Jump to content

தண்டனை விலக்கல் கலாசாரம் ஆழமாக வேரூன்றி வருவது யாருக்கும் நல்லதல்ல


Recommended Posts

தண்டனை விலக்கல் கலாசாரம் ஆழமாக வேரூன்றி வருவது யாருக்கும் நல்லதல்ல

அமெரிக்கா மற்றும் பல மேற்கு நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தற்போதைய 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்துள்ளதாகிய இலங்கைக்கு எதிரானதென்று கூறப்படும் பிரேரணை மீது 22. 03. 2012 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இலங்கை இரு நாடுகள் தரப்பிலும் மனித உரிமைகள் சபை அங்கத்துவ நாடுகள் மத்தியில் கடந்த பல நாட்களாக சூறாவளிப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காணலாம். குறித்த பிரேரணையானது வெற்றியை எட்டக் கூடிய அளவுக்கு ஆதரவுள்ளதாக அறிக்கைகள் காணப்படுவதால் ராஜபக்ஷ அரசாங்கம் கவலை அடைந்துள்ளதைக் காணலாம். எவ்வாறாயினும் இலங்கை தரப்பிலும் குறிப்பிடத்தக்களவு ஆதரவு திரட்டப்பட்டு வந்துள்ளதாக அறியக் கிடக்கிறது. இருந்த போதிலும் வெற்றி இலங்கையின் கைக்கெட்டும் என்று கூறுவதற்கில்லை என ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்யப்படும் அதே வேளை இலங்கை தரப்பில் வேகமான காய் நகர்த்தல்கள் அதிகளவு அங்கலாய்ப்புகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதியின் அறை கூவல்

சென்ற மாதம் 27 ஆம் திகதி முதல் இலங்கை அரச தரப்பில் மேற் குறித்த பிரேரணைக் கெதிராக நடத்தப்பட்டு வருவதற்கப்பால் “இலங்கை மீது கை வையாதே“ இலங்கை மக்களே கிளருங்கள் என ஜனாதிபதி ராஜபக்ஷ சென்ற வாரம் அலரி மாளிகையில் அமைச்சர் விமல் வீரவன்ச சகிதம் வீடமைப்பு விடயம் தொடர்பானதொரு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அறை கூவல் விடுத்தார்.

இலங்கைக்கு வெளிநாட்டு அறிவுறுத்தல்கள், தலையீடுகள் எதுவுமே தேவையில்லை என்று அவர் கூறியதோடு யுத்தத்தில் வெற்றியீட்டிய கட்டத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார். அதாவது பயங்கரவாதம் என்ற ஈனத்தை முறியடிப்பதற்கு கூலிப்படைகளை அமர்த்தவில்லை. உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட இராணுவ மூலோபாயத்தின் அடிப்படையில் எமது தளபதிகள் வழி நடத்தலில் முற்றிலும் எமது வீரதீரமான படையணியினராலேயே யுத்தம் நடத்தப்பட்டது என்று கூறியதோடு நின்று விடாமல் எமது கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்களின் அடிப்படையில் நாட்டை நடத்திச் செல்வதற்கு வேண்டிய அறிவு, ஆற்றல், பலம் யாவும் இலங்கையில் உண்டு. அந்நிய சக்திகளிடமிருந்து கற்றுக் கொள்வதற்கோ எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு வழி காட்டுவதற்கோ ஒன்றுமே இல்லை என்று ஜனாதிபதி சூளுரைத்துள்ளார்.

மேலும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்றெல்லாம் பிரதேச வேறு பாடின்றி இனம், மதம், குலம் போன்றவை ரீதியாக வேறுபாடின்றி கிளர்ந்தெழ வேண்டும் என்றும் ஒரு தாய் பிள்ளைகள் ஆகிய நாம் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அவ்வாறாகவே இலங்கை மக்கள் எல்லோரும் சமாதானத்தின் பலனை அனுபவிக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார் அல்லவா?

நல்லாட்சி என்பது பலத்த கேள்விக் குறியாகியுள்ளது

ஜனாதிபதி ராஜபக்ஷ அலரிமாளிகையில் நிகழ்த்திய “ மலைப் பிரசங்கம்“ ஒரு வகையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்டு வந்ததன் மறு பதிப்பாகவும் நோக்க வேண்டியுள்ளது. பன்னிரண்டுக்கும் அதிகமான நாடுகள் யுத்தத்தின் வெற்றிக்குக் கை கொடுத்ததாக அன்று ஜனாதிபதி கூறி வைத்தது ஞாபகம்.

