Jump to content

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 21 )


Recommended Posts

:)விற்றுத் தீர்ந்த காதல்(இன்)கதை :(

இந்தக் கதை நடந்த... நடந்துகொண்டிருக்கும்.... ஒரு உண்மையான காதலினதும், அதில் நடக்கும் சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து வாசித்து வருகையில் அது பரிபூரணமாக புரியும்.

அதன்வழி, கதையின் பகுதி 21 இங்கு தொடர்கின்றது.

இதன் முன்னைய பகுதிகளை வாசிக்க... கீழுள்ள இணைப்புகளில் அழுத்துங்கள்.

விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 08-09-10-11-12 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 13-14-15-16 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 17-18-19-20 )

[21]

ஞ்சலி லண்டனுக்குப் போய் இரண்டு நாட்களுக்குமேல் ஆகியிருந்தது.

அவளிடம் இருந்து போன் வருமென்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான்.

அந்த இரண்டு நாட்களை கடத்துவதற்கே அவன் பெரும்பாடுபட்டான்.

எங்கு பார்த்தாலும்... எதைப் பார்த்தாலும் அஞ்சலியின் ஞாபகம் வந்து, இவன் நெஞ்சை அடைத்தது.

உண்மையிலேயே அஞ்சலியின் பிரிவு அவனை மிகவும் பாதித்திருந்தது.

2933-291147-Vijay12.jpg

தன் பிஸ்னெஸிலும் கவனம் செலுத்தாமல் எதையோ பறிகொடுத்தவன் போலவே

எப்பொழுதும் ஒரு சோகத்துடன் இருந்தவனைப் பார்த்து விமல் பெரிதும் கவலைப்பட்டான்.

'இவனை இப்பிடியே விடக்கூடாது' என முடிவெடுத்தவன்...

"நீ இப்பிடியே இருந்து என்ன செய்யப் போறாய்? நானும் கொஞ்ச நாளா உன்னை பாக்கிறன்.

வேலையையும் ஒழுங்காப் பாக்கிறேல. ஒரு மாதிரியே இருக்குறாய். அவள் போய்ப் படிக்கட்டும் எண்டு நீதானே

அனுப்பி வச்சனி. பிறகென்னத்துக்கு இப்பிடி இழவு வீட்டுக்குப் போனது மாதிரி மூஞ்சையை வச்சுக்கொண்டு........ ?!

முதல்ல இதெல்லாத்தையும் விட்டிட்டு பிஸ்னெஸ்ஸைக் கவனி....! " என்று கொஞ்சம் அதட்டலுடன் சொல்லிவிட்டு சிகரெட்டை பற்றவைத்தான் விமல்.

ரெண்டு மூண்டு நாளா இது எதையுமே தொடாதவன்... விமல் பக்கத்திலிலிருந்த சிகரெட் பக்கற்றை எடுத்து அவனும் பற்றவைத்தபொழுது விமலுக்கு அது ஆச்சரியமாக இருந்தாலும்... 'அவனுக்கு இப்போதைக்கு இது வேணும்' என்று நினைத்ததாலோ என்னவோ ஒன்றுமே சொல்லவில்லை.

இப்பொழுதும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு பேசாமல் இருந்தான்.

அவனும் பதிலுக்கு ஒன்றுமே சொல்லாமல் இருந்துவிட்டான்.

மறுநாள் 25 ஜனவரி 2007

அஞ்சலியின் அழைப்பு வருகிறது. இவனுக்கு அது மிக்க சந்தோசம் என்பதனைவிட...

அவளது குரலைக் கேட்டதே பெரும் ஆறுதலாக இருந்தது.

தனது ஒன்றுவிட்ட அக்கா வீட்டில் இருப்பதாகவும்... கடந்த மூன்று நாட்களாக என்ன நடந்ததெனவும் ஒன்றுவிடாமல் சொல்லியிருந்தாள்.

0.jpg

அதன்பின் இருவருக்குள்ளும் தொலைபேசி உரையாடல்களே இணைக்கும் பாலமாய் இருந்தது.

சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெப்காமில் முகம்பார்த்து பேசுவார்கள்.

இவன் தனது கவலையை காட்டிக்கொள்ளாமல் இருந்துவிடுவான். ஆனால் அஞ்சலி பலசமயங்களில் அழ ஆரம்பித்துவிடுவாள். பிரிவுவலியில் தவிக்கும் அவளை ஆறுதற்படுத்துவது என்பது... அதேவலியில் தவிக்கும் இவனுக்கு இன்னும் கஷ்டமாயிருக்கும்.

