Jump to content

கறுப்புப்பெட்டியை கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆகலாம்! – நிபுணர்கள் தெரிவிப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்புப்பெட்டியை கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆகலாம்! – நிபுணர்கள் தெரிவிப்பு. 

[Wednesday, 2014-03-26 18:41:52]
search-260314-150.jpg

இடைநிறுத்தப்பட்டிருந்த மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இன்று கால நிலை சற்று மேம்பட்டிருந்ததை அடுத்து, மீண்டும் தொடங்கியிருக்கிறது. அவுஸ்திரேலியாவால் ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த முயற்சியில் இப்போது பல நாடுகளைச் சேர்ந்த 12 விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன என்று அவுஸ்திரேலியக் கடல்சார் பாதுகாப்பு அமைப்பான, அம்சா, தெரிவிக்கிறது. "நம்மிடம் இருக்கும் அனைத்து திறனையும்" இந்தத் தேடல் வேட்டையில் பயன்படுத்துவோம் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியிருக்கிறார்.

  

இந்தத் தேடுதல் முயற்சி, அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குத் தென்மேற்கே இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுமார் 1,500 மைல் பரப்பளவுள்ள பகுதியில் மையம் கொண்டிருக்கிறது. இந்த முயற்சியில் இப்போது அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இப்போது ஈடுபட்டிருக்கின்றன.இந்த விமானங்களில் ஏழு ராணுவ விமானங்கள், ஐந்து சிவிலியன் விமானங்களாகும்.இது தவிர அவுஸ்திரேலியப் போர்க்கப்பலான , எச்.எம்.ஏ.எஸ்.சக்சஸ் என்ற கப்பலும்,சில சீனக் கப்பல்களும் இந்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், கால நிலை அடுத்த 36 மணி நேரத்தில் இன்னும் மோசமடையலாம் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறியிருக்கின்றனர்.

இதனிடையே, விமானத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, விமானம் அல்லது அதன் கறுப்புப் பெட்டி போன்ற பாகங்கள் கண்டுபிடிக்கப்பட மேலும் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியப் பெருங்கடலின் இந்த குறிப்பிட்ட தென்பகுதியின் அடி நிலத்தின் தன்மை பற்றி அதிகத் தரவுகள் இல்லை என்று பிரிட்டனின் ரெடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெருங்கடலியல் துறைப்பேராசிரியர் டேவிட் பெரெய்ரா கூறினார்.

"நமக்கு நிலவின் மேற்பரப்பைப் பற்றித் தெரிந்திருப்பதைவிட, குறைவான அளவே இந்த இந்தியப் பெருங்கடல் பகுதியின் ஆழ்நிலப் பரப்பின் தன்மையைப் பற்றித் தெரிந்திருக்கிறது" என்றார் அவர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=106517&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

கறுப்புப்பெட்டியை கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆகலாம்! – நிபுணர்கள் தெரிவிப்பு.

[Wednesday, 2014-03-26 18:41:52]
search-260314-150.jpg

இடைநிறுத்தப்பட்டிருந்த மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இன்று கால நிலை சற்று மேம்பட்டிருந்ததை அடுத்து, மீண்டும் தொடங்கியிருக்கிறது. அவுஸ்திரேலியாவால் ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த முயற்சியில் இப்போது பல நாடுகளைச் சேர்ந்த 12 விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன என்று அவுஸ்திரேலியக் கடல்சார் பாதுகாப்பு அமைப்பான, அம்சா, தெரிவிக்கிறது. "நம்மிடம் இருக்கும் அனைத்து திறனையும்" இந்தத் தேடல் வேட்டையில் பயன்படுத்துவோம் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியிருக்கிறார்.

  

இந்தத் தேடுதல் முயற்சி, அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குத் தென்மேற்கே இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுமார் 1,500 மைல் பரப்பளவுள்ள பகுதியில் மையம் கொண்டிருக்கிறது. இந்த முயற்சியில் இப்போது அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இப்போது ஈடுபட்டிருக்கின்றன.இந்த விமானங்களில் ஏழு ராணுவ விமானங்கள், ஐந்து சிவிலியன் விமானங்களாகும்.இது தவிர அவுஸ்திரேலியப் போர்க்கப்பலான , எச்.எம்.ஏ.எஸ்.சக்சஸ் என்ற கப்பலும்,சில சீனக் கப்பல்களும் இந்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், கால நிலை அடுத்த 36 மணி நேரத்தில் இன்னும் மோசமடையலாம் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறியிருக்கின்றனர்.

இதனிடையே, விமானத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, விமானம் அல்லது அதன் கறுப்புப் பெட்டி போன்ற பாகங்கள் கண்டுபிடிக்கப்பட மேலும் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியப் பெருங்கடலின் இந்த குறிப்பிட்ட தென்பகுதியின் அடி நிலத்தின் தன்மை பற்றி அதிகத் தரவுகள் இல்லை என்று பிரிட்டனின் ரெடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெருங்கடலியல் துறைப்பேராசிரியர் டேவிட் பெரெய்ரா கூறினார்.

"நமக்கு நிலவின் மேற்பரப்பைப் பற்றித் தெரிந்திருப்பதைவிட, குறைவான அளவே இந்த இந்தியப் பெருங்கடல் பகுதியின் ஆழ்நிலப் பரப்பின் தன்மையைப் பற்றித் தெரிந்திருக்கிறது" என்றார் அவர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=106517&category=WorldNews&language=tamil

 

 

இந்த செய்தி எதிர்பார்த்ததுதானே.....ஒரு மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்தால் தானே என்ன உண்மையாக நடந்தது என்று தெரியாமல் இருக்கும். இப்ப கண்டுபிடித்தாலும் ஒழித்துவைக்கமாட்டார்களா என்ன? :)   எல்லாம் ஒரு ராஜதந்திரம் தான் :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நமக்கு நிலவின் மேற்பரப்பைப் பற்றித் தெரிந்திருப்பதைவிட, குறைவான அளவே இந்த இந்தியப் பெருங்கடல் பகுதியின் ஆழ்நிலப் பரப்பின் தன்மையைப் பற்றித் தெரிந்திருக்கிறது" :mellow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.