Jump to content

காதலிப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டார் சயிக்கிளில டிப் டாப் ஆக உடையணிந்து சண் கிளாசுடன் மினக்கெட்டவரை விட்டு விட்டு,

சாறத்துடன் வாயில் பீடாவுடன் சயிக்கிளில் சுத்தியவனுக்கு கடிதம் கொடுத்த பெட்டைகளும் இருக்கினம் .

அதற்கெல்லாம் மச்சம் வேண்டும் .

வாழ்க்கையை அனுபவிச்சு ரசிச்சு வாழத் தெரிஞ்ச பெட்டையள் அவளவை அண்ணை......சண் கிளாஸ் போட்டவை சும்மா அவங்களைப் பாத்து பொறாமைப் படாமல் நல்லாயிருங்கோ எண்டு வாழ்த்திப் போட்டு போகவேண்டியதுதான்.. :lol::D

Link to comment
Share on other sites

மோட்டார் சயிக்கிளில டிப் டாப் ஆக உடையணிந்து சண் கிளாசுடன் மினக்கெட்டவரை விட்டு விட்டு,

சாறத்துடன் வாயில் பீடாவுடன் சயிக்கிளில் சுத்தியவனுக்கு கடிதம் கொடுத்த பெட்டைகளும் இருக்கினம் .

அதற்கெல்லாம் மச்சம் வேண்டும் .

நீங்கள் ரொம்ப பீல் பண்ணுறது புரியுது...

'மோட்டார் சயிக்கிளில டிப் டாப் ஆக உடையணிந்து சண் கிளாசுடன் வெட்டிப் பந்தா காட்டி மினக்கெட்டவரை விட்டு விட்டு,

சாறத்துடன் வாயில் பீடாவுடன் சயிக்கிளில் யதார்த்தமாகச் சுத்தியவனுக்கு கடிதம் கொடுத்த பெட்டைகளும் இருக்கினம் .'

இப்படிப் போட்டுப் பாருங்கோ பெண்கள் செய்தது சரிதானே? என்ன பண்ணுறது, ஒரு சில பெண்கள் எப்பவுமே ரொம்ப அலர்ட்டா இருக்கிறாங்க... :D:lol::icon_idea:

....

ஏன் இவ்வளவு கொலைவெறி என்மேல் அண்ணே... நான் ஒரு பட்டாம்பூச்சி காதல் வலையில் சிக்கப்போவதில்லை..

இல்லை, இதை ஆண்களுக்கு எழுதி இருக்கிறார்கள்... அதை நீங்கள் இங்கு இணைத்தீர்களா.. அது தான் கேட்டேன் இப்படி ஒருத்தரைப் பார்த்தல் உங்களுக்கும் காதல் வருமா என்று? சும்மா சிரிப்புக்காகத் தான் கேட்டேன், ஏன் டென்சன்?? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உண்மையா எப்பிடிக் காதலிக்கிறது என்கிறதை உங்கட அனுபவத்தில் இருந்து எழுதுங்கோவன்..! :D

இதுவரை.. நானாக.. யாரையும் காதலிக்கனும் என்று இருக்கவும் இல்லை.. அதற்கென்று தனி முயற்சிகள் எடுத்ததும் இல்லை. ஆனால் நான் எனக்கு தெரியாமல் சிலரால் காதலிக்கப்பட்டிருக்கலாம்.. அல்லது தெரிய காதலிக்கப்பட்டிருக்கலாம். அதற்கு நான் பதில் அளித்திருக்கிறேனே தவிர.. நானாக விரும்பிக் காதலிக்கக் கூடிய அளவிற்கு நான் யாரையும் இதுவரை காணேல்ல..! இது தான் என் வாழ்வில் இந்த விடயத்தில் உண்மை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

