Jump to content

கரிக்காய் பொரித்தேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லோருக்கும்..

இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள்.

“கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன்

ரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்

கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.....

என்னடா ஆரம்பமே இப்படி....... :lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் இதுதான்

"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கம்உள்ள

அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்

உப்புக் காண் சீச்சி உமி."

Link to comment
Share on other sites

கரி என்றால் யானை. அதாவது அப்பெண் யானையைப் பொரியல் செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். யானைப் பொரியலா? அது எப்படி என்று யோசிப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதாவது கரி என்றால் யானை; அதேபோல் யானைக்கு அத்தி என்று வேறுஒரு பெயரும் உண்டு. இங்கு அத்திக்காய்ப் பொரியல் என்பதையே கரிக்காய்ப் பொரியல் என்று புலவர் கூறியிருக்கிறார்.

கன்னி என்றால் திருமணம் ஆகாதப் பெண். அப்படியென்றால் பெண்ணையா வறுவல் (தீய்த்தல் என்றால் வாணலியில் இட்டு வறுத்தல் என்று அர்த்தம்) செய்தாள்?. கன்னி என்றால் வாழைக்காய் என்று மற்றும் ஒரு பொருள் உள்ளது. அதாவது வாழைக்காய் வறுவல் என்பதையே கன்னிக்காயைத் தீய்த்தாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியிருக்கிறார்.

பரி என்றால் குதிரை. குதிரையை அப்பெண் பச்சடி செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். உண்மையில் அப்பெண் குதிரையைப் பச்சடி செய்தாளா?. இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை இலாவகமாகக் கையாண்டுள்ளார். பரி என்றால் மா என்று இன்னும் ஒரு பொருள் உண்டு. அதாவது மாங்காய்ப் பச்சடி செய்தாள் என்று கூறுவதற்குப் பதில் பரிக்காய்ப் பச்சடி பண்ணாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியுள்ளார்.

அப்பைக்காய் என்றால் அழகிய கத்தரிக்காய் என்று அர்த்தம். அதாவது கத்தரிக்காய் நெய் துவட்டல் செய்திருந்தாள் என்பதையே அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள்(சமைத்தாள்) என்று புலவர் கூறியிருக்கிறார். எதற்க்காக உருக்கம்உள்ள என்ற வார்த்தையைப் புலவர் பயன்படுத்தியிருக்கிறார் என்றால், கிராமப்புறங்களில் கத்தரிக்காயை நெய்வடியும் (உருக்கமுள்ள) காய் என்று கூறுவார்கள்.

இவ்வாறு அத்தைமகள் சமைத்த உணவில், உப்பு அதிகமாக உள்ளதாகவும் (உப்புகாண் சீச்சி உமி) ஆகவே சீச்சி என்று கூறி உமிழ்ந்ததாகவும் புலவர் பாடலை நகைச்சுவையுடன் முடித்துள்ளார்.

Link to comment
Share on other sites

அதெல்லாம் ஒன்றுமில்லை blue bird... :rolleyes: பொரியல், தீயல், பச்சடி, நெய்துவட்டல் எல்லாம் ஆக்கப்பட்டு இருந்தது, அதை புலவர் சாப்பிடும் நேரத்தில் எதிரே யானை சைசில் அத்தைமகள் உப்போடு வருவதைக் கண்டதும் 'உப்புக்காண் சீச்சி உமி' என்று அலறி அடித்து முடிக்கிறார்... ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரிக்காய் என்று அத்திக்காயை அழைப்பதுண்டு!

கன்னிக்காய் வாழைக்காய் என நினைக்கின்றேன்!

பரிக்காய் என்பதில் நீலமேகத்துடன் உடன்படுகின்றேன்! மாங்காய்!

