Jump to content

இது குடும்பப்பிரச்சினை - நீ ததலையீடாதே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

24ந்திகதி நல்லிரவு 23 மணி 30 நிமிடங்கள் இருக்கலாம். நல்ல குளிர். ஒரு பிறந்தநாள் விழாவுக்கு போய்விட்டு வெளியில் வந்து எனது வாகனத்தடிக்கு போய் மனைவி பிள்ளைகளை காருக்குள் ஏறும்படி சொல்லிக்கொண்டிருந்த எனக்கு தமிழில் யாரோ கதைக்கும் சத்தம் கேட்க திரும்பிப்பார்க்கின்றேன்.

2 ஆண்கள்

3 பிள்ளைகள் (5 வயது 3 வயது 2 வயது இருக்கலாம்.)

பிள்ளைகள் கையில்லாத ரீ சேட் மட்டும் அணிந்துள்ளனர். வேறு எதுவித உடுப்பும் இல்லை. காலில் சொக்சோ சப்பாத்தோ இல்லை. ஊ.... ஊ என நடுங்கி அழுதபடியுள்ளனர்.

நான் : அண்ணன்மார் பிள்ளையள் நடுங்கினம் வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு போங்கோ

அதில் ஒருவர் : அது என்ர பிள்ளை எனக்கு தெரியும் நீ உன்ரை வேலையைப்பார்த்துக்கொண்டு போ.

நான் : அண்ணை பாவம் பிள்ளையள். காலிலும் ஒன்றுமில்லை. நநடுங்கினம். வருத்தம் வரப்போகுது. வீட்டுக்குகுள்ள போங்கோ

அவர் என்னை நெருங்கி வருகிறார்.

அடுத்தவர் அண்ணை வாள் வைத்திருக்கிறார். கவனம். அத்துடன் மனைவியை இவர் வெட்டப்போகத்தான் அவா இந்தப்பக்கத்தால ஓடிட்டா.

கிட்டவந்தவர் : உம்முடைய வேலையைப்பார்த்துக்கொண்டு போகப்போறியளே இல்ல????

நான் : அண்ணை இப்பவும் என்ர வேலையைத்தான் பார்க்கிறன்.

அவர் : என்ர குடுடும்ப விடயத்தில் தலையிடுறது உங்கட பிரச்சினையே?

நான் : அண்ணை வீட்டுக்குள்ள இருந்தால் அது உங்கட பிரச்சினை உங்கட மனைவியோட நடக்கிறதும் உங்கட பிரச்சினை. ஆனால் இந்த குளிரில இந்த பச்சைப்பிள்ளையள நடுங்கவிட்டு நிற்கிறது பொதுப்பிரச்சினையண்ணை

அவர் : அப்போ பொலிசுக்கு அறிவிப்பீரே?

நான் : மகனைப்பார்த்து பொலிசுக்குகு அறிவி

அவர் : அண்ணை ஏன் தேவையற்ற விடயத்தில் மூக்கை நீட்டி எனது கோபத்துக்கு ஆளாகிறீர்கள். உங்க வேலையைப்பார்த்துக்கொண்டு போங்கோ

நான் : அண்ணை மீண்டும் மீண்டும் சொல்லுறன் பிள்ளைகளை வீட்டுக்குள்ள கொண்டு போங்கோ

அவர் எனதருகில் வருகிறார்

நான் மற்றவருக்கு கண்ணைக்காட்டுகிறேன். பிள்ளைகளை தாய் போன பக்கம் கொண்டு போகும்படி.

அவர் மெல்ல நகர்கிறார்.

இவர் என்னை நெருங்கி எனது கார் இலக்கத்தை பதிவு செய்கிறார்.

நான் .: அண்ணை என்ர வீட்டு விலாசம் வேணுமே நான் தாறன். அதுக்கேன் கார் இலக்கமெல்லாம் எழுதி மினக்கெடுவான்.

அவர் :: தன் ரீ சேட்டைக்களட்டுகிறார். பாரும் என்ர உடம்பெல்லாம் காயம். நான் தமிழருக்காக பட்ட காயங்கள்....

