Jump to content

மிதிவண்டி உதவி வழங்கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த தமிழீழ பிரஜைகளுக்கும், யாழ்க்கள உறவுகளுக்கும்,

சர்வதேசநாடுகளிலிருந்து அகதிகளுக்காக இலங்கை அரசிடம் அனுப்பிவைக்கப்படும் உதவிகள், தேவையானோர் பலருக்கு சில தடவைகள் செல்லத்தவறுவதைக் கண்டு நாம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறோம். இதில் எதையாவாது நாம் நிவிர்த்தி செய்ய முடியாதா என நம்மில் பலரும் ஆதங்கப்பட்டதுண்டு. இந்த ஏக்கங்களின் பலனாக, நாம், நலிந்த அகதிகளுக்குள் நலிந்த சமூகமான, விதவைகளுக்கும், அனாதைச் சிறார்களுக்கும் உதவுமுகமாக, “காயப்பட்ட விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் புது சந்தர்ப்பம்” (NOWWOW -New opportunities for Widowed, Wounded, and Orphans of War - http://nowwow-us.org/) என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறநிலையமாக பதிவுசெய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருகின்றது. முழுமையாக இந்த நிலையம் செயல்ப்படத்தொடங்கியவுடன், புனர்வாழ்வுத் திட்டங்களில் முதல் சுற்றில் தவறவிடப்பட்டோர்களை தேடி அவர்களுக்கு உதவிகளை கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கை இதனால் நமக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், வடக்குக், கிழக்கில் கடும்சேதமடைந்த பகுதிகளை பிரதிநிதிப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாம் அடிக்கடி உரையாடிவருகிறோம். இந்த உரையாடல்கள், அரசியல் கலப்பில்லாத, பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி வறுமையிலிருந்து விடுதலை காண்பது என்பதைப்பற்றிய பேச்சு வார்த்தைகளாகும். இந்த உரையாடல்களில் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டப்படும் ஒரு பிரதானமான விடயம், ஈழ தேசத்தின் வருங்காலம் காக்கப்படவேண்டுமாயின், சிறார்களின் பள்ளிப்படிப்பு பேணப்படவேண்டுமென்பதாகும். என்னிடம் இன்னமும் எல்லாப் புள்ளிவிபரங்களும் இல்லாவிட்டாலும், கிழக்கு மாகாணத்தில் விரைவாக முன்னேறி வரும் முஸ்லீம் சமுதாயத்துடன் பார்க்கும் பொது நம்மவர்களின் நிலை தாழ்வாக இருப்பதுடன் கிளிநொச்சியில் பள்ளிப்படிப்பு மிகவும் கவலைக்கிடமாகவும் இருக்கிறது.

ஆகவே நாங்கள் முதலில் கிளிநொச்சித் தொகுதியிலிருந்து சில நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பிக்க இருக்கிறோம். இந்தச் சிறார்களுக்கு, தற்சமயம், பலவிதமான தேவைகள் இருப்பதாக நமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. சில பிள்ளைகள் தமது கல்வித்தேவைக்கு ஒரு பள்ளியை சென்றடைய, காலையும், மாலையும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்த விடையத்தில் இவர்களுக்கு உதவயாரும் இல்லையானால் இவர்களால் இனிமேல் பள்ளி செல்ல முடியாத நிலையொன்றிருக்கிறது. ஆனால் நாங்கள் இவர்களுக்கு ஒவ்வொரு மிதிவண்டி கொடுத்துதவ முன்வந்தால், இவர்களால் தங்கள் படிப்புக்களைத் தொடர முடியும். மேலும் இந்தச் சிறார்கள் பலரிலேயே, அவர்களின் குடும்பங்கள், தங்கள் வாழ்வூதியத்திற்கும் தங்கியிருப்பதால், இந்த மிதிவண்டிகளைப் பயன்படுத்தி தங்கள் குடும்பங்களுக்கும் அவர்களால் உதவ முடியும்.

