Jump to content

அவல் தோசை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அவல் தோசை
ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (17:22 IST)
 
தேவையான பொருட்கள்:
 
கெட்டி அவல் - ஒரு கப் 
புளித்த மோர் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு. 
 
செய்முறை:
1397390157-6235.jpg
அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். 
 
பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். 
 
விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவல் தோசையைப் பற்றி... இப்போது தான் கேள்விப் படுகின்றேன்.
செய்முறையும், தேவையான பொருட்களும் குறைவாக உள்ளது.
கட்டாயம் செய்து பார்க்க வேண்டும். இணைப்பிற்கு.... நன்றி கறுப்பி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்போதுதான் பார்க்கிறேன். தோசைப் பிரியையான நான் உடனேயே இதை செய்து பார்ஹ்துவிட்டுத்தான் மறுவேலை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்போதுதான் பார்க்கிறேன். தோசைப் பிரியையான நான் உடனேயே இதை செய்து பார்ஹ்துவிட்டுத்தான் மறுவேலை

செய்து பார்த்து விட்டு எங்களுக்கும் சொல்லுங்கோ.  நாமும் ஒரு கை பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அவல் தோசையை இப்போதுதான் அறிகின்றேன். அவளிடம் செய்யச் சொல்ல வேணும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்று... அவல் தோசை செய்ய,
மினக்கெட்டு... இரண்டு மணித்தியாலம் கார் ஓடி, அவல் பக்கற் ஒன்றை வாங்கி வர...

மனிசி சொன்ன வாசகம், என்னை... நிலை குலைய செய்து விட்டது.
 

அவ‌ சொன்னனது, இது தான்... "இஞ்சையப்பா... நான் சொல்லாமலே, அவல் பக்கற் வாங்கியந்திட்டீங்கள். நீங்கள் சரியான... கெட்டிக்காரன். இதுக்குள்... சீனியும், சக்கரையும் போட்டுச் சமைச்சால்... நல்லாய், பிள்ளையளும்... விரும்பிச் சாப்பிடுவினம்"

 

அதன் பிறகு... எனது குரல், மௌனமாகி... உட்குரல்,
மடையா.... உனக்கு, இரண்டு அவல் பக்கற்ரை வாங்கத் தெரியாதோ? என்று கேட்டது...
 

இதுக்கு... நான் என்ன செய்ய?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

haferflocken-400-400.jpg அவலுக்கு பதிலாய் Haferflocken னும் போடலாமெண்டு நினைக்கிறன் சிறித்தம்பி.... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

haferflocken-400-400.jpg அவலுக்கு பதிலாய் Haferflocken னும் போடலாமெண்டு நினைக்கிறன் சிறித்தம்பி.... :rolleyes:

 

தகவலுக்கு... நன்றி, குமாராசாமி அண்ணை.

ஆனால்... நான் வேண்டியந்த அவலில்...

மட்டக்களப்பு சிவப்பு அவல் என்று எழுதியிருந்தது.

அதை... எதுக்குப், போடுறதண்டு.... குழப்பமாய்.. இருக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அவல் தோசையை இப்போதுதான் அறிகின்றேன். இதன் சுவை உளுந்து அரிசி மா தோசையை விட வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகின்றேன், செய்து பார்க்கவேண்டும். 

 

இணைப்பிற்கு.... நன்றி கறுப்பி.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.