ஆக நீலமேகம் கூறுவது சரி போல் உள்ளது! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அதை புலவர் சாப்பிடும் நேரத்தில் எதிரே யானை சைசில் அத்தைமகள் உப்போடு வருவதைக் கண்டதும் 'உப்புக்காண் சீச்சி உமி' என்று அலறி அடித்து முடிக்கிறார்... ^_^

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

எப்பிடி எல்லாம் யோசிக்கின்றீர்கள்!! :lol: அந்தப் புலவர் கேள்விப்படால் :icon_mrgreen:

BLUE BIRD இன் விளக்கம் பொருத்தமாக உள்ளது.

Link to comment
Share on other sites

எப்பிடி எல்லாம் யோசிக்கின்றீர்கள்!! :lol: அந்தப் புலவர் கேள்விப்படால் :icon_mrgreen:

BLUE BIRD இன் விளக்கம் பொருத்தமாக உள்ளது.

அலைமகள்! எல்லாம் வெட்டி ஒட்டல் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை வெட்டினாலும் ஒட்டினாலும் பொருள் வந்து சேர்ந்துவிட்டது.

சரி அடுத்த காய் பற்றி தமிழின் விளையாடல் எப்படி இருக்கிறது என்று நயக்கலாம்... அநேகமாக இதற்குப் பொருளை வெட்டி ஒட்டத்தேவையில்லாமல் இருக்கலாம்.....எல்லோருக்கும் பிடித்தமான மிகவும் கவர்ச்சியான பாடல் இது

எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

கேளுங்கோ ரசியுங்கள் எல்லாக் காய்களுக்கான பொருளையும் பதிவிடுங்கள்....

முக்கியமாக இந்தப்பாடலில் எத்தனை காய்கள் இடம்பெற்றிருக்கின்றன அக்காய்கள் எவை இந்தப்பாடலில் அந்தக்காய்களின் பொருளைக்கண்டு பிடியுங்கள்

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ


கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ


இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ


ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ


உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணளவாக நாலு.

:o :o :o

தப்பிலி நான் பாடல் காட்சியில் வரும் ஆட்களை(காய்களை) கேட்கவில்லை :icon_mrgreen:

பாடும் மொழியில் வெளிப்படும் தாவரக்காய்களை கேட்கிறேன் :D

Link to comment
Share on other sites

:o :o :o

தப்பிலி நான் பாடல் காட்சியில் வரும் ஆட்களை(காய்களை) கேட்கவில்லை :icon_mrgreen:

பாடும் மொழியில் வெளிப்படும் தாவரக்காய்களை கேட்கிறேன் :D

தாவரக்காய்கள் மூன்று.

ஏலக்காய், ஜாதிக்காய், வெள்ளரிக்காய் மாத்திரமே.

மற்றைய காய்கள்

அத்திக்காய் - அந்தத் திக்காய்............. என்று பொருள்படுவது போல மற்றைய காய்களையும் வைத்து கவிஞர் வரிகளில் விளையாடியுள்ளார்.

நாலாவது காய்

எனது பார்வையில். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாவரக்காய்கள் மூன்று.

ஏலக்காய், ஜாதிக்காய், வெள்ளரிக்காய் மாத்திரமே.

மற்றைய காய்கள்

அத்திக்காய் - அந்தத் திக்காய்............. என்று பொருள்படுவது போல மற்றைய காய்களையும் வைத்து கவிஞர் வரிகளில் விளையாடியுள்ளார்.

நாலாவது காய்

எனது பார்வையில். :lol:

நாலாவது காயா???? இதில நாலாவது காய் எது தப்பிலி? :unsure:

இந்தப்பாட்டில் உள்ள காயில் ஒன்றா?

"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கம்உள்ள

அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்

உப்புக் காண் சீச்சி உமி." :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

1.அத்தி+ காய்= அத்திக்காய் அதை அந்தத் திக்காய்

2.ஆலங்காய்= ஆல் +காய் ஆலங்காயைப் போன்ற வெண்ணிலவே!

3.இத்திக்காய்= இத்தி+ காய் இந்தத் திசையில் காயாதே(ஒளிதராதே)

4.கன்னிக்காய்= கன்னி பாவை ஆகவே பாவற்காய்(பாவை காய்)பாவற்காய் பாகற்காய் 2 ம் ஓன்று.