நாங்கள் அளிக்க இருக்கும் முதல் தொகுதியான 50 மிதிவண்டிகளிலும், குறைந்தது 30 வண்டிகளையாவது, அமெரிக்கா வாழ் உறவுகளிடமிருந்து நன்கொடையாக எதிர்பார்க்கிறோம். இதற்கான செலவு $3000-$4000 வரையிலாகும். நாம் எல்லோரும் மனதார சிறு சிறு உதவிகள் செய்ய முன்வந்தால் இது ஒரு பெரிய சுமையாக இருக்கமுடியாது. இதில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்து நீங்கள் அவர்களுக்கும் இந்த தொண்டு வாழ்க்கை பயிற்றுவிக்கலாம். எப்படி நீங்கள் இந்த உதவியைச் செய்தாலும், இது வருங்கால தமிழீழத்தின் இளம் தளிர்கள் கருகிவிடாது நீர்வார்க்கும் அரிய கைங்கரியம் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். இதில் நீங்கள் எவ்வளவு கொடுக்கலாம் என்று இல்லாவிட்டாலும், உங்கள் குடும்பத்திலிருந்து, தயவுசெய்து, ஒரு மிதிவண்டியாவது தந்துதவுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எமது இந்த மிதிவண்டி இலக்குக்கு மேலாக பணங்கொடுத்து உதவப்பட்டால் அதில், பாடப்புத்தகங்கள், எழுத்து உபகரணங்கள் போன்றவையும் அன்பளிப்பு செய்யலாமென்றிருக்கிறோம்.

சுபா சுந்தரலிங்கம்

s.suba@tgte.org

or please visit

nowwow-us.org

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ... ஆனால் ..

... சிலவற்றை நீங்கள் புரிய வேண்டும், ஏன் அள்ளி எறிந்தவர்கள் எல்லாம் இப்போ பின் நிற்கிறார்கள் என்று??? ...

... மக்களின் அவலங்களை கூறி வாங்கியவர்களில் சிலர் சுருட்டி விட்டனர்! ,,, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட உதவிகள் போய் சேரவில்லை ,,, பாதிக்கப்பட்டதாக கொடுக்கப்படும் பல தரவுகளில் சந்தேகங்கள் ... இவைகளுக்கு மேலாக பல உதவி கோரும் அமைப்புக்கள் ... அவைகளுக்குள் எந்த வித தொடர்புகளும் இல்லை ... ஒரு அமைப்பு மூலம் உதவி பெற்றவர்கள், அடுத்த அமைப்புகளின் மூலமும் பெற வாய்ப்புகள்/பெற்றும் உள்ளனர்! ..

... இப்படியாக பல பிரட்சனைகளினால் எட்டு விலகி நிற்கிறார்கள் ...

... இப்படியான சில பிரட்சனைகளை தீர்க்கும் மட்டும் ... கிள்ளியாவது தருபவர்கள் பின்னிக்கவே செய்வார்கள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்க்காலில் ஓடும் நீரை வரம்பு ஒருபோதும் தடுத்து நிறுத்துவதில்லை. வரம்பின் நோக்கமும் பணியும் நீர் எங்கே போய்ச்சேரவேண்டும் என்று வாய்க்காற் பள்ளத்துக்கு நினவூட்டுவது தான்.அந்த வகையில் பார்த்தால் உங்கள் கருத்துக்கள் உண்மையானவை, நிச்சயமாக வரவேற்கப்படவேண்டியவை. ஆட்சேபிக்கப்படக்கொடாதவை. மூன்றாண்டுகளாக நாங்கள் தயங்கித் தயங்கி நின்றமைக்குக்காரணமே நாங்கள் கண்ணால் கண்டவைகளும் காதால் கேட்டவைகளும் மட்டும் தான். ஆனால் இப்போது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "நவ்வவ்" என்றொரு அறக்கட்டளை அமைப்பொன்றை உருவாக்கியுள்ளோம். நாம் செய்யும் பணிகள் பயங்கரவாதத்துக்குத் துணை போவது என்ற ஐயம் யாருக்குமே இருக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்க வருமானத் திணைக்களத்திடம் இது பற்றிய குறீப்புக்களை அனுப்பி அவர்களிடம் அவற்றுக்கான விளக்கங்களையும் கேட்டுள்ளோம். அவர்கள் சொல்வதை அப்படியே நிறைவேற்றுவோம்.