முடிந்தவரை ஒவ்வொருநாளும் போனில் பேசிக்கொண்டார்கள்.

இப்படியே சில மாதங்கள் ஓடிவிடுகிறது.

அஞ்சலி தனது படிப்பிலும் இவன் தனது பிஸ்னஸிலும் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள...

அவர்கள் தினமும் போனில் பேசிக்கொள்ளும் அந்த சில நிமிடங்கள்தான்.... அந்த நாளின் இனிமையான தருணங்களாக அவர்களுக்கு அமைந்தது.

2007 ஏப்ரல்

இவனுக்கு அடுத்த பிரிவொன்று காத்திருந்தது.

இவனது ஆருயிர் நண்பனாக,தோள்கொடுக்கும் நல்ல தோழனாக இருந்த விமல்.... தனது வெளிநாட்டுப் பயணத்திற்காக தாய்லாந்து செல்லவேண்டிய நிலை வந்திருந்தது. அஞ்சலியின் பிரிவின் வலியிலிருந்து இன்னும் முழுமையாக மீளாமல் இருந்த இவனுக்கு, விமலின் இந்த விடயமும் பெரும் இழப்பாக உணர்ந்தான்.

ஆனாலும் தன் நண்பனின் எதிர்கால வாழ்க்கைக்கான பயணத்திற்காக அவனை சந்தோசமாக வாழ்த்தி வழியனுப்பிவைத்தான்.

விமலும் அடிக்கடி போன் பண்ணிக் கதைத்தபடியால் அவனது பிரிவு அவ்வளவாக தெரியாமல் இருந்தது.

இதற்குள் இவனது குடும்பமும் யாழிலிருந்து கொழும்பு வந்திருந்தனர். தெகிவளையில் ஒரு வீடு எடுத்து தன் குடும்பத்தினருடன் இருந்ததும் அவனது தனிமையையும் கவலைகளையும் போக்க ஏதுவாக இருந்தது.

பிஸ்னெஸ் பிஸி, குடும்பத்தாரோடு இருந்தது, சுவிஸிலிருந்து அவனது சித்தி குடும்பத்தினரின்

இலங்கை வருகை... என இன்னும் சில மாதங்கள் கழிய...

அவனது வாழ்க்கையை திசைதிருப்பப் போகும் ஒரு சம்பவம்

2007 ஓகஸ்ட் மாதத்தில் நடந்திருந்தது.

இலங்கையை சுற்றிமூண்ட போர் மேகங்கள்... கொழும்பின் இடைக்கிடை அதிர்வுகள்...

கைதுகள் கடத்தல்கள்... என எல்லாமே சமாதானக் காலத்திற்கான முற்றுப்புள்ளியை வைத்திருந்தது.

இவனும் ஒரு 'தமிழன்' என்ற வகையில்... சிங்கள புலனாய்வுப்பிரிவின் 'அன்பான' சந்தேகப்பார்வையின் புண்ணியத்தில்... இலங்கையின் 'பிரபலமான சிறந்த' சித்திரவதைக் கூடமான 'நான்கு மாடி'க் கட்டிடத்தினை சுற்றிப்பார்க்கும் 'பாக்கியம்' கிடைத்தது. அதிலிருந்து 'கொஞ்சம்' கஷ்டப்பட்டு மீண்டவன்.... நான்கு நாட்களுக்குள் கடல்தாண்டி வேறொரு கரை தொடவேண்டிய நிர்ப்பந்தம்.

அஞ்சலி இவனது சிக்கல் நிலையை அறிந்து துடித்துப்போனாள். அவளது கலக்கமும், பதைபதைப்பும் அவள் அவனின்மேல் வைத்திருந்த காதலை உணர்த்தியது மட்டுமல்லாமல், இவனும் அவளின் அன்பையும் அக்கறையையும் நன்கு புரிந்துகொள்ள வைத்தது.

தன் பிஸ்னெஸ் எல்லாவற்றையும் அப்படியே... தனது இன்னொரு நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு

இலங்கையிலிருந்து வெளியேறினான்.

Singapore-Airport.jpg

அப்போதைய அவசரத்திற்கு, அவனை அரவணைத்தது... சிங்கார சிங்கப்பூர்.