5. காதல் கொண்ட பாவைக்காய் மீண்டும் (பாகற்காய்)பாவைக்காய்

6.அங்கே காய் அந்தப் பக்கமாகக் காய்

7.அவரைக்காய் அவரை காய்  என்னுடைய காதலனுக்கு(அவரை என்னுடைய காதலைனை)  ஒளி கொடுத்து காதல் வேதனையைக் கொடு.

8.மங்கை எந்தன் கோவைக்காய் கோவை காய் கோவைக்காய் கோ என்றால் காவலன்,கடவுள்,அரசன்,பசு என்று பொருள்படும். இங்கே எனது காவலனாகிய காதலைனைக் காய் என்று பொருள்படுகிறது.

9.மாதுளங்காய்= மாது+ உளம் +காய் ஆனாலும் என் காதலி என்னை இந்த நேரத்தில் விரும்பா விட்டாலும்(அல்லது அவளுக்கு காதல் கனியவில்லை(இன்னும ; வரவில்லை என்றாலும் என்னுடைய உள்ளம் அவளை வெறுக்காது.(கனி காயாகாது.காய்கனியாகலாம் காதலிக்காதவர் காதலிக்கலாம் ஆனால் காதல் கொண்டவர் காதலை மறக்க முடியாது.)

10. இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய் (காய் என்ற சொல் வரும்படி சாதராண சொற்களை சொல் நயத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

11.உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ ஆள் சிறியவளாக இருந்தாலும் அவள் பருவமடையாத பெண்ணல்ல காதலிக்க தகுதியான பெண்னே!(உருவங்காய் என்று இந்தியாவில் ஏதேனும் காய்களைக் அழைக்கிறார்களா என்பது தெரியவில்லை.

12.ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய் ஏலங்காய் வாசனை போல் நீண்ட காலத்திற்கு எங்கள் காதல் உள்ளம் வாழக்காய்.(வாழைக்காய் சிறிது மருவி சொல் நயத்துடன் வாழக்காயாகி இருக்கிறது.

13.ஜாதிக்காய் சாதிக்காய்

14.சொன்னதெல்லாம் விளங்காயோ= விளா +காய் விளாங்காய்

தூதுவழங்காய்= தூதுவளை +காய் சிறிது மருவி தூது வழங்காய் ஆகி இருக்கிறது.அத்துடன் எனக்காக அவளிடம் (அவரிடம்)தூது செல்ல மாட்டாயா என்பதாகவும் அமைகிறது.

15.உள்ளமெலாம் மிளகாயோ= உள்ளம் +மிளகாய் +உள்ளமிளகாய் உன் உள்ளம் எனக்காக இரங்கமாட்டாதா?அல்லது மிளகாய் போல் மிக காரமான உள்ளத்தைக் கொண்டவளா நீ என்பதாகவும் கொள்ளலாம்.

  ஒவ்வொரு பேச்சுரைக்காயோ ஒரு முறை பேச மாட்டாயா? பேச்சு உரைக்காயோ பேச்சுரைக்காய்= பேச்சு+ உரைக்காய்

16.வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ நேரடியாக பயன் படுத்தப்பட்டுள்ளது.

17.கோதையெனைக் காயாதே கோது+ காய்= கோதைக்காய் (கோதை பெண் என்றும் பொருள்படும் )

(கோது) காயின் கோதைக் காயாதே வெளி அழகை விரும்பாதே எள்ளத்தை விரும்பு

18.கொற்றவரைக் காய் வெண்ணிலா கொற்றவரைக்காய் என்று ஒரு அவரை இனம் இருக்கிறது.

19.இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா இருவரை விட்டு தனியாகச் சென்று எங்களைத் துன்புறுதாதைதையை யிட்டு ஏங்காய் (வருந்துவாயாக,)

இது

வெள்ளரிக்காயா

விரும்புமவரைக்காயா உள்ளமிளகாயா ஒவ்வொரு பேச்சுரைக்காயா என்ற பழம்பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இதில் பல இலக்கண மீறல்கள் இருந்தாலும் அவை பாடலின் பொருள்பற்றி தந்த வழுக்கள் வழுவமைதி பெற்று விடுகின்றது.