மறு புறத்தில், எமது உதவிகளை யாருமே "இலவசமாகக் கிடைப்பவை தாமே!" என்ற எண்ணத்தில் தப்பாகப் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். கிழக்கிலொருவரும் வடக்கிலொருவருமாக மக்கள் பிரதிநிதிகள் இருவர் எமக்கு இந்த உதவிகளைப் பகிர்வதிலும் தேவைகளை அடையாளப்படுத்துவதிலும் உதவுவார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகள் இருவரும் "ஊழிக்காலம்" என்று வருணிக்கப்படக்கூடிய, அந்தக் கொடிய நாட்களில் தம் சேவை மனப்பான்மையை நன்கு நிரூபித்தவர்கள். இதைவிடவும் கத்தோலிக்க திருச்சபையும் இதில் எங்களுடன் பங்கு கொண்டு உழைக்கும். மதபேதங்களைப்பாராது உண்மையான தேவைகளை மட்டும் கணக்கிலெடுக்கும் தகுதியும், திறமையும், கண்ணியமும், பாரதூரமான பொறுப்புக்களை சுமக்கும் தைரியமும் தனக்கு உண்டென்று கத்தோலிக்க திருச்சபை ஏற்கெனவே எமக்கு நிரூபித்துள்ளது.

இந்த ஈருருளித் திட்டம் ஒரு ஆரம்பம் மட்டும் தான், நாம் கிழக்கில் கிராமப்புறங்களில் சரிந்து விழுந்துள்ள கல்விப்பிரச்சினயை அடுத்ததாக எதிர் நோக்கவுள்ளோம். அங்கே எதிர்காலம் தெரியாது தவிக்கும் இளம் பட்டதாரிகளுக்கு ஏதாவது கஞ்சிக்கு வாய்ப்புக்கொடுப்பதன் மூலம் கல்வியில் திசை தெரியாது தவிக்கும் எமது வளர்ந்த பிள்ளைகளுக்கு உயர்தரப் பரீட்சை நிலைக்கு இலவசமாகப்படம் சொல்லித்தர இருக்கின்றோம். முடிந்தவரை அவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களையும் தர இருக்கின்றோம். அவ்வாறு எம்மிடம் உதவி பெற்றவர்கள் இளஞ்சிறார்க்குத் தம்மால் இயன்றளவு பாடம் புகட்டித்தரவேண்டுமென்று நாம் எதிர்பார்ப்போம். இதில் கிழக்கத்தைய மக்கள் பிரதிநிதியே எமக்குத் திட்டங்களை வரைந்து தந்து மேற்பார்வையும் செய்வார். இவ்வளவுக்கும் பணம் ஏதும் எம்மிடம் இல்லை. திரும்பத் திரும்ப "பணத்தைக் கொடுங்கள்" என்று கூவிக்கொண்டு உங்களிடமே வருவோம். "தந்த பணத்துக்கு என்னாச்சு" என்று கேட்கும் உரிமை உங்களுக்குண்டு. அப்படிக் கேளாத வரையில் நீங்களும் தான் கடமை தவறுபவர்கள் ஆகிறீர்கள். நாம் இதுவரை மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் அனைத்துமே தனிமனிதர்களின் பொறுப்புக்களாக எவையுமே நடை பெற்று எவருக்குமே தம்மைத் தாமே களங்கப்படுத்தும் சந்தர்ப்பங்கள் வந்தமைந்து விடக்கூடாது என்ற அடிப்படையைப் பலப்படுத்தும் நோக்கிலானவை. இதற்கு மேல் ஏதாவது நடந்துவிட்டால் அது ஆண்டவன் விட்ட வழி. அங்கே குழந்தைகளினதும் இனத்தினதும் கல்வியினதும் எதிர்காலம் தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது "முன்பு இருந்தவர்கள் ஏமாற்றிவிட்டார்களே, இதற்குள்ளே எமக்கேன் வீண் பேர்" என்ற தயக்கம் ஒரு சில நாட்கள் இருக்கலாம். ஆனால் அந்தத் தயக்கம் என்றென்றைக்குமே எம்மைஅடிமைப்படுத்திவிடுவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்பது தான் எமது நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம். பாராட்டுக்கள். 