நான் ; இடை மறித்து அண்ணை நான் இங்க தமிழன் சிங்களவவன் பிரெஞ்சுக்காறன் என்று பேசவரல. மனிதனாகத்தான் கதைக்கிறன்.

அவர் ; கோபம் வந்தவராய் உனக்கு சொன்னால் கேட்காது என்று கொஞ்சம் தள்ளி எதையோ எடுப்பதற்காக ஓடுகிறார். மீண்டும் வருகின்றார். பொக்கற்றுக்குள் ஏதோ இருப்பது தெரிகிறது.

அவர் (அதி உச்ச சத்தத்தில்): : நீர் போகப்போறீரோ இல்லையோ.

நான் பதில் சொல்லும் முன் எனது அக்கா மகன் எனதருகில் வந்து மாமா நீங்க காரில ஏறுங்க என்கிறான்.

நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த நான் ( அவரின் மூக்குக்கு நேரே கேயை வைத்து முகமெல்லாம் கோபம்கக்க ): என்னைப்பற்றி உனக்கு தெரியாது. பிள்ளையைப்பெத்தா மட்டும் காணாது. அதை நல்லபடியா வளர்க்கணும். அப்படி இல்லையென்றால் நான் வருவன் கேட்பன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வன் என்றவுடன் அடங்கிப்போனவர் போக வெளிக்கிடுகிறார்.

போறவரிடம் நான் : என்றாவது ஒரு நாள் நான் செய்தது சரி என்று உனக்கு தெரியும். இல்லையென்றாலும் உன் பிள்ளை அதை உனக்கு ஒரு நாள் ஞாபகப்படுத்துவான். அவன் என்னை ஞாபகம் வைத்திருப்பான் என்றவாறு புறப்படுகின்றேன்.

குறிப்பு : நீங்கள் அந்த இடத்திலிருந்தால் என்ன செய்வீர்கள்???

Link to comment
Share on other sites

துணிந்து அசராமல் ஒருவரின் முகத்துக்கு முன் உண்மையை சொன்னால் ஒருவர் வேண்டா வெறுப்பாகவேனும் ஏற்றுக் கொண்டு அடங்கி போவர் என்பதுக்கு இந்தச் சம்பவமும் எடுத்துக் காட்டு

உங்கள் நிலமையில் நான் இருந்திருந்தால் இப்படி பொறுமையாக நடந்து இருக்க மாட்டன். அடி கொடுத்து அடி வாங்கிக் கொண்டு வந்து இருப்பன்

மற்றது,

நீங்கள் எழுதிய விதம், எழுத்து நடை நன்றாக இருக்கு,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையெல்லாம் விறுவிறுத்தது ஐயா

ஆனால் எனது நோக்கம் கெட்டு வேறு விதமாக ஆகிவிடுமே...

எனது குடும்பத்துக்கும் ஆச்சரியம்தான் நான் இவ்வளவு பொறுமையாக பேசியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றால் தமிழில் கதைக்கினம் எண்டாலே அங்காலப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் போயிட்டிருந்திருப்பன். ஏன்னா தமிழ் ஆக்கள் சொல்லிக் கேட்கக் கூடிய ஆக்களில்ல. எல்லாரும் தமக்கு எல்லாம் தெரியும் என்ற பேர்வழிகள்.

ஆக முத்திப் போயிருந்தால்.. தமிழோ.. என்னமோ.. ஒரு குற்றம் நிகழ்த்தப்பட போகிறது என்றால் காவல்துறைக்கு அறிவிச்சிட்டு பேசாமல் போயிருப்பன்.

விசுகு அண்ணரின் துணிச்சல் பாராட்டத்தக்கது. சில இடத்தில் துணிச்சலை விட விவேகம் இருக்கனும். அவன் கத்தியோட.. கன்னோட வர நாங்கள் சும்மா வெறும் கையோட நிண்டு ஒன்றும் செய்ய இயலாது. அந்த இடத்தில் பலத்தை விட புத்தியை பாவிப்பது நன்று. மேற்குநாடுகளில் நாங்கள் புத்தியை பாவிப்பதே சிறப்பு.