குறிப்பாக இந்தியா வழங்கிய பங்களிப்பினை அரசாங்க உயர் மட்டத்தினர் வெகுவாக பாராட்டினர். மற்றும் அமெரிக்கா வழங்கிய புலனாய்வு மற்றும் செய்மதி சேவைகள் யுத்த வெற்றிக்கு கைகொடுத்த விடயமும் தெரியாத ஒன்றல்ல. மற்றும் வெகு ஜீவகாருண்ய பாணியில் மிகக் கவனமாக அன்று நடத்தப்பட்டது “ மனிதாபிமான செயற்பாடுகள் என்று அரசாங்கம் நடித்து வந்ததாயினும் அதனை யுத்தம் என்று இன்று ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ளதைக் காணலாம்.

மற்றும் பிரதேச மற்றும் இன, மத, குல, வேறுபாடின்றி கிளர்ந்தெழ வேண்டும் என்று அழைப்பதற்கு ஒரு தார்மீக யோக்கியதை வேண்டுமல்லவா?

ஏனென்றால் மேற் குறித்த சகல விதமான வேறுபாடுகளையும் களைந்து அனைத்து மக்களையும் உள்ளீர்த்து நல்லாட்சி நடத்துவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் புறப்படும் என்பது பலத்த கேள்விக்குறியாக உள்ளது. முற்றிலும் மாறாக அரசாங்கத்துக்குள்ளேயே இடம் பெற்று வரும் அடாவடித்தனங்களின் பெறுபேறுகள் வெளிவந்தவண்ணமுள்ளன. சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை செய்யப்பட்டார். அந்த வரிசையில் வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் கொலைகள் ஆங்காங்கே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் கொலன்னாவை நகர சபைத் தலைவர் ரவீந்திர உதயசாந்தவை கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாயினும் அது பொது மக்களால முறியடிக்கப்பட்டு கடத்தல் காரர்கள் ஒப்படைக்கப்பட்டனராயினும் அவர்கள் இராணுவத்தரப்பினர் என்பதும் விரைந்து விடுதலை செய்யப்பட்டனர் என்பதும் உலகறிந்த விடயமாகி விட்டதல்லவா?

உதயசாந்த வேறு யாருமல்ல ஆளும் ஐ.ம.சு.மு. வைச் சேர்ந்த பிரமுகர் என்பதும் தெரியாததொன்றல்ல. கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி உதய சாந்தவின் சகோதரர் ஜானக்க பிரபாத் தொதபேக்ம இதே இராணுவ பிரமுகர்கள் சிலரால் கடத்தப்பட்டு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமலுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இன்று இலங்கை அரசாங்கம் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த தருணத்திலேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றனவென்றால் தண்டனை விலக்கல் கலாசாரமானது எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதையே வெள்ளிடை மலை போல காட்டுகின்றது. இன்று அரசாங்க கட்சிக்காரரே இலக்கு வைக்கப்பட்டு வரும் சூழலில் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடிக்கும் நாள் வந்து கொண்டிருக்கின்றதா என்ற கேள்வி விமர்சகர்களால் எழுப்பப்படுவதைக் காண முடிகிறது.

சம்பிக்க ரணவக்கையின் சித்து விளையாட்டு மற்றும் இன்றைய ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வுகள் மீது மீண்டும் நோக்குவோமாயின் முதற்கண் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் கவனத்தில் கொள்ளப்படக்கூடியதாகும். போர்க் குற்றச்சாட்டுகள் மீது விசாரணைகளை நடத்துவதற்கு சுயாதீனமான சர்வதேச சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அவர் ( ஆயர்) வேண்டுகோள் விடுத்திருப்பதன் காரணமாகவே அவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என்று தான் கூறியுள்ளதாக பத்திரிகையாளர்கள் மாநாட்டில் எழுப்பட்ட கேள்விக்கு ரணவக்க பதிலளித்தார்.

சரி அப்படியானால் இது தொடர்பான விண்ணப்பக் கடிதத்தில் ஒப்பமிட்ட ஏனைய 30 கத்தோலிக்க அடிகள் மாருக்கும் எதிராக வழக்குத் தொடர தேவையில்லையா என்று எழுப்பிய கேள்விக்கு மக்கள் யாரும் தத்தம் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குச் சுதந்திரம் உண்டு.

ஆயினும் அவர்கள் நல்லிணக்க முயற்சிக்கு எதிராக செயற்படுகின்றனர். அவர்கள் மன்னிக்கும் மனப்பான்மையுடன் நலமான எதிர் காலத்தை நோக்கி நிற்க வேண்டும் என்று ரணவக்க பதிலளித்தார். இனவாதத்தை வெறியாகக் கொண்டு இனக் கலவரம் ஒன்றினைத் தூண்டும் மனோ பாவத்தைக் கொண்டிருப்பவராகிய சம்பிக்க ரணவக்க நல்லிணக்கம் பற்றிப் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. ரணவக்க தனது அறிவுக்கு எட்டாத விடயங்கள் பற்றியே பேசுகிறார் என்று ஆயர் பதிலடி கொடுத்துள்ளதையும் காண முடிகிறது.

