Jump to content

மலேசிய விமானம் நடுவானில் தீப்பிடித்தது! – உடனடியாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் அனர்த்தம் தவிர்ப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய விமானம் நடுவானில் தீப்பிடித்தது! – உடனடியாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் அனர்த்தம் தவிர்ப்பு. 

[Wednesday, 2014-03-26 18:33:56]
plane-fire-260314-150.jpg

மலேசிய விமான நிறுவனத்தின் உள்நாட்டு போக்குவரத்து விமானம் ஒன்று நடுவானில் இன்று தீப்பிடித்ததையடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது. மலிந்தோ ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை கோலாலம்பூர் அருகே உள்ள சுபாங் விமான நிலையத்தில் இருந்து டெரங்கானு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஒரு என்ஜினில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பைலட், விமானத்தை உடனடியாக திருப்பினார். பின்னர் சுபாங் விமான நிலையத்திடம் அனுமதி பெற்று பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார்.

  

இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர். அவர்கள் அனைவரும் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. என்ஜின் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் 18 நாட்களாகியும் அதன் பாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இன்று மற்றொரு விமானம் விபத்தில் இருந்து தப்பியிருக்கிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=106515&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

மலேசியன் விமான நிறுவனத்துக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டார்கள்..  :rolleyes:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியன் விமான நிறுவனத்துக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டார்கள்..  :rolleyes:  :D

 

 

கடைசியாக

கவுண்டமணி  செந்திலின் வாழைப்பழ  பகிடி மாதிரி

இது தான் அது

அது தான் இது என்று முடிக்கப்போகிறார்கள் போலும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ பில்லி சூனியம் வைச்சு போட்டார்கள்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கண்ட ராசாவோட சம்பந்தம் வச்சா, ஆதரவு தந்தால், தரித்திரம் தான்.

Link to comment
Share on other sites

உங்கள் வசந்தகால விடுமுறையை ஆனந்தமாக கழிக்க மலேசியா சிங்கப்பூர் ,சீனா போன்ற நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் விமான பற்றுசீட்டுக்கள் செய்து தரப்படும் ..... :D  :D  :D
 
தொடர்புகளுக்கு .....@@@@@@@@@@@@@@@@@
 
 
 
 
Hote%20Antique%20Roman%20Palace.jpg
Link to comment
Share on other sites

 

உங்கள் வசந்தகால விடுமுறையை ஆனந்தமாக கழிக்க மலேசியா சிங்கப்பூர் ,சீனா போன்ற நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் விமான பற்றுசீட்டுக்கள் செய்து தரப்படும் ..... :D  :D  :D
 
தொடர்புகளுக்கு .....@@@@@@@@@@@@@@@@@
 
 
 
 
Hote%20Antique%20Roman%20Palace.jpg

 

 

மலேசியன் விமானத்திலா??? ஆஆஆ பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கோ TS அண்ணா :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கோ TS அண்ணா :lol::icon_idea:

 

 

என்ர  பொடி

படிப்பு முடிய  முதல் வருட வேலையில் மலேசியா  காட்டுறன் என்றான்

வேலை தொடங்கிட்டான்

மலேசியா கைவிட்டு விட்டது... :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.