நேற்றைய தினம் கூட வெள்ளையர்களால் ஒரு இந்திய மாணவன் மன்செஸ்ரர் நகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். ஒரு சிறிய விவாதமே இதற்கு காரணம். :icon_idea:

A second teenager has been arrested in connection with the shooting of a 23-year-old student from India in an "unprovoked attack" in Salford.

http://www.bbc.co.uk/news/uk-england-manchester-16337361

Link to comment
Share on other sites

குரங்குக்கு புத்தி சொல்லப் போய் தன கூட்டை இழந்த தூக்கணாம் குருவியின் கதைதான் ஞாபகம் வருகிறது.

முன்பென்றால் காதைப் பொத்திக் கொடுத்திருப்பேன். மற்றவர்களுக்கு நல்லது செய்யப் போய், பட்ட அனுபவங்களிலிருந்து இப்பெல்லாம் 'துட்டனைக் கண்டால் தூர விலகு' எனும் இராசதந்திர நகர்வுகள்தான்.

உங்களுக்கு ஏதும் நடந்திருந்தால் உங்களை நம்பி இருப்பவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்பட்டிருக்கும்.

Link to comment
Share on other sites

நான் என்றால் தமிழில் கதைக்கினம் எண்டாலே அங்காலப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் போயிட்டிருந்திருப்பன். ஏன்னா தமிழ் ஆக்கள் சொல்லிக் கேட்கக் கூடிய ஆக்களில்ல. எல்லாரும் தமக்கு எல்லாம் தெரியும் என்ற பேர்வழிகள்.

அப்போ யாழ்கொம்மில நீங்க எழுதும் அறிவுரைகள் யாருகாக? :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ யாழ்கொம்மில நீங்க எழுதும் அறிவுரைகள் யாருகாக? :icon_idea::rolleyes:

யாழில எழுதுறதுகளை யாராவது கேட்டு நடக்கினம் என்று நம்புறீங்க. ஐயோ ஐயோ..! ரெம்ப அப்பாவியா இருக்கீங்களே..!

நாங்க எழுதிறது கேட்டு நடப்பினம் என்பதற்காக அல்ல.. ஒரு செய்தியாக என்றாலும் எங்க எண்ணங்கள் இந்தச் சமூகத்தில் பதியப்படனும் என்பதற்காகவே..! எண்ணங்கள் எமக்குள்ளேயே மரித்துப் போவதிலும்.. இது பறுவாயில்லை என்பது தான் யதார்த்தம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை.அப்படி நடந்தால் காவல் துறைக்கு ஒரு கோல் அவளவுதான்.

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா,

விவகாரமில்லாமல் முடிந்ததில் மகிழ்ச்சி.. :rolleyes:

ஆனால் நீங்கள் காவல்துறைக்கு அறிவித்திருக்க வேணும்..! :( இன்று போன அந்த ஆள் நாளையும் பிள்ளைகளைக் குளிரில் விட்டு வதைக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? :unsure:

Link to comment
Share on other sites

உடனடியாக காவல்துறை தான்.பிள்ளைகளிலேயே குளிரில் காய விட்டவர் மற்றவரின் ஆலோசனையை கேட்பார் என நான் நினைக்கவில்லை.

என்றாலும் விசுகு அண்ணா உங்களின் விசப்பரீட்சை பாராட்டத்தக்கது. இனிமேல் வாயை கொடுக்காதீர்கள்.இப்படி பல கிறுக்குகள் அலைந்த வண்ணமே உள்ளார்கள்.

மேற்கு நாடுகளில் சட்டத்தை நாம் கையில் எடுப்பதை யாருமே விரும்புவதில்லை.காவல் துறை அதற்காக தானே உள்ளார்கள்.மேலும் குழந்தைகள் விடயம் என்றால் காவல்துறை எப்படி மிக கடுமையாக கையாளுவார்கள் என்பது நீங்கள் அறியாததா??

reason for edit: spelling :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், வேலியில போற ஓணானை வேட்டிக்குள்ள புடிச்சு விடுகிற வேலை நீங்கள் பார்த்தது!

