Jump to content

குறிஞ்சா புட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறிஞ்சா புட்டு

 

Gurmar_bitkisi_Gymnem_Sylvestre.jpg

 

 

எனக்கு சின்ன வயசில அம்மா குஞ்சி இந்த புட்டு செய்து தாறவா. போன கிழமை நான் கடைக்கு போன நேரம் குறிஞ்சா மா வாங்கினனான் . குறிஞ்சா இலை சலரோக ஆக்களுக்கு நல்ல பலனை குடுக்கிற இயற்கையான இலை. இந்த இலை  கொஞ்சம் கைக்கும் . அதுக்கு விரும்பினால் சகரின் போடுங்கோ .

என்ன வேணும் :

குறிஞ்சா இலை ஒரு கட்டு.

சிவப்பு பச்சை அரிசி மா 500 g.

உப்பு தேவையான அளவு.

தேங்காய் பூ தேவையான அளவு .

பட்டர் 20 g.

கூட்டல் :

குறிஞ்சா இலையை வெய்யிலிலை காய விடுங்கோ . இலை சுறுண்டு வந்தால் பிறகு கல்லு உரலிலை போட்டு மாவாய் வாறவரைக்கும் இடியுங்கோ. இடிச்ச மாவை அரிதட்டிலை போட்டு அரியுங்கோ .அரிச்ச குறிஞ்சா இலை மாவையும் சிவப்பு பச்சை அரிசி மாவையும் கலந்து சுடுதண்ணியும் விட்டு புட்டுக்கு குழைக்கிற மாதிரி பதமாய் குழையுங்கோ. கையாலை சின்ன சின்ன  குறுணியாளாய்

உலுத்துங்கோ. தேங்காய் பூவை கலந்து அவிய விடுங்கோ. புட்டு அவிஞ்சால் பிறகு பட்டரை போட்டு கிளறி விடுங்கோ. இப்ப குறிஞ்சா புட்டு நீங்கள் சாப்பிடலாம் .

 

மைத்திரேயி

14/01/2014

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இப்போதைக்கு இந்த புட்டை செய்து சாப்பிடமுடியாது :blink:  வைகாசி மாதத்தின் பின்னர்தான் லண்டனில் வெய்யிலில் குறிஞ்சா இலையை காய விடமுடியும்.  :D
 
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உகந்த உணவாக இருக்கலாம். :rolleyes:  
 
பகிர்விற்கு நன்றி  மைத்திரேயி. :)  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிறுவயதாயிருக்கும் போது அம்மா இதை செய்து அக்காமாருக்கு கொடுப்பா. நானும் சேர்ந்து ஒரு புடி புடிப்பன். சுவையோ சுவை. சாப்பிட்டா அப்படி இருக்கும். ஊர்லை வீட்டில் குறிஞ்சா மரம் இருந்தது.எமது அயலவர்களும் வந்து அடிக்கடி அதன் இலைகளை ஆய்ந்து செல்வார்கள்.

Link to comment
Share on other sites

நீங்கள் எந்தக் கடையில் குறிஞ்சா மா வாங்கினீர்கள் என்று சொன்னால் நாங்களும் வாங்குவமல்லோ மைத்திரேயி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிஞ்சா மாவாய் கடையில் கிடைத்தால் வேலை சுலபம்...!  பகிர்வுக்கு நன்றி சகோதரி ...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
குறிஞ்சா இலையை நனையைப்போட்ட பச்சை அரைசியோடை சேர்த்து இடிச்சால் குறிஞ்சா மா சுலபமாய் வரும். இதேமாதிரித்தான் ஊரிலையும் செய்யிறவை.. :)
 
இதே மாதிரித்தான் பொருத்துமான் இலை மாவும்.......  :icon_idea:
 
