைக் கவிதையா... இது :o .

வேண்டாம் கவிதை. கருத்துக் களத்தை விட்டுப் பிரிவது, மனவேதனையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணங்களின் முடிவுகள் இனிதாகி,

சந்திப்புக்கள் தொடரும் வரை...

அவசியமான அவசரமான முடிவாக இருக்ககூடும் . :o

எங்கிருந்தாலும் யாழுடன் இணைந்திருக்கவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் மண்ணில்,

முகம் புதைந்த மறவனை,

அள்ளியெடுத்துக் கவியில் வடித்தவனே!

உள்ளம் கலங்கி,

உயிர் துறக்கும் வேளையிலும்,

சற்றும் கலங்காத அவனைப் பார்!

வலிகள் அவனுக்குத் தெரியவில்லை!

வார்த்தைகளின் அர்த்தமும் புரியவில்லை!

பயணமொன்றின் முடிவே,

இன்னுமொரு பயணத்தின் ஆரம்பமாகட்டும்!

கலக்கமும், தொலைதலும்,

கவிஞனுக்கு இல்லையே, கவிதை!

கவிஞன் உணர்வுகளின் கைதி!

Link to comment
Share on other sites

பயணம் இனிக்கவும், வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

வாழ்க்கையில் எல்லாமே பயணம் ஒன்றின் இடையில் வரும் சந்திப்புகள் தான்.. எதுக்கும் எவருக்கும் காத்திராமல் போவதுதான் வாழ்க்கை

Link to comment
Share on other sites

இன்னும் நான் இழக்காதது என் தன்னம்பிக்கையை மட்டுந்தான்.

அந்த தன்னம்பிக்கையோடு என் அடுத்த முயற்சியில் நான்.

தோற்றாலும் பரவாயில்லை...!

போராடித்தான் தோற்றுப்போனேன் என்ற திருப்தியாவது இருக்கும்!

அப்படி ஒன்றுக்கான பயணம்!

நன்றி உறவுகளே!

மாதங்கள் சில ஆகலாம்! என்னை மறந்துவிட மாட்டீர்கள்தானே!?

நிச்சயம் மீண்டும் வருவேன்!

இப்போதைக்கு சரியான கால எல்லைகளை என்னால் சொல்ல இயலவில்லை.

மீண்டும் சந்திப்போம்... !

அதுவரை.... கவிதையின் வாழ்க்கைப் பயணம் தொடரும்....! :)

I gonna miss u all guys! :(

Link to comment
Share on other sites

கவிதை, உங்கள் பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துக்கள்..!

உங்களது நல்ல கவிகளையும் கதைகளையும் யாழ் உறவுகள் என்றும் மறந்துவிடமாட்டார்கள்.

நிச்சயம் உங்களது படைப்புகள் சிறிய இடைவெளியின் பின் வெளிவரும் என்ற நம்பிக்கையுடன் தற்காலிகமாக பிரியாவிடை தருகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை

ரொம்ப அருமையான கள உறவு

எழுத்திலும் பேச்சிலும் செயலிலும்

தாயகக்கனவு

உறவென்றால் இப்படித்தான் இருக்கணும்

என்பதற்குதாரணம் கவிதை

எதை வீசினாலும் குறி

எதிரி மீது

எதை பெற்றுக்கொண்டாலும்

அது தமிழனுக்காய்

நண்பன் யார்

எதிரி யார்

துரோகி யார்

என்ற தெளிவு கவிதைக்கு

எழுதும் கவிதையும்

கதையும்

கருத்தும்

எல்லாமே அவனுக்கே

தலைவன் மீது

மாசற்ற பற்று

தமிழ் மீது

எல்லயற்ற பிடிப்பு

இவன் இங்கு இருந்த போது

தமிழ் மகிழ்ந்தது

வளர்ந்தது

மீண்டும் வந்து

ஊற்றணும் தண்ணீர்...

போகும் வேலையில்

பொருளடைந்து

புகும் இடமெல்லாம்

புகழ் தேடி

கேட்ட வரம் அத்தனையும் கொடுத்து

அவனுடன் இரும் இறைவா என்றும்.

Link to comment
Share on other sites

எதனால் இந்த திடீர் முடிவு என்று தெரியவில்லை. உங்கள் பயணம் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள் என்றும் தம்பி கவிதைக்கு என்றும் உண்டு.

