Jump to content

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 08 .


Recommended Posts

தோசைக்கறி .

இந்தப் பக்குவத்திற்கு திருமதியிடம் மல்லுக்கட்ட வேண்டியதாகிவிட்டது . இந்தப் பக்குவம் பருத்தித்துறையின் பாரம்பரியம் . பரம்பரை பரம்பரையாக சொல்லப்படுகின்ற ஒரு பக்குவம் .

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் அரை கிலோ 500 கிறாம் .

சின்னவெங்காயம் 200 கிறாம் .

பச்சைமிளகாய் 200 கிறாம் .

வெந்தயம் 2 மேசைக்கறண்டி .

பழப்புளி எலுமிச்சம்பழம் அளவு .

தனிமிளகாய் தூள் உறைப்புக்கு ஏற்றவாறு .

உப்பு மஞ்சள் தேவையான அளவு .

பக்குவம் :

கத்தரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி தண்ணியில் போடவும் . பச்சை மிளகாய் , சின்ன வெங்கயத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டிவைக்கவும் . வெட்டிய கத்தரிக்காயை வெதுப்பியில் உள்ள ட்றேயில் சிறிது எண்ணையை பூசி , வெட்டிய கத்தரிக்காயை பரவவும் . வெதுப்பியில் 300 பாகை c யில் பொன்நிறமாகும்வரை கிறில் பண்ணவும் ( *********** ) . தாச்சியில் சிறியளவு எண்ணையை விட்டு வெந்தயத்தை பொன்னிறமாகும்வரை பொரிக்கவும் . பின்பு பச்சைமிகாய் சின்னவெங்காயத்தை போட்டு வதக்கவும் . பழப்புளியை சிறிய அளவு தண்ணீரில் தடிப்பாகக் கரைக்கவும் . பச்சைமிளகாய் வெங்காயம் வதங்கியவுடன் , பொரிச்ச கத்தரிக்காயை கொட்டி மிளாகாய்தூள் மஞ்சள் எல்லாவற்றையம் போட்டு பழப்புளி கரைசலைச் சேருங்கள் . ( அதிக தண்ணி கூடாது . ) மெதுவான வெக்கையில் கறி இறுகும்வரை விடவும் . இப்ப தோசைக்கறி றெடி .

********* வெதுப்பி இல்லாதவர்கள் தாச்சியில் பொரிச்சு அள்ளவும் .

படிமானம் :

ஒரு நாள் முழுக்க வைத்திருந்து விட்டு அடுத்தநாள் தோசையோடை , மனிசி / கணவர் பிள்ளைகளுடன் , முக்கியமாய் சீரியல் ரீவியில பாக்காமல் சாப்பிடுங்கோ . சம்பல் மாதிரி தொட்டுச் சாப்பிடுங்கோ . கனக்கச் சப்பிட்டால் பின்விளைவுக்கு நான் பொறுப்பு இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் தட்டி கடையில் தோசை வெள்ளை அப்பம் வாங்கி சிறு வயதில் சாப்பிட்டு இருக்கின்றேன் அதன் சுவை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை தோசை என்னுடைய விருப்பமான உணவு அதிலும் முட்டை தோசை என்றால் ம் ம் ம்...... சொல்லி வேலையில்லை :wub:

பகிர்வுக்கு நன்றி கோமகன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசைக்கறி பெயரே வித்தியாசமாக இருக்கின்றது.