முக்கியகுறிப்பு:- பொருத்துமான் இலை என்பது இல்லவேயில்லை என்பவர்களின் விதண்டாவதம் இங்கே தவிர்க்கப்பட வேண்டும். காரணம் நகரப்புறங்களில் வாழ்ந்தவர்கள் கூகுள் எனும் தகவல் தளத்தை காரணம் காட்டி..... தெரியாத விடயத்தையும் நேரில் பார்த்தமாதிரி வாதாடுகின்றர்கள்.ஒருசில குறிப்பிட்ட மரம் செடி கொடி மலர் என்பன கிராமியங்களுடன் நின்று விடுகின்றன.  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

குறிஞ்சா இலையை நனையைப்போட்ட பச்சை அரைசியோடை சேர்த்து இடிச்சால் குறிஞ்சா மா சுலபமாய் வரும். இதேமாதிரித்தான் ஊரிலையும் செய்யிறவை.. :)
-----

 

குறிஞ்சா இலையை... வெய்யிலில் காய வைத்து செய்வதால்... பல சத்துகள் வீணாகி விடும் என நினைக்கின்றேன்.

நேற்று மைத்திரேயி இட்ட பதிவைப் பார்த்த போது, வீட்டில் உடனே... குறிஞ்சா இலையை புடுங்கி புட்டு அவிப்பார்கள்.

ஆனால்... அதன் செய் முறையை மறந்து விட்டேன்.

குமாரசாமி அண்ணா சொன்ன மாதிரி... பச்சை இலையாகவே, அரிசியுடன் கலந்து இடித்ததாக ஞாபகம்.

இங்கு.. அரிசி ஊறப் போட்டு இடிக்க முடியாத படியால், இலையை மட்டும் சின்ன உரலில் இடித்து விட்டு... அதனை அரிசி மாவுடன் கலந்து புட்டு அவித்தால்... சரியாக வருமோ தெரியவில்லை.

யாராவது.. செய்து பார்த்து விட்டு சொல்லுங்களேன். :)

 

போன கிழமை தமிழ்க் கடையில் குறிஞ்சா இலை இருந்தது கண்டு, வாங்கி வந்து... வறை செய்து சாப்பிட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிஞ்சா இலை எண்டு நீங்கள் சொல்லுற சாமான். பனை மரங்களில, ஒட்டி வளரிற மரம் தானே?\

 

சல ரோகக்காரருக்கு நல்லதெண்டு சொல்லுறவை!

 

இதைப் பச்சரிசியுடன் சேர்த்து இடிச்சுத்தான் புட்டவிக்கிறவை !

 

ஏனென்டால், பனையிலை ஏறிக் கிளையொடிக்கிறது, எங்கடை வீட்டிலை நான் தான் எண்ட படியால்,  நல்ல ஞாபகமிருக்குது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.. மைத்திரேயி அக்கா.. இன்னும் முன்னேறல்ல.

 

இப்ப.. குறிஞ்சா..இலை எல்லாம் கலந்து.. புட்டு மாவே விற்குது... தமிழ் கடையில. அதை வேண்டி.. பாத்திரத்தில கொட்டி.. உப்பை போட்டு.. சுடு தண்ணிய விட்டு.. குழைச்சிட்டு.. தண்ணி குடிக்கிற.. விளிம்பு மழுங்காத.. சில்வர் பேணியால.. அடுத்த வீட்டுக்கு கேட்கிற அளவுக்கு நாலு குத்துக்...குத்தினீங்க.. என்றால்.. புட்டு வரும். அதை.. இட்லி சட்டில..தண்ணியை விட்டிட்டு.. அதில உள்ள ஓட்டத் தட்டில.. கொட்டி.. அடுப்பில வைச்சு அவிய விட்டா.. குறிஞ்சா புட்டு ரெடி. இது மைத்திரேயி அக்கா போல ஆக்களுக்கு ஆன செய்முறை.