தூதுவர் தமரா குணநாயகம் பேசுகிறார்

அமெரிக்காவின் பிரேரணையானது இலங்கையில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதற்கு மேற்கு நாடுகள் கங்கணம் கட்டி நிற்பதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம் கூறியதை சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். பின்னர் தமரா அம்மையார் அளித்த பேட்டியொன்றில் இப் பிரச்சினை எழுப்பப்பட்ட போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கு நாடுகளின் பார்வையில் இலங்கை புவியியல் ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் அமைந்திருப்பதாலும் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாகவும் அதற்கப்பால் உலகில் மிக அதிகளவு பொருளாதார மற்றும் மனித வளங்களைக் கொண்டிருப்பதால் உலகாதிக்கம் செய்வதற்கு தென்கிழக்காசியாவில் தனது செல்வாக்கை வளர்ப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறதாயினும் இது சுதந்திரமானதும் இறைமையுள்ளதுமான இலங்கை அரசாங்கத்துக்கு, அது மட்டுமல்லாமல் உலகில் படு மூர்க்கத் தனமான பயங்கரவாத அமைப்பினை தோற்கடித்ததாகிய இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா கையாண்டு வரும் தந்திரோபாயங்கள் நிச்சயமாக ஒத்து வராதவை என்றும் அவர்கள் விரும்பும் அடி பணியும் அரசாங்கம் இலங்கையில் இன்று இல்லை என்றும் அர்த்தப்பட தமரா அம்மையார் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் கடைப்பிடித்து வருவது அப்பட்டமான இரட்டை வேடமும் ஆசாடபூதித்தனமும் ஆகுமென்றும் அவர் கடிந்துள்ளார். அது உண்மைதான் என்றாலும் கூட இலங்கை அரசாங்கமும் நிழற் கண்ணாடிக்கு முன்னால் நின்று தன்னைப் பார்க்க வேண்டிய தேவையை மறந்து விடமுடியாது.

மன்னார் ஆயருக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய ( ஜே. எச். யூ.) தரப்பினர் வழக்குத் தொடரப் போகிறார்களாமே என்று எழுப்பிய கேள்விக்கு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் (ஃஃகீஇ) ஏனையோரைப் போலவே ஆயரும் சாட்சியம் அளித்ததை அடுத்து அவர் எழுப்பிய விடயங்கள் தொடர்பாகவும் ஆணைக்குழு சில பரிந்துரைகளைச் செய்துள்ளது என்று தூதுவர் தமரா கூறியதோடு நாம் இப்போது சமாதானம் மற்றும் நல்லிணக்கப் பாதையில் பயணிக்கத் தலைப்பட வேண்டுமே தவிர சர்ச்சைகளிலும் முரண்பாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கத் வேண்டியதில்லை என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார். அத்தோடு நின்றுவிடாமல் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை தமரா அம்மையார் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ரோமா புரியில் வத்திக்கான் மையத்திற்கும் தான் சம காலத்தில் தூதுவராக பணியாற்றி வருவதால் ஙீஙஐ பாப்பாண்டவர் அருளப்பருடனும் வேறு பல வத்திக்கான உயர் மட்டத்தினரிடமும் கலந்துரையாடியதாகவும் அவர்கள் இலங்கை நிலைமை தொடர்பாக கொண்டிருக்கும் அறிவைப் பாராட்டியதோடு நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் அவர் அக மகிழ்ந்துள்ளதைக் காண முடிகிறது.

தூதுவர் என்பவர் ஒருவர் தனது நாட்டின் நன்மைக்காக வெளிநாடுகளில் தங்குபவர் என்று கூறப்படுவதுண்டு. அவர் பொய்களையும் கூறுபவர் என்றும் இது அர்த்தப்படும்.

மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக அதாவது வெளிநாடுகள் இலங்கை விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருத்து வெளியிட்டுள்ளதை யாரும் அறிவர். அதில் தவறில்லை. ஆனால் அவர் அநேகமான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் கருத்தை பிரதிபலித்து வருவதும் இலங்கை கத்தோலிக்க சமூகத்திற்குள் வடக்கு தெற்கு விரிசல்கள் உருவாகுவதைப் பார்த்து வாளா விருப்பதும்தான் கவலைக்குரியதாகும்.

http://www.thinakkural.com/articles/11431-2012-03-20-19-05-50.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.