பகிர்விற்கு நன்றி கோமகன்

Link to comment
Share on other sites

பருத்தித்துறையில் தட்டி கடையில் தோசை வெள்ளை அப்பம் வாங்கி சிறு வயதில் சாப்பிட்டு இருக்கின்றேன் அதன் சுவை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை தோசை என்னுடைய விருப்பமான உணவு அதிலும் முட்டை தோசை என்றால் ம் ம் ம்...... சொல்லி வேலையில்லை :wub:

பகிர்வுக்கு நன்றி கோமகன் :)

நானும் நீங்கள் பெற்ற இன்பத்தை போனவருடம் பருத்தித்துறையில் நிற்கும்பொழுது அனுபவித்தேன் . எல்லாரும் தான் அப்பம் தோசை சுடுவினம் , ஆனால் ........... உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் தமிழரசு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயிறு முட்ட எல்லாம் சாப்பிட வேனும்.ஆனால் மண்டையை போடக்கூடாது.அதுக்கு ஒரு வழியை பாருங்கோ.போற வழியிலே புண்ணியமாவது கிடைக்கும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயிறு முட்ட எல்லாம் சாப்பிட வேனும்.ஆனால் மண்டையை போடக்கூடாது.அதுக்கு ஒரு வழியை பாருங்கோ.போற வழியிலே புண்ணியமாவது கிடைக்கும். :lol:

அண்ணைக்கு வீட்டில பத்தியச் சாப்பாடு போல... :(

Link to comment
Share on other sites

தோசைக்கறி பெயரே வித்தியாசமாக இருக்கின்றது.

பகிர்விற்கு நன்றி கோமகன்

தோசையை தோசைக்கறியுடன் சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்கள் வாத்தியார் . மிக்க நன்றிகள் உங்கள் நேரத்திற்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி இதே செய்முறையில்தான் சமைப்பது வழக்கம்.. ஆனால் நாங்கள் கத்தரிக்காய் பிரட்டல் கறி என்றுதான் அழைப்போம்!

Link to comment
Share on other sites

உந்த தோசைக் கறியை நான் தோசையில்லாமல் தனியவே அள்ளித் திண்டிருக்கிறன், அந்த மாதிரி இருக்கும். செப் ஒரு கிலோ கறி பாசல் பண்ணி விடுங்கோவேன், திண்டு அஞ்சாறு வருசமாகுது.

Link to comment
Share on other sites

வயிறு முட்ட எல்லாம் சாப்பிட வேனும்.ஆனால் மண்டையை போடக்கூடாது.அதுக்கு ஒரு வழியை பாருங்கோ.போற வழியிலே புண்ணியமாவது கிடைக்கும். :lol:

நீங்கள் சாப்பிடாட்டாலும் மண்டையைப் போடத்தான்வேணும் . போன நாள் திரும்பி வராது சஜீவன் .

அடிக்கடி இதே செய்முறையில்தான் சமைப்பது வழக்கம்.. ஆனால் நாங்கள் கத்தரிக்காய் பிரட்டல் கறி என்றுதான் அழைப்போம்!

பருத்தித்துறை , அதனை ஒட்டிய வட்டாரங்களுக்கே தோசைக்கறி தெரியும் கிருபன் . கத்தரிக்காய் பிரட்டல் கறி , குறைந்த பச்சைமிளகய் , சின்னவெங்காயம் , தேங்கய்ப் பால் கொண்டு செய்யப்படுவது . உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் கத்தரிக்காய்க்கறி சாப்பிட எனக்கு பிறசர் ஏறுது.........என்ன பிரச்சனயெண்டு தெரியேல்லை?

Link to comment
Share on other sites

இப்பவெல்லாம் கத்தரிக்காய்க்கறி சாப்பிட எனக்கு பிறசர் ஏறுது.........என்ன பிரச்சனயெண்டு தெரியேல்லை?

ஏன் ராசா குண்டுக்கத்தரிக்காய் விலை இறங்கீட்டுது தானே ? இண்டைக்கும் வாங்கின்னான் , 1.70 தானே போட்டவன் . ஏன் பிறசர் வருது ? பரிமளத்திட்டைச் சொல்லுங்கோ பொரிச்சு அள்ளவேண்டாம் ,வெதுப்பியில எண்ணை சும்மா காட்டினால் காணுமெண்டு . அப்ப பிறசர் வராது .

என்னெண்டாலும் தோசைக்குச் சம்பல் தான் ருசியாக இருக்கும்.