இது நான் எழுதிய பொழிப்புரையாதலால் இதில் பல பிழைகள் இருக்கலாம். தமிழறிஞர்கள் பொறுத்தருள்க.

Link to comment
Share on other sites

காரென்று பேர்படைத்தாய் கசனத்துறும் போது

நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்தபின்

வாரொன்று மென்மயில் நேர்ஆய்ச்சியர் கைவந்த பின்

மோரென்று பேர்படைத்தாய்! முப்பேரும் ஏற்றாயே!

பொருள்

மோர்க்காரியிடம் மோர் வாங்கும் போது அது தண்ணியாக இருக்கிறது. அதனை நகைச்சுவவையாக சொல்ல வந்த கார்மேகம்:

நீர், வானத்திலிருந்தால் அதற்கு கார் என்று பெயர். தரைக்கு வந்தால் ‘நீர்’ என்று பெயர். தரைக்கு வந்தால் ‘நீர்’ என்று பெயர். ஆய்ச்சியர் என்று சொல்லக்கூடிய இடைச்சியரின் மோர் கூடைக்கு வந்தால் அதற்கு ‘மோர்’ என்று பெயர். எனவே, மோர் தண்ணீராக அதாவது கெட்டியாக இல்லாமல், தண்ணீரைக் கலந்து விற்பனை செய்வதால் அதை நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார் காளமேகப்புலவர். இவ்வாறு காளமேகப் புலவரின் பலப்பாடல்கள், இரட்டை அர்த்தங்கள் நிறைந்த நகைச்சுவைப் பாடல்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே

என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய்

நீயும் காய் நிதமும் காய்

நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய்ப் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ

தூதுவழங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ

ஒவ்வொரு தேன் சுரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையெனைக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா

1.அத்தி+ காய்= அத்திக்காய் அதை அந்தத் திக்காய்

2.ஆலங்காய்= ஆல் +காய் ஆலங்காயைப் போன்ற வெண்ணிலவே!

3.இத்திக்காய்= இத்தி+ காய் இந்தத் திசையில் காயாதே(ஒளிதராதே)

4.கன்னிக்காய்= கன்னி பாவை ஆகவே பாவற்காய்(பாவை காய்)பாவற்காய் பாகற்காய் 2 ம் ஓன்று.

5. காதல் கொண்ட பாவைக்காய் மீண்டும் (பாகற்காய்)பாவைக்காய்

6.அங்கே காய் அந்தப் பக்கமாகக் காய்

7.அவரைக்காய் அவரை காய் என்னுடைய காதலனுக்கு(அவரை என்னுடைய காதலைனை) ஒளி கொடுத்து காதல் வேதனையைக் கொடு.

8.மங்கை எந்தன் கோவைக்காய் கோவை காய் கோவைக்காய் கோ என்றால் காவலன்,கடவுள்,அரசன்,பசு என்று பொருள்படும். இங்கே எனது காவலனாகிய காதலைனைக் காய் என்று பொருள்படுகிறது.

9.மாதுளங்காய்= மாது+ உளம் +காய் ஆனாலும் என் காதலி என்னை இந்த நேரத்தில் விரும்பா விட்டாலும்(அல்லது அவளுக்கு காதல் கனியவில்லை(இன்னும ; வரவில்லை என்றாலும் என்னுடைய உள்ளம் அவளை வெறுக்காது.(கனி காயாகாது.காய்கனியாகலாம் காதலிக்காதவர் காதலிக்கலாம் ஆனால் காதல் கொண்டவர் காதலை மறக்க முடியாது.)

10. இரவுக்காய் உறவுக்காய்

ஏங்கும் இந்த ஏழைக்காய் (காய் என்ற சொல் வரும்படி சாதராண சொற்களை சொல் நயத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

11.உருவங்காய் ஆனாலும்

பருவங்காய் ஆகுமோ ஆள் சிறியவளாக இருந்தாலும் அவள் பருவமடையாத பெண்ணல்ல காதலிக்க தகுதியான பெண்னே!(உருவங்காய் என்று இந்தியாவில் ஏதேனும் காய்களைக் அழைக்கிறார்களா என்பது தெரியவில்லை.