நல்ல வேளை, நீங்கள் முழுத் துண்டாக இருக்கிறது!

இப்படியானவர்கள் குடித்து இருக்கக் கூடும். அவர்கள் மனநிலையை, அவர்களால் கட்டுப் படுத்த முடியாமல் இருக்கலாம்!

முதலில் நீங்கள் சுட்டிக் காட்டியது தவறல்ல. உங்களுக்குள் இருக்கும், மனிதம், தந்தை என்ற உணர்வுகளின் வெளிப்பாடு அது!

ஆனால் தொடர்ந்திருக்கக் கூடாது! உங்கள் மொபைலில் போலீசுக்கு அறிவித்திருப்பதே சரி போல எனக்குப் படுகின்றது!

அவர்களை விட, நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மிகவம் தேவையானவர்!

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா உங்களின் மனிதாபிமானத்திற்குப் பாராட்டுக்கள், இருப்பினும் காவல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுப்பதன் மூலமே அவர்களின் எதிர் கால நடவடிக்கைகளைக் கவனிக்க முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. கணவன் மனைவி பிரச்சனையில் பாவம் அந்தக் குழந்தைகள் என்ன பிழை செய்தார்கள்? நீங்கள் கூறியது போல் அந்தக் குழந்தைகள் அந்த நிகழ்வினை மறக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணனை நல்ல ஒரு நாடகம் பார்த்த மாதிரி

இருந்தது விசுகு அண்ணா.

எதுக்கும் கொஞ்ச நாட்கள் அவதானமாக இருக்கவும்.

பெற்றோரின் சில்லெடுப்பில் இப்படி ஆயிரமாயிரம்

குழந்தைகள் நடுவீதியில் நிற்கின்றனர்.

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா உங்களின் மனிதாபிமானத்திற்குப் பாராட்டுக்கள், இருப்பினும் காவல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுப்பதன் மூலமே அவர்களின் எதிர் கால நடவடிக்கைகளைக் கவனிக்க முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. கணவன் மனைவி பிரச்சனையில் பாவம் அந்தக் குழந்தைகள் என்ன பிழை செய்தார்கள்? நீங்கள் கூறியது போல் அந்தக் குழந்தைகள் அந்த நிகழ்வினை மறக்க மாட்டார்கள்.

தயவு செய்து இப்படியான கட்டத்தில் காவல் துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்ககூடாது.அப்படி கொடுப்பதால் இவர்கள் எந்த சமயத்திலும் இணையமுடியாது.தகப்பன் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டால் பிள்ளையின் பிற்காலம் பாதிக்கும்.உதாரணத்திற்கு இவரின் பிள்ளைகள் மருத்துவம் படிப்பதே கேள்விக்குறி?இதேபோலத்தான் மட்டையில் மாட்டுப்பட்ட குடும்பங்களின் நிலை.ஆகவே முடிந்தளவு சமாளித்திருக்கிறார்

Link to comment
Share on other sites

தயவு செய்து இப்படியான கட்டத்தில் காவல் துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்ககூடாது.அப்படி கொடுப்பதால் இவர்கள் எந்த சமயத்திலும் இணையமுடியாது.தகப்பன் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டால் பிள்ளையின் பிற்காலம் பாதிக்கும்.உதாரணத்திற்கு இவரின் பிள்ளைகள் மருத்துவம் படிப்பதே கேள்விக்குறி?இதேபோலத்தான் மட்டையில் மாட்டுப்பட்ட குடும்பங்களின் நிலை.ஆகவே முடிந்தளவு சமாளித்திருக்கிறார்