இப்போது ஒ. எல். பெயிலானவர்கள் இலஞ்சம் குடுத்து வேலை எடுத்து கல்வி தரத்தை குறைக்கிறார்கள். 

மற்றும், குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் சிறி லங்கா கல்வி முறையையும் மாற்றவேண்டும்.  பல மாணவர்கள் தற்கொலை செய்வதை எமது சமுதாயம் பெரிது படுத்துவதில்லை.

அதே நேரம் எல்லோரும் படித்து ஆறடி பெட்டிக்குள் இருக்க ஆசை படுவதால் மற்றைய தொழில் துறைகளில் ஆள் பற்றாக்குறை. 

We need more Tamil skilled labours and respect for all types of jobs. Local economy won't take off without skilled labours.

Are you partnering with any American colleges for school adoption programs?

Link to comment
Share on other sites

உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட உதவிகள் போய் சேரவில்லை ,,, பாதிக்கப்பட்டதாக கொடுக்கப்படும் பல தரவுகளில் சந்தேகங்கள் ... இவைகளுக்கு மேலாக பல உதவி கோரும் அமைப்புக்கள் ... அவைகளுக்குள் எந்த வித தொடர்புகளும் இல்லை ... ஒரு அமைப்பு மூலம் உதவி பெற்றவர்கள், அடுத்த அமைப்புகளின் மூலமும் பெற வாய்ப்புகள்/பெற்றும் உள்ளனர்! ..

மூலத்தின் ஆரம்பத்தில் இந்த பிரச்சனைகளை நீண்டகால அடிப்படையில் கவனிக்கப்போவதாகத்தானே கூறியிருக்கிறார்கள் நெல்லையான்.

சர்வதேசநாடுகளிலிருந்து அகதிகளுக்காக இலங்கை அரசிடம் அனுப்பிவைக்கப்படும் உதவிகள், தேவையானோர் பலருக்கு சில தடவைகள் செல்லத்தவறுவதைக் கண்டு நாம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறோம். இதில் எதையாவாது நாம் நிவிர்த்தி செய்ய முடியாதா என நம்மில் பலரும் ஆதங்கப்பட்டதுண்டு. இந்த ஏக்கங்களின் பலனாக, நாம், நலிந்த அகதிகளுக்குள் நலிந்த சமூகமான, விதவைகளுக்கும், அனாதைச் சிறார்களுக்கும் உதவுமுகமாக, “காயப்பட்ட விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் புது சந்தர்ப்பம்” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறநிலையமாக பதிவுசெய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருகின்றது. முழுமையாக இந்த நிலையம் செயல்ப்படத்தொடங்கியவுடன், புனர்வாழ்வுத் திட்டங்களில் முதல் சுற்றில் தவறவிடப்பட்டோர்களை தேடி அவர்களுக்கு உதவிகளை கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கை இதனால் நமக்கு ஏற்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

இன்றும் ... லண்டனில் இருந்து கடந்த பல வருடங்களாக தாயக மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் ஓர் முக்கிய ஆலய நிர்வாகமான ஈலிங் கனக துர்க்கை அம்மன் நிர்வாகத்திடம் இக்கேள்வியை கேட்டேன்!!! .. பதில் வந்தது ... இன்றுவரை புலத்தில் இருந்து உதவி வழங்கும் அமைப்புகளுக்குக்குள் இது தொடர்பாக எந்த தொடர்பாடல்களும் இல்லை என்று!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த நெல்லையான், நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் இதிலே எங்களுக்குப் புரிந்த வகையில் தான் நாம் தொழிற்படமுடியும்.

