Jump to content

விமானம் மாயமாவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் மனைவியுடன் ...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் மாயமாவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் மனைவியுடன் Zaharie Ahmad Shah, என்ன பேசினார் ?
 

மாயமான மலேசிய விமானம் காணாமல் போவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அந்த விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்த பைலட் தன்னுடைய மனைவிக்கு ஒரு நிமிட போன் கால் ஒன்றை பேசியுள்ளார் என்பதை தற்போது மலேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மலேசிய விமானத்தை ஓட்டிய பைலட் Zaharie Ahmad Shah, விமானம் மறைவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு தன்னுடைய மனைவியுடன் ஒரே ஒரு நிமிடம் மட்டும் செல்போனில் பேசியுள்ளார்.

 
மலேசிய புலனாய்வு அதிகாரிகள், அந்த அழைப்பு வந்த செல்போன் குறித்த தகவல்களை ஆராய்ந்த போது, அந்த அழைப்பு Pay-as-you-go என்ற சிம் நிறுவனத்தின் சிம்கார்டு போலியான பெயர் மற்றும் முகவரி கொடுத்து வாங்கப்பட்டதாக தெரிகிறது.உண்மையை மறைத்து சிம் வாங்க வேண்டிய தேவை குறித்தும் தீவிரவாதிகளுடன் தொடர்புகளை பேணினாரா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக மலேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானியிடம் இருந்து அழைப்பு வந்தவுடன் அவரது மனைவி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் மலேசியாவை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. தற்போது அவர் தனது குழந்தைகளுடன் தலைமறைவாக இருக்கின்றார்.

 

 

விமானி தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தற்போது முதன்முதலாக கைப்பற்றியுள்ளது. இந்த புகைப்படத்தை வைத்து விமானியின் மனைவியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் கூடியவிரைவில் பிடிபடுவார் என மலேசிய புலனாய்வு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

 

 

நன்றி ...செய்தி

Link to comment
Share on other sites

ஒரு இழவும் விளங்கவில்லை  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

விமானியிடம் இருந்து அழைப்பு வந்தவுடன் அவரது மனைவி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் மலேசியாவை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. தற்போது அவர் தனது குழந்தைகளுடன் தலைமறைவாக இருக்கின்றார்.

-----

 

ஒரு மணித்தியால அவகாசத்தில்... ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன், தலைமறைவாக நாட்டை விட்டு  வெளியேற முடியுமா?

Link to comment
Share on other sites

புனைந்து எழுதிய புளுடா செய்தி. நாசமாப்போன தமிழ் ஊததகங்கள்

 
1. விமானம் புறப்பட முன்னர் இனம் தெரியாத ஒரு பெண் விமானியுடன் 2 நிமிடம் போலி அடையாளதில் வேண்டிய சிம் கார்ட் போனில் கதைத்துள்ளார். அந்த் பெண் ஆர் என்ற தேடுதல் தொடர்கிறது.
 

The captain of missing Malaysia Airlines flight MH370 received a two-minute call shortly before take-off from a mystery woman using a mobile phone number obtained under a false identity.

It was one of the last calls made to or from the mobile of Captain Zaharie Ahmad Shah in the hours before his Boeing 777 left Kuala Lumpur 16 days ago.

 

2. இந்த சிம் மிக அண்மையில் வாங்கப்பட்டது. உண்மையான அடையலாம் இன்றி பொய் தகவகள் கொடுத்து பெறப்பட்த ஒன்று.  
Investigators are treating it as potentially significant because anyone buying a pay-as-you-go SIM card in Malaysia has to fill out a form giving their identity card or passport number. They found that it had been bought ‘very recently’ by someone who gave a woman’s name – but was using a false identity.
 
3. விமானியுடன் தொலைபேசியல் கதைத்த மற்றயவர்களை புலனாய்வு துறை விசாரித்துவிட்‌டது.
Everyone else who spoke to the pilot on his phone in the hours before the flight took off has already been interviewed.
 
இது தான் இந்த தொலைபேசி அழைப்பு பற்றிய செய்தி. ஆனால் நமது ஊடகங்கள் எட்கனவே அவரது குடும்பம் பற்றி வந்த செய்திகளை இந்த செய்தியுடன் புனைந்து எங்களை முட்டாள்கள் ஆக்க பாடுபடுகிறார்கள். 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.