அவற்றை உணர்ந்தல்லவா ஒரு தகப்பன் நடந்து கொள்ள வேண்டும்? விசுகு அண்ணா குறிப்பிட்டது போல் நாடு இரவில் ஐந்து வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகளை குளிர் தாங்காத உடுப்போடு வீட்டுக்கு வெளியில் வைத்து அந்தக் குழந்தைகளின் மனநிலையை காயப்படுத்துபவர் ஒரு நல்ல தந்தையாக இருப்பது சந்தேகமே.. பிள்ளைகளின் பிற்காலம் பாதிக்கும் என்று நினைத்திருந்தால் அவரை அப்படியான ஒரு சூழ்நிலையில் விசுகு அண்ணா பார்த்து இருக்க மாட்டார்.

கணவன் மனைவிக்குள் தினமும் பிரச்சனை வருவது யாவரும் அறிந்ததே... ஆனால் அவை தாம் பெற்ற குழந்தைகளைப் பாதிக்காதது போல் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.

சில பேர் தாங்கள் செய்வதை எல்லாம் செய்து விட்டுத் தப்புவதற்காக இப்படியான செண்டிமெண்ட் கதைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணிந்து நின்ற விசுகு அண்ணா கொஞ்சம் மனிதம் இருந்த மற்றையவரால் (அல்லது தமிழன் என்ற இரக்கமோ தெரியவில்லை) விட்டுவைக்கப்பட்டிருப்பதாகவே எனக்குப் படுகின்றது. இந்த அசட்டுத் துணிவு மோசமான விளைவுகளைத் தந்திருந்தால்...

கடுங்குளிருக்குள் பிள்ளைகளை பாதணிகள்கூட இன்றி வெளியில் நிறுத்தியவரை சட்டத்தின் முன்னர் நிறுத்துவதுதான் அப்பிள்ளைகளுக்கு நல்லது. அறிவுரை கேட்டு சடுதியாகத் திருந்தக்கூடியவர்கள் என்பதெல்லாம் நடமுறையில் சரிவராது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இப்படியான கட்டத்தில் காவல் துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்ககூடாது.அப்படி கொடுப்பதால் இவர்கள் எந்த சமயத்திலும் இணையமுடியாது.தகப்பன் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டால் பிள்ளையின் பிற்காலம் பாதிக்கும்.உதாரணத்திற்கு இவரின் பிள்ளைகள் மருத்துவம் படிப்பதே கேள்விக்குறி?இதேபோலத்தான் மட்டையில் மாட்டுப்பட்ட குடும்பங்களின் நிலை.ஆகவே முடிந்தளவு சமாளித்திருக்கிறார்

இப்படிக் குடும்பம் குலையும் என்று பார்த்தால் ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தைகள் குளிரிலும் மனைவி மரணபயத்தோடும் வாழ வேண்டியது தான். மிக நல்ல ஆலோசனை சொன்னீர்கள் அய்யா! அது சரி தகப்பன் கிரிமினல் குற்றம் செய்தால் மகனுக்கு மருத்துவம் படிக்கக் கிடைக்காது என்பது நம்பக் கூடிய ஒரு மேற்கு நாட்டு நடைமுறை போலத் தெரியவில்லையே? எங்கே கேள்விப் பட்டீர்கள் இந்தப் புதுமையான "தேச வழமை" ச் சட்டத்தை?

Link to comment
Share on other sites

இப்படிக் குடும்பம் குலையும் என்று பார்த்தால் ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தைகள் குளிரிலும் மனைவி மரணபயத்தோடும் வாழ வேண்டியது தான். மிக நல்ல ஆலோசனை சொன்னீர்கள் அய்யா! அது சரி தகப்பன் கிரிமினல் குற்றம் செய்தால் மகனுக்கு மருத்துவம் படிக்கக் கிடைக்காது என்பது நம்பக் கூடிய ஒரு மேற்கு நாட்டு நடைமுறை போலத் தெரியவில்லையே? எங்கே கேள்விப் பட்டீர்கள் இந்தப் புதுமையான "தேச வழமை" ச் சட்டத்தை?

