Jump to content

எங்கிருந்து உருவானது ஐ.எஸ்.ஐ.எஸ்?


Recommended Posts

942.jpg

 

"நமக்­கான விடிவு காலம் நெருங்­கு­கி­றது. இறைத்­தூ­தரின் தீர்க்­க­த­ரி­சனம் நிஜ­மா­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. இஸ்­லா­மிய கிலா­பத்­துக்கள் உலகம் முழு­வதும் நிலை­நாட்டச் செய்யும் கறுப்புப் படை உத­ய­மா­கி­விட்­டது. ஜிஹாதில் பங்­கெ­டுக்கும் தருணம் இதுவே" என சில நாடு­க­ளி­லுள்ள சில இஸ்­லா­மி­யர்கள் தமது உணர்ச்­சி­களை வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­து­விட்­டனர்.

 

இந்த திடீர் உணர்ச்­சி­வ­சத்­துக்கு காரணம் என்­ன­வென்றால் உல­கமே தற்­போது பேசிக்­கொண்­டி­ருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் இஸ்­லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் எண்ட் சிரியா அல்­லது இஸ்­லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் எண்ட் லெவன்ட் (ஐ.எஸ்.ஐ.எல்) எனும் இஸ்­லா­மிய கிளர்ச்சி இயக்­கமே. கடந்த மாதம் தான் கைப்­பற்­றிய ஈராக் படை­யினர் பலரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினர் கூட்­டாக சுட்­டுக்­கொல்லும் படங்கள் வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டு­து­தின.

 

941.jpg

சுன்னி முஸ்லிம் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் ஈராக் படை­யி­னரை வெற்­றி­கொண்டு அண்­மையில் ஈராக் மற்றும் சிரி­யாவின் எல்லைப் பகு­திகள் சில­வற்றை முழு­மை­யாகக் கைப்­பற்றி அதனை இஸ்­லா­மிய கலீஃபா ஆட்­சிக்­குட்­பட்ட ஒரு தனி நாடாக ஏனைய நாடு­களின் ஒப்­பு­த­லின்றி தாமா­கவே அறி­வித்­தி­ருந்­தது. அத்­துடன் தனது பெய­ரையும் இஸ்­லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) எனவும் மாற்­றி­யமைத்துக்­கொண்­டது.

இத­னை­ய­டுத்து உலகம் முழு­வதும் அதி­க­ளவில் பேசப்­படும் இயக்­க­மாக ஐ.எஸ் மாற்­ற­ம­டைந்­து­விட்­டது. ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் என்­பது திடீ­ரென உரு­வா­ன­தொரு இயக்­க­மல்ல. 2000ஆம் ஆண்­டி­லி­ருந்து பல்­வே­று­பட்ட பெயர்­களில் இயங்கி வந்­தி­ருப்­ப­தற்­கான தக­வல்கள் உள்­ளன.

ஜமாஅத் அல் தவ்ஹித் வஅல் ஜிஹாத் எனும் பெயரில் அபுல் முஸாப் அல் ஷர்­காவி எனும் இஸ்­லா­மிய கிளர்ச்­சி­யாளர் ஒரு­வ­ரினால் இந்த இயக்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதில் உள் நாட்டு மற்றும் வெளி­நாட்டு கிளர்ச்சி அமைப்­பினர் சிலரும் இணைந்­துள்­ளனர்.

தொடர்ந்து அல் கைதா­ துணை­யுடன் 2003ஆம் ஆண்­டி­லி­ருந்து ஈராக்கில் அல் கைதாவின் ஈராக்கின் இயக்கம் போல அல் கைதா இன் ஈராக் என்ற பெயரில் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது. அத்­துடன் முஜா­ஹிதீன் ஷுரா சபை என்ற பெய­ரிலும் செயற்­பட்டு தற்­போது ஐ.எஸ். என்ற வடி­வத்­தினை வந்­த­டைந்­துள்­ளது.

