Jump to content

சென்னை ஐ.நா யுனிசெவ் அலுவலகத்தை தமிழ் மாணவர்கள் முற்றுகை உள்ளே நுழைந்த மாணவர்கள் கைது :


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Tamil%20Nadu1_CI.jpg

சென்னை அடையாரில் உள்ள ஐ.நாவின் யுனிசெவ் அலுவலகத்தை  தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞரகள் கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

இன்று (13.02.14) 11.30 மணி அளவில் திடீரென முற்றுகையிட்ட அவர்கள் பின்னர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்து அங்கு இருந்த ஐ.நா அவையின் கொடிகளையும், அமெரிக்க கொடியையும் அகற்றினர். யாரும் எதிர்பாராத வகையில் உள்நுழைந்த மாணவர்கள்  உள்பக்கமாக அனைத்து கதவுகளுக்கும் பூட்டு போட்டனர்...

ஐநா அலுவலகத்தின் உள்ளே நுழைந்த மாணவர்கள் அங்கு காலவரையற்ற உண்ணாவிரதத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இலங்கைக்கு ஆதரவான ஐ.நா வின் தீர்மானத்தை எதிர்த்தும், பொது வாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை கோரியும் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தை ஐ.நா அலுவலகத்தின் உள்ளே ஆரம்பித்தனர்.. எனினும் சிறிது நேரத்தில் மாணவர்களை கைது செய்த சென்னை காவல் துறையினர் பெசன் நகர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர் என சென்னையில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104222/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.