இதுவரை.. நானாக.. யாரையும் காதலிக்கனும் என்று இருக்கவும் இல்லை.. அதற்கென்று தனி முயற்சிகள் எடுத்ததும் இல்லை. ஆனால் நான் எனக்கு தெரியாமல் சிலரால் காதலிக்கப்பட்டிருக்கலாம்.. அல்லது தெரிய காதலிக்கப்பட்டிருக்கலாம். அதற்கு நான் பதில் அளித்திருக்கிறேனே தவிர.. நானாக விரும்பிக் காதலிக்கக் கூடிய அளவிற்கு நான் யாரையும் இதுவரை காணேல்ல..! இது தான் என் வாழ்வில் இந்த விடயத்தில் உண்மை..! :):icon_idea:

நீங்களாக விரும்பி காதலிக்கிக்கிற அளவுக்கு யாரையும் காணவில்லையா இவ்வளவு வருசத்தில்...

சரி என்னதான் அப்படி விரும்புகிறீர்கள் என்று சொன்னால்தானே உதவி செய்வது அப்படி யாரும் இருந்தால் ஆளை உங்களுக்கு காட்டுவோமில்லை... ( நான் இல்லை இசை அண்ணா உதவி செய்வார் பிறதர்):icon_mrgreen:

Link to comment
Share on other sites

நாம் விரும்பும் பெண்கள் நம்மளை விரும்பமாட்டார்கள். நாம் விரும்பாத பெண்கள் நம்மளை விரும்புவார்கள். அனுபவத்தில் கண்டது.

காதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

நாம் விரும்பும் பெண்கள் நம்மளை விரும்பமாட்டார்கள். நாம் விரும்பாத பெண்கள் நம்மளை விரும்புவார்கள். அனுபவத்தில் கண்டது.

காதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவர்கள் உங்களை புரிந்து கொண்டு விட்டார்கள் போல....

Link to comment
Share on other sites

நாம் விரும்பும் பெண்கள் நம்மளை விரும்பமாட்டார்கள். நாம் விரும்பாத பெண்கள் நம்மளை விரும்புவார்கள். அனுபவத்தில் கண்டது.

காதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

http://www.youtube.com/watch?v=9xIiWtoPd7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களாக விரும்பி காதலிக்கிக்கிற அளவுக்கு யாரையும் காணவில்லையா இவ்வளவு வருசத்தில்...

சரி என்னதான் அப்படி விரும்புகிறீர்கள் என்று சொன்னால்தானே உதவி செய்வது அப்படி யாரும் இருந்தால் ஆளை உங்களுக்கு காட்டுவோமில்லை... ( நான் இல்லை இசை அண்ணா உதவி செய்வார் பிறதர்) :icon_mrgreen:

இது தொடர்பான ஒரு ஆக்கமே இங்க போட்டிருக்கனே..! :lol::)

கேர்ள் பிரண்டுண்ணா எப்படி இருக்கனும்..??!

petfriendlycouples.jpg

கேர்ள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். :lol:

கேர்ள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும்.

குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேர்ள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது. அதில நீங்க சிலர் தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant)ஆகவும் இருக்கனும்.

குழந்தைகளோட நாங்களும் சமனா நடந்துக்க சந்தர்ப்பம் அளிக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். குழந்தைகளை காட்டி அட்வான்ரேஜ் எடுத்துக்கிற கேர்ள் பிரண்ட் வேணாம்.

கிச்சன் டிப்பாட்மெண்டை நீங்களே குத்தகைக்கு எடுத்து தாஜா பண்ண கூஜா தூக்கிறது கேவலம். அதே நேரம்.. தேவைக்கு அவசியத்துக்கு ஏற்ப இருவரில் எவரும் அதைப் பொறுப்பெடுத்துக் கொள்ளக் கூடிய சூழலை நிறுவனும். அதை விட்டிட்டு மனிசி குசினில சமைக்க.. காலை நீட்டி நெளிவு முறிக்கிறது எல்லாம் ஒரு ஆம்பிளைக்கு அழகல்ல. அதேபோல.. மனிசி சீரியல் பார்க்க மனிசன் கிச்சனில நிற்கிறதும்.. அழகல்ல.