2014ஆம் ஆண்டின் ஆரம்ப பகு­தி­யி­லேயே அல் கைதா­வி­லி­ருந்து முற்­றாக பிரிந்த ஐ.எஸ். இயக்­க­மா­னது, அல் கைதா­வுடன் இணைந்­தி­ருந்த காலத்தில் ஈராக்­கி­லி­ருந்து அமெ­ரிக்­காவை வெளி­யேற்­றுதல், ஈராக்கில் கலீஃபா ஆட்­சியை ஏற்­ப­டுத்­துதல், ஈராக்கை தள­மா­கக்­கொண்டு ஏனைய நாடு­களை தாக்­குதல், இஸ்­ரேலைத் தாக்­குதல் என்ற இலக்­கு­க­ளுடன் செயற்­பட்­டி­ருந்­தது.

 

943%20Small.jpg

 

அல் கைதா­வு­ட­னான பிரி­வுக்கு பின்னர் முன்­னைய இலக்­கு­க­ளுடன் சேர்த்து, ஜோர்டான், இஸ்ரேல், பலஸ்தீன், லெபனான், குவைத், சைப்பிரஸ் மற்றும் தெற்கு துருக்கி உள்­ளிட்ட பகு­தி­களைக் கைப்­பற்றி கலீஃபா (இஸ்­லா­மிய ஆட்­சி­யாளர்) ஆட்­சியை ஏற்­ப­டுத்­துதல், தமது ஆட்­சிக்­குட்­பட்ட எல்­லையில் ஷியா முஸ்­லிம்­களை அழித்தல் போன்ற இலக்­கு­க­ளையும் திட்­டங்­க­ளையும் விஸ்­த­ரித்­துள்­ளது ஐ.எஸ்.

இந்­நி­லை­யி­லேயே 2010ஆம் ஆண்டில் ஐ.எஸ் இயக்­கத்தின் தலைமைப் பொறுப்­பினை ஏற்­றுள்ளார் அபூ­பக்கர் அல் பக்­தாதி. இவர் குறித்து ஏற்­க­னவே பல தக­வல்கள் வெளி­யாகி இருந்த போதிலும் மக்கள் முன்­னி­லையில் தோன்றாமல் இருந்தார். இதனால் பக்­தாதி கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன்பே இறந்­து­விட்­ட­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கின.

2011ஆம் ஆண்­ட­ளவில் பக்­தாதி குறித்த தக­வல்கள் வழங்­கினால் 130 கோடி ரூபா சன்­மானம் வழங்­கப்­படும் என்று அமெ­ரிக்­கா­வினால் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் பக்­தா­தியின் உருவம் தொடர்பில் மாறு­பட்ட கருத்­துகள் நில­வி­யது. இந்­நி­லையில் கடந்த மாதம் இஸ்­லா­மிய கலீஃ­பா­வான பின்னர் மக்கள் முன்­னி­லையில் முதல் தட­வை­யாக தோன்றி தனக்கு ஆத­ர­வ­ளிக்­கு­மாறு இஸ்­லா­மி­யர்­களைக் கேட்­டுக்­கொண்டு வதந்­தி­க­ளுக்­கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்தார் பக்­தாதி. 1971ஆம் ஆண்டு பிறந்த பக்­தாதி ஈராக்கில் இஸ்­லா­மிய சட்டம் தொடர்பில் முது­மாணி பட்டம் பெற்­றவர் எனக் கூறப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

தன்­னைத்­தானே கலீஃபா இப்­றாஹிம் என் அறி­வித்­துள்ள பக்­தாதி தலை­மை­யி­லான ஐ.எஸ் இயக்கம் தற்­போது முன்­னரை விட வேக­மாக ஈராக்கின் பல பகு­தி­களை தாக்கி பக்­தாத்தை நோக்கி நகர ஆரம்­பித்­துள்­ளது.

சுமார் 10 ஆயிரம் படை வீரர்­களை மட்­டுமே கொண்­டுள்ள ஐ.எஸ் இயக்­கத்தால் எவ்­வாறு இந்­த­ளவு வேக­மாக முன்­னேறிச் செல்ல முடி­கி­றது என்ற கேள்­வியும் எழு­கின்­றன. ஈராக் மீது தனி அக்­கறை கொண்­டி­ருக்கும் அமெ­ரிக்கா இது­வ­ரையில் ஐ.எஸ் விட­யத்தின் பேச்­சு­வார்த்தை மட்­டத்­தி­லேயே நின்று கொண்­டி­ருப்­பதன் மர்மம் என்ன? என்­பதும் மர்­ம­மா­கவே நீடிக்­கின்­றது.