கொஞ்சம் மாத்திப்பாக்கிறது அலை . என்ன பெற்றோல் சிலவே ?

Link to comment
Share on other sites

உந்த தோசைக் கறியை நான் தோசையில்லாமல் தனியவே அள்ளித் திண்டிருக்கிறன், அந்த மாதிரி இருக்கும். செப் ஒரு கிலோ கறி பாசல் பண்ணி விடுங்கோவேன், திண்டு அஞ்சாறு வருசமாகுது.

என்ன ஐஞ்சாறு வரியமோ ? போனவரியக்கடசியிலை அங்கினேக்கை உலாவினமாதிரிக் கிடந்திது . சரி கவலைப்படாதையுங்கோ , இங்கை என்னைச் சந்திக்கேக்கை செய்ஞ்சு தாறன் தும்ஸ் .

Link to comment
Share on other sites

நாம் நான்கு வகையான கத்தரிக்காய்களை வளர்க்கிறோம். தோசை கறியை செய்து ஒரு கை பார்க்கவேண்டியது தான்.

நன்றி கோமகன். இந்த வழிமுறையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாம் எமது இணையத்தளத்தில் பதியலாமா? :)

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் . இந்தப் பாரம்பரியப் பக்குவங்கள் எந்த மொழிமூலமும் எல்லோரையும் சென்றடைந்தால் நல்லதே . போடுவதில் தடையேதும் இல்லை .

Link to comment
Share on other sites

நன்றி கோமகன் அண்ணா உங்கள் பகிர்வுக்கு. நான் இப்பொழுது தான் சமையல் செய்து பழகிறன். :lol: நீங்கள் இணைப்பவை இலகுவாக செய்யக்கூடியதாக இருக்கு. சிலவேளை எனக்கும் உதவும். :)

சம்பல் மாதிரி தொட்டுச் சாப்பிடுங்கோ . கனக்கச் சப்பிட்டால் பின்விளைவுக்கு நான் பொறுப்பு இல்லை .

:lol::D

அடிக்கடி இதே செய்முறையில்தான் சமைப்பது வழக்கம்.. ஆனால் நாங்கள் கத்தரிக்காய் பிரட்டல் கறி என்றுதான் அழைப்போம்!

ஆம். நாங்களும் தான்.

பருத்தித்துறை , அதனை ஒட்டிய வட்டாரங்களுக்கே தோசைக்கறி தெரியும் கிருபன் . கத்தரிக்காய் பிரட்டல் கறி , குறைந்த பச்சைமிளகய் , சின்னவெங்காயம் , தேங்கய்ப் பால் கொண்டு செய்யப்படுவது . உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் .

நான் கத்தரிக்காய் பிரட்டல் கறிக்கும் கனக்க வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு தான் செய்யிறனான். :unsure:

ஏன் ராசா குண்டுக்கத்தரிக்காய் விலை இறங்கீட்டுது தானே ? இண்டைக்கும் வாங்கின்னான் , 1.70 தானே போட்டவன் . ஏன் பிறசர் வருது ? பரிமளத்திட்டைச் சொல்லுங்கோ பொரிச்சு அள்ளவேண்டாம் ,வெதுப்பியில எண்ணை சும்மா காட்டினால் காணுமெண்டு . அப்ப பிறசர் வராது .

கொஞ்சம் மாத்திப்பாக்கிறது அலை . என்ன பெற்றோல் சிலவே ?

:lol::D:lol:

இந்த திரியில் கோமகன் அண்ணா ஒரே ஜோக் அடிக்கிறாரே. :D:icon_idea:

Link to comment
Share on other sites

நன்றி கோமகன் அண்ணா உங்கள் பகிர்வுக்கு. நான் இப்பொழுது தான் சமையல் செய்து பழகிறன். :lol: நீங்கள் இணைப்பவை இலகுவாக செய்யக்கூடியதாக இருக்கு. சிலவேளை எனக்கும் உதவும். :)

:lol::D

ஆம். நாங்களும் தான்.