இது தான் எமது வேலைத்திட்டம்: எமது விண்ணப்பப் படிவத்திலேயே எம்மிடம் உதவி கோருவோர் வேறெங்கெங்கு உதவி பெறுகிறார்கள் என்று விளக்கம் கோருவது வழக்கம். உண்மையிலயே அவ்வாறு பெறப்படும் உதவிகள் வாழ்க்கை ஆட்டம் காணாமற் தடுக்கபோதாது என்ற நிலையில் எம்மிடம் மேலதிக உதவி கோரினால் அதனைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது எமது வழக்கமல்ல.

எமது விண்ணப்பங்கள் நேரடியாக எமக்கு வருபவையல்ல. ஒன்றில் மதகுருமாருக்கூடாக அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கூடாக மட்டுமே எம்முடன் தொடர்பு கொள்ள முடியும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அவர்கள் அவதானித்துள்ள எல்லைநிலை விண்ணப்பதாரிகளிடம், எங்களைப்பற்றி அறிமுகம் செய்துவைத்து, எம்மிடம் உதவி கோரச் சொல்லி அறிவுறுத்தி விண்ணப்பங்களைச் சேர்த்து அனுப்பிவைக்கிறார்கள். தேவையற்ற வீண் விரயங்களைத் தடுப்பதற்கான எமது பாதுகாப்புக்கவசமானது மண்ணுடனான பாசத்தொடர்புகள் அறுக்கப்பட முடியாத இந்த ஆலோசகர்களுக்கும் எமக்கும் இடையிலான நன்னம்பிக்கைத் தொடர்புகள் தான்! இவை எமக்குப்போதுமானவை என்பது எமது கருத்து,

மண்ணிலேயே கண்டறியப்பட வேண்டியவையான இந்தத் தவறான வகையிலமைந்த உதவி இரட்டிப்புக்கள் ஒருபோதும் புலத்துக்கப்பால் இயங்கும் அறக்கட்டளை அமைப்புக்களிடையேயான தகவல் பரிமாறல்கள் மூலம் சரிசெய்யப்படப்போவதில்லை. அந்த முயற்சியானது இரட்டிப்பு உதவி மூலம்அங்கே விரயம் செய்யப்படும் பணத்தைவிடப் பலமடங்கான தொகையை இங்கே வேவு பார்ப்பதில் செலவிடத்தூண்டும். அன்றியும் அறக்கட்டளைகளுக்கிடையேயான இந்தவிதமான செய்திப்பரிமாறல்கள் தனிமனித கவுரவத்தையும், நாட்டுச் சட்டங்களையும் நாடுகளுக்கிடயிலான சட்டங்களையும் மீறுவதாகக் கூட அமையலாம். இதனைத் தான் சொல்வார்கள் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையென்று!

நாம் இங்கே மறக்க விரும்பாத விடயம் ஒன்று உண்டென்றால் அது இது தான்: மே 19க்கு முன்னாலேயே வன்னியில் தெருவில் கையேந்திநின்று கதறிய கவுரவமான குடும்பப்பெண்களின் வீடியோ காட்சி ஒன்றை சாமியார் ஒருவர் செல்வி ஜெயலலிதாவுக்குக் காண்பித்து "இன்றும் கூடவழிப்போக்கர்களுக்கு விருந்தளித்துக் களை தீர்க்கும் பாரம்பரியம் அகலாத வன்னிப்பெண்கள் தான் இவ்வாறு கதறுகிறார்கள்" என்று விளக்கமளித்தபோது அம்மையாரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியதாக அந்தச் சாமியார் பிற்பாடு கூறியிருந்தார். போரென்று ஒன்று வந்தால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று எம்மைப்பற்றி வெறும் புள்ளிவிவரமாகக் கருதிய செல்வி ஜெயலலிதாவுக்கே இந்தக்கதியென்றால் எமது இதயம் அதைவிடக் கொஞ்சம் வேகமாகத்தான் அடித்துக்கொள்ளவேண்டும், இல்லையா?. அந்தமக்கள் இன்றைய பொழுது இருவேறு வீடுகளில் இரந்து சாப்பிட்டார்களா என்று எல்லாம் நாம் வேவு பார்க்கப்போவதில்லை. அது எமக்கும் இழுக்கு, அவர்களுக்கும் இழுக்கு. எண்ணிப்பார்க்க முடியாத அந்தக்கொடிய இடர்களுக்கிடயில் இருந்து ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வெளியே வந்தவர்கள் தாம் அவர்கள். இப்போது ஒருவருடைய உணவை மற்றவர் பறித்துச் சாப்பிடும் எண்ணம் அவர்களுக்கு வருமா, என்ன? அவர்களுக்குப் புதிதாகப் பாடம் எதுவும் புகட்டும் எண்ணப்பாடு எதுவும் எமக்கில்லை.

