
நடிகர் விவேக்கை பாடாய் படுத்தியவர்கள் வாயடைத்து போகும் கதி.
விவேக்கின் வீட்டின் முன்னால் ஒரு சமயம் ஆர்ப்பாட்ட ரகளை செய்து எச்சரிக்கபட்டது.
இப்பொழுது விவேக் எதன் வழியாக சிரிப்பார். ?
மலத்திற்கும் மலர் தூவப்படுகிறது.
“இன்னுமொரு பெரியார் வேண்டும் .” ??
ஒரு திரைப்படத்தில் ரோட்டோர எல்லைக்கல்லின் மேல் உட்கார்ந்திருந்த விவேக்கை சிலர் விரட்டிவிட்டு அந்தக் கல்லை அவர்களின் "குல தெய்வம்" என கும்பிடுவார்கள். அப்போது "எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்தவே முடியாது” என கூறுவார். இந்த வசனம் மக்களிடையே பிரபல்யமாகிவிட்டது.
இது போன்ற விழிப்புணர்வுகளை தனது நகைச்சுவை நடிப்புகளால் விவேக் தொடர்ந்தினால்,
விவேக்கின் மேல் முன்னணி மதவாதிகளின் வெறுப்பு ஏற்பட்டு,
இது போல் தொடர்ந்தால் வட மாநிலங்களில் சிவசேனாவின் நடவடிக்கைகள் போல் தொடர்வோம் என விவேக்கின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்ட ரகளை செய்து எச்சரிக்கபட்டவுடன்,
விவேக் ஒரு பிரசித்தி பெற்ற வார இதழில் தான் ஒரு கடவுள் எதிர்ப்பாளன் அல்ல . மனைவியுடன் வாராவாரம் கோயிலுக்கு சென்று வருபவன் என அறிக்கை விடும் சூழ்நிலை உருவாகியது.
"இன்னுமொரு 'பெரியார்' வேண்டும்"
ரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து விட்டு செல்ல, பலரும் அதை வழிபட்டு வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது.
சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடையாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர். சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது.
வெளியூர் வாசிகள் இதை பொருட்படுத்தவில்லை என்றாலும், அருகில் உள்ள கிராமத்தினர் இவ்வழியாக செல்லும் போது எல்லை கல்லை வழிபடுவதை வழக்கமாக்கினர்.
நெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டிய ஒளிரும் ஸ்டிக்கரால், இரவில் கல் ஒளிர்வதை கூட, கடவுளின் அருள் என அப்பகுதியினர் நம்புகின்றனர்.
சத்திரக்குடியை சேர்ந்த சந்திரசேகர் கூறியதாவது: ஒரு மாதத்தில் தான் இந்த வழிபாட்டு முறை வந்தது.
"இதை வழிபட்டு சென்றதால், எனக்கு சில காரியத்தில் வெற்றி கிடைத்தது. இதற்கு பெயர் வைத்தால் வழிபட வசதியாக இருக்கும்" என்றார்.
பல ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் தான் நெடுஞ்சாலையில் உள்ள எல்லை கற்கள் புதுப்பிக்கப்பட்டன. அதற்குள் அதை கடவுளாக்கி வழிபாட்டு முறையையும் கொண்டு வந்ததை அப்பகுதி பகுத்தறிவாளர்கள் ஏற்கவில்லை.
"விளையாட்டாக யாரோ செய்த செயல், தற்போது கடவுள் நம்பிக்கையாக மாறிவருவதாக,' சிலர் கூறினர். "
"கடவுளாக பாவித்தாலும் இதுவரை அதற்கு பெயர் வைக்காமல் விட்டு வைத்ததே,''ஆறுதல்பட வேண்டிய விசயம்.
http://rajagambeeran...-post_6970.html


















