Jump to content

கே.எஃப்.சி. சிக்கனை, வீட்டிலேயே செய்ய ஆசையா..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
01-broasted-chicken3434-600-jpg.jpg

 

கே.எஃப்.சி. சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..?

 

பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று ஆசை. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.

 

சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 

 

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

 

மாவிற்கு...

மைதா - 1 1/2 கப்
முட்டை - 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

 

கோட்டிங்கிற்கு...

பிரட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.

 

பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

 

இது போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!

 

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கே . எஃவ் . சி யில் முன்னங் கால் துண்டுகளுக்குத்தான் கிராக்கி...! அதில வெறும் மாவும் , மசாலாவும் தான். ஆ ஊ என்டு வாங்கிச் சாப்பிடுவாங்கள். முகத்தில் 100 வோல்ட் பிரகாசம்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்காச் செய்து பாக்கிறன், தமிழ் சிறி!

 

தற்செயலாக கே.எப்.சி க்குப் பதிலாக வேறு ஏதாவது வந்தால், ஜெர்மனிக்குத் தபாலில் அனுப்பக் கனக்கக் காசா வரும்?  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1350931965644.jpg

 

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி... பெருமாள், சுவி, புங்கையூரான். :)

 

நம்பினால் நம்புங்கள்... எனது வீட்டிலிருந்து, 400 மீற்ற‌ர் தூரத்தில் ஒரு KFC உணவகம் இருந்தும்,
இதுவரை அங்கு, அந்தக் கோழியை சாப்பிட்டுப் பார்க்கும்... சந்தர்ப்பமோ, அனுபவமோ கிடைக்கவில்லை.
இதனைத்தான்... எல்லாத்துக்கும், ஒரு கால நேரம் வர வேண்டும் என்று சொல்வார்களோ... :D

Link to comment
Share on other sites

இதிலே மைதா மாவின் உபயோகம் உள்ளது. மைதா மா வேறு, கோதுமை மா வேறு. மைதா மா உடல் நலத்திற்கு தீங்கு என்பதால் ஐரோப்பாவில் விற்கத் தடை என எங்கோ வாசித்த ஞாபகம் உள்ளது. எனினும் மைதா மாவில் தயாரிக்கப்பட்ட பரோட்டா ரொட்டி பைக்கற்றுகள் இறக்குமதியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. (இலங்கையில் இருந்து இறக்குமதியாபவை கோதுமை மாவில் தயாரிக்கப்படுபவை.)

:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும்போது செய்து பாக்கின்றேன்.  :)

 

இணைப்புக்கு நன்றி தமிழ் சிறி. 

Link to comment
Share on other sites

இது KFC STYLE இல் KFC மாதிரி இருக்கும் என்று நினைக்கின்றேன் .KFC தமக்கான ஒரு ரெசிப்பி வைத்திருக்கின்றார்கள் அதன் ரகசியம் தான் அவர்களின் வெற்றி .

உலகம் முழுக்க அந்த மாவையே (ரெசிப்பி ) அனுப்புகின்றார்கள் .பெரிய பரலில் வரும் அந்த மாவை சிக்கின் துண்டுகளில் பிரட்டி  FREEZER  இல் இரண்டு நாட்கள் வைத்துவிட்டு பின்னர் எடுத்து பொரிப்பார்கள் .அந்த மாதிரி இருக்கும் .லண்டனில் படிக்கும் போது உதுதான்  வேலை . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா! லோக்கல் வேலையெல்லாம் செய்தீர்களா?  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது KFC STYLE இல் KFC மாதிரி இருக்கும் என்று நினைக்கின்றேன் .KFC தமக்கான ஒரு ரெசிப்பி வைத்திருக்கின்றார்கள் அதன் ரகசியம் தான் அவர்களின் வெற்றி .

உலகம் முழுக்க அந்த மாவையே (ரெசிப்பி ) அனுப்புகின்றார்கள் .பெரிய பரலில் வரும் அந்த மாவை சிக்கின் துண்டுகளில் பிரட்டி FREEZER இல் இரண்டு நாட்கள் வைத்துவிட்டு பின்னர் எடுத்து பொரிப்பார்கள் .அந்த மாதிரி இருக்கும் .லண்டனில் படிக்கும் போது உதுதான் வேலை . :icon_mrgreen:

நீங்க சொல்லுறது hotwings, chicken க்கு நேரடி பிரட்டல் பொரியல் தான்
Link to comment
Share on other sites

நந்தன் ,

ஒரு சிக்கினை ஒன்பது துண்டாக வெட்டியிருப்பார்கள்(2 legs,2 wings,2 thighs,2 ribs.1 breast). 72 pieces ஐ தொட்டியில் போட்டு கழுவி மயிர் எல்லாம் பிடுங்கி பின்னர் மாவை பூசி தட்டில் அடுக்கி இரண்டுநாட்கள் பிரீசரில் வைத்துவிட்டு பின்னர் எடுத்துதான் பொரிப்போம்.

இப்ப சுகமான வழி ஏதும் கண்டு பிடித்துவிட்டார்களோ என்னவோ . :lol:

Link to comment
Share on other sites

நந்தன் ,

ஒரு சிக்கினை ஒன்பது துண்டாக வெட்டியிருப்பார்கள்(2 legs,2 wings,2 thighs,2 ribs.1 breast). 72 pieces ஐ தொட்டியில் போட்டு கழுவி மயிர் எல்லாம் பிடுங்கி பின்னர் மாவை பூசி தட்டில் அடுக்கி இரண்டுநாட்கள் பிரீசரில் வைத்துவிட்டு பின்னர் எடுத்துதான் பொரிப்போம்.

இப்ப சுகமான வழி ஏதும் கண்டு பிடித்துவிட்டார்களோ என்னவோ . :lol:

இப்போது பூசியே உறைந்து வருகிறது. வேலையாள் காசை சேமிக்க. பொப்பைஸ் போன்றவர்கள் உடனடியாக பிரட்டி போடுகிறார்கள்.

டிம் கோர்டன் ஒரு படி மேலே, அரை வேக்காடு டோனட்டை குளிராக்கி பின் கடையில் வைத்து மிச்ச அரைவேக்காடு காட்டி கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.