நான் கத்தரிக்காய் பிரட்டல் கறிக்கும் கனக்க வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு தான் செய்யிறனான். :unsure:

:lol::D:lol:

இந்த திரியில் கோமகன் அண்ணா ஒரே ஜோக் அடிக்கிறாரே. :D:icon_idea:

தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் . மேலும் நான் நகைச்சுவை உணர்வு இல்லாதவன் என்று எதைவைத்துச் சொல்கின்றீர்கள் ?

Link to comment
Share on other sites

தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் . மேலும் நான் நகைச்சுவை உணர்வு இல்லாதவன் என்று எதைவைத்துச் சொல்கின்றீர்கள் ?

இந்த கிழமை எனக்கு நேரம் சரியில்லையா? :unsure: எல்லாரும் என்னை போட்டு தாக்குகிறார்களே.. :unsure::unsure: :unsure:

உங்களை நகைச்சுவை உணர்வு இல்லாதவர் என்று நான் சொல்லவில்லை அண்ணா.

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் என்ற தலைப்பில் இதுவரை நான் வாசித்ததில் இதில் அதிகளவில் நகைச்சுவை இருந்தது. அதனை நான் ரசித்தேன். அதனால் தான் அப்படி எழுதினேன். ஆனால் நான் நக்கலடிக்கிறேன் என்று நீங்கள் நினைத்து விட்டீர்கள். :( :(

தவறு என்னுடையது தான். இந்த திரியில் என்பதற்கு பதிலாக கோமகன் செஃப் Chéf இன் பக்குவங்களில் இத்திரியில் அதிகளவு ஜோக் அடிக்கிறீர்கள் என்று வர வேண்டும். :)

Link to comment
Share on other sites

என்ன ஐஞ்சாறு வரியமோ ? போனவரியக்கடசியிலை அங்கினேக்கை உலாவினமாதிரிக் கிடந்திது . சரி கவலைப்படாதையுங்கோ , இங்கை என்னைச் சந்திக்கேக்கை செய்ஞ்சு தாறன் தும்ஸ் .

போன வாரியமும் போனனான் தான் செப். சில்லுக்களி, குரக்கன் புட்டு, சிங்க றால், பருத்துறை வடை, புழுக்கொடியல் அது இதெண்டு திண்டதில உந்த தோசைக் கறியைத் தின்ன சந்தர்ப்பம் கிடைகேல்ல. அடுத்த வருஷம் பாப்பம். உங்காளிப் பக்கம் வந்திட்டு போக விருப்பம் தான் ஆனால் இப்ப கொஞ்சம் பிசியாக் கிடக்கு.

Link to comment
Share on other sites

சம்பல் மாதிரி தொட்டுச் சாப்பிடுங்கோ . கனக்கச் சப்பிட்டால் பின்விளைவுக்கு நான் பொறுப்பு இல்லை .

அண்ணே அது என்ன சம்பல், அதன் செய்முறையை கொஞ்சம் சொல்லுங்க

Link to comment
Share on other sites

அண்ணே அது என்ன சம்பல், அதன் செய்முறையை கொஞ்சம் சொல்லுங்க

அதுதான் உங்க ஊரிலை சட்ணி என்று பெயர் ராமதேவன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கோமகன்!

Link to comment
Share on other sites

அதுதான் உங்க ஊரிலை சட்ணி என்று பெயர் ராமதேவன் .

நன்றி அண்ணா

அண்ணா எதாவது ஒரு வித்தியாசமான காரசார சைவ சம்பல் ஒன்று இணையுங்களேன்

Link to comment
Share on other sites

அதுதான் உங்க ஊரிலை சட்ணி என்று பெயர் ராமதேவன் .

சட்னி வேறு; சம்பல் வேறு.. சட்னி ஈரப்பதமா இருக்கும்..சம்பலில் தேங்காய்ப்பூ கிட்டத்தட்ட உதிரியாக இருக்கும்.. :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.