12.ஏலக்காய் வாசனைபோல்

எங்கள் உள்ளம் வாழக்காய் ஏலங்காய் வாசனை போல் நீண்ட காலத்திற்கு எங்கள் காதல் உள்ளம் வாழக்காய்.(வாழைக்காய் சிறிது மருவி சொல் நயத்துடன் வாழக்காயாகி இருக்கிறது.

13.ஜாதிக்காய் சாதிக்காய்

14.சொன்னதெல்லாம் விளங்காயோ= விளா +காய் விளாங்காய்

தூதுவழங்காய்= தூதுவளை +காய் சிறிது மருவி தூது வழங்காய் ஆகி இருக்கிறது.அத்துடன் எனக்காக அவளிடம் (அவரிடம்)தூது செல்ல மாட்டாயா என்பதாகவும் அமைகிறது.

15.உள்ளமெலாம் மிளகாயோ= உள்ளம் +மிளகாய் +உள்ளமிளகாய் உன் உள்ளம் எனக்காக இரங்கமாட்டாதா?அல்லது மிளகாய் போல் மிக காரமான உள்ளத்தைக் கொண்டவளா நீ என்பதாகவும் கொள்ளலாம்.

ஒவ்வொரு பேச்சுரைக்காயோ ஒரு முறை பேச மாட்டாயா? பேச்சு உரைக்காயோ பேச்சுரைக்காய்= பேச்சு+ உரைக்காய்

16.வெள்ளரிக்காய் பிளந்ததுபோல

வெண்ணிலவே சிரிக்காயோ நேரடியாக பயன் படுத்தப்பட்டுள்ளது.

17.கோதையெனைக் காயாதே கோது+ காய்= கோதைக்காய் (கோதை பெண் என்றும் பொருள்படும் )

(கோது) காயின் கோதைக் காயாதே வெளி அழகை விரும்பாதே எள்ளத்தை விரும்பு

18.கொற்றவரைக் காய் வெண்ணிலா கொற்றவரைக்காய் என்று ஒரு அவரை இனம் இருக்கிறது.

19.இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா இருவரை விட்டு தனியாகச் சென்று எங்களைத் துன்புறுதாதைதையை யிட்டு ஏங்காய் (வருந்துவாயாக,)

இது

வெள்ளரிக்காயா

விரும்புமவரைக்காயா உள்ளமிளகாயா ஒவ்வொரு பேச்சுரைக்காயா என்ற பழம்பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இதில் பல இலக்கண மீறல்கள் இருந்தாலும் அவை பாடலின் பொருள்பற்றி தந்த வழுக்கள் வழுவமைதி பெற்று விடுகின்றது.

இது நான் எழுதிய பொழிப்புரையாதலால் இதில் பல பிழைகள் இருக்கலாம். தமிழறிஞர்கள் பொறுத்தருள்க.

நன்றி புலவர் உங்கள் பொழிப்புரை நன்றாக இருக்கிறது. தோண்டத் தோண்ட பொருள் சுரக்கும் அருமையான பாடல் இது. தமிழ் சினிமாவில் இப்பாடலைப் போல் இதுவரை எப்பாடலையும் எந்த கவிஞர்களும் இதுவரை எழுதவில்லை. இந்த இடத்தில் கவியரசு கண்ணதாசன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

இந்தப்பாடல் பலருக்கு இன்னும் பல அர்த்தங்களை எடுத்தியம்பக்கூடிய அளவுக்கு பன்முகப் பொருள் கொண்டது. எனது சிற்றறிவுக்கு எட்டிய காய்களை இங்கு பதிவிடுகின்றேன். என் கவனத்திற்குத் தவறிய காய்களை நீங்கள் யாராவது அறிந்தால் இங்கு இணைத்துவிடுங்கள்

