Jump to content

மே 20 சென்னை-மெரினாவில், தமிழீழபடுகொலைக்கான நினைவேந்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச்செய்தியினை அனைவரும் தங்களது இணையதளங்கள், குழுமங்கள் மற்றும் முகநூல் போன்றவற்றில் பகர்ந்துகொள்ளுமாறு பணிவோடு கேட்டுகொள்கிறோம்.

=====

அன்பான தோழர்களே!,

கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்கும் , ஐ. நாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

சென்ற வருடத்தில் ஐ. நா அறிக்கைக்கான கூட்டத்தில் விவரித்ததைப் போல, அமெரிக்கா, போர்குற்றம் என்கிற கதையை முன்வைத்து இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்குவதாக செய்தியை உண்டாக்கியது. இது இலங்கையில் அரச மாற்றத்தை மட்டுமே உண்டாக்கும் என்றோம், கடந்த வருடம்..... தற்போது அதை நோக்கியே நகர்வுகள் இருக்கின்றன. ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வை வைப்பார்கள் என்று 2011 மே மாதம் சொன்னதைப் போலவே தற்போது நடக்கிறது. இதை உடைக்கவேண்டும்.

நாம் ஆதரிக்க மறுக்கவேண்டிய இந்த வருடத்திய ஐ. நா தீர்மானத்தை நம் மீது உலகம் திணித்து , ஏற்றுக்கொள்கிறாயா என்றபோது ஏற்கவேண்டுமா? மறுக்க வேண்டுமா? என்ற விவாதம் வந்தது. அதற்கு, ‘ நாங்கள் வேண்டுவது இதுவல்ல, இது எங்களுக்கானதல்ல, எங்கள் கோரிக்கை ‘தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பும், சுதந்திர சர்வதேச விசாரணயும் ” என்று உரத்துச் சொல்வதற்காக மார்ச் 18ஆம் தேதி சென்னை மெரினாவில் கூடினோம். ஊடகங்கள் மக்களின் கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை கொண்டு சென்றன. திருத்தங்களை இலங்கைக்கு ஆதரவாக கொண்டு வந்து பிறகு, ”இந்தியாவின் ஆதரவை நாங்கள் வாங்கிக் கொடுத்தோம்” என்று காங்கிரஸும், அதன் அடிபொடிகளும் தோள் தட்ட இயலாமல், தமிழர்கள் நாம், செய்தோம். இன்று இந்த கோரிக்கைகள் தமிழகத்தில் மையம் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றன. இந்த முன்னேற்றம் தமிழர்களின் பல்வேறு இயக்கங்களும், அமைப்புகளும், கட்சிகளும், தலைவர்களும், அறிஞர்களும், உணர்வாளர்களும் பல்வேறு வேறுபாடுகளை கடந்து , பொது மக்கள் சமூகம் அறியக்கூடிய வகையில் பொது இடத்தில் திரண்டதால் சாத்தியமாயிற்று. கருணாநிதியே ,” ஐ. நா வாக்கெடுப்பு” என்று பேசவேண்டியதாயிற்று. தற்போது மக்களிடத்தில் பொது விவாதத்திற்கு இந்த “ஐ. நா வாக்கெடுப்பு” வந்தாயிற்று. ஆனால் இது சாத்தியமாக வேண்டுமென்றால் இனப்படுகொலை உள்ளிட்ட இன அழிப்பு நடந்ததாக அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச சுதந்திர விசாரணைஅறிவிக்கப்பட்டாக வேண்டும்.

ஐ. நாவில் தீர்மானம் வருவது மட்டுமே தீர்வை கொணராது, சர்வதேச மக்கள் சமூகம் தமிழீழ விடுதலையின் நியாயத்தை அறியும் போது நமது போராட்டம் பல அடிகள் முன்னகரும்.

இதே வகையில் நமது கோரிக்கைகள் மேலும் உரத்து கேட்க இந்த வருடம் மே 20 ஆம் தேதி சென்னை மெரினாவில், நீதி கேட்ட கண்ணகி சிலையினருகில், மாலையில் பெரும் திரளாய் ஒன்று கூடுவோம்.... பெண்களும், குழந்தைகளும், ஏனைய மக்களும் சென்ற வருடம் திரண்டார்கள் , அரசியல் படுத்தப்பட்டார்கள், கோரிக்கைகளை கூர்மையாக கவனித்தார்கள்... நாமும் அவர்களும் சந்திக்கும் அந்த நிகழ்வை மீண்டும் நிகழ்த்திக் காட்ட வேண்டும். தமிழீழ விடுதலைக் கோரிக்கையை இது மேலும் முன்னகர்த்தும். நாம் திரள்வோம்.

மே பதினேழு இயக்கம்

காணொளி : தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

http://may17movementnews.blogspot.in/

http://candlelightfortamils.blogspot.in/

சென்ற வருடம் ஜுன் 26 நினைவேந்தல் நடத்தியது போல் இந்த வருடம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் நினைவு கூறும் விதமாக வருகிற மே 20ம் நாள் நடத்தவிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மக்களை மெரினாவில் கூட்டும் விதமாக பணிகளை செய்து வருகிறோம். இந்த பணிகளுக்கு உண்டான பொருட் செலவுகளுக்கு எப்பொழுதும் போல் தங்களுடைய உதவிகளை கோருகிறோம். பின்வரும் வங்கி கணக்கில் தங்களது நன்கொடைகளை தந்து உதவவும்..தங்களது உதவ

ி, பரப்புரை, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களாகவும் அமையலாம் .

பெயர் - P .A . PRAVEEN KUMAR

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

கணக்கு எண் 129601000017929 , Savings Account,

வேளச்சேரி கிளை. சென்னை. IFC Code : ioba0001296

உதவி பற்றிய விவரங்களை தவறாமல் contact.may17@gmail.com

---Ph- 9600781111, 90948 17952

குறிப்பாக ஈழத்து புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்துமறுக்கிறோம். தமிழகத்தின் தமிழர்களின் உதவியை மட்டுமே கொண்டு செயல்படதீர்மானித்து இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.