Jump to content

25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டெசோ- என்ன சாதிக்கப் போகிறார் கருணாநிதி?


Recommended Posts

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈழத் தமிழர் ஆதவாளர்கள் அமைப்பு எனும் டெசோவை உயிர்ப்பித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

அவர் தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதாவது முந்தா நாள் அறிவித்து, இன்று தொடங்கிவிட்டார் கருணாநிதி இந்த அமைப்பை. ஆனால் டெசோவுக்கு முன்பு கிடைத்த ஏகோபித்த ஆதரவு இந்த முறை அவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக கடும் விமர்சனங்களே எழுந்துள்ளன.

டெசோ மூலம் என்ன சாதிக்க முடியும் கருணாநிதியால்?

டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு மே 13ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. கருணாநிதியைத் தலைவராகவும், கி.வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அப்போது அது அமைந்தது. இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கையாக வடக்கு கிழக்கு இலங்கைப் பகுதிகளை இணைத்து தமிழ் ஈழ நாடு அமைக்க வேண்டும் என்பதே.

டெசோ அமைப்பின் சார்பில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டையும் கருணாநிதி நடத்தினார்.அதில் வாஜ்பாய் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்த எம்ஜிஆரின் அதிமுக கூட இதைக் கண்டு கொள்ளவில்லை. கருணாநிதிக்கு ஏகாபித்த ஆதரவு இருந்தது.

இந்த டெசோவின் முழுமையான நோக்கமே தனி ஈழம்தான் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் தனி ஈழம் வந்தால் அது பிரபாகரன் தலைமையில்தான் என்ற ஒரு நிலை அன்றே உருவாகிவிட்டது. அதைத்தான் எம்ஜிஆர் நேரடியாகக் கூறிவந்தார்.

ஆனால் பிரபாகரனோ கருணாநிதியின் ஈழ ஆதரவு கோஷங்களின் பின்னணியில் உள்ள வெற்று அரசியல் புரிந்ததால், டெசோ விவகாரங்களில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. டெசோ மாநாட்டுக்குக் கூட அவர் திலகர் என்பவரைத்தான் அனுப்பினார்.

இந்தப் பின்னணியில்தான் டெசோவை கலைத்துவிட்டதாக பின்னர் கருணாநிதி அறிவித்தார். தனி ஈழம் வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட டெசோ, அந்த நோக்கம் நிறைவேறும் முன்பே கலைக்கப்பட்டது. இப்போது மீண்டும் டெசோ தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்து முதல் கூட்டத்தையும் கருணாநிதி நடத்தியுள்ளார். இதன் மூலம் அவர் என்ன சாதிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்றைக்கு முழுக்க முழுக்க அவருக்கு எதிரான சூழலே ஈழ அரசியல் களத்தில் நிலவுகிறது. கருணாநிதியின் வார்த்தைகள் நம்பகத்தன்மை அற்றவையாகப் பார்க்கப்படுகின்றன. காரணம், சர்வ பலமிக்க முதல்வராக அவர் பதவியில் இருந்த போது தனிஈழம் வேண்டும் என்பதை அவர் சொல்லத் தவறினார். பிரணாப் முகர்ஜிக்கு இணையாக இலங்கையின இறையாண்மை பற்றி கவலைப்பட்டார்.

விமானங்களிலிருந்து குண்டுமழை பொழிவது நிறுத்தப்பட்டாலும், பீரங்கிக் குண்டு வீச்சும், துப்பாக்கிச் சூடுகளும் தொடர்வதாக அவரது புகழ்பெற்ற 3 மணி நேர உண்ணாவிரதத்தின் போது தகவல் சொல்லப்பட, ‘மழைவிட்டும் தூவானம் விடவில்லை’ என கொடூரமான உவமையைச் சொன்னதை யாரும் இன்னும் மறக்கவில்லை.

இன்றைய கூட்டத்துக்குப் பின் கருணாநிதி பேசுகையில், “சிங்களர்களை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதியமொழியை அளித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர்.

இனியும் தமிழ் மக்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது. தமிழர்களுக்கென் தனி் நாடு, தமிழ் ஈழ நாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா. பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,” என்றார்.

