Jump to content

ரஸ்யா ஏவிய ஏவுகணையால் தடம் மாற்றிய ஏர்பிரான்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

சீனா, சங்காயிலிருந்து நேற்று பிரான்சு தலைநகர் பரிஸ் நோக்கி வந்து கொண்டிருந்த AirFrance (A380 AIRBUS) விமானம் அவசரமாக ஜேர்மனியின் ஹம்பேர்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 

ரஸ்யா ஏவிய Soyouz ஏவுகணையால் முதலில் இவ்விமானம் தடம் மாற்றப்பட்டது. அதன் காரணமாக தரையிறங்கும் போது பொதுவிதிகளிற்குட்பட்ட அளவு எரிபொருள் விமானத்தில் இல்லாமையினால் அவசரமாக அது ஹம்பேர்க் விமான நிலையத்தில்  தரையிறக்கப்பட்டதாக  Air France - KLM  நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

பரிஸ் நோக்கி வந்து கொண்டிருந்த இந்த விமானத்தின் பறப்புத் தடத்தில் கஸகஸ்தானிற்கும் கிர்கிஸ்தானிற்கும் இடைப்பட்ட வான்பறப்புப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டதால் எதிர்பார்த்ததை விட நீண்டதூரம் இவ்விமானம் பறப்பில் ஈடுபட வேண்டியிருந்துள்ளது. இதனால் எரிபொருள் பரிஸ் வரையும் பறப்பதற்குப் போதுமாக இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளிற்கு அளவான எரிபொருள் இல்லாமையினால் அந்த எரிபொருளை நிரப்புவதற்காகவே இவ்விமானம் ஹம்பேர்க்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானப்பறப்பின் பொது விதியில் தரையிறங்கவேண்டிய விமான நிலையத்திற்கு விமானம் வரும்போது அது மேலும் 30 நிமிடங்கள் பறப்பில் இருக்கக் கூடிய அளவு எரிபொருள் அந்த விமானத்தில் இருக்க வேண்டும். இந்த A380 இனைத் தரையிறக்குவதற்கு ஹம்பேர்க் விமானநிலையம் பொருத்தமான பெரிய ஓடுபாதையைக் கொண்டது. இதனாலேயே விமானி ஹம்பேர்க்கில் இவ்விமானத்தைத் தறையிறக்கினார். இந்த விமானம் மூன்று மணிநேரத் தாமதத்துடள் பரிஸ் வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

 

http://www.sankathi24.com/news/39844/64//d,fullart.aspx

Link to comment
Share on other sites

ரைசியாவிட்கு காலம் சரி இல்லை தொடர்ந்து சனியனை விலைக்கு வாங்குகிறார்கள் . பழைய கறல் பிடித்த ஏவுகணையை  வைச்சுக் கொண்டு சும்மா இருக்க மாட்டங்க .

Link to comment
Share on other sites

soyuz ஏவுகணை இல்லை...இரண்டாவது..அவர்கள் வான் வெளியை பாவிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தலும் கொடுத்துள்ளார்கள்....

 

2-3 நாட்களுக்கு முன் இந்தியாவும் இதையே செய்தது....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.