Jump to content

சீன யுத்தக் கப்பல்கள் இந்தியாவிற்குள் நுழைய தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

538343efa7a9c3d15c04fabcada6871a.jpg

காணாமல் போன மலேசிய வானூர்தியை தேடும் பணிக்காக சீன கடற்படைக்கு இந்திய கடற்பிராந்தியத்தில் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் சீன கடற்படையின் 4 கப்பல்களும் விடுத்த கோரிக்கையயை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது

இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


இதேவேளை, காணாமல் போன மலேசியா விமனத்தின் பாகங்கள் என்று கருதப்படும் பொருட்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
ஐந்து இராணுவ விமானங்களிலும் ஒரு சிவில் விமானமும் இந்த தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
239 பேருடன் கடந்த 8ம் திகதி இந்த விமானம் காணாமல் போனது. இதனை இந்து சமுத்திரத்தின் பல பகுதிகளில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில் செய்மதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், குறித்த விமானத்தின் பாகங்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பொருட்கள் அவதானிக்கப்பட்டன.
 
அவற்றில் ஒன்று அண்ணளவாக 24 மீற்றர் நீளமுடையது என்றும், மற்றையது அதனை விட சிறியது என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில் அவற்றை தேடும் பணிகள் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கின்றன.
 
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து சுமார் 1500 கடல் மைல்களுக்கு அப்பால் இந்த பொருட்கள் அவதானிக்கப்பட்டன.

 

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=762112767021353175

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா... அத்துமீறி நுழைந்தால், இந்தியா என்ன செய்ய உத்தேசம்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய  பகிடி

அனுமதி கேட்டுத்தான் சீனா வருமாம்............

இனி  வருவதற்கு எந்த இடம்  பாக்கியிருக்கு..........???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா... அத்துமீறி நுழைந்தால், இந்தியா என்ன செய்ய உத்தேசம்? :icon_mrgreen:

வந்தால் .... வந்தால் வடிவேல் காமடி போலதான்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ஒரு விமானத்தை உலகமே சேர்ந்து தேட வெளிக்கிட்டுது?????? விஞ்ஞானத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் பெரிய அவமானம்.

Link to comment
Share on other sites

என்னப்பா ஒரு விமானத்தை உலகமே சேர்ந்து தேட வெளிக்கிட்டுது?????? விஞ்ஞானத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் பெரிய அவமானம்.

பெரிசா சீனாவில் பத்த வைக்க இந்த செய்தி உதவும். யாராவது இசுலாமியர் வீது பழி விழலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.