கனடாவில் இருக்கிறது.BACK ROUND CHEAKUP FOR CLEARANCEபார்க்கும் போது இவையாவும் வெளியே வரும்,எனக்கு தெரிந்தவரின் மகள் இங்கு படிக்க முடியாமல் பிரான்சில் படித்தவர்.மீண்டும் வேலை செய்ய வந்த போது வேலை செய்யும் அனுமதிப்பத்திரம் (LICENCE) வழங்க மறுத்துவிட்டனர்.தற்போது அவர் ஆபிரிக்காவில் வேலை செய்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றால் தமிழில் கதைக்கினம் எண்டாலே அங்காலப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் போயிட்டிருந்திருப்பன். ஏன்னா தமிழ் ஆக்கள் சொல்லிக் கேட்கக் கூடிய ஆக்களில்ல. எல்லாரும் தமக்கு எல்லாம் தெரியும் என்ற பேர்வழிகள்.

ஆக முத்திப் போயிருந்தால்.. தமிழோ.. என்னமோ.. ஒரு குற்றம் நிகழ்த்தப்பட போகிறது என்றால் காவல்துறைக்கு அறிவிச்சிட்டு பேசாமல் போயிருப்பன்.

விசுகு அண்ணரின் துணிச்சல் பாராட்டத்தக்கது. சில இடத்தில் துணிச்சலை விட விவேகம் இருக்கனும். அவன் கத்தியோட.. கன்னோட வர நாங்கள் சும்மா வெறும் கையோட நிண்டு ஒன்றும் செய்ய இயலாது. அந்த இடத்தில் பலத்தை விட புத்தியை பாவிப்பது நன்று. மேற்குநாடுகளில் நாங்கள் புத்தியை பாவிப்பதே சிறப்பு.

நேற்றைய தினம் கூட வெள்ளையர்களால் ஒரு இந்திய மாணவன் மன்செஸ்ரர் நகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். ஒரு சிறிய விவாதமே இதற்கு காரணம். ய்

நன்றி தம்பி கருத்துக்கு

ஆனால் நாமெல்லாம் பிரபாகரனின் தம்பிகள் என்பது உதைக்குது.

தீமையைக்கண்டால் தட்டிக்கேட்கணும்.

சொல்லில் அல்ல செயலில்???

குரங்குக்கு புத்தி சொல்லப் போய் தன கூட்டை இழந்த தூக்கணாம் குருவியின் கதைதான் ஞாபகம் வருகிறது.

முன்பென்றால் காதைப் பொத்திக் கொடுத்திருப்பேன். மற்றவர்களுக்கு நல்லது செய்யப் போய், பட்ட அனுபவங்களிலிருந்து இப்பெல்லாம் 'துட்டனைக் கண்டால் தூர விலகு' எனும் இராசதந்திர நகர்வுகள்தான்.

உங்களுக்கு ஏதும் நடந்திருந்தால் உங்களை நம்பி இருப்பவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்பட்டிருக்கும்.

தங்களைப்போன்றவர்களின் இது போன்ற கருத்துக்களை பல இடங்களில் பார்த்ததும் மிகவும் கவலைப்படுவேன். என் இனத்துக்காக போராடப்புறப்பட்டவர்களின் மனங்கள் இப்படி ஆகிவிட்டதே என்று.

எமது தோல்விகளுக்கு இதுவே காரணம்.

மற்ற அனைவருமே காவல்துறைக்கு அறிவிக்க வேண்டும் என்பதையே கூறியுள்ளீர்கள்.

எனது மூத்தமகனிடம் காவல்துறைக்கு அறிவிக்கச்சொன்னேன். அவன் தயக்கம் காட்டினான். காரணம் இங்கு காவல்துறையில் இது போன்ற முறைப்பாடுகளைச்செய்பவர்களை அவர்கள் அலைக்கழிக்கும் நிலையுள்ளது. அத்துடன் அவர்கள் வரமுன் விபரீதம் நடந்துவிட்டால் நாமும் உள்ளே போகவேண்டிவரும் என்ற நிலை.