17 jhtuf;fha;fis rpy ,lq;fspy; xyp kUtpa epiyapy; Ngr;Rtof;Fj; njhdpapy; mikf;fg;gl;bUf;fpwJ ,g;ghly;

1. mj;jpf;fha;

2. Myq;fha;

3. ,j;jpf;fha;

4. fd;dpf;fha;

5. ghitf;fha; (ghfw;fha;)

6. mtiuf;fha;

7. Nfhitf;fha;

8. khJsq;fha;

9. Vyf;fha;

10. thof;fha; (thiof;fha;)

11. ahjpf;fha;

12. tpsq;fha; (tpshq;fha;)

13. JhJtoq;fha; (JhJtsq;fha;)

14. kpsfha;

15. Ruf;fha;

16. nts;supf;fha;

17. nfhw;wtiuf;fha; (nfhj;jtiuf;fha;)

fha; vd;gJ ngauhfTk; tpidahfTk; xNu rkaj;jpy; Njhd;WkhW mikag; ngw;wJjhd; ,e;jg;ghlypd; rpwg;G

ngauhfTk tpidahfTk; Njhd;whj epiyapy; Njhd;Wk; fha; vd;w gjk; Ntw;Wik cUghfTk; mzp nra;fpwJ

fha; vd;gJ ngau;r;nrhy;yhf tUk;NghJ cjhuzj;jpw;F

ntapy; fha;fpwJ vd;why; ntk;ik epiyiaf; Fwpf;Fk;

mijNa epyh fha;fpwJ vd;why; Fspu;ikiaf; Fwpf;Fk;

mJNt tpidahf khWk; NghJ

fbe;J nfhs;sy; my;yJ Nfhgq;nfhs;sy; vd;gjhf nghUs;gLk;

,e;jf; fha; vd;gJ ,lj;jpw;Nfw;g gd;Kfg; nghUs;glf;$ba xU jkpo; nrhy; xU fhyKk; ehq;fs; rpwpJ epd;W ,j;jifa thu;j;ijfisAk; mtw;wpd; gd;Kfg; nghUisAk; Mj;khu;j;jkhf ,urpg;gjpy;iy கல்விச்சாலைfspy; xj;j fUj;Js;s nrhw;fs; vd;w ngaupy; kdg;ghlk; gz;zp vOJtNjhL vq;fs; juTfs; Kw;Wg; ngw;WtpLk; Njly; மேற்nfhs;SksTf;F vq;fSf;F mtfhrNkh my;yJ Mu;tNkh ,Ug;gjpy;iy.

Link to comment
Share on other sites

நீங்கள் கேட்ட காய்களின் எண்ணிக்கைத் தொகை 29 சகாரா அக்கா.. சரியா இருக்கா என்று எண்ணிப் பாருங்கள்... :D:)

1. அத்திக்காய்

2. ஆலங்காய்

3. இத்திக்காய்

4. கன்னிக்காய்

5. ஆசைக்காய்

6. பாவைக்காய்

7. அங்கேகாய்

8. அவரைக்காய்

9. கோவைக்காய்

10. மாதுளங்காய்

11. என்னுளங்காய்

12. இரவுக்காய்

13. உறவுக்காய்

14. ஏழைக்காய்

15. நீயும்காய்

16. நிதமுங்காய்

17. இவளைக்காய்

18. உருவங்காய்

19. பருவங்காய்

20. ஏலக்காய்

21. வாழக்காய்

22. ஜாதிக்காய்

23. கனியக்காய்

24.விளங்காய்

25. தூதுவழங்காய்

26. மிளகாய்

27. சுரக்காய்

28. வெள்ளரிக்காய்

29. கொற்றவரங்காய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி என்னுடைய தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தாவரக் காய்கள் என்று கேட்டிக்கவேண்டும்

தாவரக்காய்கள் 17

நீங்கள் வேற்றுமை உருபிணைந்த காய்களையெல்லாம் இணைத்திருக்கிறீர்கள் சரி இதில் எத்தனை காய்களில் "ஆய்" வேற்றுமை உருபு இணைந்திருக்கிறது சொல்லுங்கள்