ஒரு நாளைக்கு ஒருவர் அல்லது எல்லா நாளும் இருவரும் என்று சமைச்சுப் பார்க்கிறதுக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும். அவாக்கு பிடிச்சதை அவா செய்யனும்.. எனக்கு பிடிச்சதை நான் செய்யனும்.. இருவரும் தாங்கள் தங்கள் ரேஸ்ருக்கு சமைச்சதை பரிமாறனும்.. சுவைக்கனும். அப்படி ஒரு கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

இந்த தாஜா.. கூஜா வேலைகள் வேண்டாம். ஒரு செயலை பிடிச்சா செய்யனும் பிடிக்கல்லைன்னா விட்டிடனும். வற்புறுத்தாத கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாம படிக்கிறதுக்கு நம்ம கோம் வேர்க்கில உதவக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். நாங்க படிக்கிறதை விடுப்புப் பார்த்துக்கிட்டு தனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருக்கிறது வேணாம்.

நாங்க உழைக்கிறதில சாப்பிட காரோட நினைக்கிறது வேணாம். தன் உழைப்பையும் சேமிப்பை கடந்து.. நம்மோடு எதிர்பார்ப்பில்லாம இயல்பா பங்கிட்டு என்ஜோய் பண்ணுற.. தன் உழைப்பில நம்ம ரேஞ்சுக்கு அல்லது அதுக்கு மேல கார் வாங்கி ஓடிக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். அதேபோல நம்ம பங்களிப்பை ஈகோ இன்றி இயல்பாக அங்கீகரித்து அதிலும் கூட இருந்து என்ஜோய் பண்ணக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாங்க கொலிடே போகக் கூப்பிட பெட்டியை தூக்கிற கேர்ள் வேணாம். எங்களுக்குப் போட்டியா தானும் தன்ர ரசனைக்கு ஏற்ப எங்களை கொலிடே கூட்டிக் கொண்டு போகக் கூடிய தற்சிந்தனை உள்ள கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாங்க தப்புப் பண்ணினா தட்டிக் கேட்டு வழிகாட்டும் அதேவேளை அவா தப்புப் பண்ணினா நாங்க சொல்லுறதையும் கேட்டு எவருமே மனம் நோகாம வாழ நினைக்கும் கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

ஒரு வீட்டில வாழ்ந்தாலும்.. தனக்கென்று தனி அழகோட ஒரு பகுதி வீட்டை வைச்சிருக்கும் கேர்ள் பிரண்ட் தான் வேணும். அதேபோல எங்களையும் எங்கட பங்கிற்கு எங்க ரேஸ்டுக்கு வீட்டில ஒரு பகுதியை வைச்சிருக்க அனுமதிக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

சொல்லுறதுக்கு எல்லாம் ஆமாப் போடும் கேர்ள் வேணாம். தனக்குள் உதிக்கிற புதிய புதிய ஐடியாக்களை சேர்த்து புதிய கண்டிபிடிப்புக்கு சுவாரசியத்துக்கு இட்டுப் போகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நமக்கென்று ஆன பிறகு.. பிரண்ட்ஸ் கூட பிரண்ட்ஸா (அதுக்கு மேல போகக் கூடாது) பழகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். பிரண்ட்ஸ் கூட ஒப்பிட்டு நோக்கி அவன் உயர்ந்தவன் இவன் அப்படி.. இப்படி என்று சொல்லிக் கொண்டிருக்கிற.. மட்டம் தட்டிற கேர்ள் வேணாம்.

நம்மள சிறிய முயற்சிலும் ஊக்குவிக்கிற உதவி செய்யுற தானும் பங்கெடுக்கிற கேர்ள் தான் வேணும். சந்தர்ப்பத்தை கண்டு பயந்து ஓடுற ஒளியுற.. உதவி செய்திட்டு சொல்லிக் கொண்டு திரியுற கேர்ள் பிரண்ட் வேணாம்.

தனக்குப் பிடிச்ச உடையில நாகரிகமாக இருக்கனும். அப்பப்ப எது பிடிக்கும் என்று கேட்டும் எங்களைக் கொண்டும் வாங்கி அதை அணிஞ்சு நிஜமாவே மகிழ்ந்தும் காட்டனும்.