நானும் மீண்டும் மகனை வற்புறுத்தவில்லை.

காரணம் பிள்ளைகள் தாயிடம் போய்விட்டார்கள்.

அடிப்படையில் இது ஒரு கொலைக்குறறம்

அதாவது உயிருக்கு பயந்து தப்பி ஓடிய மனைவியை வரவழைப்பதற்காகவே இவர் நித்திரையாககக்கிடடந்த பிள்ளைகளை அப்படியே தூக்கிக்கொண்டுவந்து குளிரில் பணயம் வைக்கிறார். தாய் பிள்ளைகளின் நிலை கண்டு இரங்கி வருவார் என்று.

அந்தவகையில் இது காவல்துறைக்குப்போனால் வாழ்நாள் பூராகவும் இவருக்கு இனி பிள்ளைகளைச்சந்திக்க சந்தர்ப்பம் கொடுக்க மாட்டார்கள். எவருக்குமே கெடுதல் செய்யும் நோக்கம் எனக்கில்லை.

அத்துடன் இந்த குடும்பச்சிக்கல்களில் தலையிட்ட பெரும் அனுபவம் எனக்குண்டு. இடியப்ப சிக்கல்களை எடுத்து தீர்த்துவிடலாம். ஆனால் இது சவ்வு மாதிரி இழுபட்டுக்கொண்டேயிருக்கும். மனைவியே வந்துது என்ர மனுசனை திருத்த நீ யார் என்றும் கேட்கலாம். உன்ர வேலையைப்பார் என்றும் சொல்லலாம். எனக்குத்தேவை பிள்ளைகள் தாயிடம் அல்லது அந்த இடத்தைவிட்டு போவது. அதன் பின் அடுத்தநாள் அவர்கள் தங்களுக்குள் முடிவெடுப்பதுதான் சிறந்தது.

எல்லாம் முடிய ஒரு அரை மணித்தியாலம் அந்த இடத்தை சுற்றி திரிந்து அன்றிரவு இனி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்ற பின்பே வீடு திரும்பினேன். அதுவரை எனது மனைவியும் காரை வீட்டுக்கு திருப்ப அனுமதிக்கவில்லை.

அத்துடன் எனது பாதுதுகாப்புக்குறித்து அச்சம் தெரிவித்த உறவுகளுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

கனடாவில் இருக்கிறது.BACK ROUND CHEAKUP FOR CLEARANCEபார்க்கும் போது இவையாவும் வெளியே வரும்,எனக்கு தெரிந்தவரின் மகள் இங்கு படிக்க முடியாமல் பிரான்சில் படித்தவர்.மீண்டும் வேலை செய்ய வந்த போது வேலை செய்யும் அனுமதிப்பத்திரம் (LICENCE) வழங்க மறுத்துவிட்டனர்.தற்போது அவர் ஆபிரிக்காவில் வேலை செய்கிறார்

நீலப்பறவை,

அந்தப் பிள்ளைகள் முதலில் ஒழுங்காகப் படித்து முன்னுக்கு வரமுடியுமா? பிறகு மருத்துவத்தைப் பற்றிப் பார்க்கலாம்..!

இவரைப் பற்றிக் காவல்துறைக்கு அறிவித்தால், எடுத்த மாத்திரத்தில் இவர் சிறைக்குப் போகமாட்டார்..! இவருக்கு வழங்கப்படும் எச்சரிக்கையே இவரை வழிக்குக் கொண்டு வரலாம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில எழுதுறதுகளை யாராவது கேட்டு நடக்கினம் என்று நம்புறீங்க. ஐயோ ஐயோ..! ரெம்ப அப்பாவியா இருக்கீங்களே..!

நாங்க எழுதிறது கேட்டு நடப்பினம் என்பதற்காக அல்ல.. ஒரு செய்தியாக என்றாலும் எங்க எண்ணங்கள் இந்தச் சமூகத்தில் பதியப்படனும் என்பதற்காகவே..! எண்ணங்கள் எமக்குள்ளேயே மரித்துப் போவதிலும்.. இது பறுவாயில்லை என்பது தான் யதார்த்தம்..! :):icon_idea:

நெடுக்ஸ் அண்ணாக்கு ஒரு பச்சை. இது தான் எப்பவும் எனது நிலைப்பாடு..