மவனே என்னை மாட்டி விட்டா நானும் மாட்டி விடுவனெல்லோ :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

Link to comment
Share on other sites

குட்டி என்னுடைய தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தாவரக் காய்கள் என்று கேட்டிக்கவேண்டும்

தாவரக்காய்கள் 17

நீங்கள் வேற்றுமை உருபிணைந்த காய்களையெல்லாம் இணைத்திருக்கிறீர்கள் சரி இதில் எத்தனை காய்களில் "ஆய்" வேற்றுமை உருபு இணைந்திருக்கிறது சொல்லுங்கள்

மவனே என்னை மாட்டி விட்டா நானும் மாட்டி விடுவனெல்லோ :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நான் அழுதுடுவேன்... :D^_^

இதில முதல் பாதியும் கடைசிப்பாதியும் நான் பாட்டைக் கேட்டு எழுதினது, நடுவில் உள்ளது இணையத்தில் தேடி எடுத்தது... :D:lol:

Link to comment
Share on other sites

சகாரா அக்கா, உங்களுக்கு முழுப் பாட்டின் பொருள் விளக்கம் வேணும் என்றால் சொல்லுங்கோ, இணைத்து விடுகிறேன்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா, உங்களுக்கு முழுப் பாட்டின் பொருள் விளக்கம் வேணும் என்றால் சொல்லுங்கோ, இணைத்து விடுகிறேன்... :)

:icon_mrgreen:

எனக்குத் தெரியாதா நான் இதற்குப் பொருள் வேணும் என்று கேட்டால் கூகிளில் கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் இணைத்துவிடுவீர்களே.... பிறகு நான் கரிக்காய் பொரிப்பதில் அர்த்தம் இல்லையே... :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

:icon_mrgreen:

எனக்குத் தெரியாதா நான் இதற்குப் பொருள் வேணும் என்று கேட்டால் கூகிளில் கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் இணைத்துவிடுவீர்களே.... பிறகு நான் கரிக்காய் பொரிப்பதில் அர்த்தம் இல்லையே... :lol: :lol: :lol:

ஒரு இணைப்பில் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது... :D^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்களைக்கவர்ந்த அந்த இணைப்பை இங்கு ஒட்டிவிடுங்கள் குட்டி :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும்..

இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள்.

“கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன்

ரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்

கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.....