தானும் சோம்பேறியா இல்லாமல்.. எங்களையும் சோம்பேறியாக்காத சிலிமான.. உடம்பை சிக்கென்று வைச்சிருக்கிற.. எங்களையும் வைச்சிருக்க தூண்டிற.. ஜிம்.. ஜாக்கிங்.. யோகா என்று செய்து.. இருக்கக் கூடிய.. அழகான கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

படிப்பு.. வேலை.. இதுக்கு மேலதிகமாக... ஏதேனும் சுவாரசியமா மாறுதலா மகிழ்ச்சிக்குரியதா.. செய்யக் கூடியவாவா இருக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

மொத்தத்தில.. கேர்ள் பிரண்டா.. ஒரு நல்ல மாற்றங்களை விரும்பக் கூடிய.. புத்திசாலியான.. தற்சிந்தனை.. எப்போதும் மகிழ்ச்சியாக நட்போட அன்போட தன் சுய இயல்போட இருக்கக் கூடிய மனிதப் பெண் தான் வேணும்.

இப்படியே ஒவ்வொரு ஆணுக்குள்ளும் கேர்ள் பிரண்ட் பற்றிய நிறைய சின்னச் சின்ன ஆசைகள்... சொல்லிக் கொண்டு போகலாம். சொல்லி என்ன பயன். அப்படி ஒரு கேர்ள் கிடைக்கிறது.. ரெம்ப கஸ்டம். அதனால.. நாங்களே எங்க விருப்பத்துக்கு தனிச்சு வாழ்ந்திட வேண்டியது தாப்பா. அதுதான் நல்லது நம்மளப் போல பசங்களுக்கு.

Link to comment
Share on other sites

இது தொடர்பான ஒரு ஆக்கமே இங்க போட்டிருக்கனே..! :lol::)

கேர்ள் பிரண்டுண்ணா எப்படி இருக்கனும்..??!

petfriendlycouples.jpg

சொல்லுறதுக்கு எல்லாம் ஆமாப் போடும் கேர்ள் வேணாம்.

அடடா இதை மறந்துவிட்டேன் பிறதர்... எல்லாமே சூப்பராகத்தான் இருக்கின்றது ஆனாலும் இந்த கோட் பண்ணியிருக்கிறனே இந்த விடயம்தான் இடிக்கிது பிறதர்...

நமக்கும் எல்லாவற்றுக்கும் ஆமாம் போடுவது பிடிப்பதில்லைதான் ஆனாலும் இப்படி ஆமாம் போடவில்லையென்றால் ஒருதனும் கூடவே இருக்கமாட்டான் என்று சொல்லுகிறார்களே இதுக்கு என்ன பண்ணுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இதை மறந்துவிட்டேன் பிறதர்... எல்லாமே சூப்பராகத்தான் இருக்கின்றது ஆனாலும் இந்த கோட் பண்ணியிருக்கிறனே இந்த விடயம்தான் இடிக்கிது பிறதர்...

நமக்கும் எல்லாவற்றுக்கும் ஆமாம் போடுவது பிடிப்பதில்லைதான் ஆனாலும் இப்படி ஆமாம் போடவில்லையென்றால் ஒருதனும் கூடவே இருக்கமாட்டான் என்று சொல்லுகிறார்களே இதுக்கு என்ன பண்ணுவது?

அது அவங்களுக்கு. நமக்கு.. ஆமாப் போடுறது எல்லாம் வேணாம். நல்ல எதிர்க்கட்சியா இருந்து அன்பும் வழிக்காட்டுதலும்.. வழங்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். கூட்டணியில இருந்து கொண்டு ஆமாப் போட்டு.. ஆளையே கவுக்கிற கேர்ள் பிரண்ட் வேண்டவே வேண்டாம். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன திடீரென்று கிருஷ்ணனாகி விட்டீங்கள்? :o :o

இங்கு எதை எடுத்தாலும் அது இலவசமாக எடுக்கப்படவில்லை. அதன் பின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

எடுத்தவரின் உழைப்பாக இருக்கலாம் அல்லது கொடுத்தவரின் உழைப்பாக இருக்கலாம் அல்லது அவர்களின் பெற்றோரின் உழைப்பாக இருக்கலாம். :lol: :D

காதலில் உண்மையான காதல் பொய்யான காதல் என்று எல்லாம் ஒன்றும் இல்லை.