தான் சிங்கப்பூர் வந்த சில நாட்களிலேயே... தனது குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைத்தான்.

சிங்கப்பூரில் தங்குவதற்கான அனுமதி ஒரு மாதம் மட்டுந்தான் இருந்தது.

வேறு வீஸா போட்டுக்கொள்ளவும் வழிவகை இல்லாமல் இருந்தது அப்பொழுது.

என்ன செய்யலாம்? என யோசித்தவனுக்கு பக்கத்து நாடான மலேசியாவில் இருக்கும் நண்பனின் ஞாபகம் வர...

அவனுக்கு போன் பண்ணி... அங்குள்ள நிலவரங்கள் பற்றி விசாரித்தான்.

அவனது அந்த நண்பன் சொன்ன விடயங்களை சிந்தித்துப் பார்த்துவிட்டு...

மலேசியாவிற்கு செல்வதென்று முடிவெடுத்தான்.

2007 செப்டெம்பர்

மலேசிய மண் அவனை வரவேற்கிறது.

அந்த மண்ணுக்குள் நுழையும்போதே... இங்கு சில மாதங்கள் மட்டும் இருந்துவிட்டு... அடுத்தது, லண்டன் போற வழியைப் பாக்கோணும். நாட்டுக்குத்தான் திருப்பிப் போக ஏலாது. அஞ்சலி இருக்கிற இடத்துக்காவது போவம்... என்ற எண்ணத்துடன்தான் நுழைகிறான்.

kj3jPNigcee.jpg

இவன் மலேசியாவுக்குள் நுழையவும்... விமல் வேறொரு நாட்டுக்கு போகவும்... இருவருக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் தொடர்பு எடுப்பதற்கு முயற்சித்து கிடைக்காமல் போனது. தொடர்புகொள்ள அனைத்தும் கிடைத்தும் அவன் தொடர்பெடுக்காமல் இருந்ததற்கும் காரணம் இருந்தது.

அதன்பின் இத்தனை வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துக்கொண்டது.... லண்டனில், அமுதினியின் ஸ்னேகிதியின் திருமணத்தில்தான்!

அந்த திருமணம் நல்லபடி நடந்துமுடிய..... அன்றிரவு,

அவனின் வீடு...

விமலும் அவனும்...... பல்கனியில்.

அவர்களுக்கு முன்னால் ஒரு றெமி மார்ட்டின்-விஸ்கிப் போத்தல் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றது

அமுதினி சமையலறையில் இரவுணவு தயார்பண்ணிக் கொண்டிருந்தாள்.

"இஞ்சருங்கோ....ஓம்லெட் போட்டு எடுத்துக்கொண்டு வரவே?"

அங்கிருந்தபடியே அவள் கேட்டது இவனின் காதில் விழ,

"கொஞ்சம் பொறு மச்சான்... அம்மு கூப்பிடுறாள். ரெண்டு நிமிஷம்.... போய்ட்டு வந்திடுறன்" என்றுவிட்டு சமயலறைப் பக்கமாக வந்தவனிடம்...

"கனடாவில இருந்து வந்திருக்கிறார் எண்டியள்... இவர் உங்கட ஊர் ஃபிரண்டோ..?" என வினவினாள் அமுதினி.

"அம்மு.... இது யாரெண்டு சொன்னா நீ ஆச்சரியப்படுவாய்! இவன்தான் விமல்!!" என்றதும்,

"ஓ விமல் அண்ணாவோ... ?!" எனக் கண்கள் அகல ஆச்சரியப்பட்டாள்

உண்மையிலேயே அமுதினிக்கு அது ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருந்தது.

அவள் விமலைப்பற்றியும் இவர்களது நல்ல நட்புப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள்.

"சரி சரி... நானே ஓம்லெட் போட்டு எடுத்துக்கொண்டு வாறன்.

நீங்கள் போய் அவரோட கதையுங்கோ" என்றாள் அமுதினி

anjali_75_212201192700123.jpg

"இல்லமா.... நீங்கள் சமையுங்கோ! நான் செய்யுறன்" என்று அவன் சொல்லவும்.

"விமல் அண்ணா பாத்தா.... 'மனிசிக்காரி புருஷனைப் போட்டு நல்லா வேலை வாங்குது' எண்டு நினைக்கப்போறார்.

