Jump to content


Tamil Star News
Photo

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி: நடுவானில் வெடித்து சிதறியது


  • Please log in to reply
No replies to this topic

#1 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,571 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 13 April 2012 - 03:10 PM

வட கொரியா நீண்ட தூரம் செல்லும் செயற்கைகோளை ஏவி சோதனை செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் செயற்கைகோள் வெடித்து சிதறி தோல்வியில் முடிந்தது.

வடகொரியாவின் நிறுவன தலைவர் கிம் 2 சங் 100-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக விண்ணில் கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்றை ஏவ வடகொரியா முடிவு செய்தது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

இதற்கு ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை சோதனை நடத்தவே இந்த ஏவுகணை ஏவப்படுவதாக குற்றம் சாட்டின. இதை வடகொரியா மறுத்தது. வானிலை ஆய்வுக்காகவே அனுப்பப்படுவதாக கூறியது.

அதே நேரத்தில் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டால் ஏவுகணை வீசி தாக்கி அழிக்கப் போவதாக ஜப்பான் மிரட்டி வந்தது. அதையும் மீறி வடகொரியா உள்நாட்டு நேற்று காலை 7.40 மணி(சர்வதேச நேரப்படி நேற்று இரவு 10.40 மணிக்கு) விண்ணில் ஏவியது.
ஆனால் வடகொரியாவின் முயற்சி தோல்வி அடைந்தது. செயற்கைகோள் ஏவப்பட்டதும் சீறிப்பாய்ந்தபடி விண்ணில் பறந்தது. அதே நேரத்தில் அடுத்த ஒரு நிமிடத்தில் நடுவானில் வெடித்து சிதறியது. அவற்றின் சிதறல்கள் தென்கொரியாவின் குன்சன் துறைமுகத்தில் இருந்து தென்மேற்கில் 200 கி.மீட்டர் தூரத்தில் மஞ்சள் கடலில் விழுந்தது.


இந்த தகவலை தென் கொரியா, அமெரிக்க மற்றும் ஜப்பான் நாடுகள் அறிவித்தன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடலில் விழுந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணில் ஏவப்பட்ட 1 அல்லது 2 நிமிடத்தில் நடுவானில் வெடித்து சிதறி கடலில் விழுந்ததாக, தென் கொரியாவின் இராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் கிம் மின் சியோக் கூறியுள்ளார்.
மேலும் செயற்கைகோளின் சிதறல்கள் வெடித்து சிதறி விழுந்த பகுதியில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள செய்தியில், இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வட கொரியா பதட்டத்தை ஏற்படுத்துகிறது. வட கொரிய மக்கள் பசியால் வாடும்போது, அந்நாடு ஆயுதங்களில் செலவிட்டு பணத்தை வீணடிப்பதாக கூறியுள்ளது.

செயற்கைகோள் வெடித்து சிதறியதை ஜப்பானும் உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த விஷயத்திலும் வடகொரியா இதுவரை எந்த வித பதிலும் தெரிவிக்கவில்லை.






Posted Image

Posted Image

Posted Image

Posted Image

http://world.lankasr...ZBnB3203cq80Q42

Edited by காதல், 13 April 2012 - 03:15 PM.


Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]