 

நம்மளப் போல ஆக்களுக்கு.. புட்டு ஆசை வந்தால்.. மட்டும்... மாவைப் பிசைஞ்சமா.. கையால உதிர்த்தமா... ஒரு மைக்குரோவேவவுள்.. பாத்திரத்தில கொட்டினமா.. மூடினமா.. 10 நிமிசம் உள்ள வைச்சமா.. சாப்பிட்டமா என்று போய்க்கிட்டு இருக்கனும். நேரம்.. கணக்கு.. சூட்டின் அளவைப் பொறுத்து மாறும். எதுக்கும் பதத்தை பார்த்து செட் பண்ணிக்கிட்டா போச்சு. :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறை விளக்கம் நெடுக்ஸ். 17-01-2014

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட தலையில சீப்பை வைத்துக் கொண்டு வீடு முழுக்கத் தேடியமாதிரி நானும்.....!

 

இலையை மாவுடன் சேர்த்து இடிச்சாப் போச்சுது...! :D

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இப்போதைக்கு இந்த புட்டை செய்து சாப்பிடமுடியாது :blink:  வைகாசி மாதத்தின் பின்னர்தான் லண்டனில் வெய்யிலில் குறிஞ்சா இலையை காய விடமுடியும்.  :D
 
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உகந்த உணவாக இருக்கலாம். :rolleyes:  
 
பகிர்விற்கு நன்றி  மைத்திரேயி. :)  

 

 

செய்து பாத்திட்டு சொல்லுங்கோ . உங்கடை கருத்துக்கு நன்றி சொல்லிறன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சிறுவயதாயிருக்கும் போது அம்மா இதை செய்து அக்காமாருக்கு கொடுப்பா. நானும் சேர்ந்து ஒரு புடி புடிப்பன். சுவையோ சுவை. சாப்பிட்டா அப்படி இருக்கும். ஊர்லை வீட்டில் குறிஞ்சா மரம் இருந்தது.எமது அயலவர்களும் வந்து அடிக்கடி அதன் இலைகளை ஆய்ந்து செல்வார்கள்.

 

இணைப்புக்கு நன்றி சொல்லிறன் .

Link to comment
Share on other sites

குறிஞ்சா புட்டா.. சம்பல் சாப்பிட்டிருக்கிறன்..! புட்டு கைக்குமே?! :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
    • இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.   வித்துபோட்டம் என்று சொல்வதற்கு வெட்கம் ....இதிலை பீலா வேறை..
    • வயது கூடும் போது வந்த ஞானோதயங்களில் இந்த உறைப்பு குறைப்பும் ஒன்று. தவிரவும் இறைச்சியின் சுவையே தெரியாது - மிளகாய்தூள் கறிக்குள் இறைச்சி துண்டை போட்டு சாப்பிட்டால், மான் ஏது, மரை ஏது - தூளின் சுவைதான் தெரியும்.  
    • நீங்க‌ள் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றி எழுதின‌து100/100 உண்மை இதை விய‌ன‌ரசு ஜ‌யா கூட‌ அன்மையில் சொல்லி இருந்தார் ஆனால் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா கூட‌ ப‌ய‌ணம் செய்த‌ சில‌ருக்கு கூட‌ ஜ‌யாவின் செய‌ல் பாடு பிடிக்க‌ வில்லை   க‌ந்துப்பு அண்ணா கோவிக்க‌ வேண்டாம் 2009த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்ப்ப‌து கிடையாது   க‌ண்ண‌ க‌ட்டி காட்டில‌ விட்ட‌ மாதிரி தான் என‌க்கும் இல‌ங்கைக்குமான‌ அர‌சிய‌ல் அங்கு ந‌ட‌ப்ப‌து ப‌ற்றி என‌க்கு ஒரு கோதாரியும் தெரியாது.........................த‌லைவ‌ர் 2002க‌ளில் உருவாக்கின‌ த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ தெரியும் மீதிப் பேர‌ தெரியாது....................................................
    • அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில், குறித்த திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவதற்கு, கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கரை ஒதுங்கிய 26 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/300286
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.