காதலில் மெய்யான காதல் மட்டுமே உண்டு.

உழைப்பை ஏன் காதலுக்குள் புகுத்துகிறீர்கள்? தேவையில்லாத இடைச்சொருகல்களை காதலுக்குள் சொருகுவதால்தான் காதல் கசந்து போகிறது.

காதலுக்கு தேவையானது இரண்டு தூய்மையான மனங்கள் மட்டுமே. காதலிக்க போகும்போது உடலுக்குள் இருக்கும் மனதை கொண்டுபோனால் போதும்.

எடுப்பதும் கொடுப்பதும் காதலாகி போவதால்,,,,,,,,,,,,,,,,

இங்கே ஏமாற்றத்திற்கு இடமே இல்லை.

Link to comment
Share on other sites

காதலில் உண்மையான காதல், பொய்யான காதல் என்று எல்லாம் ஒன்றும் இல்லை.

காதலில் மெய்யான காதல் மட்டுமே உண்டு.

"உண்மையான" என்பதற்கும் "மெய்யான" என்பதற்கும் என்ன வித்தியாசம்?

காதலில் உண்மையான காதல், பொய்யான காதல் என்று இருப்பதாக நான் கூறவில்லையே. காதலர்களில் தான் அப்படி உள்ளார்கள்.

உழைப்பை ஏன் காதலுக்குள் புகுத்துகிறீர்கள்? தேவையில்லாத இடைச்சொருகல்களை காதலுக்குள் சொருகுவதால்தான் காதல் கசந்து போகிறது.

காதலுக்கு தேவையானது இரண்டு தூய்மையான மனங்கள் மட்டுமே. காதலிக்க போகும்போது உடலுக்குள் இருக்கும் மனதை கொண்டுபோனால் போதும்.

எடுப்பதும் கொடுப்பதும் காதலாகி போவதால்,,,,,,,,,,,,,,,,

இங்கே ஏமாற்றத்திற்கு இடமே இல்லை.

நீங்கள் கிருஷ்ணர் போல் ஓதியதற்கு தான் உழைப்பை பற்றி கூறினேன்.

எடுப்பதும் கொடுப்பதும் நடிப்பாக இருந்தால்.....???? அது தான் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

காதல் என்பது தானாக வருவது.... பொருளையும் வசதியையும் காட்டி மயக்கி பெறுவதல்ல. அதனால் தூண்டப்படுவது காதல் அல்ல ஆசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உண்மையான" என்பதற்கும் "மெய்யான" என்பதற்கும் என்ன வித்தியாசம்?

காதலில் உண்மையான காதல், பொய்யான காதல் என்று இருப்பதாக நான் கூறவில்லையே. காதலர்களில் தான் அப்படி உள்ளார்கள்.

நீங்கள் கிருஷ்ணர் போல் ஓதியதற்கு தான் உழைப்பை பற்றி கூறினேன்.

எடுப்பதும் கொடுப்பதும் நடிப்பாக இருந்தால்.....???? அது தான் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

காதல் என்பது தானாக வருவது.... பொருளையும் வசதியையும் காட்டி மயக்கி பெறுவதல்ல. அதனால் தூண்டப்படுவது காதல் அல்ல ஆசை.

மெய்யான காதல் என்பது இரண்டு மெய்களுக்குள் கலந்து மெய்யாக இருப்பது.

இங்கே உண்மைக்கும்........ பொய்யிற்கும்.... எந்த வேலையும் இல்லை. ஆனால் அதை பொய்கைக்குள் கொண்டுசென்றால் அது பூவாக மலர்ந்துகொள்ளும்.

எடுப்பதிலும்........

