Jump to content

அமெரிக்காவில் சீக்கியர் மீது லாரியை ஏற்றிய சம்பவம்: 'தீவிரவாதி' என அழைத்து இனவெறித் தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது கொடூர தாக்குதால் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு மீண்டும் சீக்கியர் அமைப்புகள் நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வசிப்பவர் சந்தீப்சிங் (வயது 29). இவர் கடந்த ஜூலை 29-ஆம் தேதி, சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது உரசியது.

அப்போது கோபமடைந்த சந்தீப், லாரி டிரைவரை கீழே இறங்கும்படி கேட்டுள்ளார். அதற்கு கோபமடைந்த லாரி டிரைவர், 'தீவிரவாதி, உன் நாட்டிற்கே செல்' என்று இனவெறியுடன் பேசியதோடு, லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து கிளப்ப முயன்றார்.

லாரியை சம்பவ இடத்திலிருந்து செல்லவிடாமல், சந்தீப்புக்கு நெருங்கியவர்கள் முற்றுகையிட்டனர். ஆனால் அந்த டிரைவர் லாரியை சந்தீப்சிங் மீது மோதி, அவரை 30 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்துச்சென்றார்.

இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த சந்தீப், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நியூயார்க் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, சீக்கியர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சந்தீப் சிங் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கேட்டும் அமெரிக்காவில் இன்று சீக்கியர் அமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. இதற்கு பல்வேறு இந்திய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

கடந்த 2012-ம் அண்டு ஆகஸ்டு 5-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஓக் கிரீக் குர்டுவாராவில் நடந்த இனவெறி தாக்குதலில் 6 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையிலும் பேரணி நடத்தப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப்பின் மனைவி பிரப்ரீத் கவுர், "எனது கணவர் மீதான தாக்குதல், தனி மனிதர் மீதான தாக்குதல் இல்லை. இங்கு தொடர்ந்து நடக்கும் சீக்கியர்கள் மீதான எதிர்ப்பின் வெளிப்பாடுதான்.

விபத்து ஏற்பட்ட பின், சீக்கியர் என்று தெரிந்ததை அடுத்து என் கணவர் மீது அந்த டிரைவர் வேண்டுமென்றே லாரியை செலுத்தி சாலையில் இழுத்து சென்றுள்ளார். தற்போது என் கணவர் உயிருக்கு போராடி வருகிறார். அவரது பாதி உயிர் ஏற்கெனவே போய்விட்டது. எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். அந்த டிரைவர் குறித்த தகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், எங்களிடம் அதனை அளித்து நியூயார்க் மக்கள் உதவ வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தீப் சிங், போலீஸிடம் அளித்த ஒலிப்பதிவில், "நான் சீக்கியர் என்பதாலேயே தாக்கப்பட்டேன். மிகுந்த வலியை தாங்கி கொண்டு இருக்கிறேன். ஆனால் உயிர் பிழைத்து விடுவேன். எனக்கு நேர்ந்த சம்பவம் இனி வேறு ஒரு சீக்கியருக்கு நடக்க கூடாது என்றே நான் நினைக்கிறேன். சீக்கியர்களுக்கு அமெரிக்காவில் நீதி கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 
Link to comment
Share on other sites

அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது கொடூர தாக்குதால் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு மீண்டும் சீக்கியர் அமைப்புகள் நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வசிப்பவர் சந்தீப்சிங் (வயது 29). இவர் கடந்த ஜூலை 29-ஆம் தேதி, சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது உரசியது.

அப்போது கோபமடைந்த சந்தீப், லாரி டிரைவரை கீழே இறங்கும்படி கேட்டுள்ளார்.

வாகனத்தின் இலக்கத்தை எடுத்து வாகன பதிவு நிருவாகத்துக்கும் போலீசுக்கும் தகவல் கொடுப்பதை விட்டுவிட்டு கீழே இறங்கு பார்க்கலாம் என்று சண்டித்தனம் பண்ணிய காரணத்தை மறைத்து இனவாதத்தை மட்டும் தூக்கி பிடிப்பது நேர்மையானதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

சந்தீப் சிங்குக்கு சட்டம் தெரியவில்லை.. வாகனம் உரசினால் காவல்துறையை அழைக்கவேண்டும். அதை விட்டுவிட்டு டிரைவரை இறங்கச் சொல்லியுள்ளார். இதற்குள் போராட்டம் வேறு.. :huh:

தற்பாதுகாப்புக்குத்தான் வாகனத்தை கிளப்பினேன் என்று வெள்ளை கதையை மாற்றிவிடுவார். :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

இது தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தீப் சிங், போலீஸிடம் அளித்த ஒலிப்பதிவில், "நான் சீக்கியர் என்பதாலேயே தாக்கப்பட்டேன். மிகுந்த வலியை தாங்கி கொண்டு இருக்கிறேன்.

 

சந்தீப் சிங்....  தலைப்பாவும், தாடியும் வைத்திருந்த படியால் தான்....

லாரி ஓட்டுனருக்கு, இவர் சீக்கியர் என்று தெரிந்திருக்கு.

அதான்.... லாரியாலை, சும்மா உரசிப் பாத்திருக்கிறார்.

கடைசியிலை... சந்தீப் சிங்கின்ரை வாய்க் கொழுப்பாலை.... உயிருக்கே போராட வேண்டி இருக்கு.

Link to comment
Share on other sites

வாகனம் வந்து எங்களில முட்டினாலும் நாங்களே போய் வாகனத்தில முட்டினாலும் அதிக சேதம் வாகனத்துக்கு இல்லை என்பது தெரியாமல் இருந்திருக்கிறார் எங்கள் சர்தாஜி. எங்கள் பாதுகாப்பு எங்கள் கைகலில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.