
மூன்று வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக்கையில் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும்
விடுதலை பெருந்தீயில்
பேரியக்கமாய்
முப்பத்தெட்டு ஆண்டுகளாய்
சுடர் விட்டு எரிந்த
தியாக விளக்குகளே
பற்றி எரியும் பெரு நெருப்பை
நெஞ்சின் அறைகளில்
தாங்கி
உயிரையே எண்ணையாக
கொடுத்த பெரு மக்களே
உங்கள் காலடித்தடங்களை
எமக்குள் இறக்கி
கைகூப்பி மண்டியிட்டு
தொழுது வணங்குகின்றோம்
வீர வணக்கங்கள் !!
:
யாழ் இணையம்
மே, 2012

