கொடுப்பதிலும்......

எப்படி நடிப்பது? சரியாக புரியவில்லை.

ஒருபாத்திரத்தில் உள்ள நீரை வேறு ஒரு இடத்தில் கொடுத்தால்தானே.... அந்த பாத்திரத்தில் தேனையோ வேறு திரவங்கலையோ எடுத்து போட முடியும். இதில் எப்படி நடிப்பது?

Link to comment
Share on other sites

...

உதவி செய்வது அப்படி யாரும் இருந்தால் ஆளை உங்களுக்கு காட்டுவோமில்லை... ( நான் இல்லை இசை அண்ணா உதவி செய்வார் பிறதர்) :icon_mrgreen:

இது எப்பல இருந்து இசை? சொல்லவே இல்லை... :lol: :lol: :D இதுக்கும் நேர்முகத் தேர்வு உண்டா?? என்ன கேள்விகள் கேட்பீர்கள்??? :icon_mrgreen: :lol: (சும்மா பகிடிக்கு)

Link to comment
Share on other sites

ஒருநாளில் பதினைந்து மணித்தியாலங்களை கல்விக்காக செலவிட்டதால்..........

இருபது வருட படிப்பை ஒரு ஐந்து வருடத்திற்குள் முடிக்க கூடியதாக இருந்தது.

அதைவிட தற்போது இன்டர்நெட் பெரும் உதவியாக இருக்கிறது.

அதைத்தவிர ஒரு வயதிற்குள்தான் நிற்கிறோம்.

இருபது வருட படிப்பை 5 வருடத்திற்குள் செலவழித்தவரே.... சொல்லுங்கள்....

உண்மையான காதல் என்பதும் மெய்யான காதல் என்பதும் வேறு வேறு என்கிறீர்கள். இரண்டிற்குமான வித்தியாசம் என்ன என்பதை உங்கள் அறிவை கொண்டு விளங்கப்படுத்துங்களன்... நாங்களும் கொஞ்சம் பார்ப்பம் உங்கட அறிவை.....

Link to comment
Share on other sites

இது எப்பல இருந்து இசை? சொல்லவே இல்லை... :lol: :lol: :D இதுக்கும் நேர்முகத் தேர்வு உண்டா?? என்ன கேள்விகள் கேட்பீர்கள்??? :icon_mrgreen: :lol: (சும்மா பகிடிக்கு)

நெடுக்குக்கு வெறும் சப்பை ஃபிகரா பார்த்து கட்டிவைக்கலாம் எண்டு இருக்கிறன்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் விரும்பும் பெண்கள் நம்மளை விரும்பமாட்டார்கள். நாம் விரும்பாத பெண்கள் நம்மளை விரும்புவார்கள். அனுபவத்தில் கண்டது.

காதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதெண்டால், உண்மைதான்..... தப்பிலி. :D

Link to comment
Share on other sites

இதெண்டால், உண்மைதான்..... தப்பிலி. :D

என்னதான் இருந்தாலும், காதலிக்கும் பொழுது உள்ள உணர்வுகள் இருக்கே, அதற்கு இணையில்லை. அதைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

Link to comment
Share on other sites

மெய்யான காதல் என்பது இரண்டு மெய்களுக்குள் கலந்து மெய்யாக இருப்பது.

இங்கே உண்மைக்கும்........ பொய்யிற்கும்.... எந்த வேலையும் இல்லை. ஆனால் அதை பொய்கைக்குள் கொண்டுசென்றால் அது பூவாக மலர்ந்துகொள்ளும்.

நான் கருத்து எழுதியபின் அதை நீக்குவது களவிதியை மீறும் செயல். இதையே உங்களால் கடைப்பிடிக்க முடியவில்லையே.... :(

அதோட நீங்கள் edit பண்ணி புதிதாக சேர்த்தால் எனக்கெப்படி தெரியும்? quote பண்ணிக்காட்டியிருக்கவாவது வேணும். :wub:

நான் கேட்டது மெய்யான காதல் என்பதற்கும் உண்மையான காதல் என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று அதாவது மெய்யான என்பதற்கும் உண்மையான என்பதற்குமான வேறுபாடு? இங்கு நான் எழுவாயாக இருக்கும் மெய்யை பற்றியோ பொய்கையை பற்றியோ கேட்கவில்லை..... அல்லது வரைவிலக்கணத்தை பற்றியோ கேட்கவில்லை.