உங்கள் கவிதையின் அர்த்தம் புரிகிறது. வேதனைகள் துரோகங்களை தாங்கியது தானே வாழ்க்கை. அதையும் தாண்டி நிறையுள்ளது. உங்கள் பயணம் இனிதாக அமைய என்றும் வாழ்த்துகிறேன். உங்கள் கவிதையை இன்று தான் பார்த்தேன். இப்பொழுதெல்லாம் யாழை வாசிக்க முடியவில்லை. மன்னித்துவிடுங்கள். என்றும் உங்களையும் உங்கள் கவிதைகளையும் என்றும் மறந்துவிட மாட்டோம். உங்கள் மின்னஞ்சலும் செயலிழந்து விட்டதுபோலுள்ளது. வெகுவிரைவில் கவிதையின் வரவை எல்லோரும் எதிர்பார்க்கிறோம். .. உங்களிற்கு எனது நன்றியை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.. .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதங்கள் சில ஆகலாம்! என்னை மறந்துவிட மாட்டீர்கள்தானே!?

இப்படி எல்லாம் கேட்டு மனதைக் கஸ்ரப்படுத்தக்கூடாது கவிதை... :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளமையாக கிழமைக்கு ஒருவர்,இருவர் என இப்போ கொஞ்சக் காலமாக இப்படியான விசங்களைத் தான் கேக்கவேண்டி இருக்கு...என்ன செய்வது சொல்கிற எல்லாத்தையும் கேட்டுத் தான் ஆகனும்....ம்ம்ம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

வாழ்க்கையில் எல்லாமே பயணம் ஒன்றின் இடையில் வரும் சந்திப்புகள் தான்.. எதுக்கும் எவருக்கும் காத்திராமல் போவதுதான் வாழ்க்கை

அதற்குப் பெயர் சுயநலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளமையாக கிழமைக்கு ஒருவர்,இருவர் என இப்போ கொஞ்சக் காலமாக இப்படியான விசங்களைத் தான் கேக்கவேண்டி இருக்கு...என்ன செய்வது சொல்கிற எல்லாத்தையும் கேட்டுத் தான் ஆகனும்....ம்ம்ம்...

கவலைப்படாதீர்கள்... யாயினி,

அந்த, இடத்தை நிரப்ப வேறொருவர் வருவார் என்னும் நம்பிக்கையுனடன், நாம் வாழ வேண்டும்.

Link to comment
Share on other sites

அதற்குப் பெயர் சுயநலம்.

உங்களுக்கும் எனக்கும் இருப்பது !!

Link to comment
Share on other sites

எப்போதும் போலான உனது புன்னகையும் சிரிப்பும்

எப்போதும் வேண்டும்....

உனது வெற்றிக்கான பயணத்தில்

தோற்றாலும் துணிவோடு வருவாவென்ற நம்பிக்கையோடு

வாழ்த்துகிறேன்....

போய் வா தோழனே வெற்றியுனக்காக.....

சிலரால் மட்டுமே கண்டு கொள்ளப்பட்ட உனது கண்ணீருக்கு

பதில் புன்னகை தேசமாக வேண்டும்.

போய் வா.....

கவிதைக்காக இப்பாடல்:-

[media=]http://www.youtube.com/watch?v=p1D3bEz938U&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப தான் இதை பார்த்தேன். :(

சரி போட்டுவாங்கோ .. வெற்றியோடை திரும்புங்கோ.. :)

(கனக்க குடுக்கல் வாங்கல் இருக்கு மவனே அப்புறம் கவனிப்போம்.. :rolleyes: )

Link to comment
Share on other sites

சென்று, வென்று வாருங்கள் கவிதை.. :unsure:

யாழின் மும்மூர்த்திகளில் ஒருவர் தற்காலிகமாக என்றாலும் விலகிச் செல்வது கவலையாக உள்ளது..

:rolleyes: மீதமிருக்கும் இருமூர்த்திகளான சுபேஸ், குட்டி ஆகியோர் இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்புவார்கள் என்கிற நம்பிக்கை உண்டு.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்று, வென்று வாருங்கள் கவிதை.. :unsure:

யாழின் மும்மூர்த்திகளில் ஒருவர் தற்காலிகமாக என்றாலும் விலகிச் செல்வது கவலையாக உள்ளது..

:rolleyes: மீதமிருக்கும் இருமூர்த்திகளான சுபேஸ், குட்டி ஆகியோர் இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்புவார்கள் என்கிற நம்பிக்கை உண்டு.. :D

ஓமோம்..நிரப்பிறம் நிரப்பிறம்.....நீங்கள் எல்லாம் பிள்ளை குட்டி பெத்து குடியும் குடித்தனமுமாய் இருங்கோ..நாங்கள் இப்பிடியே இருந்து நாசமாய்ப் போறம்..இப்ப சந்தோசம்தான..? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும்,கவிதை அண்ணா உங்களுக்குமான

பிரிவுக்கான இடைவெளி இயன்றவரைக்கு குறுகியதாகவே

இருக்க வேண்டும் என்று..இந்த சிறியவளின் வேண்டுதல்..

Link to comment
Share on other sites

இன்று தான் பார்த்தேன் கவிதை. போவீங்கள் எண்டு தெரியும் ஆனால் இவளவு கெதியில போவீங்கள் எண்டு தெரியாது. பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.