எங்க கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்றே தவிர கேட்பார்கள் என்று நினைத்து அல்ல. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை சொல்லும் காரணம் எனக்கு இன்னும் நம்ப இயலாமல் இருக்கிறது. ஒரு தகப்பனின் வன்முறையினால் பிள்ளை பாதிக்கப் பட்ட நிலையில் அந்தப் பிள்ளையின் எதிர்காலத்தை தகப்பனின் வன்முறைக்காகப் பலியிடுவார்கள் என்பது எனக்கு நம்ப முடியவில்லை. அப்படி இருந்தால் (இந்த கேஸ் விசயத்தில்) மேலதிக அப்பீல் மூலமோ அல்லது சட்டத்தை மாற்ற முயற்சிப்பது மூலமோ தீர்வு தேட வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இதுவும், மேலே விசுகு காவல்துறையை அழைக்காமைக்குக் கூறிய காரணங்களும் வீட்டு வன்முறை எங்கள் சமூகத்தில் வெளிவராமல் தொடர வழி வகுக்கின்றன. ஊரில் சமூகத்திற்குப் பயந்து கொடுமை செய்யும் தகப்பனைக் காப்பாற்றும் நடைமுறை.புலத்திலோ காவல் துறையின் பக்கம் போகப் பயந்து கொடுமைக்கார அப்பனைக் காப்பற்றி வைத்திருக்கும் நடைமுறை. இந்த அப்பாக்கள் அதிர்ஷ்ட சாலிகள். ஆனால் காலப்போக்கில் "கௌரவக் கொலை" செய்யும் குடும்பத்தினரைக் காப்பாற்றும் பாகிஸ்தான் குடியேறிகளை தமிழர்கள் மிஞ்சி விடப்போகிறோம்!

Link to comment
Share on other sites

நீலப்பறவை சொல்வது போன்ற கருத்துக்கள் ,அதைவிடவும் எம்மவர் பலர் நாம் என்றுமே கேட்டறியாத சட்டங்கள் ,விதிகள் எல்லாம் சொல்வார்கள் நான் அப்படி ஒன்றும் கேள்விப்படவில்லை ,யாருக்கும் நடந்ததோ தெரியாது .

நானென்றால் அங்கும் இங்கும் துள்ளி எழும்பி நாலு போடு போட்டிருப்பேன் .அவர் படம் பார்த்து வளர்ந்த ரசிகர்கள் அவர் மாதிரி செய்யாவிட்டால் பிறகு இருந்தென்ன செத்தென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கேள்விபட்டு இருக்கிறேன் .......ஒருதடவை போலிஸ் சம்பந்தமான சிக்கல்களில் உங்கள்பெயர் பதியப்பட்டால் அது உங்கள் முன்னேற்றதுக்கு தடைக்கல்.....சிலவிடயங்க்ளுக்கு பொலிஸ் கிளியரன்ஸ் (சான்றுப்பத்திரம் ) கேட்பார்கள் . நிரந்தர அனுமதி குடியுரிமை போன்றவை பாதிக்கப் படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணாவின் தலைப்பையும்,எழுத்தையும் பார்த்து நான் பயந்து விட்டேன்[யாழில் தான் யாருக்கோ பேச்சு விழுதாக்கும் :D ]..நான் என்டால் அந்தாள் நல்ல வெறியில் இருந்தால்[அப்பத் தான் அந்தாளால் திருப்பி அடிக்க முடியாது :lol: ] சப்பாத்தைக் கழட்டி இரண்டு கொடுத்திருப்பன் இல்லா விட்டால் பொலீசுக்கு போயிருப்பன் ...கோழைகள் மாதிரி விட்டுட்டுப் போகாமல் நின்ட விசுகு அண்ணாவிற்கு பாராட்டுகள் :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.