கருணாநிதியிடம் உள்ள பிரச்சினையும் இதுதானே. 2008-லிருந்து 2009 தொடக்கம் வரை ஈழப் போராட்டம் என்ற பெயரில் அனைவரையும் பலமாக உசுப்பேற்றி நம்ப வைத்துக் கழுத்தறுத்தார் என்பதுதானே இவர் மீதுள்ள குற்றச்சாட்டும். இவரை ராஜபக்சேவை நம்பச் சொன்னது யார்? அதையெல்லாம் தாண்டி உறுதியோடு நின்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் போனாதுதானே கருணாநிதி மீது தீராத பழியாக நிற்கிறது!

சொந்த அரசியல் காரணங்கள், தன் பிடியைவிட்டு நழுவும் தமிழகத்தை இழுத்து நிறுத்துததல் போன்ற காரணங்களுக்காகவே அவர் இத்தனை நாட்களும் இல்லாமல் இப்போது தனி ஈழக் கோரிக்கையை கையில் எடுத்திருக்கிறார் என்ற விமர்சனங்களை அவரே கூட புறக்கணிக்க முடியாது.

ஈழத்தில் போர் உக்கிரமடைந்து லட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் உயிரிழந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரே ஒரு வார்த்தை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக கருணாநிதி பேசியிருந்தால் கூட, தமிழ் வரலாறு அவரைக் கொண்டாடி இருக்கும். போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது சகஜம் என ஜெயலலிதா ஒரு பக்கம் வேல் பாய்ச்ச, இன்னொரு பக்கம், முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தைக் கொச்சைப் படுத்தியும், அதன் தொடர்ச்சியாக எழுந்த மாநிலம் தழுவிய அசாதாரண மாணவ எழுச்சியை பிரிட்டிஷாரை விட மிக மோசமாக கருணாநிதி அரசு கையாண்டதும்… இதோ நேற்றுதான் கண்முன் நடந்ததைப் போலுள்ளது.

இப்போது அவர் கையில் எடுத்துள்ள தனி ஈழ கோரிக்கை எத்தனை நாளைக்கு நிலைத்திருக்கும்? காங்கிரஸை விட்டு உண்மையிலேயே பிரிந்து வந்து, தனி ஈழத்துக்காக கடைசி மூச்சு வரைப்போராடப் போகிறாரா கருணாநிதி?

இந்தக் கேள்விக்கு உறுதியான விடையை அவர் தந்தாலும் அதை ஏற்கவிடாமல் தடுக்கிறது அவரது கடந்த கால அரசியல்.

தனித்த அரசியல் லாபங்களைப் புறக்கணித்து, இந்த இறுதிக் கட்ட ‘போரை’ அவர் இதயசுத்தியோடு முன்னெடுத்தால், டெசோ மீது நம்பிக்கைப் பிறக்கும். மாறாக 2014 மக்களவைத் தேர்தலுக்காகவும், மகன்களின் அரசியல் போரை திசை திருப்பவும்தான் இந்த டெசோ என்றால், கருணாநிதி தன் ஜெ எதிர்ப்பு அறிக்கைப் போரை மட்டும் தொடரலாம்

http://www.envazhi.com/teso-is-it-a-true-fight-or-another-drama-of-karunanithi/

Link to comment
Share on other sites

கொலைஞர் கருணாநிதியின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது!

தமிழினக் கொலைக்கு உறுதுணையாக நின்ற ஹிந்தியப் பயங்கரவாதி பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி தேர்வுக்கு ஆதரிப்பதிலிருந்து கொலைஞர் கருணாநிதியின் சுயரூபம் மீண்டும் அம்பலமாகி விட்டது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
    • உந்த‌ இஸ்கோர‌ பார்த்து  ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது   கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை......................................... ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................
    • வணக்கம் வாத்தியார்.........! பெண் குழு : சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க { மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2) பெண் : { கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ } (2) பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம் பாா்த்தது கொஞ்சம் பெண் : ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது பெண் : ஒரு மின்சாரம் பாா்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன் பெண் : என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் ......! --- கண்ணாளனே எனது கண்ணை ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.