Jump to content

இந்தியாவில் சுற்றுலா விடுதிகளை விட சாலையோர உணவகங்கள் சுகாதாரமானவை: ஆய்வாளர் தகவல்


Recommended Posts

இந்தியாவில் சுற்றுலா விடுதிகளை விட சாலையோர உணவகங்கள் சுகாதாரமானவை: ஆஸ்திரேலிய உணவு ஆய்வாளர் தகவல்

 

roadside_restauran_1997034h.jpg

கோப்புப் படம்: ஜீ.மூர்த்தி.

தெருவோர உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் சுகாதார மற்றவை, உடலுக்குக் கேடு விளைவிப்பவை என்ற கருத்து தவறாகிவிடும்போல் இருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல உணவு வரலாற்று ஆய்வாளர் சார்மைன் ஓ பிரெய்ன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்திய உணவு வகைகளைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.

அதில், இந்திய சுற்றுலா விடுதி களில் வழங்கப்படும் உணவு களைக் காட்டிலும், சாலையோர உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் பாதுகாப்பானவை என்று அவர் கூறியிருக்கிறார்.

‘தி பெங்குயின் புட் கைடு டூ இந்தியா’ என்ற புத்தகத்தை சார்மைன் ஒ பிரெய்ன் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘இட்ஸ் நாட் கர்ரி- ஈட்டிங் இந்தியா’ என்ற தலைப்பில் உள்ளவை குறித்து, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த, ஆஸ்திரேலியா இந்தியா நிறுவனத்தில் (ஏஐஐ) விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதில் சார்மைன் பேசும் போது, “இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவு விற்பனையாளர்கள், உணவுக ளைக் கூவி விற்போர் பெரும் பாலும் புத்தம்புதிய உணவுப் பொருள்களைப் பயன்படுத்திச் சமைக்கப்பட்ட புத்தம்புதிய உணவுகளைத் தருகின்றனர்.

அதேசமயம், சாலையோர உணவுகள் நபருக்கு நபர் வேறுபடும். ஆகவே, உண் பவர்கள் தங்களின் உள்ளுணர்வு சொல்வதைப் பின்பற்றலாம்” என்றார்.

அவரின் புத்தகத்தில், இந்திய உணவுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை விவரித்துள்ளார். நான்கு ஆண்டு ஆய்வுக்குப் பிறகு இப்புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.

செட்டிநாட்டு உணவு

அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவின் பிராந்திய உணவுகள், உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் விதவிதமாக தயாரிக்கப்படுகின்றன. அவை. வரலாறு, கலாச்சாரம், மதம், பொருளாதார நிலை மற்றும் தட்பவெப்பம் சார்ந்தவை.

வணிகம் கூட உணவு வகை களில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியிருக்கிறது. மதுரையி லுள்ள செட்டிநாட்டு உணவு வகை களில் பெருஞ்சீரகம், கொத்து மல்லி, கிராம்பு, லவங்கம் உள் ளிட்ட விலையுயர்ந்த நறுமணப் பொருள்கள் பயன்படுத்தப்படு கின்றன. வர்த்தகத்தால் அப்பகுதி மக்கள் செழிப்பாக இருந்ததையே இது பிரதிபலிக்கிறது.

கட்ச் உணவு

குஜராத்தின் கட்ச் போன்ற வறட்சிப் பகுதிகளில் சோள வகைகள் அதிகம் கிடைப்பதால், அங்கு உணவுகளில் சோளம் அதிகம். அப்பகுதி மக்கள் பெரும்பாலும் கால்நடை மேய்ப்பர்கள். ஆகவே, அவர்கள் பால்பொருட்களான நெய் போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்கின்றனர். அந்த பருவநிலைக்கும் அவை ஏற்றவையாக உள்ளன.

இனிப்பு

இனிப்பு வகைகளில் பெரும்பாலானவற்றில், மத்திய கிழக்கின் பூர்விகச் சாயல் இருக்கிறது. அரபு வணிகர்கள், இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்களிடமிருந்து அந்த இனிப்பு வகைகள் பரவியிருக்கக் கூடும்.

இந்தியா முழுக்க ஏராளமான உணவு வகைகள் உள்ளன. வெளி நாட்டவர்களுக்கு அதைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை.

வெளிநாடுகளில் உள்ள இந்திய உணவு விடுதிகள் பெரும் பாலும் சிக்கன் டிக்கா, காரமான குழம்பு வகைகளையே விநியோ கிக்கின்றன.

அவைதான் இந்தியாவின் தேசிய உணவு என்பதைப் போல உருவகமாகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article6203502.ece?homepage=true
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.