போக்கிரிகள் இங்கேயும் இருப்பார்கள். அங்கேயும் ஓரிருவர் இருப்பார்கள். அது தான் யதார்த்தம்.

இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கே உங்களுக்குச் சொல்லலாம்: அமெரிக்கப்பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி தந்த அனைத்துலக அரசு சாரா அமைப்பொன்றின் பிரதிநிதி ஹைத்தியில் உதவி விநியோகத்டுடன் வன்னி உதவி விநியோகத்தை ஒப்பிட்டு வன்னியில்மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து தங்களுக்கான உதவிகளை தாமே விநியோகிக்க உதவுவதால், வாகனச் செலவு, எரிபொருட்செலவு, காவு கூலி, பாதுகாப்புச் செலவு எல்லாம் மிகமிகக் குறைவு, விநியோக வினைத்திறன் மிக மிக அதிகம். ஹைத்தியின் செலவினம் இதற்கு நேர்மாறு. அங்குஉதவிகள் வழங்குவதற்கான செலவினம் உதவித் தொகையை விட அதிகம் என்று தெளிவாகக் கூறியிருந்தார். இவ்வளவு கொடுமையிலும் கூட கை நீட்டிப் பிச்சை வாங்காது கைகுலுக்கி உதவி வாங்கும் எமது மக்களைப்பற்றி பெருமைப்பட்டு அவர்களுக்கு உதவ முடிந்தமை பற்றி நாமும் பெருமைப்படுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த நெல்லையான், நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் இதிலே எங்களுக்குப் புரிந்த வகையில் தான் நாம் தொழிற்படமுடியும்.

இது தான் எமது வேலைத்திட்டம்: எமது விண்ணப்பப் படிவத்திலேயே எம்மிடம் உதவி கோருவோர் வேறெங்கெங்கு உதவி பெறுகிறார்கள் என்று விளக்கம் கோருவது வழக்கம். உண்மையிலயே அவ்வாறு பெறப்படும் உதவிகள் வாழ்க்கை ஆட்டம் காணாமற் தடுக்கபோதாது என்ற நிலையில் எம்மிடம் மேலதிக உதவி கோரினால் அதனைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது எமது வழக்கமல்ல.

எமது விண்ணப்பங்கள் நேரடியாக எமக்கு வருபவையல்ல. ஒன்றில் மதகுருமாருக்கூடாக அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கூடாக மட்டுமே எம்முடன் தொடர்பு கொள்ள முடியும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அவர்கள் அவதானித்துள்ள எல்லைநிலை விண்ணப்பதாரிகளிடம், எங்களைப்பற்றி அறிமுகம் செய்துவைத்து, எம்மிடம் உதவி கோரச் சொல்லி அறிவுறுத்தி விண்ணப்பங்களைச் சேர்த்து அனுப்பிவைக்கிறார்கள். தேவையற்ற வீண் விரயங்களைத் தடுப்பதற்கான எமது பாதுகாப்புக்கவசமானது மண்ணுடனான பாசத்தொடர்புகள் அறுக்கப்பட முடியாத இந்த ஆலோசகர்களுக்கும் எமக்கும் இடையிலான நன்னம்பிக்கைத் தொடர்புகள் தான்! இவை எமக்குப்போதுமானவை என்பது எமது கருத்து,