ஓரி­ட­த்தி­லி­ருந்து ஒளிந்து கொண்டு அவ்­வப்­போது ஒரு தாக்­கு­தலை நிகழ்த்­து­கின்ற ஒரு இயக்­க­மாக ஐ.எஸ். செயற்­ப­ட­வில்லை. அரண்கள் அமைத்து ஒரு இடத்தில் மட்­டுப்­ப­டாமல் முன்­னேறும் வழி­க­ளி­லேயே தாக்­கு­த­லுக்­கான திட்­டங்­க­ளையும் பகிர்ந்­து­கொள்­கின்­றது.

தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்­க­ளுடன் தனது இலக்­கினை நோக்கி  ஐ.எஸ். நகர்ந்­து­கொண்டே இருக்­கி­றது. இதனால் தமது இருப்­பினை தக்க வைத்­துக்­கொள்ள வேண்டி நிலைக்­குள்­ளா­கி­யுள்ள ஈராக் அர­சா­னது ஐ.எஸ். இயக்­கத்தின் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்த கடு­மை­யான பிர­யத்­த­னங்கள் எடுப்­பது போன்று அமெ­ரிக்­காவின் உத­வி­க­ளையும் எதிர்­பார்­பார்த்­துக்­கொண்டே இருக்­கின்­றது.

ஈராக் படையின் வான் வழித் தாக்­கு­தல்­களின் பின்­ன­டைவே ஐ.எஸ். முன்­னேறக் கார­ண­மா­கின்­றது எனக் கூறுகிறது. ஈராக் அரசு, வான் வழி தாக்­குதல் சாதனங்களை அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து பெற முயற்­சிக்­கின்ற போதிலும் அவை கிடைப்­பதில் தாமதம் ஏற்­பட்­டுள்­ள­தாக ஈராக் ஜனா­தி­பதி மாலிக் அல் நூரி தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை ஐ.எஸ். இயக்­க­மா­னது அமெ­ரிக்­காவின் கைப்­பாவை எனவும் ஐ.எஸ். இன் செயற்­பா­டுகள் திட்­ட­மி­டப்­பட்­டவை எனவும் இணையத் தளங்­களில் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்கள் உல­வு­கின்­றன. ஷியா மற்றும் சுன்னி முஸ்­லிம்­க­ளி­டையே தீராப் பகையை உரு­வாக்­கு­வதே இவர்­களின் நோக்­கமாம்.

இதனை உறுதி செய்­வ­து­போல தன்­னிச்­சை­யாக போர் முடி­வு­களை எடுக்கும் அமெ­ரிக்­கா­வா­னது ஐ.எஸ். விட­யத்தில் ஈரானை ஈராக்­குக்கு உதவி செய்ய அழைக்­கின்­றது. அதே­வேளை தமது கட்­டுப்­பாட்டு பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள முஸ்­லிம்­களின் வர­லாற்று முக்­கி­ய­து­வ­மிக்க மத ஸ்தலங்­களை ஐ.எஸ். அழித்து வரு­கின்­றது. இது இஸ்­லா­மி­யர்­க­ளி­டையே பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

94isis36.jpg

 