எடுப்பதிலும்........

கொடுப்பதிலும்......

எப்படி நடிப்பது? சரியாக புரியவில்லை.

ஒருபாத்திரத்தில் உள்ள நீரை வேறு ஒரு இடத்தில் கொடுத்தால்தானே.... அந்த பாத்திரத்தில் தேனையோ வேறு திரவங்கலையோ எடுத்து போட முடியும். இதில் எப்படி நடிப்பது?

மனிதனும் பாத்திரமும் ஒன்றென்று கருதுபவர்களும் இருக்கிறார்கள் தான்...... :(

உங்கள் வழியிலேயே சொல்கிறேன்....

உங்கள் மனதை வேறொருவருக்கு கொடுத்து விட்டு இன்னொருவர் மனதை எடுத்துக்கொள்ளுங்கள்..... :D இது தான் நடிப்பு.

தூங்கிறவங்களை எழுப்பலாம், தூங்கிற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது.... :wub:

Link to comment
Share on other sites

அவர்கள் உங்களை புரிந்து கொண்டு விட்டார்கள் போல....

சே அப்படியொன்றும் தப்பானவனா என்னைப் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். தப்புத் தப்பா சிக்னல் கொடுத்திருப்பேன். விரும்பியது கைகூட மச்சம் வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானாக விரும்பிக் காதலிக்கக் கூடிய அளவிற்கு நான் யாரையும் இதுவரை காணேல்ல..! இது தான் என் வாழ்வில் இந்த விடயத்தில் உண்மை..! :):icon_idea:

ஏனண்ணை ஒரு வெள்ளை கூடவா கண்ணிலை தட்டுப்படலை.. :unsure::rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனண்ணை ஒரு வெள்ளை கூடவா கண்ணிலை தட்டுப்படலை.. :unsure::rolleyes: :rolleyes:

வெள்ளை எண்டாப் போல.. பெண் என்றால் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்று தான்..! அதுகளும்.. நீங்கள் செலவழிக்கும் வரை தான் உங்களோட ஒட்டுங்கள். இதனை என் கண் முன்னால்.. என் வெள்ளை நண்பனுக்கு நடந்ததைக் கண்டிருக்கிறேன்.

யுனியில்.. முதல் இரண்டரை வருடங்களும் திக்கான காதலர்கள். அவனின்ர கிரடிட் கரைஞ்சு போக.. அவள் பிரேக்கப் ஆகிட்டாள். பாவம் அவன் ஒரு அப்பாவி இளையனும் கூட. வெள்ளைகளுக்குள் நல்ல பொடியன். இருந்தும்.. அவன் அதை ஒரு கொஞ்ச நாள் வலியாக நினைக்கவில்லை. அதை வாழ்க்கையின் அனுபவமாகக் கொண்டு.. வாழப் பழகிக் கொண்டான். என்னென்றால்.... இவற்றை எல்லாம் கண்டு விளங்கிக் கொண்ட நானும் கூட.. ஒரு கட்டத்தில்.. போலிக் காதலைக் கண்டு... ஏமாந்திருக்கிறது தான்..! இருந்தாலும்.. போலி என்பதை மிகத் துரிதமாகவே உணர்ந்துவிட்டேன்..! விலகி இருந்தும் விட்டேன்..! :):lol:

இந்தப் பாடல் வரிகளின் அர்த்தம்.. முன்னம் இந்தப் பாடல் வெளிவந்த தருணத்தில்.. புரிந்ததை விட இப்போ.. நல்லா புரியுது..! இதுதான் காதல் என்ற பெயரில்.. மற்றவர்கள் எமக்களிக்கிற முன்னேற்றம்..! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.