மண்ணிலேயே கண்டறியப்பட வேண்டியவையான இந்தத் தவறான வகையிலமைந்த உதவி இரட்டிப்புக்கள் ஒருபோதும் புலத்துக்கப்பால் இயங்கும் அறக்கட்டளை அமைப்புக்களிடையேயான தகவல் பரிமாறல்கள் மூலம் சரிசெய்யப்படப்போவதில்லை. அந்த முயற்சியானது இரட்டிப்பு உதவி மூலம்அங்கே விரயம் செய்யப்படும் பணத்தைவிடப் பலமடங்கான தொகையை இங்கே வேவு பார்ப்பதில் செலவிடத்தூண்டும். அன்றியும் அறக்கட்டளைகளுக்கிடையேயான இந்தவிதமான செய்திப்பரிமாறல்கள் தனிமனித கவுரவத்தையும், நாட்டுச் சட்டங்களையும் நாடுகளுக்கிடயிலான சட்டங்களையும் மீறுவதாகக் கூட அமையலாம். இதனைத் தான் சொல்வார்கள் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையென்று!

நாம் இங்கே மறக்க விரும்பாத விடயம் ஒன்று உண்டென்றால் அது இது தான்: மே 19க்கு முன்னாலேயே வன்னியில் தெருவில் கையேந்திநின்று கதறிய கவுரவமான குடும்பப்பெண்களின் வீடியோ காட்சி ஒன்றை சாமியார் ஒருவர் செல்வி ஜெயலலிதாவுக்குக் காண்பித்து "இன்றும் கூடவழிப்போக்கர்களுக்கு விருந்தளித்துக் களை தீர்க்கும் பாரம்பரியம் அகலாத வன்னிப்பெண்கள் தான் இவ்வாறு கதறுகிறார்கள்" என்று விளக்கமளித்தபோது அம்மையாரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியதாக அந்தச் சாமியார் பிற்பாடு கூறியிருந்தார். போரென்று ஒன்று வந்தால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று எம்மைப்பற்றி வெறும் புள்ளிவிவரமாகக் கருதிய செல்வி ஜெயலலிதாவுக்கே இந்தக்கதியென்றால் எமது இதயம் அதைவிடக் கொஞ்சம் வேகமாகத்தான் அடித்துக்கொள்ளவேண்டும், இல்லையா?. அந்தமக்கள் இன்றைய பொழுது இருவேறு வீடுகளில் இரந்து சாப்பிட்டார்களா என்று எல்லாம் நாம் வேவு பார்க்கப்போவதில்லை. அது எமக்கும் இழுக்கு, அவர்களுக்கும் இழுக்கு. எண்ணிப்பார்க்க முடியாத அந்தக்கொடிய இடர்களுக்கிடயில் இருந்து ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வெளியே வந்தவர்கள் தாம் அவர்கள். இப்போது ஒருவருடைய உணவை மற்றவர் பறித்துச் சாப்பிடும் எண்ணம் அவர்களுக்கு வருமா, என்ன? அவர்களுக்குப் புதிதாகப் பாடம் எதுவும் புகட்டும் எண்ணப்பாடு எதுவும் எமக்கில்லை.

போக்கிரிகள் இங்கேயும் இருப்பார்கள். அங்கேயும் ஓரிருவர் இருப்பார்கள். அது தான் யதார்த்தம்.

இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கே உங்களுக்குச் சொல்லலாம்: அமெரிக்கப்பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி தந்த அனைத்துலக அரசு சாரா அமைப்பொன்றின் பிரதிநிதி ஹைத்தியில் உதவி விநியோகத்டுடன் வன்னி உதவி விநியோகத்தை ஒப்பிட்டு வன்னியில்மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து தங்களுக்கான உதவிகளை தாமே விநியோகிக்க உதவுவதால், வாகனச் செலவு, எரிபொருட்செலவு, காவு கூலி, பாதுகாப்புச் செலவு எல்லாம் மிகமிகக் குறைவு, விநியோக வினைத்திறன் மிக மிக அதிகம். ஹைத்தியின் செலவினம் இதற்கு நேர்மாறு. அங்குஉதவிகள் வழங்குவதற்கான செலவினம் உதவித் தொகையை விட அதிகம் என்று தெளிவாகக் கூறியிருந்தார். இவ்வளவு கொடுமையிலும் கூட கை நீட்டிப் பிச்சை வாங்காது கைகுலுக்கி உதவி வாங்கும் எமது மக்களைப்பற்றி பெருமைப்பட்டு அவர்களுக்கு உதவ முடிந்தமை பற்றி நாமும் பெருமைப்படுவோம்.