இஸ்­லா­மி­யர்­களின் புனித இட­மான மக்­கா­வி­லுள்ள கஃபாவை தகர்க்­கவும் ஐ.எஸ். தீர்­மா­னித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் இஸ்­ரேலைக் குறி­வைத்தே ஐ.எஸ். இன் காய் நகர்த்தல் அமைந்­துள்­ள­தாக யூதர்­களின் ஊட­கங்கள் சில குறிப்­பி­டு­கின்­றன. ஏனெனில் மத்­திய ஆசிய வர­லாற்றில் ஜெரு­ச­லேமை நோக்­கிய நகர்­வுக்­காவே அத்­தனை சண்­டை­களும் இடம்­பெற்­றுள்­ளன, இடம்­பெ­று­கின்­றன.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே கறுப்புக் கொடி­யுடன் இறுக்­க­மான இதயம் கொண்­ட­வர்கள் மாநி­லத்தை ஆட்சி செய்­வார்கள் என இறைத்­தூதர் முஹம்­மது நபியின் தீர்க்­க­த­ரி­சனம் கூறு­கின்­றது என நம்பும் இஸ்­லா­மி­யர்­களில் சிலர் இது தீர்க்­க­த­ரி­ச­னத்தில் குறிப்­பிட்ட கூட்­டத்­தி­னரே என நம்­பிக்­கை­கொள்ள ஆரம்­பித்­துள்­ளனர்.

 

94isia4.jpg

குறைந்­த­ள­வி­லான எண்­ணி­கை­யான படை­யி­னரை மட்­டுமே கொண்­டுள்ள ஐ.எஸ். இயக்­கத்­துக்கு இது பல­மாக அமைந்­துள்­ளது. இதுவே 30 ஆயிரம் பயிற்சி பெற்ற ஈராக் இரா­ணு­வத்­தினை மீறி 1.8 மில்­லியன் சனத்­தொகை கொண்ட ஈராக்கின் முக்­கிய நக­ரங்­களில் ஒன்­றான மொசூல் நகரை ஐ.எஸ். இயக்­கத்­தினால் கைப்­பற்ற முடிந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

எனினும் ஐ.எஸ். இயக்­கத்தின் இலக்­குகள் குறித்த துல்­லி­ய­மான தக­வல்கள் இல்­லாத நிலையில் அது எங்கே செல்லப்போகிறது என்பதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும்.

 

 http://www.metronews.lk/feature.php?feature=94&display=0#sthash.qRHmLgH6.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இப்போ காசவில் (பாலஸ்தீனம்) இவர்களுக்கு இலக்கு வைத்து தான் திருவிழா தொடங்கி  இருக்கு.
தாறு மாறான தொலை தொடர்பு நடக்கும் ....
இஸ்ரேல் மேல் கோபம் கொண்டு ஒரு பகுதியினர் அங்கு செல்ல கூடும் ... எல்லாவற்றையும்.
இஞ்ச் இஞ்சாக பதிவு செய்து முழு விபரமும் திரட்டி கொண்டு  இருப்பார்கள்.
திருவிழா முடிய வெளிக்கிடும் ரோக்கெட்கல்தான்  இவர்களுக்கு ஆப்பு வைக்க போவது.
 
ஆசத்திட்குதான் (சிரியா) கொஞ்சம் நிம்மதி.
அநேகமாக அவருக்கு லேசர் கதிர்வீச்சு மூலம் கன்சர்தான் உருவாக்குவார்கள்.

 

Link to comment
Share on other sites

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 18 பேர்

 

Tamil_News_large_1020957.jpg

 

புதுடில்லி: சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் அரசுகளுக்கு எதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்தி வரும் சண்டையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.

மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக இருக்கும், பஷார் அல் - அசாத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள், கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதில், அல் - குவைதா ஆதரவு பயங்கரவாதிகளும் சேர்ந்து கொண்டுள்ளதை அடுத்து, அங்கு பயங்கர ரத்தக்களறி நடைபெற்று வருகிறது.அது போல், ஈராக்கிலும், பிரதமர் அல் - மாலிகி தலைமையிலான அரசுக்கு எதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த, 18 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் இருவர், தானே நகரைச் சேர்ந்தவர்கள் என்பதை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்து உள்ளனர்.பயங்கரவாதிகளுடன் இணைந்திருப்பதில் பெரும்பான்மையினர், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில், அல் - குவைதா, தலிபான் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அந்த அமைப்பில், இந்தியா போன்ற பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் சேர்ந்துள்ளதாக, அவ்வப்போது தகவல்கள் வெளியாகிஉள்ளன.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1020957

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் சகோதர்களுடன் கை கோர்க்கவேண்டும் என்று குரல் கொடுத்து வந்த சபேசன் அண்ணாவையும் கொஞ்ச நாளாய் காணவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.