என்ர செல்லமெல்லோ...! நீங்கள் போய் கதைச்சுக்கொண்டிருங்கோ. சின்னவேலைதானே... ! நான் டக்கெண்டு எடுத்துக்கொண்டு வாறன்." என்றவளை புன்னகையோடு பார்த்துவிட்டு மீண்டும் விமல் முன்னால் வந்து அவன் உட்கார...

"சரிடா.... போத்தலை ஓப்பின் பண்ணு !" என்றான் விமல்,

தான் அறியாத மீதிக்கதையினை அவனிடமிருந்து கேட்கும் ஆவலுடன்.

தொடரும்...

Link to comment
Share on other sites

ஞ்சலி அவனுடன் இல்லாவிட்டாலும் அவனுக்கு அன்பான மனைவி அமுதினி இருப்பது பெரும் ஆறுதல்!

Link to comment
Share on other sites

ஏன் இவ்வளவு ஓட்டம் ? பிள்ளையள் பாவங்களல்லோ . கொஞ்சம் மெதுவா போறது .

Link to comment
Share on other sites

:rolleyes: :rolleyes: :rolleyes:
Link to comment
Share on other sites

கவிதை உங்கள் நேரத்துக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். எமக்காக இந்த கதையை சீக்கிரம் தொடர்வது பாராட்டப்பட வேண்டியது.

கதை நல்லப் போகுது.

கோமகன் - பொறுங்கோ - பிளாஷ் பக் வருமெல்லோ. :lol:

Link to comment
Share on other sites

என் அன்பான கள உறவுகளுக்கு.......!

இந்த "விற்றுத் தீர்ந்த காதல் கதையை ஒரே மூச்சில எழுதி முடிச்சிட வேண்டும் " என்றுதான் இதை எழுதத் தொடங்கினான்.

ஆனால், திடீரென உருவாகும் சில சூழ்நிலைகள்.... எனக்கு இன்னுமொரு பயணத்திற்கான நிர்ப்பந்தத்தினைக் கொடுத்துச் சென்றிருக்கிறது. இந்தப் பயணத்தின் கதையும் காரணமும் அதில் நிச்சயம் வரும்.

அவசரமான... ஆனால், மிக அவசியமான பயணம்!

மீண்டும் வந்து மீதியை தொடரும்வரை....

தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டபடி விடைபெறுகின்றேன்.

கூடியவிரைவில்.... மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்!

தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும்.... என் மனதார்ந்த நன்றிகள் உறவுகளே! :)

Link to comment
Share on other sites

என் அன்பான கள உறவுகளுக்கு.......!

இந்த "விற்றுத் தீர்ந்த காதல் கதையை ஒரே மூச்சில எழுதி முடிச்சிட வேண்டும் " என்றுதான் இதை எழுதத் தொடங்கினான்.

ஆனால், திடீரென உருவாகும் சில சூழ்நிலைகள்.... எனக்கு இன்னுமொரு பயணத்திற்கான நிர்ப்பந்தத்தினைக் கொடுத்துச் சென்றிருக்கிறது. இந்தப் பயணத்தின் கதையும் காரணமும் அதில் நிச்சயம் வரும்.

அவசரமான... ஆனால், மிக அவசியமான பயணம்!

மீண்டும் வந்து மீதியை தொடரும்வரை....

தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டபடி விடைபெறுகின்றேன்.

கூடியவிரைவில்.... மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்!

தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும்.... என் மனதார்ந்த நன்றிகள் உறவுகளே! :)

சென்று வாருங்கள் வென்று வாருங்கள்!!!!

Link to comment
Share on other sites

அவசரமான... ஆனால், மிக அவசியமான பயணம்!

மீண்டும் வந்து மீதியை தொடரும்வரை....

தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டபடி விடைபெறுகின்றேன்.

கூடியவிரைவில்.... மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்!

தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும்.... என் மனதார்ந்த நன்றிகள் உறவுகளே! :)

தம்பி கவிதை,

அடுத்த கெதியிலை எழுதி முடியுங்கோ. அடுத்த அங்கத்தை வாசிக்க காத்திருக்கிறோம். முழுக்கதையும் எழுதீட்டுத்தான் தப்பியோட முடியும்.

8690-gun.gifஓட நினைச்சா இதுதான் பாசலில வரும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அவசரமான... ஆனால், மிக அவசியமான பயணம்!

உங்கள் உறவுகள் நலம் தானே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.