அக்கா, எனது இருபது வருட ஈழ அரசியல் போராட்டத்தில் கண்டுபிடித்தது, எம்மக்களுக்கு உதவுவது மிகவும் கடினம். 

இங்கேயே மலையாள மாந்திரி நாளை கேரளா காடுக்கு செல்கிறார் கையின் படத்தை அனுப்பினால் போதும் என்று திரி தொடங்கியிருந்தால் நூறு ஈருருளிகள் தேறி இருக்கும். 

Link to comment
Share on other sites

நன்றிகள், ... சில தீர்க்கப்பட வேண்டிய பிரட்சனைகளை கூறினேன் உங்களுக்கு, மற்றும்படி உங்கள் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கவல்ல! உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும் ... என் கணக்கிலும் ஒரு சைக்கிளை சேருங்கள் .. தொடர்பு கொள்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள், ... சில தீர்க்கப்பட வேண்டிய பிரட்சனைகளை கூறினேன் உங்களுக்கு, மற்றும்படி உங்கள் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கவல்ல! உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும் ... என் கணக்கிலும் ஒரு சைக்கிளை சேருங்கள் .. தொடர்பு கொள்கிறேன்!

நெல்லையர்,  நான் கேட்க இருந்த கேள்விகள் பல கேட்டு உதவியதற்கு நன்றி.  தீர விசாரித்து குடுப்பது தான் சரி. 

மற்றும், சைக்கிள் உதவிக்கும் நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மீண்டும் கூறிகொள்ள விரும்புவது "தந்த பணத்துக்கு என்னாச்சு" என்று கேட்கும் உரிமை உங்களுக்குண்டு. அப்படிக் கேளாத வரையில் நீங்களும் தான் கடமை தவறுபவர்கள் ஆகிறீர்கள். உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. இன்னும் 12 மிதிவண்டிக்கான கொடையாளிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். உதவி செய்ய விரும்புபவர்கள் தயவு செய்து என்னுடன் தொடர்பு கொள்ளவும்.

சுபா சுந்தரலிங்கம்

s.suba@tgte.org

nowwow-us.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் 6 மிதிவண்டிகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. விரைவில் இந்தத் திட்டம் உங்கள் ஆசியுடன் பூர்த்தியடையும் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிதிவண்டி வழங்குவதற்கு உதவி செய்த அனைவருக்கும் NOWWOW என்ற அமைப்பின் சார்பில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மேலதிக விபரங்களுக்கு,

http://tamilwin.com/show-RUmqyGTZOWis3.html

அத்துடன் எமது சேவை முடிந்து விடவில்லை.

அடுத்தபடியாக கடந்த 2009 ம் ஆண்டு யுத்த சூழலினால் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடியேறியுள்ள மிகவும் வறிய குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மிகவும் கஷ்டப்பிரதேசமான வாகரை, கிரான், வாழைச்சேனை, செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களிலுள்ள 3300 வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு சுமார் 10,000.00 USD உடனடியாகத் தேவைப்படுகிறது. மேலதிக விபரம் தேவைப்படின் அதனை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம். இப்பண உதவியை நீங்கள் வங்கிக் காசோலை மூலமாகவோ அல்லது பின்வரும் இணையதளத்தினுடாகவோ அனுப்பலாம்.

http://nowwow-us.org/

பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளுக்கு கைகொடுப்போம்.

தாழ்மையுடன் உங்கள் மக்கள் பிரதிநிதி,

சுபா சுந்தரலிங்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே அந்த மக்களுக்கு

சேவை செய்பவர்கள் போற்றுதலுக்கு

உரியவர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.