என்னடா ஆரம்பமே இப்படி....... :lol: :lol: :D

என்னுடன் சேர்ந்து நடக்க வந்த உங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் . நிட்சயம் எனக்குத் தெரிந்தவற்ரையும் இணைப்பேன் . தமிழால் இணைவோம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 4ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 1ம் இடம். 😎தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 3ம் இடம். 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 2ம் இடம். 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம். 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம்.   13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம்.   14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 1ம் இடம். 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம். 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 3ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 4ம் இடம். 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம். 19)எல் முருகன் (பிஜேபி) 4ம் இடம்.   20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம். 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 2ம் இடம். 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம். 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1ம் இடம். 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 0 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 0 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 6 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 31 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 7 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 01 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 5    
    • நாட்டில் தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான்- விமல் வீரவன்ச! ‘மத நம்பிக்கைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதே’ நாட்டில் தீவிரவாதம் உருவாகக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அங்கு அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். “தீவிரமயமாக்கல் என்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாக வன்முறையைப் பயன்படுத்துவதை ஆதரிப்பது அல்லது எளிதாக்குவது உட்பட, தீவிரவாத நம்பிக்கை முறையைப் பின்பற்றும் செயல்முறையாக பொதுவாக வரையறுக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் என்பது அரசியல் அல்லது சித்தாந்த இலக்குகளை அடைவதற்காக பொதுமக்களை இலக்காகக் கொண்ட வன்முறை செயல்முறையாகும். அவர்களுக்கு மற்ற பிரிவினரோ, பிற மதத்தினரோ, பிற இனத்தவர்களோ நண்பர்கள் தேவையில்லை.. அந்த வகையில் தீவிரவாதிகளாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அத்துடன் இந்த தீவிரவாத செயல்களால் முதலில் பாதிக்கப்படுவது கத்தோலிக்கர்கள் அல்ல என்றும், முஸ்லிம்கள் மக்கள்தான் என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார். மேலும் முஸ்லிம்களை தாக்குவதைத் தடுக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, புலனாய்வு அமைப்புகளை நடைமுறைப்படுத்தியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற கொடூரமான படுகொலை நடந்திருக்காது என விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1379920
    • இவ‌ர்க‌ள் இந்த‌ முறை கோப்பை வெல்ல‌ மாட்டின‌ம் இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை தெரிவு செய்தாலும் க‌ர்விய‌ன் மைதான‌த்தில் இவ‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது வெஸ்சின்டீஸ் மைதான‌ங்க‌ளில் இங்லாந் அணி அதிக‌ம் தோற்று இருக்கு போன‌ வ‌ருட‌மும் 20ஓவ‌ர் தொட‌ரை வெஸ்சின்டீஸ் அணி இவ‌ர்க‌ளை வென்றார்க‌ள்   நாச‌மாய் போன‌ வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு சுனில் ந‌ர‌னை தேர்வு செய்தால் அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌மாய் இருக்கும்..................ஜ‌பிஎல்ல தொட‌க்க‌ வீர‌ராய் இற‌ங்கி ப‌ல‌ விளையாட்டில் அடிச்சு ஆடி அணிக்கு வெற்றிய‌ பெற்று கொடுத்த‌வ‌ர்...................................................... கோலி அன்மைக் கால‌மாய் அடிச்சு ஆடுகிறார் இல்லை அது உண்மை தான்  ஆனால் மைதான‌த்தில் 10ஓவ‌ர் வ‌ரை நின்று பிடித்தால் பிற‌க்கு மின்ன‌ல் வேக‌த்தில் ர‌ன் மிசின் த‌ன‌து விளையாட்டை காட்ட‌ தொட‌ங்கிடுவார்...........................ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர் இந்தியா அணியில் சேர்க்காம‌ விடுவ‌து கோலிக்கு ம‌ன‌ உளைச்ச‌ல‌ கொடுக்க‌ கூடும் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இதுவ‌ரை அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ர்க‌ளில் கோலி தான் முத‌ல் இட‌ம் ஆனால் இவை பிலேஒவ்க்கு  போக‌ மாட்டின‌ம் ஆன‌ ப‌டியால் வேறு அணி வீர‌ர்க‌ளுக்கு கூடுத‌ல் விளையாட்டு இருக்கு அவ‌ர்க‌ள் சில‌து முத‌ல் இட‌த்தை பிடிக்க‌ முடியும்🙏🥰.............................................................. 
    • அப்படி தான் செய்திகள் சொல்கிறது பையா. ஓட்டங்களை மெதுவாக எடுக்கிறாராம்.
    • கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு மாத‌மும் ஒரு கிழ‌மையும் இருக்கு வீர‌ர்க‌ளுக்கு ஓய்வில்லாம‌ போட்டிய‌ தொட‌ர்ந்து ந‌ட‌த்துகின‌ம் ஜ‌பிஎல் முடிந்த‌ கையோடு வீர‌ர்க‌ள் க‌ர்விய‌ன் தீவை நோக்கி ப‌ய‌ணிக்க‌னும்........................... நியுசிலாந் Bரீம் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானை வென்று விட்டின‌ம் தொட‌ரையும் வென்று விட்டின‌ம்.................சென்னை அணிக்காக‌ விளையாடும் இர‌ண்டு நியுசிலாந் வீரர்க‌ள் இதுவ‌ரை அடிச்சு ஆட‌ வில்லை இவ‌ர்க‌ளுக்கு ப‌தில் பாக்கிஸ்தான் தொட‌ரில் சிற‌ப்பாக‌ விளையாடின‌ வீர‌ர்க‌ளை நியுசிலாந் தேர்வுக்குழு தேர்வு செய்யுக் கூடும் என்று நினைக்கிறேன்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.